Wednesday, September 4, 2019

காதல் பாடல்#54

மலரா நீ மலரா
நின் முகம் மலரின் மலரா..
ஒளிரா நீ ஒளிரா
விண் நிலா முகத்தின் ஒளிரா..
பூத்து சிரித்து ஒளி வீசுகிறாய்
நெஞ்சம் கொய்து மதி மயக்குகிறாய்..
சரணம்
********
உயிரில் விழும் பனித்துளியை இதழ்தேனாய் பருகுகிறாய்
உன் இதழ்தேன் பருக நான் வண்டாக உருகுகிறேன்.
நீ இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிக்க விரிக்க என் மனம் எனும் தோட்டத்தில் உன்னை பூக்க செய்து பூரிப்படைய போகின்றேன்
வா வா என் வாழ்வின் மணமே வா
சரணம்
********
தென்றலின் எழில்  தேவி தேன்நிலவின் காதலி
என் தோட்டத்து அழகு ராணி உயிரின் ஆட்டநாயகி.
நீ இதழ்களை ஒவ்வொன்றாக உதிர உதிர நான் என் உயிரினில் ஏந்தி கொள்வேன்
மண்ணில் விழும் முன்னே மண்ணோடு மண்ணாவேன்.
வா வா என் உயிரின் ஆதாரமே வா

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...