Friday, October 13, 2017

MAZHAI VELLAM CHENNAI KAVITHAI VERSIONS


 ஏற்ப்பட்டது வெள்ளப்பெருக்கம் அல்ல
ஆற்றின் சுருக்கம்!
ஏரியின் முடக்கம்!
குளங்களின் அடக்கம்!
கால்வாய்களின் குறுக்கம்!

இனியாவது
ஆறுகளை அகலப்படுத்துங்கள் !
ஏரிகளை தூர்வாருங்கள் !
குளங்களை ஆழமாக்குங்கள் !
கால்வாய்களை சுத்தமாக்குங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பெய்த மழையால்..

ஆறுகள் தங்களை அகலப்படுத்திக் கொண்டது..!!
ஏரிகள் தங்களை தூர்வாரிக் கொண்டது..!!
குளங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டது..!!
கால்வாய்கள் தங்களை சுத்தமாக்கிக் கொண்டது..!!

நம்மையும் சிந்திக்க வைத்துவிட்டது..!!

இனியாவது..
ஆற்றை அகலப்படுத்தி
ஏரியை தூர்வாரி
குளத்தை ஆழமாக்கி கால்வாயை சுத்தமாக்குவோம்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

"பெய்யென" பெய்த மழை ஆக்கிரமிப்புகளை
"பொய்"யென உணர்த்தும் மழை...

மழை குறள் 😉😜

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மழை ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக மாறி உள்ளது..

நிஜம்தான்...

முகமறியா அக்கம்பக்கத்தினர்களை நண்பர்களாக மாற்றி உள்ளது...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கையாலானவங்க வீதியில பாதிக்கபட்டவங்களுக்கு இறங்கி உதவி செய்யுங்க..

கையாலாகாதவங்க இரு கை கூப்பி வீட்டுக்குள்ளேயே😉 உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுங்க..!!

"வெள்ளநிவாரணம்"
(Pray for chennai)


>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பஸ் நிலையத்திற்கு அருகில்,
இரயில் நிலையத்திற்கு மிக அருகில்,
NH மிக அருகில்,
காலேஜ் மருத்துவமனை பள்ளிக்கூடம் மிக அருகாமையில்
என்று கூவி கூவி
ஆறுகளையும் ஏரிகளையும்
வீடுகளாய் கட்டினோம் வாங்கினோம்..

இன்றோ

மழை அழுதுகொண்டே
தன் இருப்பிடத்தை தேடி
அலைந்து நம்மை
கூறுபோட்டு விட்டது
😥😪😥😰

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஏரி குளங்களில் குடியேறியவர்களிடம் மறியல் செய்துவிட்டு போனதோ மழை!!!

என் வாழ்விடம் எங்கே என்று நுழைந்துவிட்டு போனதோ மழை!!!

காதலில் தோற்றேன் என்று அழுதுவிட்டு போனதோ மழை!!!

தீபாவளி விடுமுறை போதாதென்று அதிகரித்துவிட்டு போனதோ மழை!!!

தார்சாலைகள் தரமானதா இல்லை ஊழலா சோதித்துவிட்டு போனதோ மழை!!!

சேமிப்பை நினைவுபடுத்தி பெய்துவிட்டு போனதோ மழை!!!

இயற்கையே எல்லாமென்று உரைத்துவிட்டு போனதோ மழை!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தமிழகம்..

ஒயினில் தள்ளாடிக்
கொண்டிருந்தது போதாதென்று
ரெயினிலும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது..

மொத்தத்தில் தண்ணீரில் தத்தளிக்கிறது
☔😥😪😰

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மதிகெட்டு மாடிவீடால் ஆக்கிரமித்ததோ ஏரிகுளம்,
மழையால் ஆனதோ வீடுகள் குப்பைக்கூளம்..
இனியாவது காப்போமா இயற்கை வளம்!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மதியாதோர் தலைவாசல் மிதியாதே - பழமொழி😀

மதியாதோர் தலைவாசல் மிதி மிதினு மிதிப்பேன் - மழைமொழி😜😥

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்று சென்னையில்..

மச்சி எந்த ஏரியாவுலட உன் வீடு???

இன்று சென்னையில்..

மச்சி எந்த ஏரிக்குள்ளடா உன் வீடு???

மிதக்கும் சென்னை☔🏊🏻😜

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மழை நீர்..
ஏரிகளையும்
கரைகளையும்
குளங்களையும்
அணைகளையும்
தேடி தேடி
இதோ
கண்டுபிட்டது
தனது
இருப்பிடங்களை..

எருக்கணஞ்"ஏரி"
வேளச்"ஏரி"
ரெட்"ஏரி"
பொத்"ஏரி"
கூடுவாஞ்"ஏரி"
அடை"ஆறு"
"அணை"காபுத்தூர்
பள்ளிக்கர"அணை"
பெருங்"குளத்தூர்"
காட்டாங்"குளத்தூர்"
செம்மஞ்"ஏரி"
சிறுசே"ஏரி"
அமைந்த"கரை"
நீலாங்"கரை"
பீர்கங்கார"அணை"
இன்னும் பல..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தன் வீடுகளை ஆக்கிரமித்த மக்களை,
வீடுகளை விட்டு விரட்டியடித்தது
மழைவெள்ளம்.!

மக்களோ அகதிகளாய்..!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்று..
மாநகரை தேடி,
தாய் மண்ணை தொலைத்து பிழைப்பிற்காக..

இன்று..
மாநரகமானதால்,
மீண்டும் தாய் மண்ணை தேடி அகதிகளாய்...!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மாநகரம் சென்னை
மாநரகமானதோ?

தலைநகரம் சென்னை
தண்ணீர்நகரமானதோ?

மதம்பிடித்த சென்னை
மனிதம் உணர்தியதோ?

சுத்தமில்லா சென்னை
சுத்தம் செய்யப்பட்டுவிட்டதோ?

எதுவும் கிடைக்கும் சென்னை
ஏங்கி நின்று தவிக்குதோ?

மழையே..
உன் பெ(அ)ருமை உணர்ந்தோம்
மன்னித்து அருள்வாயோ..!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மழையே...

ஏரிக்குள் தூங்கியது போதாதென்று,
ஊருக்குள் வந்தாயோ???

குளங்கள் போதாதென்று,
போர்களங்களாய் மாற்ற வந்தாயோ???

அணைக்குள் அடங்கியது போதாதென்று,
அணைக்க வந்தாயோ???

கடலை சேர்ந்தது போதாதென்று,
உடலை உரச வந்தாயோ???

வேளச்சேரி (அடையாறு)பெயர் போதாதென்று,
வெள்ளச்சேரி (அடங்காதஆறு) என மாற்ற வந்தாயோ???

வெல்லம் சாப்பிட்டது போதாதென்று,
வெள்ளம் உணவளிக்க வந்தாயோ???

ரோட்டில் போனது போதாதென்று,
போட்டில் போகவைக்க வந்தாயோ???

செம்பரம்பாக்கம் போதாதென்று,
சென்னையில் உள்ள அனைத்து பாக்கங்களை பார்க்க வந்தாயோ???

புனித நீரோட்டம் போதாதென்று,
மனித கழிவுகளை நீக்க ஓட்டமாய் வந்தாயோ???

வழிந்தது போதாதென்று,
வறுமையில் வாட்ட வந்தாயோ???

உதாசீனம் செய்தவர்களுக்கு,
உன் அருமை உணர்த்த வந்தாயோ???

மடிந்த மனிதத்தை,
மக்களுக்குள் அறியவைக்க வந்தாயோ???

உணர்ந்தோம் மன்னித்தருள் மழையே..
வாழ்க தொண்டு நிறுவன உழியமே..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்னையால்
கருவறையில் நீந்திய நாம்,

இன்று..

இயற்கை அன்னையால்
தெருவறைகளில் நீந்துகின்றோம்.!

இயற்கை அன்னையே
இரக்கம் கொள்வாயா??

>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இயற்கையை அழித்தோம்,
இயற்கையால் அழிகின்றோம்..!!

1 comment:

  1. மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇

    malai kavithai in tamil

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...