Thursday, October 24, 2019

காதல் பாடல்#55

சுட்டும் விழியால
என்னை சுண்டி இழுக்குற
கன்னக் குழியிலதான்
அதை மூடி மறைக்குற
என்ன உன்கிட்டதான் தேடிதேடி வாரேன் புள்ள
நானே நீயாகதான் சுத்துரேண்டி ஊருக்குள்ள
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
நாலு கண்ணால
தாலி கட்டி முடிக்கனும்.
அஞ்சு ஆறுனு
நாம பெத்து சுமக்கனும்.
ஊரே மெச்சுர வகையில் வாழ்ந்துதான் பார்க்கனும்
இணைப்பிரியாத ஜோடி  நாமென்று உலகம் சொல்ல கேட்கனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
காலம் இறுதிவரை
நம்முள் காதல் பெருகனும்
கண்ணே மணியேனு
எப்பவும் கொஞ்சி மகிழனும்.
பொதுவா நடந்து போகையில வழித்துணையா இருக்கனும்.
இடைவிடாமல் கூடி இடைவெளி வராது நாமும் வாழனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...