Thursday, November 21, 2019

காதல் பாடல்#57

எனக்குள்ள நுழைஞ்சிட்ட
செல்லுசெல்லா கலந்திட்ட
கணினிய மடிப்பது போல என்னயே மடிச்சிட்ட..
சகுனியின் பேச்சை போல பேசியே மயக்கிட்ட..
பாவம் நான் கொஞ்சம் கவனி  உன்னால சாமியாடி போகுறேனே பவனி...
சரணம்
********
அழகு சிலை உன்ன பார்த்தா அசைந்து நின்னு பார்க்கும்
ஆயக் கலை உன்ன படிச்சா வணங்கி நிமிர்ந்து நிற்கும்
ஓவியம் நீயென இருந்திட நான் காகிதம் ஆகனுமே
இதயம் நானென இருந்திட நீயே துடிப்பாக வேண்டுமே..
இதுவே எனக்கு போதுமே வேற என்ன இதுபோலவே நான் வாழ வேண்டுமே..

சரணம்
********
சாமி வந்து வரம் கேட்டா உன்ன மட்டும் கேட்பேன்
சாகா வரம் தர சொல்லி கட்டளையும் இடுவேன்
யாரும் இல்லாத உலகத்துல நாம மட்டும் வாழனுமே
காதல் சொல்லாத காதலையும் நாம செய்து பார்க்கனுமே
அந்த நொடி போதுமே மத்த நொடி அதபோலவே ஆயுள் வரை தொடரனுமே..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...