Sunday, September 29, 2019

அன்பே...

அன்பே...

மரபுக் கவிதை மகாராணி.
நவீனம் போற்றும் கலைவாணி.

பாடல்கள் புணையும் பாரதி.
எண்ணங்கள் தீட்டும் ரதி.

ஹைக்கூ கன்னி.
நகைச்சுவை மன்னி.

குறுங்கவிதை சிற்பம்.
கதை பேசும் ஓவியம்.

சிறுகதை புன்னகையரசி.
தொடர்க்கதை இல்லத்தரசி.

புதுகவிதை இளவரசி.
காவியமாகும் கவியரசி.

உரைநடை பேசி பழகும் இலக்கியத்தோழி.
கட்டுரையை வாரி இரைக்கும் இலக்கணவாலி.


மொத்தத்தில் இவள் ஒரு


”அழகிய தமிழ் சொர்க்கம் ”

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...