Friday, December 6, 2019

இது ஒரு பாடம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ஆம் சுதந்திரம் பெற பாரதி பாடினான்
பல போராட்டத்திற்கு பிறகு அடைந்தோம் சுதந்திரத்தை
இந்த சுதந்திர நாட்டில் இன்று பாட தோன்றுகிறது
என்று தணியும் இந்த பெண்கள் மீது நடக்கும் வன்முறை தாக்கம்
சுதந்திரம் இல்லாத சுதந்திரத்தை அடைந்திருக்கிறோம்

இன்னும் எத்தனை எத்தனை நடக்கபோகிறதோ
சிறுமி முதல் கிழவி வரை காம பசிக்கு இரையாகி கொண்டிருக்கிறார்கள்
அப்படி என்ன ...
உங்களுடைய அம்மா தங்கை அக்காள் பாட்டி யாவரும் பெண்கள்தானே
நமது சமுதாயம் உறவுகளால் பின்னப்பட்டவை
உறவுகளை அறியவில்லையா இல்லை உணர்வே இல்லையா
ஆண் பெண் இருவருக்குமே எல்லைகள் உண்டு
ஒருவர் இன்னொருவர் எல்லையை மீறுவது குற்றமே...!
அப்படி மீறினால் நீங்கள் செய்ய வேண்டியது (இருபாலாருமே)

கண்களால் சூறையாட நினைத்தால் கண்களை பிதுக்கி எறி
கைகளால் தொட நினைத்தால் கைகளை உடைத்து எறி
விரல்களால் தீண்ட நினைத்தால் விரல்களை பிடுங்கி எறி
வாயால் பேச நினைத்தால் வாயை கிழித்து எறி
கால்களால் உதைக்க நினைத்தால் கால்களை முறித்து எறி
உடலை உரச நினைத்தால் உடலை நசுக்கி எறி
இப்படி
பிறப்புறுப்பை அணுக நினைத்தால் உறுப்பை அறுத்து எறி

ஒன்றை மட்டும் நினைவில் கொள்
உன்னை மீறி உனக்கு ஏதும் நிகழ்ந்து விடாது
உனக்கு நடப்பவை யாவும் உன்னாலே...

உடையிலும் சரி நடையிலும் சரி
ஆணும் பெண்ணும் சமமே
ஆண் ஆணாக இருக்கட்டும் பெண் பெண்ணாக இருக்கட்டும்
நவீனம் என்பது தேவைக்காகவே...

இதை நடைமுறை படுத்தினால் நிச்சயம் மாற்றம் நிகழும்!

தங்கை பிரியங்கா வரை  நேர்ந்த கொடுமைக்கு இதோ முற்று புள்ளி வைத்த காவலர்களுக்கு நன்றி
நான்கு கயவர்களை சுட்டு வீழ்த்தி இதோ அதிசயம் அற்புதம் நடந்திருக்கிறது

இது ஒரு பாடம்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...