சோளக் காட்டுக்குள்ள
விளையாட போனவனே
இப்படி
சோகம் வந்து சேருமெனு
கொஞ்சம் கூட நெனக்கலையே...
மண்ணாள வந்தவனு
காணா கண்டு இருந்தேனே
இப்படி
மண்ணு கொண்டு போகுமுனு
கனவில் கூட நெனக்லையே..
பொத்தி பொத்தி வளத்த மகன்
என்ன பாடு பட்டானோ
ஆடி அசைந்து நடந்த மகன்
அசைய முடியா தவிச்சானோ
எத்தனை எத்தனை முயற்சிகள்
பண்ணி பார்த்தோமடா
எத்தனை எத்தனை கருவிகள்
பொருத்தி பார்த்தோமடா
எத்தனை எத்தனை பிரார்த்தனை அர்ச்சனைகள்
செய்து கொண்டோமடா
அத்தனைக்கும் அத்தனைக்கும்
இயற்கை செவி சாய்க்கலடா..
பவுடர் பூசி பார்த்த மகன்
பளிங்கு கல்லாய் ஜொலிச்ச மகன்
அழுதா கூட என் அழகு மகன்
அழுகும் நிலையில் பார்த்தவுடன் அய்யய்யோ மனம் தாங்கலையே..
மீண்டு வருவானு நினைச்சிருந்தேன்
இப்படி
மாண்டு மண்ணாவானு நெனக்கலையே..
மீண்டும் மீண்டும் வருகிறாய் எங்கள் கனவில்
மீளா துயரில் தமிழகம் தான் அவன் நினைவில்..
தண்ணீருக்காக தோண்டி வச்சோம்
மூட வழியில்லா கிடப்பில் வச்சோம்
அது தவறு தெரிஞ்சும் மறைக்க மறந்தோம்
அந்த தவற நீ தமிழகம் உரைக்க தவறி விழுந்தாயோ
இப்போ
சுர்ஜித் எங்க மொத்த மகிழ்ச்சியையும் மண்ணுகுள்ள கொண்டு சேர்த்துகிட்டான்..
இனி இதுபோன்ற நிகழ்வு வேண்டாமே
முதலும் இறுதியுமாய் என் மகன் உயிர்ப்பலி அதை சொல்லிடுமே..
விளையாட போனவனே
இப்படி
சோகம் வந்து சேருமெனு
கொஞ்சம் கூட நெனக்கலையே...
மண்ணாள வந்தவனு
காணா கண்டு இருந்தேனே
இப்படி
மண்ணு கொண்டு போகுமுனு
கனவில் கூட நெனக்லையே..
பொத்தி பொத்தி வளத்த மகன்
என்ன பாடு பட்டானோ
ஆடி அசைந்து நடந்த மகன்
அசைய முடியா தவிச்சானோ
எத்தனை எத்தனை முயற்சிகள்
பண்ணி பார்த்தோமடா
எத்தனை எத்தனை கருவிகள்
பொருத்தி பார்த்தோமடா
எத்தனை எத்தனை பிரார்த்தனை அர்ச்சனைகள்
செய்து கொண்டோமடா
அத்தனைக்கும் அத்தனைக்கும்
இயற்கை செவி சாய்க்கலடா..
பவுடர் பூசி பார்த்த மகன்
பளிங்கு கல்லாய் ஜொலிச்ச மகன்
அழுதா கூட என் அழகு மகன்
அழுகும் நிலையில் பார்த்தவுடன் அய்யய்யோ மனம் தாங்கலையே..
மீண்டு வருவானு நினைச்சிருந்தேன்
இப்படி
மாண்டு மண்ணாவானு நெனக்கலையே..
மீண்டும் மீண்டும் வருகிறாய் எங்கள் கனவில்
மீளா துயரில் தமிழகம் தான் அவன் நினைவில்..
தண்ணீருக்காக தோண்டி வச்சோம்
மூட வழியில்லா கிடப்பில் வச்சோம்
அது தவறு தெரிஞ்சும் மறைக்க மறந்தோம்
அந்த தவற நீ தமிழகம் உரைக்க தவறி விழுந்தாயோ
இப்போ
சுர்ஜித் எங்க மொத்த மகிழ்ச்சியையும் மண்ணுகுள்ள கொண்டு சேர்த்துகிட்டான்..
இனி இதுபோன்ற நிகழ்வு வேண்டாமே
முதலும் இறுதியுமாய் என் மகன் உயிர்ப்பலி அதை சொல்லிடுமே..
No comments:
Post a Comment