Tuesday, September 10, 2019

ஒரு பக்க க(வி)தை#9

ஒரு தோட்டத்தில்
பூக்களைப் பறிக்காதே என்று தகவல் பலகையை
நட்டுவிட்டுச் சென்றான் தோட்ட்டக்காரன்!

தினமும் தோட்டத்தை நோட்டமிட்டபடி
அழகாய் நடமாடி அவள் சென்று வந்தாள்.
பார்க்கும்போது அவள் நடப்பதுபோல் இல்லை
நடனமிட்டு செல்வதுபோல் இருக்கும்!

அவளை பார்க்கும் போது தோட்டத்தில் உள்ள பூக்கள்
எல்லாம் தன்னை பறித்து சூடிக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்.

ஒருநாள் அவள் வரும்போது பூக்கள் எல்லாம் தன்னை பறித்துச்
செல்ல வேண்டுமென்று காற்றிடம் ஓர் உதவி கேட்டது !

காற்று வீசிய வீச்சில் தகவல் பலகை குப்புற கீழே வீழ்ந்தது !

அவள் வந்தாள் பூக்களைப் பறித்து அள்ளிச் சென்றாள்.

பூக்கள் எல்லாம் அவளால் மோட்சம் அடைந்து அவளை சூடிக்கொண்டது..

மீண்டும் வந்த தோட்டக்காரன் விழுந்து கிடந்த
தகவல் பலகை மறுபடியும் நட்டான் !

மலரும் மொட்டுக்கள் எல்லாம் ஒன்றை ஓன்று
கண்ணடித்துக் கொண்டன காற்று இருக்க நமக்கென்ன என்று..!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...