அவள் தெருவோறம் நடந்து போகையில
அவளின் பெயர் சொல்லி அழைத்தேன்
தெருவோற பூக்கள் எல்லாம் தலைநிமிர்ந்து பார்த்தது.
பின் அழைத்தது நம்மை இல்லை என அறிந்த அந்த பூக்கள் தலைகவிழ்ந்து நின்றது.
அவளின் பெயரை பூக்களுக்கு மத்தியில் எழுதி வைக்க
அனைத்து பூக்களின் தலைவிதியும் மாறி அவைகளின் தலைவியென ஏற்க தொடங்கின.
அவள் பெயர் மீது
மலர்களை குவித்து மூடி வைத்தேன்
மலரின் வாசத்தை
அவள் பெயர்
விழுங்கிருந்தது.
அவள் பெயரை
கட்டிப்பிடித்து உறங்கி கிடந்த மலர்களை
விலக்கிப் பார்த்தேன்
அத்தனையும்
சற்று வளர்ந்திருந்தது.
அவளின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க பூக்களெல்லாம் பூத்து பூத்து குலுங்கி கொண்டன.
அவளின் பெயரை அழகு என்றேன்.
பூக்களெல்லாம் நான்கு திசையின் பக்கம் திரும்பி நின்று கோபித்து கொண்டன.
அவளின் பெயரை மந்திரமாக உச்சரித்தேன்.
பூக்கள் எல்லாம் அதன் இதழ்களால் மது அருந்தியது போல் மயக்க நிலையில் தலையசைத்து ஆடின.
ஆடிக்கொண்டே பூக்கள் எல்லாம் அவள் பெயரை சொல்ல சொல்ல
அவளது பெயரே அனைத்திற்கும் முதன்மையாக சூடி கொண்டது..!
ஆம்
அவளது பெயரால்
பெயர்பெற்றன பூக்கள்..!
அவளின் பெயர் சொல்லி அழைத்தேன்
தெருவோற பூக்கள் எல்லாம் தலைநிமிர்ந்து பார்த்தது.
பின் அழைத்தது நம்மை இல்லை என அறிந்த அந்த பூக்கள் தலைகவிழ்ந்து நின்றது.
அவளின் பெயரை பூக்களுக்கு மத்தியில் எழுதி வைக்க
அனைத்து பூக்களின் தலைவிதியும் மாறி அவைகளின் தலைவியென ஏற்க தொடங்கின.
அவள் பெயர் மீது
மலர்களை குவித்து மூடி வைத்தேன்
மலரின் வாசத்தை
அவள் பெயர்
விழுங்கிருந்தது.
அவள் பெயரை
கட்டிப்பிடித்து உறங்கி கிடந்த மலர்களை
விலக்கிப் பார்த்தேன்
அத்தனையும்
சற்று வளர்ந்திருந்தது.
அவளின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க பூக்களெல்லாம் பூத்து பூத்து குலுங்கி கொண்டன.
அவளின் பெயரை அழகு என்றேன்.
பூக்களெல்லாம் நான்கு திசையின் பக்கம் திரும்பி நின்று கோபித்து கொண்டன.
அவளின் பெயரை மந்திரமாக உச்சரித்தேன்.
பூக்கள் எல்லாம் அதன் இதழ்களால் மது அருந்தியது போல் மயக்க நிலையில் தலையசைத்து ஆடின.
ஆடிக்கொண்டே பூக்கள் எல்லாம் அவள் பெயரை சொல்ல சொல்ல
அவளது பெயரே அனைத்திற்கும் முதன்மையாக சூடி கொண்டது..!
ஆம்
அவளது பெயரால்
பெயர்பெற்றன பூக்கள்..!
No comments:
Post a Comment