Tuesday, October 15, 2019

கலாம் அய்யா

கனவு தலைவா கனவு காண்கிறோம்
உந்தன் எந்தன் கனவுகளையும் நனவாக்க...

நீ பிறந்த இந்த மண்ணில்
நாங்கள் பிறந்ததே வாழ்வதே பெருமை...

மெய்ஞானத்தை பிறப்பிடமாக கொண்டு
விஞ்ஞானத்தை கண்டு மெய் மறந்து சிலிர்க்க வைத்தீர்...

நீர் இம்மண்ணில் விழுந்தாலும்
உந்தன் சொல்லில் விழுந்தவர்கள் நாங்கள்
இதோ விதைக்கின்றோம் செடிகளை
எங்களுடன் முளைத்து வருவார்கள்
வருங்கால பல கலாம்கள்...

படிப்பே தரும் உயர்வு உணர்த்தியது கலாம்
பதவிக்கும் தந்தது உயர்வு அதுதான் கலாம்
பள்ளி பிள்ளைகளுக்கு பாசமிகு கலாம்
பண்பின் உருவம் அவரே கலாம்

காலம் உள்ளளவும் கலாம் அய்யா
எங்கள் உள்ளம் நீங்காது இருப்பீர்...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...