உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்..
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
வாசம் பெறுகிறது..
உன் சிரிப்பின்
அதிசயம் பார்த்து
பூக்கள் ரகசியம்
கற்றுக் கொண்டது..
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
எப்படி பறப்பது என
கற்றுக்கொள்ள
ஒப்பந்தம் செய்கிறது..
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது..
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்..
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது..
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
சுழற்சியில் இருந்து விடுபட..
பச்சை மரங்களின்
நடுவே குயில்கள் கூவும்
சத்தம் அவளின் பேச்சை
கேட்க வெட்கி தலை வணங்கும்..
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது..
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது..
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்..
இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்..
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
வாசம் பெறுகிறது..
உன் சிரிப்பின்
அதிசயம் பார்த்து
பூக்கள் ரகசியம்
கற்றுக் கொண்டது..
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
எப்படி பறப்பது என
கற்றுக்கொள்ள
ஒப்பந்தம் செய்கிறது..
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது..
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்..
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது..
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
சுழற்சியில் இருந்து விடுபட..
பச்சை மரங்களின்
நடுவே குயில்கள் கூவும்
சத்தம் அவளின் பேச்சை
கேட்க வெட்கி தலை வணங்கும்..
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது..
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது..
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்..
இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!
No comments:
Post a Comment