Tuesday, November 5, 2019

காதல் பாடல்#56

உன்ன உன்ன நெனக்கையிலே
நான் என்ன என்ன மறக்குறேனே..
கண்ணுகுள்ள கரு மணியா
நித்தம் நின்னு நின்னு சூழட்டுறியே..
தூக்கம் தொலைவில் நின்னு கேலி செய்யுதே
உறவுகள் சேர்ந்து நின்னும் தனிமை சேருதே
காதல் உள்ளுக்குள்ள சண்ட போடுதே...
சரணம்
********
தனிமையில் நடக்குறேன் வழித்துணையே நீயென
தனிமையில் பேசுறேன் மொழிவது நீயென
தனிமையில் சிரிக்குறேன் நகைப்பது நீயென
தனிமையில் படிக்கிறேன் முகவரி நீயென
உன்னுடன் வாழுறேன்  மனம் முழுவதும் நீயென.
சரணம்
*********
ஆகாயகம் பறக்குறேன் வானவில்ல புடிக்கத்தான்
நிலவ எடுக்குறேன் கூடையில அடைக்கதான்
நட்சத்திரம் பறிக்குறேன்   காதலா தொடுக்கத்தான்
வண்ணங்களை சேர்க்குறேன் மாலையா கொடுக்கத்தான்
சம்மதிச்சா போதுமே வரும் காலமே நாமென.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...