Tuesday, October 1, 2019

ஒரு பக்க க(வி)தை#10

நதிக்கரையில் அமர்ந்த படி நான்
இருள் சூழ்ந்து கும்மி அடித்துக் கொண்டிருந்தது.

நிலவு மேலே உலவி கொண்டிருந்தது..
ஏ நிலவே என்ன செய்கிறாய் என்றேன்?
முகிலோடு உறவாடி கொண்டிருக்கிறேன் என்றது.

காற்றை உணர்ந்து
ஏ காற்றே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என வினவினேன்?
காற்றோ வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருக்கிறேன் என்றது.

எங்கோ ஒளிரும் நெருப்போ
இருக்கும் இருளை விலக்க முயற்சித்து உறவாடி கொண்டிருந்தது.

மண்ணுக்கோ விண் கண்ணடித்து
தூது விடுத்து கொண்டிருந்தது.

ஓடும் நதியை பார்த்து கேட்டேன் என்ன செய்கிறாய் என்று?
நான் கடலிடம் சென்று உறவாட போய் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னது.

இப்படி

என்னை சுற்றி காண்பவை எல்லாம்
உறவாடி கொண்டிருக்க

உறவாய் நினைத்த என்னவள்
என்னை விட்டுச் சென்றதால்

நதிக்கரை ஓரத்தில்
தனிமையில் நான்..!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...