Thursday, August 1, 2019

வாழ்ந்துபார்

அனுபவம் கொடுக்கும்
அறிவே தொடக்கம்
அகிலம் உனகென்று வாழ்ந்து பார்

இளமை துடிக்கும்
தோல்வியில் வெடிக்கும்
அது நிரந்திரமல்ல வாழ்ந்துபார்

ஒருமுறை வாழ்க்கை
ஒரு முறை மரணம்
கடைசி நொடி வரை வாழ்ந்து பார்

எதுவும் உனதில்லை
உன்னுடன் இருப்பதும் உனதில்லை
உண்மைகள் அறிய வாழ்ந்துபார்

கேள்விகள் ஜனிக்கும்
பதில் கிடைக்கும் வரைக்கும்
முயற்சிதான் வாழ்க்கை வாழ்ந்துபார்

மறிப்பது பெரிதல்ல
மரணமும் பெரிதல்ல
நல்ல மனிதனாய் நீயும் வாழ்ந்துபார் 

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...