Friday, October 18, 2019

தந்தையின் தாலாட்டு பாட்டு

ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிராரோ
நான் பாராட்ட பாடும் பாட்டு
செல்லமே பாரு
நான் தாலாட்ட தாயும் ஆனேன்
தங்கமே கேளு
நான் இருக்க ஏன் அழுற
வான் மேகம் அதும் தாண்டி
தேடி தேடி தமிழெடுத்து
அப்பன் நான் பாட்டெழுத
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

சரணம்
*********
கட்டிவச்ச முத்துசரம் நீ கட்டவிழ்க விசித்திரம் நீ
கொட்டிவைச்ச புதையல் நீ
எட்டிவைக்க புவியியல் நீ
தட்டிவைச்ச உள்ளம் முழுதும் நீ
பட்டிதொட்டி கிட்டாத செல்வம் நீ
என்னால நீ உருவாக
உன்னால நான் மீண்டும் கருவானேனே..
எதுவாக இருந்தாலும் எதற்காகவும் கலங்காதே
அப்பன் நான் துணை இருக்க
கண்கள் மூடி நீயும் கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...