Wednesday, September 25, 2019

வெங்காயமே....

உன்னை துகில் உரிக்க
குழந்தை ஆகிறாய்

உன்னை உரிக்க உரிக்க காற்றில் கலந்து காணா போகிறாய்

வலியோ உனக்கு
விழி நீரோ எனக்கு
வருத்தம் கொண்டாலும்
வருத்து உண்போம்
அறுபடுவதோ நீ
அழுவதோ நாங்கள்
கல் நெஞ்சம் கொண்டவனும்
உன்னை கொல்ல
கண்ணீர் கொள்வான்.

பெண்களை அழ வைப்பதில்
நீ ஒரு மாமியார்.

ஆண்களை அழ பைப்பதில்
நீ ஒரு பெண்.

உரித்து பார்த்தால்
நீ ஒரு வாழ்க்கையின் அர்த்தம்.

உணராதவர்களுக்கு
நீ ஒரு எரிச்சல்.

அசுர வளர்ச்சியில் சில சமயம் 
நீ ஒரு அமெரிக்க டாலருக்கு நிகர்.

திகட்டாத
பல்சுவை உணவு கொடுப்பதில்
நீ ஒரு அற்புதம்.

தேர்தல் களத்தில்
எதிர் கட்சிகளுக்கு
நீ ஒரு நாகாஸ்திரம்.

வீட்டை மட்டுமல்ல
நாட்டையும் ஆள்கிறாய்
நாடாளுமன்றத்தில் சண்டையும் மூட்டுகிறாய்.
சில சமயம்
ஓட்டை கூட தட்டி பறித்து சொன்று விடுகின்றாய்..

கிடுகிடுவென விலையில் உச்சத்தில் ஏறி கொள்கிறாய்
விடுவிடுவென மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறாய்

பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு
பார்காது அழவிடும் நடுநிலைவாதி

உன்னாலும் இங்கு அரசியல் நடக்குது
உன்னாலையே இன்று
அரசியல் நடக்குது..

நடுநிலைவாதி வெங்காயமே வீழாதே எதிரியின் கூடாரத்தில் !
நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் என்று மக்கள் மனதில் !

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...