Friday, November 22, 2019

உன்னிடம்..

உன்னிடம்..
பேச வருகிறேன்
நீ என்னை பார்க்க பேச்சு வரவில்லை
கேட்க விழைகிறேன்
நீ என்னை பார்க்க கேட்கவும் வரவில்லை
சொல்ல நினைக்கிறன்
நீ என்னை பார்க்க சொல்ல வரவில்லை
எழுத பார்க்குறேன்
நீ என்னை பார்க்க வார்த்தை வரவில்லை
பாடல் படிக்கிறேன்
நீ என்னை பார்க்க ஒலி வரவில்லை

இப்படி

உயிர் வாழ உயிர் மூச்சு மட்டும் தான் வேலை செய்கின்றது
இதோ சுவாசத்தில் எழுதி அனுப்புகிறேன்
சு(வாசித்து) விட்டு சொல்லடி காதலை...!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...