Thursday, December 26, 2019

விவசா(யி)(யம்) V 0.1


ஆயிரம் கடவுள்கள்
         இருக்கலாம்..
ஆனால் நமக்கு
         உணவளிக்கும் அம்மா முதல் கடவுளே...
அப்படி என்றால் உலகிற்கே உணவு அளக்கும்
விவசாயி கடவுளின் கடவுளன்றோ....

Monday, December 23, 2019

வாங்க முடியுமா?

பணம் இருந்த உலகத்துல எதையும் வாங்கலாம்
ஆனா நெனச்சாலும் வாங்க முடியாதது இருகுதையா
அதை ஒன்னொன்னா சொல்ல போறேன் கேளையா

வாங்க முடியுமா நீங்க வாங்க முடியுமா
நெனச்சாலும் இத வாங்க முடியுமா ?

பெத்தெடுத்து உதிரம் பாலாக்கி
பாராட்டி சீராட்டி உன்னை
வளர்க்கும் அன்னையை (வாங்க)

ராப்பகல்பாராது உதிரம் வியர்வையாக்கி
ஏரோட்டி வண்டியோட்டி உன்னை
காக்கும் தந்தையை (வாங்க)

என்னவென்று கேளாது உதவியென்று
கேட்டாலோ அழைத்தாலோ உன்னை
சூழும் உயர்நட்ப்பை (வாங்க)

ஏணியாக என்றும் மாணாக்கனை
நின்ற இடத்திலேயே ஏற்றிவிடும்
ஆசான் ஊக்கத்தை (வாங்க)

ஓடும்காலத்தை விரட்டி உனதாக்கி
தேவையை செய்திடு இல்லை
வீணாகும் நேரத்தை (வாங்க)

காமம்கடந்து உள்ளம் உனதாகி
உயிராய் உறவாய் மாறும்
தூய்மை காதலை (வாங்க)

உண்ண உடுக்க வழியில்லை
இருந்தும் வாட்டும் ஏழ்மையிலும்
காட்டும் நேர்மையை (வாங்க)

உலகமே புகழலாம் உச்சம்
அடையலாம் உயர்வில் பிறரை
மதிக்கும் எண்ணத்தை (வாங்க)

தவறுதலால் தப்புகள் நடந்தாலும்
துரோகம் நிகழ்ந்தாலும் அதைமறந்து
செய்யும் மன்னிப்பை (வாங்க)

இதையெல்லாம் இருக்கிறவர்களை பாரு
இவர்களால்தான் இன்றும் வாழுது ஊரு 

உன்னால் முடியும்

உன்னால் முடியும் ஏ ஏ உன்னால் முடியும்
முயன்று பாரு ஏ ஏ உன்னால் முடியும்
அச்சம் என்ன நீ விட துச்சம் தானே
உச்சம் என்ன நீ தொட மிச்சம் தானே
சரணம்
++++++++
ஒருநாள் வாழும் ஈசல் கூட பறந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இரைகள் தேடி செல்லும் எறும்பு நடந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
மண்ணை முட்டி முளைக்கும் விதை வெடித்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
கொட்டும் அருவி நிதானம் கொண்டு எழுந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
வெட்டும் வாழை மீண்டும் மீண்டும் உயர சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இன்னும் என்ன தெளிவாய் மனிதா உன்னால் தானே ஒளிர்வாய் மனிதா.....
சரணம்
+++++++
முட்டும் சுவாசம் முயன்று இழுக்க உயிரே சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
தட்டும் கால்கள் எட்டி உதைக்க தகர்த்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
வெட்டும் நகமோ நம்மை பார்த்து வளர்ந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
கொட்டும் தலையோ குனிந்தது போதும் நிமிர்ந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
சொட்டும் உதிரம் உடம்பில் மீண்டும் உறைந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இன்னும் என்ன தெளிவாய் மனிதா உன்னால் தானே ஒளிர்வாய் மனிதா.....

Wednesday, December 18, 2019

அவளும் இயற்கையும் நானும்

அவள் ஒரு நீலவானம்
அவளை பெருமை படுத்தி வெண்ணாடை போர்த்தும் வெண்மேகம் நான்.

அவள் ஒரு நிலா
அவளை அழகாய் ரசிக்கும் நிலம் நான்.

அவள் ஒரு நட்சத்திரம்
அவளை ஜொலிக்க உச்சம் கொண்டு சென்ற மிச்சம் நான்.

அவள் ஒரு மின்னல்
அவளை பளிச்சிட மின்ன வைக்கும் ஒளி நான்.

அவள் ஒரு வானவில்
அவளை வளைத்து ஏந்தும் இருகரம் நான்.

அவள் ஒரு பறவை
அவளை உயர தூக்கி செல்லும் காற்று நான்.

அவள் ஒரு கடல்
அவளை தேடி ஓடும் நதி நான்.

அவள் ஒரு நீர்
அவளை பெருக்கெடுத்து ஓட செய்யும் ஊற்று நான்.

அவள் ஒரு படகு
அவளை பம்பரமாய் சுழற்றும் சுழல் நான்.

அவள் ஒரு மீன்
அவளை நீந்த விட்டு பார்க்கும் கண்கள் நான்.

அவள் ஒரு முத்து
அவளை அடை காக்கும் சிப்பி நான்.

அவள் ஒரு நிலம்
அவளை புஞ்சை ஆக்கும் விதை நான்.

அவள் ஒரு தீ
அவளை கட்டுக்குள் வைத்திருக்கும் மழைசாரல் நான்.

அவள் ஒரு மலர்
அவளை சுற்றி திரியும் வண்டு நான்.

அவள் ஒரு புல்வெளி
அவளை மெருகெற்றும் பச்சை நிறம் நான்.

அவள் ஒரு கனி
அவளை கனிய வைக்கும் இன்சுவை நான்.

அவள் ஒரு விலங்கு
அவளை விலகாது விரட்டி துரத்தும் வேகம் நான்.

அவள் ஒரு பட்டாம்பூச்சி
அவளை சூடும் வண்ணங்கள் நான்.

அவள் ஒரு எறும்பு
அவளை நாளும் தொடரும் சிற்றெறும்பு நான்.

அவள் ஒரு பனித்துளி
அவளை தாங்கும் சிறு புல் நான்.

அவள் ஒரு மூங்கில்
அவளை புல்லாங்குழலாய் மாற்றும் துளை நான்.

அவள் ஒரு மரம்
அவளை தாங்கும் ஆணிவேர் நான்.

அவள் ஒரு செடிகொடி
அவளை வளைய வளைய வரவேற்கும் கொடிமரம் நான்.

அவள் ஒரு இலை
அவளை ஆயுள் கொள்ள செய்யும் இலைரேகை நான்.

அவள் ஒரு மலை
அவளை அன்பால் நனைத்து பொழிந்திடும் அருவி நான்.

அவள் ஒரு காடு
அவளை மரம் செடிகொடிகளால் சூழ்ந்த இயற்கை நான்.

அவள் ஒரு புதையல்
அவளை தோண்டி தேடதேட கிடைக்கும் குவியல் நான்.

Friday, December 6, 2019

இது ஒரு பாடம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ஆம் சுதந்திரம் பெற பாரதி பாடினான்
பல போராட்டத்திற்கு பிறகு அடைந்தோம் சுதந்திரத்தை
இந்த சுதந்திர நாட்டில் இன்று பாட தோன்றுகிறது
என்று தணியும் இந்த பெண்கள் மீது நடக்கும் வன்முறை தாக்கம்
சுதந்திரம் இல்லாத சுதந்திரத்தை அடைந்திருக்கிறோம்

இன்னும் எத்தனை எத்தனை நடக்கபோகிறதோ
சிறுமி முதல் கிழவி வரை காம பசிக்கு இரையாகி கொண்டிருக்கிறார்கள்
அப்படி என்ன ...
உங்களுடைய அம்மா தங்கை அக்காள் பாட்டி யாவரும் பெண்கள்தானே
நமது சமுதாயம் உறவுகளால் பின்னப்பட்டவை
உறவுகளை அறியவில்லையா இல்லை உணர்வே இல்லையா
ஆண் பெண் இருவருக்குமே எல்லைகள் உண்டு
ஒருவர் இன்னொருவர் எல்லையை மீறுவது குற்றமே...!
அப்படி மீறினால் நீங்கள் செய்ய வேண்டியது (இருபாலாருமே)

கண்களால் சூறையாட நினைத்தால் கண்களை பிதுக்கி எறி
கைகளால் தொட நினைத்தால் கைகளை உடைத்து எறி
விரல்களால் தீண்ட நினைத்தால் விரல்களை பிடுங்கி எறி
வாயால் பேச நினைத்தால் வாயை கிழித்து எறி
கால்களால் உதைக்க நினைத்தால் கால்களை முறித்து எறி
உடலை உரச நினைத்தால் உடலை நசுக்கி எறி
இப்படி
பிறப்புறுப்பை அணுக நினைத்தால் உறுப்பை அறுத்து எறி

ஒன்றை மட்டும் நினைவில் கொள்
உன்னை மீறி உனக்கு ஏதும் நிகழ்ந்து விடாது
உனக்கு நடப்பவை யாவும் உன்னாலே...

உடையிலும் சரி நடையிலும் சரி
ஆணும் பெண்ணும் சமமே
ஆண் ஆணாக இருக்கட்டும் பெண் பெண்ணாக இருக்கட்டும்
நவீனம் என்பது தேவைக்காகவே...

இதை நடைமுறை படுத்தினால் நிச்சயம் மாற்றம் நிகழும்!

தங்கை பிரியங்கா வரை  நேர்ந்த கொடுமைக்கு இதோ முற்று புள்ளி வைத்த காவலர்களுக்கு நன்றி
நான்கு கயவர்களை சுட்டு வீழ்த்தி இதோ அதிசயம் அற்புதம் நடந்திருக்கிறது

இது ஒரு பாடம்.

Wednesday, November 27, 2019

காதல் பாடல்#58

வயித்துல பட்டாம்பூச்சிதான் பறக்குது
நீ பார்த்ததும்
காதுல ராஜாபாட்டுதான் கேக்குது
நீ சிரிச்சதும்
கண்ணாடி முன்னாடி நிற்கையில
நீதானே நானாக தெரியுற
என்னானு பின்னாடி பார்க்கையில
காதல்னு காதல்னு திரியுற
சரணம்
********
சாப்பிடும் போது பொறை ஏறிட
தலைதட்ட மறுக்கிறேன் நினைப்பது நீயென
கூப்பிடும் போது பெயர் கேட்க காதுமடல் கொடுக்கிறேன் உந்தன் பெயரென
பாதையே நீயென கால்களும் நடக்குது
ராதையே நீயென நெஞ்சமும் சொல்லுது
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்க இதயமும் துடிக்குது துடிக்குது..
சரணம்
********
எழுதிடும் போது எறும்புகள் மொய்க்க நானெங்கும் பார்க்கிறேன் சுவைஉன் பெயரென
தொழுதிடும் போது சொர்க்கம் கிடைத்திட தினம்தினம் உணர்கிறேன் அருள்வது நீயென
மந்திரம் நீயென ஜாலங்கள் நடக்குது
இதயமும் இரண்டென நெஞ்சமே கணக்குது
நீ இடும் பொட்டின் உள்ளே என்னையே வைச்சுதான் அழுத்துற அழுத்துற..

Monday, November 25, 2019

முயன்று ஓடு பாடல்

முன்ன வச்ச கால
பின்னே வைக்காதடா
என்ன வந்தாஎன்ன என்ன போனா என்ன கலங்கி நிற்காதடா
நீயேதான் ராஜா நீயேதான் கூஜா
விலகி ஓடாதடா
முயன்று முயன்று ஓடு முயன்று முயன்று ஓடு
இல்ல
பயின்று முயன்று ஓடு பயின்று முயன்று ஓடு

சரணம்
********
வாழ்க்க ஒருமுறை வாழு வாழவைச்சு
பின்னே பாரு உன்னை வாழ்த்தும் தலைமுறை..
போகும் வழி எல்லாம் காணும் மேடு பள்ளம்
உன்னை உயர வைக்கும்
யாரும் உனக்கு இங்கு நிகர் இல்லை என்ற எண்ணம் அதிர வைக்கும்
சரணம்
********
தடைகள் பலவரும் உடை உடைத்தெறி
பின்னே பாரு உன்னை சாதனை தேடிவரும்
செல்லும் வழி பிறக்கு செல்லும் வழி ஆகும்
உன்னை பலர் தொடர்வார்.
உலகம் உனக்கு இங்கு தலை வணங்க நிற்க பெருமை கொள்ள செய்வாய்..

Friday, November 22, 2019

அவள் மழை


கொலுசு


உன்னிடம்..

உன்னிடம்..
பேச வருகிறேன்
நீ என்னை பார்க்க பேச்சு வரவில்லை
கேட்க விழைகிறேன்
நீ என்னை பார்க்க கேட்கவும் வரவில்லை
சொல்ல நினைக்கிறன்
நீ என்னை பார்க்க சொல்ல வரவில்லை
எழுத பார்க்குறேன்
நீ என்னை பார்க்க வார்த்தை வரவில்லை
பாடல் படிக்கிறேன்
நீ என்னை பார்க்க ஒலி வரவில்லை

இப்படி

உயிர் வாழ உயிர் மூச்சு மட்டும் தான் வேலை செய்கின்றது
இதோ சுவாசத்தில் எழுதி அனுப்புகிறேன்
சு(வாசித்து) விட்டு சொல்லடி காதலை...!

நிலவு


Thursday, November 21, 2019

காதல் பாடல்#57

எனக்குள்ள நுழைஞ்சிட்ட
செல்லுசெல்லா கலந்திட்ட
கணினிய மடிப்பது போல என்னயே மடிச்சிட்ட..
சகுனியின் பேச்சை போல பேசியே மயக்கிட்ட..
பாவம் நான் கொஞ்சம் கவனி  உன்னால சாமியாடி போகுறேனே பவனி...
சரணம்
********
அழகு சிலை உன்ன பார்த்தா அசைந்து நின்னு பார்க்கும்
ஆயக் கலை உன்ன படிச்சா வணங்கி நிமிர்ந்து நிற்கும்
ஓவியம் நீயென இருந்திட நான் காகிதம் ஆகனுமே
இதயம் நானென இருந்திட நீயே துடிப்பாக வேண்டுமே..
இதுவே எனக்கு போதுமே வேற என்ன இதுபோலவே நான் வாழ வேண்டுமே..

சரணம்
********
சாமி வந்து வரம் கேட்டா உன்ன மட்டும் கேட்பேன்
சாகா வரம் தர சொல்லி கட்டளையும் இடுவேன்
யாரும் இல்லாத உலகத்துல நாம மட்டும் வாழனுமே
காதல் சொல்லாத காதலையும் நாம செய்து பார்க்கனுமே
அந்த நொடி போதுமே மத்த நொடி அதபோலவே ஆயுள் வரை தொடரனுமே..

Wednesday, November 13, 2019

Feeling ah machi

Feeling ah machchi feeling ah
Y y y y y y feelingu
eyes close ah ears mouth close ah
Na na na na  problemu
This is te rulu
Simply Follow u mamu
Then you can winnu you can winnu

Saranam
*********
Fall down ah dont worry
Sudden wakeupu will rise u up
Truthful ah u do work that will give u all backu
Many things comes like speedbrakeku u fight it'u n fire it'u
Then all thing will be alright'u

Saranam
**********
not enough ah two hands
Addon confidence will add u hand
Heartful ah u mindit'u that will make u all strongku
Many ppl tell you manythings'u u leave it'u n show it'u then all know about ur weight'u

Tuesday, November 5, 2019

காதல் பாடல்#56

உன்ன உன்ன நெனக்கையிலே
நான் என்ன என்ன மறக்குறேனே..
கண்ணுகுள்ள கரு மணியா
நித்தம் நின்னு நின்னு சூழட்டுறியே..
தூக்கம் தொலைவில் நின்னு கேலி செய்யுதே
உறவுகள் சேர்ந்து நின்னும் தனிமை சேருதே
காதல் உள்ளுக்குள்ள சண்ட போடுதே...
சரணம்
********
தனிமையில் நடக்குறேன் வழித்துணையே நீயென
தனிமையில் பேசுறேன் மொழிவது நீயென
தனிமையில் சிரிக்குறேன் நகைப்பது நீயென
தனிமையில் படிக்கிறேன் முகவரி நீயென
உன்னுடன் வாழுறேன்  மனம் முழுவதும் நீயென.
சரணம்
*********
ஆகாயகம் பறக்குறேன் வானவில்ல புடிக்கத்தான்
நிலவ எடுக்குறேன் கூடையில அடைக்கதான்
நட்சத்திரம் பறிக்குறேன்   காதலா தொடுக்கத்தான்
வண்ணங்களை சேர்க்குறேன் மாலையா கொடுக்கத்தான்
சம்மதிச்சா போதுமே வரும் காலமே நாமென.

Thursday, October 31, 2019

இப்படிக்கு சுர்ஜித்தின் தாய்

சோளக் காட்டுக்குள்ள
விளையாட போனவனே
இப்படி
சோகம் வந்து சேருமெனு
கொஞ்சம் கூட நெனக்கலையே...

மண்ணாள வந்தவனு
காணா கண்டு இருந்தேனே
இப்படி
மண்ணு கொண்டு போகுமுனு
கனவில் கூட நெனக்லையே..

பொத்தி பொத்தி வளத்த மகன்
என்ன பாடு பட்டானோ
ஆடி அசைந்து நடந்த மகன்
அசைய முடியா தவிச்சானோ

எத்தனை எத்தனை முயற்சிகள்
பண்ணி பார்த்தோமடா
எத்தனை எத்தனை கருவிகள்
பொருத்தி பார்த்தோமடா
எத்தனை எத்தனை பிரார்த்தனை அர்ச்சனைகள்
செய்து கொண்டோமடா
அத்தனைக்கும் அத்தனைக்கும்
இயற்கை செவி சாய்க்கலடா..

பவுடர் பூசி பார்த்த மகன்
பளிங்கு கல்லாய் ஜொலிச்ச மகன்
அழுதா கூட என் அழகு மகன்
அழுகும் நிலையில் பார்த்தவுடன் அய்யய்யோ மனம் தாங்கலையே..

மீண்டு வருவானு நினைச்சிருந்தேன்
இப்படி
மாண்டு மண்ணாவானு நெனக்கலையே..
மீண்டும் மீண்டும் வருகிறாய் எங்கள் கனவில்
மீளா துயரில் தமிழகம்  தான் அவன் நினைவில்..

தண்ணீருக்காக தோண்டி வச்சோம்
மூட வழியில்லா கிடப்பில் வச்சோம்
அது தவறு தெரிஞ்சும் மறைக்க மறந்தோம்
அந்த தவற நீ தமிழகம் உரைக்க தவறி விழுந்தாயோ
இப்போ
சுர்ஜித் எங்க மொத்த மகிழ்ச்சியையும் மண்ணுகுள்ள கொண்டு சேர்த்துகிட்டான்..

இனி இதுபோன்ற நிகழ்வு வேண்டாமே
முதலும் இறுதியுமாய் என் மகன் உயிர்ப்பலி அதை சொல்லிடுமே..

Saturday, October 26, 2019

தமிழ் கீதம்

கல்-மண்-புல்-முன்தோன்றிய தமிழே   
உலகத்து-தாய்மொழி-தமிழே 
குமரிக்கண்டம் கடல்மலை கடந்து   
உலகமே வியந்திட்ட தமிழே 
கம்பன் வள்ளுவன் இளங்கோ அவ்வை
கைகளில் தவழ்ந்திட்ட தமிழே
ஈரடி சொல்லும் தமிழே 
கீழடி சொல்லிடும் தமிழே
அமுதே திகட்டாத தமிழே
உலகென்ன உயிரென்ன பரவிய தமிழே
வானத்து புகழ்கொண்ட தமிழே
(Jaya he, Jaya he, Jaya he,)
தமிழே தமிழே தமிழே
(jaya jaya jaya jaya he )
வாழ்க வளர்க செந்தமிழே 

Thursday, October 24, 2019

காதல் பாடல்#55

சுட்டும் விழியால
என்னை சுண்டி இழுக்குற
கன்னக் குழியிலதான்
அதை மூடி மறைக்குற
என்ன உன்கிட்டதான் தேடிதேடி வாரேன் புள்ள
நானே நீயாகதான் சுத்துரேண்டி ஊருக்குள்ள
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
நாலு கண்ணால
தாலி கட்டி முடிக்கனும்.
அஞ்சு ஆறுனு
நாம பெத்து சுமக்கனும்.
ஊரே மெச்சுர வகையில் வாழ்ந்துதான் பார்க்கனும்
இணைப்பிரியாத ஜோடி  நாமென்று உலகம் சொல்ல கேட்கனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
காலம் இறுதிவரை
நம்முள் காதல் பெருகனும்
கண்ணே மணியேனு
எப்பவும் கொஞ்சி மகிழனும்.
பொதுவா நடந்து போகையில வழித்துணையா இருக்கனும்.
இடைவிடாமல் கூடி இடைவெளி வராது நாமும் வாழனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே

Friday, October 18, 2019

தந்தையின் தாலாட்டு பாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
நான் பாராட்ட பாடும் பாட்டு
செல்லமே பாரு
நான் தாலாட்ட தாயும் ஆனேன்
தங்கமே கேளு
நான் இருக்க ஏன் அழுற
வான் மேகம் அதும் தாண்டி
தேடி தேடி தமிழெடுத்து
அப்பன் நான் பாட்டெழுத
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

சரணம்
*********
கட்டிவச்ச முத்துசரம் நீ கட்டவிழ்க விசித்திரம் நீ
கொட்டிவைச்ச புதையல் நீ
எட்டிவைக்க புவியியல் நீ
தட்டிவைச்ச உள்ளம் முழுதும் நீ
பட்டிதொட்டி கிட்டாத செல்வம் நீ
என்னால நீ உருவாக
உன்னால நான் மீண்டும் கருவானேனே..
எதுவாக இருந்தாலும் எதற்காகவும் கலங்காதே
அப்பன் நான் துணை இருக்க
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

Tuesday, October 15, 2019

கலாம் அய்யா

கனவு தலைவா கனவு காண்கிறோம்
உந்தன் எந்தன் கனவுகளையும் நனவாக்க...

நீ பிறந்த இந்த மண்ணில்
நாங்கள் பிறந்ததே வாழ்வதே பெருமை...

மெய்ஞானத்தை பிறப்பிடமாக கொண்டு
விஞ்ஞானத்தை கண்டு மெய் மறந்து சிலிர்க்க வைத்தீர்...

நீர் இம்மண்ணில் விழுந்தாலும்
உந்தன் சொல்லில் விழுந்தவர்கள் நாங்கள்
இதோ விதைக்கின்றோம் செடிகளை
எங்களுடன் முளைத்து வருவார்கள்
வருங்கால பல கலாம்கள்...

படிப்பே தரும் உயர்வு உணர்த்தியது கலாம்
பதவிக்கும் தந்தது உயர்வு அதுதான் கலாம்
பள்ளி பிள்ளைகளுக்கு பாசமிகு கலாம்
பண்பின் உருவம் அவரே கலாம்

காலம் உள்ளளவும் கலாம் அய்யா
எங்கள் உள்ளம் நீங்காது இருப்பீர்...

Tuesday, October 1, 2019

ஒரு பக்க க(வி)தை#10

நதிக்கரையில் அமர்ந்த படி நான்
இருள் சூழ்ந்து கும்மி அடித்துக் கொண்டிருந்தது.

நிலவு மேலே உலவி கொண்டிருந்தது..
ஏ நிலவே என்ன செய்கிறாய் என்றேன்?
முகிலோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றது.

காற்றை உணர்ந்து
ஏ காற்றே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என வினவினேன்?
காற்றோ வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருக்கிறேன் என்றது.

எங்கோ ஒளிரும் நெருப்போ
இருக்கும் இருளை விலக்க முயற்சித்து உறவாடி கொண்டிருந்தது.

மண்ணுக்கோ விண் கண்ணடித்து
தூது விடுத்து கொண்டிருந்தது.

ஓடும் நதியை பார்த்து கேட்டேன் என்ன செய்கிறாய் என்று?
நான் கடலிடம் சென்று உறவாட போய் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னது.

இப்படி

என்னை சுற்றி காண்பவை எல்லாம்
உறவாடி கொண்டிருக்க

உறவாய் நினைத்த என்னவள்
என்னை விட்டுச் சென்றதால்

நதிக்கரை ஓரத்தில்
தனிமையில் நான்..!

Sunday, September 29, 2019

அன்பே...

அன்பே...

மரபுக் கவிதை மகாராணி.
நவீனம் போற்றும் கலைவாணி.

பாடல்கள் புணையும் பாரதி.
எண்ணங்கள் தீட்டும் ரதி.

ஹைக்கூ கன்னி.
நகைச்சுவை மன்னி.

குறுங்கவிதை சிற்பம்.
கதை பேசும் ஓவியம்.

சிறுகதை புன்னகையரசி.
தொடர்க்கதை இல்லத்தரசி.

புதுகவிதை இளவரசி.
காவியமாகும் கவியரசி.

உரைநடை பேசி பழகும் இலக்கியத்தோழி.
கட்டுரையை வாரி இரைக்கும் இலக்கணவாலி.


மொத்தத்தில் இவள் ஒரு


”அழகிய தமிழ் சொர்க்கம் ”

Saturday, September 28, 2019

ஒரு/இரு வரி கவிதை # 12


மாறாமல் மாறும் என்பான் மாறாதே எதுவும்
முடியாமல் முடியும் என்பான் எதிலும் முன்னேறி நிற்பான்!

Friday, September 27, 2019

உலக வரலாற்றை மாற்ற போகும் கீழடி

அவ்வை சொன்னாள் ஓரடி
வள்ளுவன் புணைந்தான் ஈரடி
பாரதி பாடினான் பாடலடி
மன்னர்கள் வீசினார்கள் வாளடி
பழமைக்கு பழமை நாமடி
கீழடியே எங்கள் தாய்மடி

கண்டோம் மண்பானை தமிழ் பெயர்களடி
பார்த்தோம் உறைகிணறுகள் செங்கல் சுவரடி
வியந்தோம் மணிகள் தங்கம்தானடி
காட்டியிருக்கிறோம் வியக்கும் கட்டுமானம் நெய்திருக்கிறோம் ஆடை நெசவடி
செய்திருக்கிறோம் கழிவுநீர் ஓடைகள் வீதிகள் வணிக வியாபாரமடி
சொல்லி கொண்டிருக்கும் சிந்துசமவெளி மற்ற நாகரிகம் அனைத்திற்கும் நாமே மூத்தகுடி
கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும் இதில் காணும் பேருண்மையடி
விலங்கு பழகி ஏர் பிடித்து நன்னிலம் செய்த பெருமையடி
பேசும் மொழிகளுக்கெல்லாம் ஆதாரம் தமிழியடி


இவைகளுக்கு ஈடு இணை ஏதடி
தமிழனின் செயலும் கண்டுபிடிப்பும்  நெத்தியடி

தமிழன் விதைந்து எங்கும் பரவிய விருட்சமடி
புதைந்து எங்கும் கிடக்கும் புதையலடி

அன்று முதல் இன்று வரை
நாம் வைத்த வைக்க போகும்
ஒவ்வொரு அடியும்
உலகம் வியக்கும்படி..
இந்தியா மட்டுமல்ல உலக வரலாற்றை மாற்றப்போகிறது நமது கீழடி..!

Wednesday, September 25, 2019

வெங்காயமே....

உன்னை துகில் உரிக்க
குழந்தை ஆகிறாய்

உன்னை உரிக்க உரிக்க காற்றில் கலந்து காணா போகிறாய்

வலியோ உனக்கு
விழி நீரோ எனக்கு
வருத்தம் கொண்டாலும்
வருத்து உண்போம்
அறுபடுவதோ நீ
அழுவதோ நாங்கள்
கல் நெஞ்சம் கொண்டவனும்
உன்னை கொல்ல
கண்ணீர் கொள்வான்.

பெண்களை அழ வைப்பதில்
நீ ஒரு மாமியார்.

ஆண்களை அழ பைப்பதில்
நீ ஒரு பெண்.

உரித்து பார்த்தால்
நீ ஒரு வாழ்க்கையின் அர்த்தம்.

உணராதவர்களுக்கு
நீ ஒரு எரிச்சல்.

அசுர வளர்ச்சியில் சில சமயம் 
நீ ஒரு அமெரிக்க டாலருக்கு நிகர்.

திகட்டாத
பல்சுவை உணவு கொடுப்பதில்
நீ ஒரு அற்புதம்.

தேர்தல் களத்தில்
எதிர் கட்சிகளுக்கு
நீ ஒரு நாகாஸ்திரம்.

வீட்டை மட்டுமல்ல
நாட்டையும் ஆள்கிறாய்
நாடாளுமன்றத்தில் சண்டையும் மூட்டுகிறாய்.
சில சமயம்
ஓட்டை கூட தட்டி பறித்து சொன்று விடுகின்றாய்..

கிடுகிடுவென விலையில் உச்சத்தில் ஏறி கொள்கிறாய்
விடுவிடுவென மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறாய்

பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு
பார்காது அழவிடும் நடுநிலைவாதி

உன்னாலும் இங்கு அரசியல் நடக்குது
உன்னாலையே இன்று
அரசியல் நடக்குது..

நடுநிலைவாதி வெங்காயமே வீழாதே எதிரியின் கூடாரத்தில் !
நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் என்று மக்கள் மனதில் !

Thursday, September 19, 2019

நான் சுபசிறி பேசுறேன்...


அன்புடன் அப்பா என்று அழைத்துவிட்டு
ஆசையாய் அன்னையை அணைத்துவிட்டு
பாட்டியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளி
தன் நாயிடம் ஒழுங்காயிரு என்று அதட்டலாய் சொல்லி
தலைகவசத்தை தனக்கே உரிய பாணியில் மாட்டி
அனைவரிடமும் போய்டு வரேன்னு சைகை காட்டி புறப்பட்டேன்..

சாலையோர மரம் செடிகொடிகள் என்னை தலை அசைத்து வரவேற்க
மெல்லிய தென்றல் வருட
நடுவே கட்டப்பட்டுள்ள பேனர்கள் முரைத்து தன்னை விளம்பரபடுத்திக் கொண்டது
பீம்பூம்பாம் என்ற இரைச்சல் நடுவே என வண்டியும் பயணித்தது..

அலுவலகம் அடைந்தேன் புதுமையாக இருந்தது
நண்பர்கள் பேச்சு என்றும் போல் சுவாரசியமாக இருந்தது
பணியின் கடமைகளை கவனமாய் முடிப்பதில் இருந்தது

மாலை வேளை வீடுதிரும்ப ஆயத்தம் ஆனேன்
மீண்டும் தனக்கே உரிய பாணியில் தலைகவசம் அணிந்தேன்
செல்ல செல்ல வண்டியை செல்லமாக உதைத்தேன்
கவனமாக நாற்பதிற்கு மிகாமல் சாலையின் சென்று கொண்டிருக்க

நினைவில்

குடும்பத்தாரை பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி
இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல போகின்றோம் என்ற மகிழ்ச்சி
நாளை அப்பா பெரிய சொந்த வீடு வாங்கிவிடுவார் என்ற மகிழ்ச்சி
நல்லதொரு வாழ்க்கை அமையும் எனக்கும் நல்வாழ்க்கை அமைந்திடும் என்ற மகிழ்ச்சி

மகிழ்ச்சியில் மீண்டும் பார்த்த மரம் செடிகொடிகளை பார்த்தேன். அசையவில்லை
காலையில் வரவேற்ற வரவேற்பு இல்லை.

ஏனோ அதற்கு தெரிந்துவிட்டது
எனக்கு தெரியவில்லை

ஆனால்

காலையில் முறைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொண்ட பேனர்கள் அசைந்து கொண்டிருந்தன.

சென்று கொண்டிருக்க

அசைந்த ஒரு பேனர் என் மீது விழ
நிலை தடுமாறி நான் விழ
உயிரோடு தான் இருக்கிறேன் என்று கைகளை தூக்கினேன்
பின் தொடர்ந்த பாம்பீம்பூம் தண்ணீர்லாரி நிலையிழந்து என்னை பதம் பார்த்தது.

நிலையான வாழ்க்கை குலைந்து போனது
விதிபடிதான் வந்தேன் என் விதி முடிந்தது போனது
குடும்ப வருங்காலவேர் பிடுங்கி எறியப்பட்டது

வாழ்ந்தபின் மடிந்தால் இயற்கையின் வெற்றி
நோயால் மடிந்தால் முயற்சியில் தோல்வி
முடியாமல் மடிந்தால் கோழையின் இழிசெயல்
விபத்தால் மடிந்தால் மனிதனின் அலட்சியம்
ஆம்
மனிதனின் அலட்சியமே..

யாரை குறை சொல்வது

ஒழுங்காக வண்டி செலுத்தி வந்த என்னையா?
முறைத்து பார்த்த அந்த பேனரையா?
அதை அசைத்து பார்த்த பூங்காற்றையா?

குறை சொல்லி என்ன பயன்
அரைகுறை ஆனது எனது குடும்பம்.

தடையை மீறி பேனர் வைத்ததால் தான்
எனது வாழ்க்கையின் தடையாய் வந்து நின்றது.
இது மறுக்க முடியாத உண்மை.

நம் நாட்டில்
சட்டங்கள் இருப்பது
ஒருவர் இறப்பதால் தான்
செயலுக்கு வருமோ?

சட்டத்தை மதிப்போம்
சாலை விதிகளை கடை பிடிப்போம்

எனது உயிரே கடைசி உயிராய் இருக்கட்டும்
இது போன்ற பயணமே இறுதி பயணமாக முடியட்டும்.

Friday, September 13, 2019

சிறு சிறு..

சிறு கால்களை கொண்டு தத்தி தத்தி பிறகு
சிறகுகள் முளைத்து விரித்து வானின் உயரம் அடைகிறது பறவைகள்..

சிறு மணித்துளி துளியாய் ஒன்றாய் சேர்ந்து சேர்ந்து
சிறுசிறு கிளைஆறாக பிரிந்து வளைந்துநெளிந்து பெரும் கடலாகிறது..

சிறு விதையாய் மண்ணில் இட்ட செடி 
சிறுக சிறுக வளர்ந்து ஆலமரமாய் விழுதுடன் நிற்குது..

சிறு சிறு கற்கள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்துதான்
சிறு குவியலாக இருந்து பெரு மலையாக உரு பெற்று நிற்கிறது..

சிறு புள்ளியில் தொடங்கி பல புள்ளிகள் இணக்கம் காட்டி
சிறு கோலம் பெரும் கோலமாய் வீதியெங்கும் விரிந்து அற்புதமாகிறது..

சிறு சிறு எழுத்துக்கள் ஒட்டிப் பிணைந்து வார்த்தைகளாக
சிறு வாக்கியமாக மாறி பெரு காப்பியமாகி அச்சிடப்படுகின்றது..

அதுபோல

சிறிதாக சிந்தனையில் தோன்றிய எண்ணம் தான் பெரியதாய்
சிறிய பட்டிதொட்டி எங்கும் பலரால் பெரிதும் பேசப்படும்..

Tuesday, September 10, 2019

MOtivation#85


ஒரு பக்க க(வி)தை#9

ஒரு தோட்டத்தில்
பூக்களைப் பறிக்காதே என்று தகவல் பலகையை
நட்டுவிட்டுச் சென்றான் தோட்ட்டக்காரன்!

தினமும் தோட்டத்தை நோட்டமிட்டபடி
அழகாய் நடமாடி அவள் சென்று வந்தாள்.
பார்க்கும்போது அவள் நடப்பதுபோல் இல்லை
நடனமிட்டு செல்வதுபோல் இருக்கும்!

அவளை பார்க்கும் போது தோட்டத்தில் உள்ள பூக்கள்
எல்லாம் தன்னை பறித்து சூடிக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்.

ஒருநாள் அவள் வரும்போது பூக்கள் எல்லாம் தன்னை பறித்துச்
செல்ல வேண்டுமென்று காற்றிடம் ஓர் உதவி கேட்டது !

காற்று வீசிய வீச்சில் தகவல் பலகை குப்புற கீழே வீழ்ந்தது !

அவள் வந்தாள் பூக்களைப் பறித்து அள்ளிச் சென்றாள்.

பூக்கள் எல்லாம் அவளால் மோட்சம் அடைந்து அவளை சூடிக்கொண்டது..

மீண்டும் வந்த தோட்டக்காரன் விழுந்து கிடந்த
தகவல் பலகை மறுபடியும் நட்டான் !

மலரும் மொட்டுக்கள் எல்லாம் ஒன்றை ஓன்று
கண்ணடித்துக் கொண்டன காற்று இருக்க நமக்கென்ன என்று..!

Thursday, September 5, 2019

அவள் பெயரும் பூவும்

அவள் தெருவோறம் நடந்து போகையில
அவளின் பெயர் சொல்லி அழைத்தேன்
தெருவோற பூக்கள் எல்லாம் தலைநிமிர்ந்து பார்த்தது.
பின் அழைத்தது நம்மை இல்லை என அறிந்த அந்த பூக்கள் தலைகவிழ்ந்து நின்றது.

அவளின் பெயரை பூக்களுக்கு மத்தியில் எழுதி வைக்க
அனைத்து பூக்களின் தலைவிதியும் மாறி அவைகளின் தலைவியென ஏற்க தொடங்கின.

அவள் பெயர் மீது
மலர்களை குவித்து மூடி வைத்தேன்
மலரின் வாசத்தை
அவள் பெயர்
விழுங்கிருந்தது.

அவள் பெயரை
கட்டிப்பிடித்து உறங்கி கிடந்த மலர்களை
விலக்கிப் பார்த்தேன்
அத்தனையும்
சற்று வளர்ந்திருந்தது.

அவளின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க பூக்களெல்லாம் பூத்து பூத்து குலுங்கி கொண்டன.

அவளின் பெயரை அழகு என்றேன்.
பூக்களெல்லாம் நான்கு திசையின் பக்கம் திரும்பி நின்று கோபித்து கொண்டன.

அவளின் பெயரை மந்திரமாக உச்சரித்தேன்.
பூக்கள் எல்லாம் அதன் இதழ்களால் மது அருந்தியது போல் மயக்க நிலையில் தலையசைத்து ஆடின.

ஆடிக்கொண்டே பூக்கள் எல்லாம் அவள் பெயரை  சொல்ல சொல்ல
அவளது பெயரே அனைத்திற்கும் முதன்மையாக சூடி கொண்டது..!

ஆம்

அவளது பெயரால்
பெயர்பெற்றன பூக்கள்..!

MOtivation#83


MOtivation#82


MOtivation#81


MOtivation#80


MOtivation#79


MOtivation#78


Wednesday, September 4, 2019

ஆசிரிய பெருமக்களுக்கு

கரும் பலகைகளில்
வெறும் எழுத்துக்களால்
தரும் அறிவுகொண்டு
பெறும் மதி மதிப்புடன்
பெரும் வாழ்க்கையை

காண செய்யும்

ஆசிரிய பெருமக்களுக்கு

எனது ஆசிரிய தின வாழ்த்துகள் 💐💐💐💐

காதல் பாடல்#54

மலரா நீ மலரா
நின் முகம் மலரின் மலரா..
ஒளிரா நீ ஒளிரா
விண் நிலா முகத்தின் ஒளிரா..
பூத்து சிரித்து ஒளி வீசுகிறாய்
நெஞ்சம் கொய்து மதி மயக்குகிறாய்..
சரணம்
********
உயிரில் விழும் பனித்துளியை இதழ்தேனாய் பருகுகிறாய்
உன் இதழ்தேன் பருக நான் வண்டாக உருகுகிறேன்.
நீ இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிக்க விரிக்க என் மனம் எனும் தோட்டத்தில் உன்னை பூக்க செய்து பூரிப்படைய போகின்றேன்
வா வா என் வாழ்வின் மணமே வா
சரணம்
********
தென்றலின் எழில்  தேவி தேன்நிலவின் காதலி
என் தோட்டத்து அழகு ராணி உயிரின் ஆட்டநாயகி.
நீ இதழ்களை ஒவ்வொன்றாக உதிர உதிர நான் என் உயிரினில் ஏந்தி கொள்வேன்
மண்ணில் விழும் முன்னே மண்ணோடு மண்ணாவேன்.
வா வா என் உயிரின் ஆதாரமே வா

Saturday, August 31, 2019

MOtivation#77


MOtivation#76


நவீன திருக்குறள் - அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்
+++++++++++++++++++++++++++++

வாழ்வின் போது பதிசதியை அறியாதாரும்
நோய்வாய்ப்பட சதியை அறிவார்.

உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால்
உறங்கும் வயதில் உழைக்கநேரும்.

ஆடம்பரமாக வாழ நினைப்பது வாழ்க்கையல்ல
ஆரோக்கியமாக வாழ்வதே வாழ்க்கை.

வசதிக்காக வானத்தில் கூட பயணிக்கலாம்
வாழ்க்கைக்காக நடந்தாலே போதும்.

தன்னிடமுள்ள  தவறை மறைக்க வக்கீலாவான் 
பிறருக்கோ நீதிபதியாக நடப்பான்.

நடப்பவை எல்லாம் நம்மாலே மறந்தும்
நடந்ததை வெளியில் தேடாதே. 

சிறுவயது மகனுழைத்தால் தந்தை சரியோ
சரியில்லை பெருவயதில் அவருழைத்தால்.

கற்பிக்கப்பவில்லை கில்வி சாலையில் எங்கும்
கற்றுக்கொள்கிறோம் வாழ்க்கை சாலையில்.

உயரத்தில் விலைவாசி பாதாளத்தில் சம்பளம்
நகருமா நடுத்தர வாழ்க்கை.

 கஷ்டமும் கணிதமும் வாழ்க்கையில் ஒன்றுதான்
வாழ்க்கையின் இறுதிவரை வரும்.

Monday, August 26, 2019

ஒரு/இரு வரி கவிதை # 11


கடந்து போகிறாள் காற்றில் காதல் கலந்து போகிறாள்
அவளின் சுவாசத்தையும் அடித்த நறுமண வாசத்தையும்...

காதல் பாடல்#53

உன்னை பார்க்க பார்க்க
என்னை நான் மறந்தேன்
கன்னம் வேர்க்க வேர்க்க அதில் நான் குழைந்தேன்
எழுதவா இதழ் எழுதவா
படிக்கவா சுகம் படிக்கவா
கோடி இன்பம் கூடி வருதே அன்பே உன்னை நாடி வர்ணனை செய்கையில்..
சரணம்
********
உன் சுட்டித்தனமும்
குறும்பும்
மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யுதே என்னை..
உன் கிள்ளைமொழியும் கொள்ளைவிழியும் ஆனந்தத்தில் சொக்க வைக்குதே என்னை..
இரவுவான் உடையாக  விண்மீன்கள் உனது ஆபரணமாக நீயோ
வானவில் வலையலாக
மின்னல் சிரிப்பாக
நிலவு முகமாக
மேகங்கள் விழியாக
விடியும் சூரியன் உன் உதடாக என் வான்தேவதையோ..
சரணம்
********
உன் புன்னகையும்
பொன்நகையும்
பித்தம் கொள்ள செய்யுதே என்னை..
உன் கொடியிடையும்
பொடிநடையும்
அடிக்குஅடி தொழ வைக்குதே என்னை
படைப்பதற்கு பிரம்மன் வரைந்த அசல் ஓவியம் நீயோ
சேலையின் சோலையோ
மங்கையெனும் மாலையோ
அழகு பூஞ்சோலையோ
மகிழும் மாஞ்சோலையோ
நாளும் வாடும் உன் நினைப்பில் என் மேனியோ...

Saturday, August 24, 2019

ஹைக்கூ பூக்கள்#9

பேசி பேசி வலி(அலு)த்தாலும்
என்ன இருக்கிறது எதற்காக பேசுகிறோம்
என்றே தெரியாமல்
பேசி பேசி தீர்க்கின்றோம்
இன்றைய கைபேசி வாசிகள்.

***********

பேசும் மொழி புரியவில்லை?!
இருப்பினும் அழகுதான்!
மழலை மொழி!

***********

உடலும் உள்ளமும் ஒன்றுதான் சிந்தனையில்!
உயிரும், தமிழும் ஒன்றுதான் தாய்மொழியில்!

************

அன்று ஆங்கிலேயர்க்கு
இன்று ஆன்ராய்டுக்கு

*************

விழுந்து விட்டேன் என்று புலம்பாதே
உனது காலுக்கடியில் தான் பூமி என்று நினை
நிதானமாய் எழு வெற்றியை பறிக்க

Thursday, August 22, 2019

MOtivation#75


MOtivation#74


MOtivation#73


MOtivation#72


அன்பே...

அன்பே...

நீ என்னில் பட்டாய் கண்ணில்
நீ உன்னை இட்டாய் என்னில்
நீ காதல் சுட்டாய் நெஞ்சில்
நீ கானம் பாட்டாய் இதழில்
நீ தேனும் சொட்டாய் மொழியில்
நீ சதையில் தொட்டாய் விழியில்
நீ இதய மொட்டாய் வாழ்வில் 
நீ காதல் சிட்டாய் நாம் வானவீதியில்...!
மாறாக
நீ கைகள் விட்டாய் நான் நடுதெருவில்....!

Tuesday, August 20, 2019

MOtivation#71


MOtivation#70


காதல் பாடல்#52

எந்தன் வானம் நீ எந்தன் வர்ணம் நீ
எந்தன் காற்று  நீ எந்தன் சிறகுகள் நீ
மேகமாய் உந்தன் நினைவுகள் அலைந்திட
மழையாய் காதல் எங்கும் பொழிந்திட
எந்தன் வாழ்வும் நீ எந்தன் வளமும் நீ 
சரணம்
**********
வானம் காதல் குடை பிடிக்க
நாம் காதல் சிறகினை விரித்து வானம் நோக்கி பார்ப்போம் வா
அங்கு வானின் உச்சம் காதலில் நாமும் கொஞ்சம் அடைவோம் வா
முத்தம் மொத்தமும் பதிந்து வானின் எச்சத்தின் மழையென பொழியட்டும்  வா
சரணம்
***********
தேவர்களை நாம் வணங்கி நிற்க
நம் காதல் வாழ்ந்திட அவர்கள் வாழ்த்தை பெற்றுக் கொள்வோம் வா
அவர் அமுதம் தர அருந்தி நாமும் கொஞ்சம்  காதலிப்போம் வா
உலகின் காதலில் நமது காதலே முதன்மை என்று சொல்ல வைப்போம் வா 

MOtivation#69


Friday, August 16, 2019

ஒரு/இரு வரி கவிதை # 10


அன்பே உன் மேல் உள்ள காதலை கவிதைகளாக்கினேன்
பார் கவிதைகளும் முடியாமல் உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டது...!

ஒரு/இரு வரி கவிதை # 9



திமில் கொண்டு கொம்பு சீவிய காளையும் அடங்குமடி
அன்பே உன் திமிர் கண்டு மை தீட்டிய கண்களை பார்த்தால்....!

ஒரு/இரு வரி கவிதை # 8


அன்பே... உலகின் புகழ் பெற்ற அகராதிகள் அபத்தமானது
அதில் அழகிற்கு பொருள் உனது பெயரினை குறிக்க தவறியதால்...!

ஒரு/இரு வரி கவிதை # 7



அன்பே... நிறம் மாறும் உன் இதழ்களை பார்த்து
நான் தடம் மாறுவதை பார்க்காது நடக்கலாலேன்..!

Wednesday, August 14, 2019

காதல் பாடல்#51

இல்லை இல்லை இருவர் இணைவது காதல் இல்லை இதயம் சேர்வதே காதல்
இல்லை இல்லை ஒன்றாய் வாழ்வது காதல் இல்லை உயிராய் வாழ்வதே காதல்
உன்னை பார்த்தநொடி கண்ணாடியில் என் முகம் இல்லை
திரும்பும் திசையெங்கும் என்னைசுற்றி என் பிம்பம் இல்லை
நீதானே நீதானே நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அன்பே உன் நினைவுகள் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை கண்ணில் உன் கனவுகள் இல்லாமல் இல்லை
இல்லை நான் நானாக இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா வாழ்க்கையே இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா உலகில் நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அழகே உன் ஊடுருவல் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை உறவே உன் உயிர்தழுவல் இல்லாமல்  இல்லை
இல்லை வர்ணிக்க வார்த்தை இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா கவிதைகள் இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா என்னில் சுவாசமே இல்லை

Friday, August 9, 2019

அவள் பெயர் நிலா....!

உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்..
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
வாசம் பெறுகிறது..
உன் சிரிப்பின்
அதிசயம் பார்த்து
பூக்கள் ரகசியம்
கற்றுக் கொண்டது..
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
எப்படி பறப்பது என
கற்றுக்கொள்ள
ஒப்பந்தம் செய்கிறது..
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது..
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்..
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது..
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
சுழற்சியில் இருந்து விடுபட..
பச்சை மரங்களின்
நடுவே குயில்கள் கூவும்
சத்தம் அவளின் பேச்சை
கேட்க வெட்கி தலை வணங்கும்..
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது..
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது..
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்..

இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!

Thursday, August 8, 2019

அன்பே...

அன்பே..😍

நீ பிறந்தாய் தேவதை என்றார்கள்
நானோ தேவதைகளின் தேவதை என்றேன்.

நீ தவழ்ந்தாய் அற்புதம்  என்றார்கள்
நானோ முத்து அவிழ்ந்தது என்றேன்.

நீ வளர்ந்தாய் நிலா என்றார்கள்
நானோ நிலவின் ஆதாரம் என்றேன்.

நீ நடந்தாய் நடை என்றார்கள்
நானோ அன்னநடை என்றேன்.

நீ மலர்ந்தாய் பூ என்றார்கள்
நானோ பூந்தோட்டம் என்றேன்.

நீ மொழிந்தாய் தத்துவம் என்றார்கள்
நானோ தனித்துவம் என்றேன்.

நீ சிரித்தாய் அழகு என்றார்கள்
நானோ அழகின் அழகு என்றோன்.

நீ அழுதாய் கண்ணீரை துடை என்றார்கள்
நானோ கண்ணீர் துடைப்பேன் என்றேன்.

நீ கோபம்கொண்டாய் கூடாது என்றார்கள்
நானோ கோபம் தணிப்பேன் என்றேன்.

நீ படித்தாய் சமத்து என்றார்கள்
நானோ உன்னை படித்தேன் என்றேன்.

நீ காதலித்தாய் வேண்டாம் என்றார்கள்
நானோ எனது வாழ்க்கை வேண்டும் என்றேன்.

நீ சம்மதித்தாய் முடியாது என்றார்கள்
நானோ காத்திருப்பேன் என்றேன்.

நீ மணந்தாய் சம்மதம் என்றார்கள்
வேறு ஒருவரை மணந்தாய் சம்மதம் என்றார்கள்
நானோ எனது சமாதியின் உள்ளே உன்னை வாழ்த்துவேன் என்றேன்...

ஒரு/இரு வரி கவிதை # 6



அன்பே... நீ என்னை கடந்து போகையில்
நான் உன்னை கடத்திப் போகின்றேன் எனது கண்களால்...!

ஒரு/இரு வரி கவிதை # 5


இலை


MOtivation#66


Tuesday, August 6, 2019

ஒரு/இரு வரி கவிதை # 4


கன்னத்தில் விரல் வைத்தபடி நீ பார்த்துகொண்டிருந்தாய்
பாழாய் போன என் மனசு அதில் ஒற்றடையாய் ஒட்டிக்கொண்ட நீ...!

ஒரு/இரு வரி கவிதை # 3


வான்மேக அழகி நீ மின்னலாய் கண்ணடிக்கிறாய்
பூலோக மண் நான் மின்னமின்ன அழகாகுகிறேன்..!

ஒரு/இரு வரி கவிதை # 2


இதயத்தை இடம்பெயர்த்து எடுத்து சென்றுவிட்டாய்
இன்று இதயமாகவே என்னில் வாழ்கின்றாய்...!

Monday, August 5, 2019

ஒரு/இரு வரி கவிதை # 1


இருவரின் தனித்தனி இதயத்துடிப்பும்
இணைந்து ஒன்றுசேர இதயம்துடிப்பதே காதல்...

Friday, August 2, 2019

தவிப்பு


அன்பே அருள்வாயா...?

அன்பே
உனது சிரிப்பின் சைகை
என்னை கவிதை எழுத தூண்டுகிறது

ஆயத்த படுத்திக்கொண்டேன்


உனது பற்களின் வெண்மையை பிடுங்கி காகிதமாக விரித்து
உனது மௌனத்தின் மொழியினை வடித்து
எழுத்துக்களாய் மாற்றி
உனது சொற்களின் வலிமையை தொடுத்து
உனது உதட்டுசாயம் எனது எழுதுகோல் நிரப்பி

இதோ எழுதுகிறேன்
உனக்கான ஓர் கவிதை

எனது நரம்புகளில் நித்தமும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறாய்
எனது உதிரத்தில் நின்று ருத்திரதாண்டவம் ஆடுகின்றாய்
எனது இதயம் உனது நினைவினில் இயங்குகிறது

காதலால் என்னை காலி செய்து
கண்முன்னே பத்திரகாளியாய் நிற்கிறாய்

பக்தனாக நான் அருள்வாயா...?

Thursday, August 1, 2019

கற்பனை பாடல்

உலா வருகிறேன் நான் நிலா அன்பே உன்னை தேடித் தேடி
சொல்ல நினைக்கிறது ஏதோ அன்பே உன்னிடம் கோடி கோடி
கண்ணை பார்க்க முடியாது தலை கவிழ்ந்து சொன்னது
நீதான் என் தலைவி என்று..
சரணம்
********
பெண்ணே வானம் கூட என்னை ஏற்க மறுத்தது
உன்னை பார்தப்பின்..
எங்கள் நாடாளுமன்றத்தில் நட்சத்திரங்களின் ஒட்டுமொத்த ஓட்டும் உனக்கு தான் விழுந்ததடி
இதோ கொடுக்க வந்துள்ளேன் ராஜினாமா கடிதம் உன்னிடம்
ஏற்றுக் கொள் பதவியையும் தொண்டனாக என்னையும்...
சரணம்
********
சிரித்து குலுங்க விண் மீன்கள் ஏனோ மின்னி கொண்டே நின்றது
கண்கள் சிமிட்டிகொண்டதில் வானுலகம் ஒட்டுமொத்த கோள்களும் உனக்கு தான் அடிபணிந்ததடி
இதோ இரக்கம் காட்டிவிடு ஆம்மென்று தலையை அசைத்துவிடு காப்பாற்ற வானுலகம்
 வந்துவிடு பூலோகதேவதையே..

வானம்


ஹைக்கூ

நியாயவிலைக்கடையில்
அரிசி
அவளுக்கு மட்டும்
நியாயமான எடையில்....!

ஹைக்கூ

மழை பெய்யும் போதெல்லாம் 
கூப்பாடு போடுகின்றன 
மனத் தவளைகள்..! 

வாழ்ந்துபார்

அனுபவம் கொடுக்கும்
அறிவே தொடக்கம்
அகிலம் உனகென்று வாழ்ந்து பார்

இளமை துடிக்கும்
தோல்வியில் வெடிக்கும்
அது நிரந்திரமல்ல வாழ்ந்துபார்

ஒருமுறை வாழ்க்கை
ஒரு முறை மரணம்
கடைசி நொடி வரை வாழ்ந்து பார்

எதுவும் உனதில்லை
உன்னுடன் இருப்பதும் உனதில்லை
உண்மைகள் அறிய வாழ்ந்துபார்

கேள்விகள் ஜனிக்கும்
பதில் கிடைக்கும் வரைக்கும்
முயற்சிதான் வாழ்க்கை வாழ்ந்துபார்

மறிப்பது பெரிதல்ல
மரணமும் பெரிதல்ல
நல்ல மனிதனாய் நீயும் வாழ்ந்துபார் 

தோழா ....


இன்றைய தடுமாற்றம்


இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க
இல்லாத பலவும் இருப்பதாய் சொல்லி
எங்களை நாங்களே ஏமாற்றி கொண்டிருக்கிறோம் ....

கூமுட்டை


கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...