Wednesday, October 18, 2017

அடடே Kavithai Versions Part 3



அடடே V 8.1

எல்லா இடத்திலும் அந்த
நாலு பேர் கட்டாயம் வேணும்..

சிலரிடம் போட்டு கொடுக்க!
சிலரை புகழ்ந்து பேச!
சிலர் உரிமைகளை பறிக்க!
சிலருக்கே உரிமை கொடுக்க!
சிலரை சேர்த்துக் கொள்ள!
சிலர் உறவை ஒதுக்கி கொள்ள!
சில காய்கள் நகர்த்த!
சில முடிவுகள் எடுக்க!
சில சோதனைகள் செய்ய!
சிலரை சோதிக்க!
சிலர் குடியை கெடுக்க!
சிலரை குடிக்க வைக்க!
சிலரை உயர்த்த!
சிலரை தாழ்த்த!

அந்த நால்வருக்கும்
தெரியுமா அவர்களுக்கும்
நாலு பேர் வேண்டுமென்பது..
இதற்காக?
உதவ
உயர்த்த
உறவாட
ஊர்சுற்ற
உல்லாசமாயிருக்க
உயிர் பிரிந்தா தூக்கி செல்ல!!



அடடே V 8.2

பெண் அவளின்..

தாய்மை - மகத்துவம்
கோபம் - தனித்துவம்
காதல் - தத்துவம்
அன்பு - தவம்

பொறுமை - அவசியம்
நடை - அபிநயம்
பேச்சு - வசியம்
நட்பு - நயம்

கண்ணீர் - தானாவரும்
நாணம் - சொன்னாரும்
அழகு - பிரம்மனின்வரம்
கற்பு - கிடைத்தகம்பீரம்

ஆசை - குணம்
பிரிவு - ரணம்
உடை - வல்லினம்
இடை - மெல்லினம்

எண்ணம் - தீர்ப்பு
திருமணம் - காப்பு
பெண்மை - வனப்பு
ஆண் - பாதுகாப்பு



அடடே V 8.3

சிலருக்கு போதாது
சிலருக்கு போகாது
சிலருக்கு தெரியாது
சிலருக்கு தெரியும்
சிலருக்கு இருக்காது
சிலருக்கு இருக்கும்
சிலருக்கு பொன்
சிலருக்கு முன்பின்

அதுதாங்க நேரம்! 



அடடே V 8.4

என் பாசம்
நீ காட்ட வேண்டும்!
என் பார்வை
நீ வீச வேண்டும்!
என் மௌனம்
நீ பேச வேண்டும்!
என் கனவு
நீ காண வேண்டும்!
என் வலிகள்
நீ உணர வேண்டும்!
என் பயணம்
நீ போக வேண்டும்!
என் மனம்
நீ அறிய வேண்டும்!
என் கரம்
நீ பிடிக்க வேண்டும்!
என் ஸ்வரம்
நீ இசைக்க வேண்டும்!
என் காதல்
நீ பொழிய வேண்டும்!
என் வாழ்க்கை
நீ வாழ வேண்டும்!
என் உலகம்
நீ ஆக வேண்டும்!
என் உடல்
நீ உயிராக வேண்டும்!!😍



அடடே V 8.5

வருடத் தேர்வு
வாழ்க்கை பாடம்
வந்தார்கள் பலர்
வாங்கினார்கள்
வினா விடைத்தாள்
விடாது எழுதினார்கள்
வினாடி முடிந்தது தேர்வும்

இருந்தும்

விடை தெரியவில்லை

வாழ்க்கையை வாழ???!



அடடே 8.6

அன்று 
முடி விரிப் பெண்ணை
பேய் என்றனர்
இன்று 
தேவதை என்கின்றனர்

அன்று 
நடந்தே தினம் பாட்டி
செல்வாள் கோயிலுக்கு
இன்று 
ஆலயதரிசனம் டிவியில்

அன்று 
திருவிழா போட்டினு
சுற்றினான் இளைஞன்
இன்று 
கிரிக்கெட் கிறுக்கன் ஆயிட்டான்

அன்று
கில்லி பம்பரம்
கூடி விளையாட்டு
இன்று
ஆன்ட்ராய்டு புளுவேல்
ஆபத்து

அன்று
கவிஞர்கள் அறிஞர்கள்
நல்வழி பாதையில்
இன்று
இருப்பவனும் இல்லாதவனும்
குடி போதையில்

அன்று
சுதந்திரம் காக்க
பல தியாகிகள்
இன்று
சுதந்திரமாக கவர்ச்சி
பிடியில் நாயகிகள்

அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க தொழிலிற்க்கு 
இன்று
ஓடுகின்றோம் வயிற்றை
குறைக்க கடற்கரைக்கு

அன்று 
ஓர் வானத்து 
இரு நட்சத்திரங்களாய் 
நானும் அவளும்
இன்று 
ஒர் மாதத்து அமாவாச
பெளர்ணமியாய் 
அவளும் நானும்

அன்று
மூடிமூடி மறைச்சாங்க
(மூட)நம்பிக்கை விதைசாங்க
இன்று
பிஞ்சுலேயே பழுக்குறாங்க
எத சொன்னாலும் அடக்குறாங்க

அன்று
அரசியல் கட்சிகள் நின்றது
நாட்டு மக்களுக்கு துணையாக 
இன்று
அரசியல் கட்சிகள் நிற்கிறது
நாட்டு மக்களுக்கு விணையாக 

அன்று
விளை நிலங்கள் விவசாயம்
இன்று
விலை நிலங்களான சோகம்

அன்று
களனி வேலையே குலத்தொழில்
இன்று
கணினி வேலை செய்பவனுக்கு சோறு ஏது
பயிர்களை என்ன பதிவிறக்கமா 
செய்யமுடியும்!

அன்று
நலமும் பொதுநலமும்
இருந்தது.
இன்று
செல்பியும் செல்பிஷ்யும்தான்
இருக்குது 😢🤔



அடடே V 8.7

முள்ளில் கால் வைத்துவிட்டு
முள் குத்தியது என்றும் கூறும்

தீயில் கை வைத்துவிட்டு
தீ சுட்டுவிட்டது என்றும் கூறும்

கலங்கா நீரில் கைவைத்துவிட்டு
கலங்குகிறது நீர் என்றும் கூறும் 

தலையில் கொட்டும் வைத்துவிட்டு
தலைவலிக்கிறது என்று கூறும்

ஓட்டும் பலர் போட்டுவிட்டு
ஒன்றும் செய்யல என்று கூறும்

செய்வதை எல்லாம் செய்துவிட்டு
சாரி என சாதாரணமாய் கூறும்

தூய மனிதரை பழித்தும் கூறும் 
தூயமற்றவரை போற்றியும் புகழும்

தேவையிருந்தால் மட்டும் போற்றும்
தேவை முடிந்தபின் தூற்றும்

என்ன உலகம்டா இது!!



அடடே V 8.8

அன்பே...😍

நீ அழகா?
இல்லை
நீ அழகிற்கு பிறந்தவளோ?
இல்லை
நீ அழகை பெற்றெடுதவளோ?
இல்லை
நீயும் அழகும்
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களோ
இல்லை
நீயும் அழகும் ஒரு சேர இருப்பவர்களா?
இல்லை
நீதான் அழகின் அகராதியா?
இல்லை
நீதான் அழகென புரியாது இருப்பது அழகா?
இல்லை
நீ மட்டும் தான் உலகில் அழகென்பதே அழகா?
இல்லை
இப்படி
இல்லை
இல்லையென
இல்லாமல்
போனேன் உன் அழகில்😊



அடடே V 8.9

அறிவுடையோர் நட்பை 
அகத்தில் வை!

நயவஞ்சகரின் நட்பை 
நகத்தில் வை!

அறிவுசார் கருவூலத்தை 
இல்லத்தில் வை!

பனித்துளியின் தூய்மையை 
உள்ளத்தில் வை!

பாறையின் உறுதியை 
உடலினில் வை!

எறும்பின் சுறுசுறுப்பை
எண்ணத்தில் வை!

மலர்களின் கணத்தை 
வார்த்தைகளில் வை!

சிங்கத்தின் கம்பீரத்தை
நடையில் வை!

குதிரையின் நேர்மையை
ஓட்டத்தில் வை!

எதிரிகளை விடாமல்
ஆட்டத்தில் வை!

காக்கையின் பழக்கத்தை 
வழக்கத்தில் வை!

தேனீயின் குணத்தை 
வாழ்க்கையில் வை! 

செய்யும் செயலை
என்றும் சிந்தையில் வை!👍



அடடே 9.0.1

மண்பானை..
எவ்வளவுதான் வெயில்
தன் மேல விழுந்தாலும்
தானும் குளிர்ச்சியாயிருந்து
தனக்குள் இருக்கும்
நீரையும் குளிர்ச்சியாக
வைத்துக் கொள்ளும்..!

தோழா..
அதுபோல, நீயும்
எவ்வளவுதான் வாழ்க்கையில
வெற்றிகளை தோல்விகளை
சந்தித்தாலும் உனது
எண்ணமும் குணமும்
மாறாது.. மாறாக
தனக்குள் இருக்கும்
தன்னம்பிக்கையும் திறனும்
குறையாது வைத்துக்கொள்
வெற்றி நிச்சயம்..!👍

அடடே 9.0.2

மண்பானை..
எவ்வளவுதான் வெயில்
தன் மேல விழுந்தாலும்
தானும் குளிர்ச்சியாயிருந்து
தனக்குள் இருக்கும்
நீரையும் குளிர்ச்சியாக
வைத்துக் கொள்ளும்..!

அன்பே..😍

அதுபோல, நீயும்
எவ்வளவுதான் வாழ்க்கையில
எனக்கு வலிகளை
தந்தாலும் உனது
எண்ணமும் நினைவும்
மாறாது.. மாறாக
உன்னை உன்னை
தேவதையாகவே வைத்திருக்கிறது
என் இதயம் ...!



அடடே V 9.1

வெற்றி வெற்றியென
அலைந்து மகிழ்ச்சியை
இழப்பதை விட

மகிழ்ச்சி மகிழ்ச்சினு
அலைந்து பார்
மகிழ்ச்சியோடு வெற்றியும்
பெறுவாய் தோழா..👍



அடடே V 9.2

நீ வானமாய் இருந்தால்
நான் நட்சத்திரமாய் இருப்பேன்.

நீ மேகமாய் இருந்தால்
நான் மழையாய் இருப்பேன்.

நீ பகலாய் இருந்தால்
நான் சூரியனாய் இருப்பேன்.

நீ இரவாய் இருந்தால்
நான் நிலவாய் இருப்பேன்.

நீ  பூமியாய் இருந்தால்
நான் விதையாய் இருப்பேன்.

நீ கடலாய் இருந்தால்
நான் நதியாய் இருப்பேன்.

நீ தீயாய் இருந்தால்
நான் பொறியாய் இருப்பேன்.

நீ காற்றாய் இருந்தால்
நான் மூச்சாய் இருப்பேன்.

நீ இசையாய் இருந்தால்
நான் ஸ்வரமாய் இருப்பேன்.

நீ மலராய் இருந்தால்
நான் மணமாய் இருப்பேன்.

நீ சிலையாய் இருந்தால்
நான் உளியாய் இருப்பேன்.

நீ ஆடையாய் இருந்தால்
நான் நூலாய் இருப்பேன்.

நீ கனியாய் இருந்தால்
நான் சுவையாய் இருப்பேன்.

நீ கவியாய் இருந்தால்
நான் எழுத்தாய் இருப்பேன்.

நீ மெழுகாய் இருந்தால்
நான் திரியாய் இருப்பேன்.

நீ திரியாய் இருந்தால்
நான் ஒளியாய் இருப்பேன்.

நீ கோவிலாய் இருந்தால்
நான் கடவுளாய் இருப்பேன்.

நீ கடவுளாய் இருந்தால்
நான் பக்தனாய் இருப்பேன்
என்றும் அன்பே 😍
நான் பக்தனாய் இருப்பேன்.!



அடடே V 9.3

நாகரிகம் பிரச்சனை
தமிழுக்கு போராட்டம்!

ஈழம் பிரச்சனை
உரிமைக்கு போராட்டம்!

மழை பிரச்சனை
விவசாயதிற்கு போராட்டம்!

என் எல் சி பிரச்சினை
ஊருக்கே போராட்டம்!

தண்ணீர் பிரச்சனை
நதிநீர் போராட்டம்!

மீத்தேன் பிரச்சனை
காதிராமங்கலம் போராட்டம்!

வருங்காலத்தினர் பிரச்சனை
அணுஉலை போராட்டம்!

இலங்கைராணுவ பிரச்சினை
மீனவர் போராட்டம்!

ஹட்ரோகார்பன் பிரச்சனை
நெடுவாசல் போராட்டம்!

பீட்டா பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்டம்!

பணமதிப்பீடு பிரச்சனை
ஏழைகளின் போராட்டம்!

ஆதார் பிரச்சனை
தனிமனித போராட்டம்!

வரி பிரச்சனை
ஜி எஸ் டி போராட்டம்!

பூளுவேல் பிரச்சனை
உளவியல் போராட்டம்!

அனிதா பிரச்சனை
நீட் போராட்டம்!

இப்படி

நம்மிடம் இருப்பதை
எல்லாம் சுரண்ட
பல திட்டங்கள்

போராடி போராடி
வீழ்வேன் என
நினைத்தாயோ?

எங்கள் பாரம்பரியம்
உரிமை உணர்வு
மொழி இடம்
எதுவாயினும்
விடமாட்டோம்
விட்டு கொடுக்கவும் மாட்டோம்.

தமிழ்நாடு
தனிநாடே
நம் தீர்வு



அடடே V 9.4

அனிதா, அன்புத் தங்கச்சியே

ஆதங்கத்தில் எழுதுகிறேன் தமிழச்சியே

இதோ இரங்கல் பா

ஈடில்லா உனை இழந்தோம்

உச்சநீதிமன்றம் வரை சென்றாயே

ஊரே உனை பார்த்து வியந்தது

எ(வ)மனையும் எதிரிப்பாய் என்று

ஏனிந்த முடிவு😢

ஐயோ இரத்தம் கொதிக்குதடி😡

ஒன்றும் செய்யா அரசு ஒற்றுமையுடன் நாங்கள்

ஓங்கி அடிக்கும் மத்தியம் ஓங்கும் நமது கைகள்

ஔடதமே உனது கனவு வரும் காலத்தின் பலரின் கனவையும் நாங்கள் அனைவரும் நினைவாக்க பாடுபடுவோம்

அஃது மறுபிறவி மருத்துவம் படிக்க வா பாவிகள் மறித்துப் போய் இருப்பார்கள். கண்ணீர்துளிகளுடன் அன்பு அண்ணன்.😢



அடடே V 9.5

ஏழ்மையில் பிறந்தது குற்றமா?

வசதி இல்லாதது குற்றமா?

கனவு கண்டது குற்றமா?

மதி கொண்டது குற்றமா?

மதிப்பெண் பெற்றது குற்றமா?

உரிமையை கேட்டது குற்றமா?

வெகுண்டு எழுந்தது குற்றமா?

போராட நினைத்தது குற்றமா?

மன்றத்தில் வாதிட்டது குற்றமா?

குற்றமற்றவள் நீ அனிதா
இன்று உன்னை மண்
தின்று கொண்டிருக்கிறது😢

குற்றம் புரிந்த பலர்
இதோ இம்மண்ணை
ஆண்டு கொண்டிருக்கிறார்கள்😡

என்ன கொடுமை😡

(வன்கொடுமை
பெண்கொடுமை
நீட்கொடுமை (நீட்டா டிசன்டா கொன்னுடாங்க))




அடடே V 9.6

தோழா உன்..

கஷ்டங்கள் எல்லாம்போகும்
அன்னையின் மடியிலே!

சோகங்கள் எல்லாம்போகும்
தந்தையின் உணர்வினிலே! 

அறியாமை  எல்லாம்போகும்
ஆசானின் அறிவுரையிலே!

பாரங்கள் எல்லாம்போகும்
சகோதர்கள் பகிர்வினிலே!

நஷ்டங்கள் எல்லாம்போகும்
நண்பர்களின் அன்பினிலே!

கஷ்டங்கள் எல்லாம்போகும்
மனைவியின் பாசத்திலே!

துயரங்கள் எல்லாம்போகும்
பிள்ளைகள் சிரிப்பினிலே!

எதுவும் கடந்து போகும்
உன் நம்பிக்கையிலே!👍



அடடே V 9.7

நான் தெட!
நான் சிகரம்தொட!!

நான் வளர !
நான் மனதால்வளர !!

நான் முன் ஏற !
நான் முன்னேற !!

நான் எடுக்க !
நான் தேர்ந்தெடுக்க !!

நான் கற்க !
நான் கற்ப்பிக்க !!

நான் காக்க !
நான் அறம்காக்க !!

நான் பதிக்க !
நான் தடம்பதிக்க !!

நான் பி(ப)டிக்க !
நான் கண்டுபி(ப)டிக்க !!

நான் பிடிக்க !
நான் இடம்பிடிக்க !!

நான் மறக்க !
நான் கேடுமறக்க !!

நான் உணர !
நான் தன்மானம்உணர !!

நான் கொடுக்க !
நான் ஊன்கொடுக்க !!

நான் வாழ !
நான் வையத்தில்வாழ !!

இப்படி நான் யாரென்று
அறிய வைத்து
என்னை உருவாக்கியதால்
நான் நானாகி நிற்கின்றேன்.

எனக்காக உழைத்தவர்களை

நான் கை எடுத்து
வணங்குகிறேன் நன்றியுடன்
நினைத்துப் பார்க்கிறேன்.

நான் இன்று இன்பம் காண 
அன்று துன்பம் பொறுத்தவர்கள் 

நான் முத்து சேர்க்க 
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள் 
நடமாடும் தெய்வங்கள் ! 
என் ஆசிரிய பெருமக்கள்!!

ஆசிரியர் தின வாழ்த்துகள் 💐



அடடே V 9.7.1

எத்தனை அன்பு
எத்தனை அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள்
எத்தனை ஆலோசனைகள் 
எத்தனை திட்டுகள்
எத்தனை கேலிகள்
எத்தனை விளக்கங்கள்
எத்தனை கேள்விகள்
எத்தனை யோசனைகள்
எத்தனை பதில்கள்
எத்தனை வழிகள்
எத்தனை வழிமுறைகள்
எத்தனை சந்தேகங்கள்
எத்தனை ஐயங்கள்
எத்தனை பாடுகள்
எத்தனை பாடங்கள்

ஐயா எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு
வளம் பெறதானே 

நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா!

பாதம் பணிந்து வணங்குகிறோம்
💐💐💐ஆசிரியர்களே💐💐💐


அடடே V 9.7.2

அன்னையின் மறுஉருவம்
தந்தையின் மறுஉருவம்
சகோதரனின் மறுஉருவம்
நண்பனின் மறுஉருவம்
தோழியின் மறுஉருவம்
கற்றலின் மறுஉருவம்
அகராதியின் மறுஉருவம்
பொதுநலனின் மறுஉருவம்
ஏணியின் மறுஉருவம்
சமத்துவத்தின் மறுஉருவம்
நல்வழியின் மறுஉருவம்
வழிகாட்டியின் மறுஉருவம்
மாற்றத்தின் மறுஉருவம்

என் உருவத்திற்கு
மறுஉருவம் கொடுத்தவரே

ஆசான் அவர்களே
💐வணங்குகிறோம்💐


அடடே V 9.7.3

புத்தகம் பெயர் : வாழ்க்கை

பதிப்பகம் : கல்வியறிவு

பதிப்பாளர் : ஆசான்

பக்கங்கள் : வரும் நாட்கள்

விலை : விலைமதிப்பற்றது

மாணவர்களே வாங்கி
படியுங்கள் வாழ்க்கை
தரம் உயரும்


அடடே 9.8

நீ ஜெயிச்சா
மச்சகாரன்டா நீ
கலக்கு மச்சி செம பழம்டா
நீனு  ஓட்டுவான்.

நீ தோத்தா
கவலபடாத இது ஒரு
விஷயமேயில்ல இதுக்கெல்லாமா
கவலபடுவாங்கனு தேற்றுவான்.

நீ பேசினா
அர்த்தம் இல்லாம
பேசாதே அப்படி என்ன நீ
கண்டுட்டனு
அடக்குவான்.

நீ சிரிச்சா
என்னடா எப்ப பாரு
சிரிப்புதானா கோமாளி மாரினு
சொல்லுவான்.

நீ அழுதா
என்னடா எதுக்கெடுத்தாலும்
அழுகையானு இப்ப என்ன
நடந்துடுச்சுனு
வாழ்க்கைல இன்னும்
எவ்ளே இருக்குனு கேட்பான்.

நீ சாந்தமானா
கல்லுலிமங்கன் ஊம
ஊர கெடுக்கும்
அமைதியாவே சாதிக்கிறான்னு
நச்சரிப்பாங்க.

நீ வந்தா
என்னடா இந்த பக்கம்
என்ன பண்ற இங்க ஏன்டா வந்தனு சந்தேகிப்பாங்க.

நீ போனா
எங்கடா போற
எதுக்குடா போற
தேவயில்லாம போகாத
நீ போனா மட்டும்
என்ன ஆகபோகுதுனு மட்டம் தட்டுவான்.

நீ ஓடுனா
ஏன்டா இப்படி
பாத்து போ வீட்ல சொல்லிட்டு
வந்திய? தருதலனு
திட்டுவான்.

நீ நின்னா
எதுக்கு மசமசனு நிக்குற
அசையுறானா பாரு
சோம்பேறி ஒன்னுத்துக்கும்
இலாய்க்கு இல்லனு
பேசுவான்.

முடியல என்ன உலகம்டா

என்னதான்டா பண்ணனும்
என்ன பண்ணா
ஒத்துக் கொள்வீர்கள்.



அடடே V 9.9

அன்று அன்பே..😍

நீயாக பார்த்தாய்
நீயாக சிரித்தாய் 
நீயாக பேசினாய்
நீயாக மௌனித்தாய் 
நீயாக குனிந்தாய் 
நீயாக குலைந்தாய் 
நீயாக தவித்தாய் 
நீயாக புலம்பினாய்
நீயாக செய்தாய் 
நீயாக பிடித்தாய்
நீயாக சொன்னாய் 
நீயாக நடந்தாய் 
நீயாக புரிந்தாய் 
நீயாக பழகினாய்
நீயாக சேர்ந்தாய்
நீயாக சுற்றினாய்
நீயாக சுழன்றாய்
நீயாக மாற்றினாய்

இன்று நீயாக நானிருக்க

நீயாக விலகுகிறேன்
என்பது எவ்வகை நியாயம்?

என் செய்வேன்?..
நீயாகவே என்னை
நீக்கிவிடு உலகைவிட்டு



அடடே V 10.0

நமது
வெற்றி என்பது ஓவியம்
அதில்
தோல்விகள் என்பது வண்ணம் 
நீ
வரையும் ஓவியம்
அழகானது வண்ணங்களாலே
😊



அடடே V 10.1

அன்பே 😍

சண்டை போட்டதால்
மௌனம் காட்டுகிறாய்

மன்னித்து விடு

மௌனம் காப்பதால்
மீண்டும் சண்டையிட
துணிந்து விட்டேன்

மௌனம் கலைத்துவிடு

அல்லது

மௌனமாய் பேசிவிடு.




அடடே V 10.2

கரைந்தால்தானே
மெழுகுக்கு மிதப்பு!

விரைந்தால்தானே
குதிரைக்கு மதிப்பு!

உறைந்தால்தானே
பனிக்கு மிதப்பு!

குறைந்தால்தானே
கடுப்புக்கு மிதப்பு!

நிறைந்தால்தானே
ஆறறிவுக்கு மதிப்பு!

உழைத்தால்தானே
அனைத்து உயிருக்கு மதிப்பு!👍



அடடே V 10.3

அன்பே...😍

நான் விளையாடும்
பல்லாங்குழி நீ!
நான் தொட்டுக் கொள்ளும்
ஊறுகாய் நீ!
நான் கட்டித்தழுவும்
டெடிபியர் நீ!
நான் வளர்க்கும்
செல்லநாய்குட்டி நீ!
நான் முத்தமிடும்
தலையணை நீ!
நான் பார்க்கும்
டிவி நெடுந்தொடர் நீ!
நான் பசியாற
கொத்துபாரோட்டா நீ!
நான் கேட்க்கும்
பின்னனிஇசை நீ!
நான் சிரிக்க
மொக்கைஜோக் நீ!
நான் தூங்க
குறட்டை நீ!
நான் வாழ்த்த
உலகப்பொதுமறை நீ!
நான் பாதுகாக்கும்
பொக்கிஷம் நீ!
நான் கடிக்கும்
பிரட்ஜாம் நீ!
நான் நடக்க
டிராபிக்ருல்ஸ் நீ!
நான் அணிய
சிறந்தஉடை நீ!

.....

எங்கும் நீ!!
எதிலும் நீ!!

நான் தேடும்
வாழ்க்கை நீ!!!




அடடே V 10.4 (முற்றும்)

செய்! 

மீண்டும் செய்!

மீண்டும் மீண்டும் செய்! 

தவறுகளை திருத்திக்கொண்டு
மீண்டும் மீண்டும் செய்!

மனம் சோர்ந்து விடாதே
தன்மானம் விட்டுவிடாதே
மீண்டும் மீண்டும் செய்!

ஒருநாள் வெற்றி பெருவாய்! 

(செய்யாமல் மட்டும்
செத்து மடிந்து விடாதே!! )

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...