Friday, October 13, 2017

எசகு பிசகு KAVITHAI VERSIONS

எசகு பிசகு V 0.1

காட்டும் தீபமும்
ஏற்றும் மெழுகும்
வணங்கும் பிறையும்
சேர்ந்தே சொல்லுது
நாங்கள் காட்டுவது "ஒளி"யே என்று..!!!

நம்மை பார்த்தும் கேட்குது
நீங்கள் மட்டும்
ஏன் இன்னும் இருளில்னு..???


எசகு பிசகு V 0.2

முகப்பருகள் முத்துகளாகும்
என்னவள் காண்கையில்..!

கண்மையும் ஓவியமாகும்
என்னவள் இடுகையில்..!

காற்றுக்கு குளிர்ஜுரம்
என்னவள் சுவாசிக்கையில்..!

கதிரவனுக்கு கரண்ட்கட்
என்னவள் விழிக்கையில்..!

நிலவுக்கு நிம்மதியின்மை
என்னவள் தூங்குகையில்..!

வளையல்களுக்குள் பட்டிமன்றம்
என்னவள் அணிகையில்..!

மழைக்குள் மல்யுத்தம்
என்னவள் நனைகையில்..!

புற்களுக்குள் பூகம்பம்
என்னவள் நடக்கையில்..!

பூக்களுக்கு சாகாவரம்
என்னவள் சூடுகையில்..!

சிரிப்புக்கு சீக்கு
என்னவள் புன்செய்கையில்..!

என்னுள் ஆரவாரம்
ஏனோ
என்னவளை உணர்கையில்!!!


எசகு பிசகு V 0.3

பணம் தொட்டால்
மனம் விட்டுபோகும்..
குணம் தொட்டால்
ரணம் விட்டுபோகும்..


எசகு பிசகு V 0.4

கதிரவனோடு விளையாட ஆசை..
கார்மேகம் போல் தவழ ஆசை..
காற்றை சிறிது நேரம் நிறுத்த ஆசை..
மழையை குடையில் அடைக்க ஆசை..
நிலவை செல்லமாய் கிள்ள ஆசை..
பறவைகளோடு பேசி உறவாட ஆசை..
பாம்பின் உதட்டில் முத்தமிட ஆசை..
மரத்தின் கிளைதனில் உறங்கிட ஆசை..
அலைகளுக்கு ஓய்வு கொடுக்க ஆசை..
பூவுக்குள் சிறிது காலம் வாழ்ந்திட ஆசை..
பனித்துளி நனைந்து குளித்திட ஆசை..
புலியின் காதில் ரகசியம் சொல்ல ஆசை..
குயில்களோடு சேர்ந்து இசை பாட ஆசை..
பெண்களின் மனதை கண்டு கொள்ள ஆசை..
இறக்கும் முன்னே பிறந்திட ஆசை..!!!


எசகு பிசகு V 0.5

மதவெறி சாதிவெறி
இனவெறி மொழிவெறி
பணவெறி போதைவெறி
மதுவெறி மாதுவெறி
நிறவெறி நிலவெறி
இல்லாத மனிதர்களாய்
மாறுவோம்..!!!

தீமையில்லா வேற்றுமையில்லா
கொடுமையில்லா மடமையில்லா
தீண்டாமையில்லா வறுமையில்லா
ஊழலில்லா கஷ்டமில்லா
ஏழ்மையில்லா தாழ்மையில்லா
மந்திரமில்லா மாயமில்லா
இந்தியாவாக
மாற்றுவோம் இளைஞர்களை..!!!


எசகு பிசகு V 0.6

இருளும் ஒன்றுதான்
ஒளியும் ஒன்றுதான்
குருடன் பார்வையில்..

இன்பமும் ஒன்றுதான்
துன்பமும் ஒன்றுதான்
துறவியின் பார்வையில்..

வாழ்வும் ஒன்றுதான்
தாழ்வும் ஒன்றுதான்
துணிந்தவன் பார்வையில்..

இகழ்ச்சியும் ஒன்றுதான்
புகழ்ச்சியும் ஒன்றுதான்
மேதையின் பார்வையில்..

உஷ்னமும் ஒன்றுதான்
உறைபனியும் ஒன்றுதான்
உழைப்பாழியின் பார்வையில்..

மெய்யும் ஒன்றுதான்
பொய்யும் ஒன்றுதான்
துரோகியின் பார்வையில்..

இறந்தவனும் ஒன்றுதான்
இறைவனும் ஒன்றுதான்
இழந்தவன் பார்வையில்..

இருப்பவனும் ஒன்றுதான்
இல்லாதவனும் ஒன்றுதான்
நீதியின் பார்வையில்..

வாக்கும் ஒன்றுதான்
சாக்கும் ஒன்றுதான்
அரசியல்வாதியின் பார்வையில்..

தர்மமும் ஒன்றுதான்
அதர்மமும் ஒன்றுதான்
அறிவீனன் பார்வையில்..

புனிதமும் ஒன்றுதான்
பாவமும் ஒன்றுதான்
விலைமகள் பார்வையில்..

கயவனும் ஒன்றுதான்
தூயவனும் ஒன்றுதான்
அன்னையின் பார்வையில்..

நீயும் ஒன்றுதான்
நானும் ஒன்றுதான்
படைத்தவன் பார்வையில்..

SO

சுகமும் ஒன்றுதான்
சுமையும் ஒன்றுதான்
வாழ்க்கையின் பார்வையில்..


எசகு பிசகு V 0.7

அடியே
சொல்ல தெரியல
ஆனா சொல்ல தோனுது..
கொடியே
வர்ணிக்க தெரியல
ஆனா வர்ணிக்க தோனுது..

கூந்தல் அடங்காத
காட்டேரி..

நெற்றி பொட்டல்
காடு..

கண்கள் பறக்கும்
கருவண்டுகள்..

பொட்டு சுட்டெரிக்கும்
அனுகுண்டு..

புருவம் நெளியும்
கம்பிளிபூச்சி..

மூக்கு குறிவைக்கும்
பீரங்கி..

இதழ்கள் படபடக்கும்
பட்டாம்பூச்சி..

கண்ணம் டாஸ்மாக்
மதுகிண்ணம்..

நாக்கு நளினமான
பாம்பு..

இன்னும்,

அடியே
சொல்ல தெரியல
ஆனா சொல்ல தோனுது..
கொடியே
வர்ணிக்க தெரியல
ஆனா வர்ணிக்க தோனுது..


எசகு பிசகு V 0.8

ஆட்சி மாற மாற மாணவர்களுக்கு இலவசங்கள் இதோ..

பஸ் பாஸ் இலவசம்

சைக்கிள் இலவசம்

புத்தகங்கள் இலவசம்

புத்தகப்பை இலவசம்

காலணிகள் இலவசம்

கலர் டிவி இலவசம்

மடிக்கணினி இலவசம்

மின் சாதனம் இலவசம்


அடுத்த ஆட்சியில்
பரீட்சைக்கு மார்க் இலவசமா கொடுப்பாங்களா??


ஏக்கத்தில் மாணாக்கர்கள்!!!😜😜😜


எசகு பிசகு V 0.9

சாதிகள் ஒழிந்திட
சாமிகளை துரத்திடு..

விவேகம் ஓங்கிட
ஒழுக்கத்தை வித்திடு..

அமைதி நிலவிட
அகிம்சை புரிந்திடு..

அன்பு தழைத்திட
பண்பை உரமிடு..

சமத்துவம் அமைந்திட
சகோதரத்துவம் வளர்திடு..

வன்முறை அழிந்திட
வன்மமின்றி வாழ்ந்திடு..

மதம் நீங்கிட
மனிதத்தோடு பழகிடு..


எசகு பிசகு V 1.0

அனைவரின் மதியும்
ஒரே அளவு மதிப்பு கொண்டவை,
வித்தியாசமான அளவு கொண்டவை அல்ல..!!

அனைவரின் ஐம்புலன்களும்
தேவைக்காக ஒரே மாதிரி படைத்தவை,
மாற்று திறனுக்காக படைக்கப்பட்டவை அல்ல..!!

அனைவரின் இரத்தமும்
சிவப்பு நிறம்தால் ஆனவை,
பல வண்ணத்தால் ஆனது அல்ல..!!

அனைவரின் பிறப்பும்
விந்து விழுந்ததால் நடந்தவை,
எச்சில் விழுந்ததால் அல்ல..!!

பிறகு ஏன் நமக்குள்???

பாகுபாடு

பாரபட்சம்

சாதி

சமயம்

பிரிவினை

பிடிவாதம்

வெட்டு குத்து கொலை

வெட்டி பந்தா

??????
??????

ஒற்றுமை நினைப்போம்!!!
ஒன்றாய் வாழுவோம்!!!


 எசகு பிசகு V 1.1

கவிஞனுக்கு வார்த்தைகள் அழகு..
கலைஞனுக்கு பாவனைகள் அழகு..

சிற்பிக்கு கற்கள் அழகு..
ஓவியனுக்கு வண்ணங்கள் அழகு..

உழைப்பவனுக்கு வியர்வை அழகு..
உழவனுக்கு நிலம் அழகு..

மனதிற்க்கு நிம்மதி அழகு..
மனிதனுக்கு அகம் அழகு..!!!



 எசகு பிசகு V 1.2

நாட்டில் இன்னும் ..

ஊழல்வாதிகள்
உலா வருகிறார்கள்..

அநியாயவாதிகள்
அக்கிரமம் செய்கிறார்கள்..

அரசியல்வாதிகள்
அட்டகாசம் பண்ணுகிறார்கள்..

மதவாதிகள்
மனிதநேயத்தை மறக்கிறார்கள்..

நீதிமான்கள்
நியாயவிலையில் பேசுகிறார்கள்..

இதுபோல் இன்னும்

பல நரகாசூரர்கள் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்???

பிறகு ஏன் தீபாவளி? ??


எசகு பிசகு V 1.3

விடுமுறை என்றதும்
தொற்றி கொள்ளும் பரபரப்பு

அடிச்சி புடிச்சி டிக்கட் வாங்கி
பேருந்தில் பயணம்

தாத்தா பாட்டிக்கு
கதர் வேட்டி காட்டன் சேலை

அப்பா அம்மாக்கு
ஜரிகை வேட்டி பட்டுப்புடவை

அக்கா அண்ணணுக்கு
சுடிதார் டீசர்ட்

அத்தை மாமாக்கு
பட்டுசேலை குர்தா

பொண்ணு மாப்பிள்ளைக்கு
சவரன் நகை பல்சர் பைக்

சிறுசு பொடிசுகளுக்கு
துப்பாக்கியும் பட்டாசுகளும்

பலகார சட்டி வாய் பிளக்க
பலவகை பலகாரம்

உறவுகளோடு மனம்
மகிழ உறவாடும் இதயம்

வீடுதோரும் வெளிச்சம் வர
தீப ஒளி விளக்குகள்

டிவியில் போட்டி போட்டுக் கொண்டு
பல நிகழ்ச்சிகள்

வானெங்கும் வானவில் போல
வண்ணக் கோலங்கள்

பொழுதுபோக்கிற்கு
வேதாளம் தூங்காவனம்

தீபாவளி வந்தாச்சு
தீப ஒலி தவிர்த்து,
தீப ஒளி ஏற்றுவோம்
இருள் போக்குவோம்!!!


துன்பங்கள் புஸ்வானமாய் போகட்டும்..
துயரங்கள் ராக்கெட்டில் பறக்கட்டும்..
இன்பம் சங்குசக்கரமாய் சுழலட்டும்..
இனிமை சரவெடியாய் வெடிகட்டும்..
புன்னகை மத்தாப்பாய் பூக்கட்டும்..
புத்தாடை 10000 வாலாவாய் அலங்கரிக்கட்டும்..
லட்டுவகைகள் ஆட்டம்பாமாய் தித்திக்கட்டும்..
கோலங்கள் சாட்டைகளாய் ஜொலிகட்டும்..

இனிய தீப திருநாள் வாழ்த்துகள்

எசகு பிசகு V 1.4

நண்பா..

நான் சிரித்தால்,
உன் கன்னங்களில் குழி..
நான் அழுதால்,
உன் கண்களில் நீர்த்துளி..
நான் சிந்தித்தால்,
உன் வியப்புகளில் விழி..
நான் சண்டையிட்டால்,
உன் மனமதில் வலி..

நான் எனது மூச்சுவிட்டால்,
உன்  ஆயுட்காலம் நீளும்..
நான் மனம் உடைந்தால்,
உன் கைகள் அரவணைக்கும்..
நான் உன்னை மடியிலிட்டால்,
உன் முகம் மலரும்..
நான் உயிர் துறந்தால்,
உன் ஆத்மா கலக்கும்..

எசகு பிசகு V 1.5

மாற்றம் தரா ஏற்றம் தடுமாற்றமே!!!
ஏற்றம் தரா மாற்றம் ஏமாற்றமே!!!

ஏற்றம் தரும் மாற்றம் முன்னேற்றமே!!!

எசகு பிசகு V 1.6 (முற்றும்)

மனம் பேசும் பூ..
மனம் சேரும் பூ..
மனம் கவரும் பூ..
மனம் வாடா பூ..
மனம் விடா பூ..
மனம் கெடா பூ..
மனம் கலங்கா பூ..
மனம் நோகா பூ..
மனம் விலகா பூ..
மனம் கோனா பூ..
மனம் உருகும் பூ..
மனம் பூக்கும் பூ..
மனம் கொடுக்கும் பூ..
மனம் நினைக்கும் பூ..
மனம் நிறையும் பூ..
மனம் குறையா பூ..
மனம் பறிக்கும் பூ..
மனம் தெறிக்கும் பூ..
மனம் பூஜிக்கும் பூ..
மனம் நேசிக்கும் பூ..
மனம் வாசிக்கும் பூ..
மனம் மகிழும் பூ..
மனம் நெகிழும் பூ..
மனம் அறியும் பூ..
மனம் தெரியும் பூ..
மனம் புரியும் பூ..
மனம் மாறா பூ..
மனம் பிரியா பூ..
மனம் இனிக்கும் பூ..
மனம் மயக்கும் பூ..
மனம் கொஞ்சும் பூ..
மனம் கெஞ்சும் பூ..
மனம் வாழ்த்தும் பூ..
மனம் பாடும் பூ..
மனம் தேடும் பூ..
மனம் நாடும் பூ..
நட்பு! நட்பு!! நட்பு!!!



No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...