Monday, December 23, 2019

வாங்க முடியுமா?

பணம் இருந்த உலகத்துல எதையும் வாங்கலாம்
ஆனா நெனச்சாலும் வாங்க முடியாதது இருகுதையா
அதை ஒன்னொன்னா சொல்ல போறேன் கேளையா

வாங்க முடியுமா நீங்க வாங்க முடியுமா
நெனச்சாலும் இத வாங்க முடியுமா ?

பெத்தெடுத்து உதிரம் பாலாக்கி
பாராட்டி சீராட்டி உன்னை
வளர்க்கும் அன்னையை (வாங்க)

ராப்பகல்பாராது உதிரம் வியர்வையாக்கி
ஏரோட்டி வண்டியோட்டி உன்னை
காக்கும் தந்தையை (வாங்க)

என்னவென்று கேளாது உதவியென்று
கேட்டாலோ அழைத்தாலோ உன்னை
சூழும் உயர்நட்ப்பை (வாங்க)

ஏணியாக என்றும் மாணாக்கனை
நின்ற இடத்திலேயே ஏற்றிவிடும்
ஆசான் ஊக்கத்தை (வாங்க)

ஓடும்காலத்தை விரட்டி உனதாக்கி
தேவையை செய்திடு இல்லை
வீணாகும் நேரத்தை (வாங்க)

காமம்கடந்து உள்ளம் உனதாகி
உயிராய் உறவாய் மாறும்
தூய்மை காதலை (வாங்க)

உண்ண உடுக்க வழியில்லை
இருந்தும் வாட்டும் ஏழ்மையிலும்
காட்டும் நேர்மையை (வாங்க)

உலகமே புகழலாம் உச்சம்
அடையலாம் உயர்வில் பிறரை
மதிக்கும் எண்ணத்தை (வாங்க)

தவறுதலால் தப்புகள் நடந்தாலும்
துரோகம் நிகழ்ந்தாலும் அதைமறந்து
செய்யும் மன்னிப்பை (வாங்க)

இதையெல்லாம் இருக்கிறவர்களை பாரு
இவர்களால்தான் இன்றும் வாழுது ஊரு 

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...