Wednesday, December 18, 2019

அவளும் இயற்கையும் நானும்

அவள் ஒரு நீலவானம்
அவளை பெருமை படுத்தி வெண்ணாடை போர்த்தும் வெண்மேகம் நான்.

அவள் ஒரு நிலா
அவளை அழகாய் ரசிக்கும் நிலம் நான்.

அவள் ஒரு நட்சத்திரம்
அவளை ஜொலிக்க உச்சம் கொண்டு சென்ற மிச்சம் நான்.

அவள் ஒரு மின்னல்
அவளை பளிச்சிட மின்ன வைக்கும் ஒளி நான்.

அவள் ஒரு வானவில்
அவளை வளைத்து ஏந்தும் இருகரம் நான்.

அவள் ஒரு பறவை
அவளை உயர தூக்கி செல்லும் காற்று நான்.

அவள் ஒரு கடல்
அவளை தேடி ஓடும் நதி நான்.

அவள் ஒரு நீர்
அவளை பெருக்கெடுத்து ஓட செய்யும் ஊற்று நான்.

அவள் ஒரு படகு
அவளை பம்பரமாய் சுழற்றும் சுழல் நான்.

அவள் ஒரு மீன்
அவளை நீந்த விட்டு பார்க்கும் கண்கள் நான்.

அவள் ஒரு முத்து
அவளை அடை காக்கும் சிப்பி நான்.

அவள் ஒரு நிலம்
அவளை புஞ்சை ஆக்கும் விதை நான்.

அவள் ஒரு தீ
அவளை கட்டுக்குள் வைத்திருக்கும் மழைசாரல் நான்.

அவள் ஒரு மலர்
அவளை சுற்றி திரியும் வண்டு நான்.

அவள் ஒரு புல்வெளி
அவளை மெருகெற்றும் பச்சை நிறம் நான்.

அவள் ஒரு கனி
அவளை கனிய வைக்கும் இன்சுவை நான்.

அவள் ஒரு விலங்கு
அவளை விலகாது விரட்டி துரத்தும் வேகம் நான்.

அவள் ஒரு பட்டாம்பூச்சி
அவளை சூடும் வண்ணங்கள் நான்.

அவள் ஒரு எறும்பு
அவளை நாளும் தொடரும் சிற்றெறும்பு நான்.

அவள் ஒரு பனித்துளி
அவளை தாங்கும் சிறு புல் நான்.

அவள் ஒரு மூங்கில்
அவளை புல்லாங்குழலாய் மாற்றும் துளை நான்.

அவள் ஒரு மரம்
அவளை தாங்கும் ஆணிவேர் நான்.

அவள் ஒரு செடிகொடி
அவளை வளைய வளைய வரவேற்கும் கொடிமரம் நான்.

அவள் ஒரு இலை
அவளை ஆயுள் கொள்ள செய்யும் இலைரேகை நான்.

அவள் ஒரு மலை
அவளை அன்பால் நனைத்து பொழிந்திடும் அருவி நான்.

அவள் ஒரு காடு
அவளை மரம் செடிகொடிகளால் சூழ்ந்த இயற்கை நான்.

அவள் ஒரு புதையல்
அவளை தோண்டி தேடதேட கிடைக்கும் குவியல் நான்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...