Thursday, August 8, 2019

அன்பே...

அன்பே..😍

நீ பிறந்தாய் தேவதை என்றார்கள்
நானோ தேவதைகளின் தேவதை என்றேன்.

நீ தவழ்ந்தாய் அற்புதம்  என்றார்கள்
நானோ முத்து அவிழ்ந்தது என்றேன்.

நீ வளர்ந்தாய் நிலா என்றார்கள்
நானோ நிலவின் ஆதாரம் என்றேன்.

நீ நடந்தாய் நடை என்றார்கள்
நானோ அன்னநடை என்றேன்.

நீ மலர்ந்தாய் பூ என்றார்கள்
நானோ பூந்தோட்டம் என்றேன்.

நீ மொழிந்தாய் தத்துவம் என்றார்கள்
நானோ தனித்துவம் என்றேன்.

நீ சிரித்தாய் அழகு என்றார்கள்
நானோ அழகின் அழகு என்றோன்.

நீ அழுதாய் கண்ணீரை துடை என்றார்கள்
நானோ கண்ணீர் துடைப்பேன் என்றேன்.

நீ கோபம்கொண்டாய் கூடாது என்றார்கள்
நானோ கோபம் தணிப்பேன் என்றேன்.

நீ படித்தாய் சமத்து என்றார்கள்
நானோ உன்னை படித்தேன் என்றேன்.

நீ காதலித்தாய் வேண்டாம் என்றார்கள்
நானோ எனது வாழ்க்கை வேண்டும் என்றேன்.

நீ சம்மதித்தாய் முடியாது என்றார்கள்
நானோ காத்திருப்பேன் என்றேன்.

நீ மணந்தாய் சம்மதம் என்றார்கள்
வேறு ஒருவரை மணந்தாய் சம்மதம் என்றார்கள்
நானோ எனது சமாதியின் உள்ளே உன்னை வாழ்த்துவேன் என்றேன்...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...