Friday, August 2, 2019

அன்பே அருள்வாயா...?

அன்பே
உனது சிரிப்பின் சைகை
என்னை கவிதை எழுத தூண்டுகிறது

ஆயத்த படுத்திக்கொண்டேன்


உனது பற்களின் வெண்மையை பிடுங்கி காகிதமாக விரித்து
உனது மௌனத்தின் மொழியினை வடித்து
எழுத்துக்களாய் மாற்றி
உனது சொற்களின் வலிமையை தொடுத்து
உனது உதட்டுசாயம் எனது எழுதுகோல் நிரப்பி

இதோ எழுதுகிறேன்
உனக்கான ஓர் கவிதை

எனது நரம்புகளில் நித்தமும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறாய்
எனது உதிரத்தில் நின்று ருத்திரதாண்டவம் ஆடுகின்றாய்
எனது இதயம் உனது நினைவினில் இயங்குகிறது

காதலால் என்னை காலி செய்து
கண்முன்னே பத்திரகாளியாய் நிற்கிறாய்

பக்தனாக நான் அருள்வாயா...?

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...