அவ்வை சொன்னாள் ஓரடி
வள்ளுவன் புணைந்தான் ஈரடி
பாரதி பாடினான் பாடலடி
மன்னர்கள் வீசினார்கள் வாளடி
பழமைக்கு பழமை நாமடி
கீழடியே எங்கள் தாய்மடி
கண்டோம் மண்பானை தமிழ் பெயர்களடி
பார்த்தோம் உறைகிணறுகள் செங்கல் சுவரடி
வியந்தோம் மணிகள் தங்கம்தானடி
காட்டியிருக்கிறோம் வியக்கும் கட்டுமானம் நெய்திருக்கிறோம் ஆடை நெசவடி
செய்திருக்கிறோம் கழிவுநீர் ஓடைகள் வீதிகள் வணிக வியாபாரமடி
சொல்லி கொண்டிருக்கும் சிந்துசமவெளி மற்ற நாகரிகம் அனைத்திற்கும் நாமே மூத்தகுடி
கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும் இதில் காணும் பேருண்மையடி
விலங்கு பழகி ஏர் பிடித்து நன்னிலம் செய்த பெருமையடி
பேசும் மொழிகளுக்கெல்லாம் ஆதாரம் தமிழியடி
இவைகளுக்கு ஈடு இணை ஏதடி
தமிழனின் செயலும் கண்டுபிடிப்பும் நெத்தியடி
தமிழன் விதைந்து எங்கும் பரவிய விருட்சமடி
புதைந்து எங்கும் கிடக்கும் புதையலடி
அன்று முதல் இன்று வரை
நாம் வைத்த வைக்க போகும்
ஒவ்வொரு அடியும்
உலகம் வியக்கும்படி..
இந்தியா மட்டுமல்ல உலக வரலாற்றை மாற்றப்போகிறது நமது கீழடி..!
வள்ளுவன் புணைந்தான் ஈரடி
பாரதி பாடினான் பாடலடி
மன்னர்கள் வீசினார்கள் வாளடி
பழமைக்கு பழமை நாமடி
கீழடியே எங்கள் தாய்மடி
கண்டோம் மண்பானை தமிழ் பெயர்களடி
பார்த்தோம் உறைகிணறுகள் செங்கல் சுவரடி
வியந்தோம் மணிகள் தங்கம்தானடி
காட்டியிருக்கிறோம் வியக்கும் கட்டுமானம் நெய்திருக்கிறோம் ஆடை நெசவடி
செய்திருக்கிறோம் கழிவுநீர் ஓடைகள் வீதிகள் வணிக வியாபாரமடி
சொல்லி கொண்டிருக்கும் சிந்துசமவெளி மற்ற நாகரிகம் அனைத்திற்கும் நாமே மூத்தகுடி
கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும் இதில் காணும் பேருண்மையடி
விலங்கு பழகி ஏர் பிடித்து நன்னிலம் செய்த பெருமையடி
பேசும் மொழிகளுக்கெல்லாம் ஆதாரம் தமிழியடி
இவைகளுக்கு ஈடு இணை ஏதடி
தமிழனின் செயலும் கண்டுபிடிப்பும் நெத்தியடி
தமிழன் விதைந்து எங்கும் பரவிய விருட்சமடி
புதைந்து எங்கும் கிடக்கும் புதையலடி
அன்று முதல் இன்று வரை
நாம் வைத்த வைக்க போகும்
ஒவ்வொரு அடியும்
உலகம் வியக்கும்படி..
இந்தியா மட்டுமல்ல உலக வரலாற்றை மாற்றப்போகிறது நமது கீழடி..!
No comments:
Post a Comment