Friday, September 27, 2019

உலக வரலாற்றை மாற்ற போகும் கீழடி

அவ்வை சொன்னாள் ஓரடி
வள்ளுவன் புணைந்தான் ஈரடி
பாரதி பாடினான் பாடலடி
மன்னர்கள் வீசினார்கள் வாளடி
பழமைக்கு பழமை நாமடி
கீழடியே எங்கள் தாய்மடி

கண்டோம் மண்பானை தமிழ் பெயர்களடி
பார்த்தோம் உறைகிணறுகள் செங்கல் சுவரடி
வியந்தோம் மணிகள் தங்கம்தானடி
காட்டியிருக்கிறோம் வியக்கும் கட்டுமானம் நெய்திருக்கிறோம் ஆடை நெசவடி
செய்திருக்கிறோம் கழிவுநீர் ஓடைகள் வீதிகள் வணிக வியாபாரமடி
சொல்லி கொண்டிருக்கும் சிந்துசமவெளி மற்ற நாகரிகம் அனைத்திற்கும் நாமே மூத்தகுடி
கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும் இதில் காணும் பேருண்மையடி
விலங்கு பழகி ஏர் பிடித்து நன்னிலம் செய்த பெருமையடி
பேசும் மொழிகளுக்கெல்லாம் ஆதாரம் தமிழியடி


இவைகளுக்கு ஈடு இணை ஏதடி
தமிழனின் செயலும் கண்டுபிடிப்பும்  நெத்தியடி

தமிழன் விதைந்து எங்கும் பரவிய விருட்சமடி
புதைந்து எங்கும் கிடக்கும் புதையலடி

அன்று முதல் இன்று வரை
நாம் வைத்த வைக்க போகும்
ஒவ்வொரு அடியும்
உலகம் வியக்கும்படி..
இந்தியா மட்டுமல்ல உலக வரலாற்றை மாற்றப்போகிறது நமது கீழடி..!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...