Friday, September 13, 2019

சிறு சிறு..

சிறு கால்களை கொண்டு தத்தி தத்தி பிறகு
சிறகுகள் முளைத்து விரித்து வானின் உயரம் அடைகிறது பறவைகள்..

சிறு மணித்துளி துளியாய் ஒன்றாய் சேர்ந்து சேர்ந்து
சிறுசிறு கிளைஆறாக பிரிந்து வளைந்துநெளிந்து பெரும் கடலாகிறது..

சிறு விதையாய் மண்ணில் இட்ட செடி 
சிறுக சிறுக வளர்ந்து ஆலமரமாய் விழுதுடன் நிற்குது..

சிறு சிறு கற்கள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்துதான்
சிறு குவியலாக இருந்து பெரு மலையாக உரு பெற்று நிற்கிறது..

சிறு புள்ளியில் தொடங்கி பல புள்ளிகள் இணக்கம் காட்டி
சிறு கோலம் பெரும் கோலமாய் வீதியெங்கும் விரிந்து அற்புதமாகிறது..

சிறு சிறு எழுத்துக்கள் ஒட்டிப் பிணைந்து வார்த்தைகளாக
சிறு வாக்கியமாக மாறி பெரு காப்பியமாகி அச்சிடப்படுகின்றது..

அதுபோல

சிறிதாக சிந்தனையில் தோன்றிய எண்ணம் தான் பெரியதாய்
சிறிய பட்டிதொட்டி எங்கும் பலரால் பெரிதும் பேசப்படும்..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...