Tuesday, October 17, 2017

Vazhthu Irangal Kavithai Pathivugal



இரங்கல் வாழ்த்து
*********************
உலக தலைவர்கள் வியந்த
"ஒப்பற்ற தலைவி"
புரட்சிகள் பல புரிந்த
"புரட்சித் தலைவி"
தாலிக்கு தங்கம் கொடுத்த
"தங்கத்தாரகை"
விலையில்லா அரிசி வழங்கிய
"மகராசியே"
தமிழகத்தின் உரிமைகள் காத்த
"நீதி தேவதை"
இன்னல்களை இறுக்கி ஆண்ட
"இரும்பு மனுஷி"
அனைவருக்கும் மலிவுவிலை உணவளித்த
"தமிழக தாயே"
விவசாயிகள் கண்ணீர் துடைத்த
"காவிரித் தாயே"
இரண்டேவிரல் அசைத்து மனங்கவர்ந்த
"இதய நாயகி"
என்றென்றும் நம்மில் வாழும்
"இதய தெய்வம்"
மக்களின் மனங்களில் நீங்காத
"மக்கள் முதல்வர்"
அம்மா அம்மா அம்மா

+++++++++++++++++++++++

RIP முதல்வர் அம்மா
***********************
எத்தனை அழகு(அறிவு)..
எத்தனை ஆளுமை..
எத்தனை இரக்கம்..
எத்தனை ஈகை..
எத்தனை உண்மை.. 
எத்தனை ஊக்கம்.. 
எத்தனை எழுச்சி.. 
எத்தனை ஏற்றம்.. 
எத்தனை ஐயம்.. 
எத்தனை ஒப்பந்தம்.. 
எத்தனை ஓட்டம்.. 
எத்தனை ஔவை மொழி.. 
அஃது அத்தனையும் 
காலனால் களவாடப்பட்டு 
கரையேற முடியா 
துயரக் கண்ணீரில் 
தமிழகம் மிதக்கிறதே..

RIP AMMA 

+++++++++++++++++++++++


ஈன்ற தன் தாய்யை
அம்மா என்று
அன்புடன் அழைக்கும்
அனைவருமே
ஒன்று பட
அம்மா என்று
அழைக்கப்படும் மற்றொருவர்
நம் தமிழக முதல்வர்
அம்மா அவர்கள்

இனி தமிழகம் யாரை
அம்மா என்றழைக்கும்?

RIP AMMA

+++++++++++++++++++++++


சந்தியாவின் மகளாக‌ 
புரட்சித் தலைவருக்கு அம்முவாக‌ 
நடிகையாக‌ 
எழுத்தாளராக‌ 
பின் அன்னையாக‌ 
அவதாரம் எடுத்து 
தமிழகத்தை காத்த எங்கள் தாயே.. 


+++++++++++++++++++++++

தொழுவத்தில் பிறப்பு 
மனிதநேய நடப்பு
பரிசுத்தத்தின் பிரதிபலிப்பு
நீக்கினார் வெறுப்பு
அன்பின் துடிப்பு
சிலுவையில் இறப்பு 
இயேசுவின் சிறப்பு
மக்களின் பிடிப்பு!

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 🎄🎅🏿💐💥


+++++++++++++++++++++++

மாரியில் அவதரித்தவன் 
மேரியின் மைந்தனவன்
பாரினில் பரிசுத்தமானவன்
பாவிகளை மன்னித்தவன்
மனிதரி(ரா)ல் கடவுளவன்
நமக்காய் வாழ்ந்தவன்
சிலுவையில் மரித்தவன்

மரித்து நமக்காய் உயிர்த்த
பாலன் இயேசுநாதனவன்!!

மன்னிப்பை மக்களுக்கு அருளிய !!
மகா கடவுள் பிறந்த தினம் !!
மக்களின் துன்பம் மறைந்த தினம் !!

இனியக் கிறிஸ்து பிறப்பு
பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!
🎅💥💐🎄💐💥🎅

+++++++++++++++++++++++

அதிகாரதிற்கு
அக்கிரமதிற்கு
அடங்காமைக்கு
அறியாமைக்கு
அகம்பாவத்துக்கு
அடாவடிதனதுக்கு
அடக்குமுறைக்கு
அந்நியபொருளுக்கு
மூடநம்பிக்கைக்கு
கொடுமைகளுக்கு
பிணிகளுக்கு
வன்முறைக்கு
வன்கொடுமைக்கு
சுயநலத்திற்கு
நிந்தனைக்கு
தீமைகளுக்கு
தீண்டாமைக்கு
தீங்குணங்களுக்கு
இயலாமைக்கு
கல்லாமைக்கு
முயலாமைக்கு
வேற்றுமைக்கு
பொறாமைக்கு
மடமையைக்கு
சண்டைகளுக்கு
சாதிகளுக்கு
சமையங்களுக்கு
வஞ்சகதுக்கு
கோழைதனதிற்கு
பயதிற்கு
சூழ்ச்சிகளுக்கு

என

அனைத்தையும்
கொளுத்துவோம்.

போகி வாழ்த்துகள்💥

+++++++++++++++++++++++

நேற்று
பழையன கழித்தோம்
இன்று
புதியன புகுந்தோம்
நாளை
புதுமை படைப்போம்

தை மகளே வா
புது பாதை வகுத்துப் போ!!!

பொங்கல் வாழ்த்துகள்

+++++++++++++++++++++++

கதிரவன்
பானை
பச்சரிசி 
பால்  
அச்சு வெல்லம் 
செங்கரும்பு
கொத்துமஞ்சள் நெல்மனிகள் 
கலப்பை
ஆடு மாடு கோழி
உறவுகள்
நேசம் பாசம் அன்பு

ஆகியவற்றோடு

உங்கள் மனம் 
மகிழ்ச்சியில் பொங்க 
உலக தமிழர்கள் 
அனைவருக்கும் எனது 

இனிய பொங்கல் 
நல்வாழ்த்துக்கள்...!!! 

+++++++++++++++++++++++

வளங்கள் பொங்கட்டும் 
மங்களம் சேரட்டும் 
செல்வங்கள் கொழிக்கட்டும் 
மனங்கள் குளிரட்டும் 
ஆயுள் நீளட்டும் 
பயிர்கள் தழைக்கட்டும் 
அமைதி தங்கட்டும் 
விவசாயம் செழிக்கட்டும் 
ஏறுதழுவல் தொடரட்டும் 
இயற்கை பெருகட்டும் 
ஆரோக்கியம் கூடட்டும் 
வெட்பம் தனியட்டும் 
மாரி பொழியட்டும் 
மரபுகள் நிலைக்கட்டும் 
பண்பாடு ஒளிரட்டும் 
அழகு மிளிரட்டும் 
வாழ்க்கை இனிக்கட்டும் 
உறவுகள் கூடட்டும் 

பொங்கலோ
பொங்கல்
பொங்கட்டும் 


+++++++++++++++++++++++
அடியே..

பழையன போகி'யால்
மறந்து நல்ல'தை
வரவேற்று மாட்டு'ப்
பெண்ணாய் நாம் காணும்'
நாள் தான் காதல் பொங்கலடி!!!

+++++++++++++++++++++++

மலர்ந்தும் மலராத காலைப்பொழுது 
கலைந்தும் கலையாத மேகங்கள் 
விரிந்தும் விரியாத பூக்களின் புன்னகை 
சத்தத்திலும் சத்தமில்லா பறவைகளின் குரல்
மழைத்துளியோ என்பதுபோல் பனித்துளி 
மாசுமருவற்ற காலைநேரக்காற்று 
விழிக்கலாமா வேண்டாமா என்று 
போராடும் சூரியன் பகவான் 
இதையெல்லாம் பார்க்காத 
விடியல் என்ன விடியல்

+++++++++++++++++++++++

அறுவடை திருவிழாவென
ஆதவனை போற்றி..

இந்திர விழாவென
மாமழை போற்றி..

தைத் திருநாளென
தமிழ்மகள் போற்றி..

மாட்டுப் பொங்கலென
ஆவினங்கள் போற்றி..

உறவுகளை காணும்
பொங்கலென போற்றி..

உழவின் பெருமைதனை
உலகெல்லாம் பறைசாற்றி

புதுப்பானையில் பொங்கலிட்டு
உள்ளமெல்லாம் பொங்க
கொண்டாடிவோம் பண்பாட்டுத்
தமிழர் திருநாளை.

இனிய பொங்கல் 
நல்வாழ்த்துக்கள்.

+++++++++++++++++++++++

உறவுகள் ஒன்றுகூடும் பொங்கல்
குடும்பம் குதூகலிக்கும் பொங்கல்
வரவுகள் செலவாகும் பொங்கல்
பெரியோர்க்கு ஆசீர்வதிக்கும் பொங்கல்
மாமனுக்கு மரியாதை பொங்கல்
காளையர் திட்டமிடும் பொங்கல்
கண்ணிகள் நோட்டமிடும் பொங்கல்
வாண்டுகள் வட்டமிடும் பொங்கல்
வீரர்களுக்கு விளையாட்டு பொங்கல்
ஆம்
இன்று ஒருவர் மற்றொருவரை
காணும் பொங்கல் 😬

+++++++++++++++++++++++

காளைகள் எமது பிள்ளைகள்டா
தெரியுமா எங்கள் பண்பாடுடா
பலிக்குமா நீங்க நினைச்சதுடா
தமிழ் பேசும் தமிழன்கிட்ட
யாரையும் அடக்க நினைசிட்டா
போராட குணம் வந்திட்டா
காளையர்கள் நாங்க எழுந்திட்டா
ஓடு வேண்டாம் விளையாட்டா
ஜீரோ விழுக்காடு உன் கோட்டா
காலில் விழுந்து கும்பிட்டா
தமிழன் சொல்வான் டாட்டா
மீறினால் பிஞ்சிடும் பாட்டா
யாருடா நீங்க டேய் பீட்டா😤

+++++++++++++++++++++++

நாய் மொழிகளை
தாய் மொழியாய் கொண்ட 
நாய்களுக்கு தெரியுமா
நமது பண்பாடு 

திருப்பி கொடுப்போம் ஆதாரை
தடுப்போம் அரசின் தர்பாரை

'ம்மாவிற்கு அடுத்து
'வை வைத்தான்
தாய்ப்பாலிற்கு அடுத்து
ஆவின் பாலை வைத்து.

ஆகட்டும்

தமிழ்நாடே என் தேசம்
தமிழ்த்தாய் வாழ்த்தே என் தேசிய கீதம்
தமிழே என் தாய்மொழி
விவசாயமே என் தெய்வம்
உழுவதே என் பூஜை
வீட்டு விலங்குகளே என் நண்பர்கள்
வீர விளையாட்டே என் பொழுதுபோக்கு
கலைகளே என் பண்பாடு
உணவுகளே என் மருத்துவம்
திருக்குறள் என் மகத்துவம்

......

யார்கிட்ட மோதல்
என் வளம் பார்த்தே
ஆங்கிலேயன் வேர்த்தான்

பெப்சி கோக்கை நிறுத்திடு
பண்ணாட்டு நிறுவனமே ஓடிடு
வெளி நாட்டு கைக்கூலிகளே அடங்கிடு

பொறுக்க மாட்டோம் இனி
களையெடுப்பதே இளைஞனுக்கு பணி..

தமிழ் வாழ்க தமிழன் வளர்க💪

சல்லிக்கட்டுக்காக போராடுபவர்களே

நாம் இழந்தது கொஞ்சமல்ல
நிறைய
எங்கும் எதிலும்

இதோ பாருங்கள்

சிறிய பொட்டிக் கடையிலிருந்து
பெரிய மால் வரை
கிடைக்கும் பானம் கோக்
பெப்சி வகையரா
மட்டுமே தண்ணீரையும்
சேர்த்து.
வணிகம்.

சிறிய குழந்தைகள்
தேவை முதல்
பெரியவர் பல்துலக்கி குளிக்கும் வரை
அனைத்தும் Nestle Colgate Unilever cadbury pepsodent lux dove amway etc.
வணிகம்.

வீடு சுத்தம் செய்வது முதல்
டாய்லட் கழுவும் வரை
Harpic lyzol etc.
வணிகம்.

நம் வீட்டு நாயெல்லாம் தெருநாய் ஆச்சு
வெளிநாட்டு நாய் நம் மோகமாச்சு.
வணிகம்.

நாட்டுக்கோழி போய்
போந்தா கோழியாச்சு
வணிகம்.

நாட்டுக் காய்கறி போய்
Pesticides காய்கறிகள்.
வணிகம்.

இப்படி
காவிரி தண்ணீர்
மணல் கொள்ளை
விவசாயி தற்கொலை
கல்வியில் வேறுபாடுனு
பல பிரச்சனைகள்
இருக்கு..

சல்லிக்கட்டு முதல்
போராட்டமாய் இருக்கட்டும்..

சிந்திப்போம்
போராடுவோம்
வெல்வோம்.

+++++++++++++++++++++++

தமிழன்

சொன்னா விட்டுக்
கொடுப்பான் 
கேட்டா கொட்டிக்
கொடுப்பான் 
வேண்டானா வெட்டி
கொடுப்பான்
தேவைனா தட்டிக்
கொடுப்பவன் 
உதவினா எட்டிக்
கொடுப்பான்

ஆனா எதற்காகவும்

தன்மானத்தை
கலாச்சாரத்தை

விட்டுக் கொடுக்கமாட்டான்

வீரத்தமிழன்டா💪


+++++++++++++++++++++++


உலகத்துக்கே பல விளையாட்டை
எடுத்துக்காட்டியவன் தமிழன்

கபடி
பல்லாங்குழி
தாயம்
ஆடுபுலி ஆட்டம்
உறியடி
வழுக்கு மரம்
சிலம்பம்
பச்சைக்குதிரை
பம்பரம்
கும்மி
தட்டாமாலை
சில்லுக் கோடு
கோலாட்டம்
பாண்டி
குலைகுலையா முந்திரிக்காய்
கிச்சுகிச்சு தாம்பாளம்
நொண்டி
எலியும் பூனையும்
கண்ணாமூச்சி
சேவல் சண்டை
சதுரங்கம்
மல்யுத்தம்
கோ கோ
கில்லி
குஸ்தி
சல்லிக்கட்டு
இன்னும் பல

விளையாட்டை
விளையாடி வந்த தமிழர்கள் நாம்.

நம்மிடம் திருடியவர்கள் பலர்

அழிந்தது போதும்
இருப்பதை காப்போம்
இழந்ததை மீட்போம்

+++++++++++++++++++++++

மனம் வேறு 
இனம் வேறு
மாநிலம் வேறு
மொழி வேறு 
முகம் வேறு 
எண்ணம் வேறு
வண்ணம் வேறு 
வருவாய் வேறு 
வசதி வேறு
தரம் வேறு 
குணம் வேறு 
குடிசை வேறு 
ஆட்சி வேறு 
அதிகாரம் வேறு 
பணம் வேறு 
பண்பு வேறு 
பதவி வேறு 
பரம்பரை வேறு 

ஆனால்

தேசம் ஒன்று
கொடி ஒன்று 
கீதம் ஒன்று
நாட்டுப்பற்று ஒன்று
இந்தியர்கள் ஒன்று
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
குடியரசு தின வாழ்த்துக்கள்
+++++++++++++++++++++++

கோடிகளை ஏய்த்துவிட்டு 
கோமகனுக்கே அறிவுரைக்கலாம்! 

லஞ்சங்கள் கொடுத்தாவது
லட்சியங்களை நிறைவேற்றலாம்!

விவசாய நிலங்களை
விலை நிலங்களாக்கலாம்! 

காசு பணம் இருந்தா
கல்வி கல்யாணம் கிடைக்கலாம்!

காம பசிக்கு
கண்டவளை புசிக்கலாம்!

சூதாட்டங்களில் பொழுதை
சுதந்திரமாய் கழிக்கலாம்!

ஊத்திக் கொடுத்தே
ஊரை ஆளலாம்!

நீதிகளை கொன்று
நியாயம் பேசலாம்!

அரசியல் பிழைத்தால் 
அறமழித்து வாழலாம்! 

லோலோனு உண்மையா உழைச்சா
லோன் கட்டியே காலத்தை கழிக்கலாம்!

ஊழல் வாங்கினா
ஊருக்கு ஊர் பங்களா வைச்சுகலாம்!

சமதர்மம் பேசுவோரை சிறைச் 
சாலையில் தள்ளலாம்! 

சும்மா சொல்லக்கூடாது
சுதந்திர இந்தியா
குடியரசு தின வாழ்த்துகள்!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...