நல்லா(த) யோசிங்க V 0.1
ஒரு துளி விஷம்
உயிரை மாய்க்கும்..
ஒரு சிட்டிகை உப்பு
உணவை ஓரங்கட்டும்..
ஒரு துளி தயிர்
பாலை உறைக்கும்..
ஒரு சிட்டிகை மஞ்சள்
புண்ணை குணமாக்கும்..
ஒரு துளி சுயநலம்
உறவை முறிக்கும்..
ஒரு சிட்டிகை பாராட்டு
உயர வைக்கும்..
அதுபோல்.,
ஒரு துளி அன்பு
மனிதத்தை மேம்படுத்தும்..
நல்லா யோசிங்க V 0.2
கோயில் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை இந்து என்றனர்..
தேவாலையம் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை கிறித்தவர் என்றனர்..
மசூதியின் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை முஸ்லீம் என்றனர்..
ஆகையால் ..
எங்கும் புறாக்கள் புறாக்களாவே உயர்ந்து மேலே இருக்கின்றது
மனிதனோ மாறுபட்டு வேறுபட்டு கீழே கிடக்கிறான்..
நல்லா யோசிங்க V 0.3
மகிழ்ச்சி பெரிதானா துள்ளி குதிக்கும் மனசு.,
கவலை சிறிதானாலும் ஏனோ தவிக்குது???
வெற்றி அடைந்தா குதுகலிக்கும் மனசு.,
தோல்வினு நினைத்தாலே அலறுது..???
இன்பம் மலையானாலும் ஏற்க்கும் மனசு.,
துன்பம் கடுகானாலும் ஏற்க மறுக்குது..???
இரண்டுமே தாங்க வாழ்க,
ஏத்துக்க சொல்லுங்க மனச..!!!
நல்லா யோசிங்க V 0.4
ஒரே மண்ணில் பல பூக்கள் மலர்கிறது..
தரத்தாலும் மணத்தாலும் பிரிக்கப்படுகிறது..
ஒரே மண்ணில் மீண்டும் வீழ்கிறது..
அதுபோல்
மனிதா பிறப்பும் இறப்பும்
அனைவருக்கும் ஒரே மாதிரி தான்..
இடையில்
உன் தரம் புகழ் ஓங்குவது,
உன் செய்கையில் தான்..
நல்லா யோசிங்க V 0.5
தேன் கிடைத்தால்
வண்டுக்கு விடியல்..
இறை கிடைத்தால்
பறவைக்கு விடியல்..
.....
வானம் பொழிந்தா
விவசாயிக்கு விடியல்..
சம்பளம் அதிகரிச்சா
வேலைக்காரனுக்கு விடியல்..
.........
கணவனும் மனைவியும் விட்டு கொடுத்தா
வீட்டிக்கு விடியல்..
சாதி மத வேதம் ஒழிந்தா
நாட்டிற்கே விடியல்..
ஆணும் பெண்ணும் சமமானா
உலகிற்கே விடியல்..
நல்லா யோசிங்க V 0.6
எழு தோழா!!!
வானம் அளந்து முடிக்கவில்லை,
கடல் நீர் குடித்து தீரவில்லை,
பூமியை இன்னும் கடக்கவில்லை,
வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை....!!
எழு தோழா!!
புறப்படு தோழா!!
நல்லா யோசிங்க V 0.7
வேங்கை நீருக்குள்
வேட்டையாட எண்ணியதில்லை..
மரத்தில் கூடுகட்ட
மான்கள் எண்ணியதில்லை..
வானத்தில் முயல்கள்
வட்டமிட எண்ணியதில்லை..
அதுபோல் மனிதா,
ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு திறமை
உணர்ந்தால் தோல்வியில்லை..
உன்னை நீ உணர்ந்தால்
உலகில் உன்னை விட எவனுமில்லை..
நல்லா யோசிங்க V 0.8
விடிவோம் என்றே
வீழ்கிறது சூரியன்..
வளர்வோம் என்றே
தேய்கிறது சந்திரன்..
வீழ்ச்சியும் தேய்வதும்
தேகத்திற்கு தானே?
மனதிற்கு அல்லவே!!
உன்னுள் நம்பிக்கையை ஊற்று,
உதிரத்தின் போக்கை மாற்று!!!
நம்பிக்கை தான் வாழ்க்கை! !!!
நல்லா யோசிங்க V 0.9
அறிஞனின் சொல்லை
அறிவில் நிறுத்து..
அனுபவசாலியின் சொல்லை
மனதில் நிறுத்து..
இவ்விரண்டையும் உன்
செயலில் நிறுத்து..!!!
நல்லா யோசிங்க V 1.0
(அ)ன்பையும் பண்பையும் போதித்தவர்,
(ஆ)ற்றலையும்
அறிவையும் கற்பித்தவர்,
(இ)ளமை தவறை திருத்தியவர்,
(ஈ)ன்றவருக்கு இணை ஆனவர்,
(உ)ண்மையும் உன்னையும் உணர்தியவர்,
(ஊ)ரார் புகழ வாழ செய்தவர்,
(எ)ன்றும் நெஞ்சில் வாழ்பவர்,
(ஏ)ணியாய் நம்மை ஏற்றிவிட்டவர்,
(ஐ)யங்களை பலசமயங்களில் தீர்த்தவர்,
(ஒ)ருவனாய் நம்மில் பழகியவர்,
(ஓ)டமாய் நம்மை கரை சேர்த்தவர்,
(ஔ)வை வழி நடக்க செய்தவர்,
அ(ஃ)து உயிராய் மெய்யில் கலந்தவர்!!!
ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!!
நல்லா யோசிங்க V 1.1
இதயம் எனும் வயலில்,
நட்பு எனும் விதை விதைத்து,
அன்பு எனும் நீருற்றி,
உறவு எனும் செடி வளர்த்து,
பகிர்வு எனும் உரம் போட்டு,
ஈகோ எனும் களை எடுத்து,
ஓகோனு வாழ்வோம் நண்பர்களே!!!!
நல்லா யோசிங்க V 1.2
ஒரு துளி நீர் விதைக்கு போதும்
மண்ணை முட்டி பிளக்க,
ஒரு துளி கண்ணீர் உனக்கு போதும்
உன்னை தட்டி எழுப்ப!!!
நல்லா யோசிங்க V 1.3
உன்னை எப்போதும்
முன் நிறுத்து,
உன் பின்னே
பலர் நிற்பர்..!!!
உலகத்தை நீ தேடாதே,
உலகம் உன்னை தேடட்டும்..!!!
நல்லா யோசிங்க V 1.4
துன்பம் தேடி வந்தாலென்ன,
துணிவு உன்னிடம் இருக்கையில்..
சங்கடம் தேடி வந்தாலென்ன,
சாதிக்கும் மனம் உன்னிடம் இருக்கையில்..
இரை எங்கு இருந்தாலென்ன,
இறக்கை உன்னிடம் இருக்கையில்..
இலக்கு எங்கு இருந்தாலென்ன,
இலட்சிய நோக்கம் உன்னிடம் இருக்கையில்..
முட்டுகட்டைகளை மூட்டைகட்டு,
முயற்சிகளால் தோல்விக்கு முடிவுகட்டு..
நல்லா யோசிங்க V 1.5
காற்றை மோதி
முயல்வதால்
பட்டம் பறக்கிறது..
சுமையை ஏந்தி
முயல்வதால்
சக்கரம் சுழல்கிறது..
மனமே முயற்சி செய்
தினமே பயிற்சி செய்
உலகம் உன்னை போற்றும்,
வரலாறு ஏட்டில் ஏற்றும்!!!!
நல்லா யோசிங்க V 1.6
அறிவை தொடுகின்ற
சுமைகள் இல்லாத
மதிப்பெண் வேண்டாத
தற்கொலைக்கு தூண்டாத
அகந்தை அழிக்கின்ற
வேலை கிடைக்கின்ற
மனிதம் வளர்க்கின்ற
இத்துடன்,
வாழ்க்கையை வாழ்ந்திட
?
?
?
தேடு உன்னுடன் இறுதிமூச்சு வரும் கல்வியை!!!
நல்லா யோசிங்க V 1.7
நல்ல அரசியல் உள்ள நாடாக,
நல்லவர்களை போற்றும் நாடாக,
சாதிகள் இல்லாத நாடாக,
சாதனை படைக்கும் நாடாக,
விவசாயம் செழிக்கும் நாடாக,
விஞ்ஞானம் வளர்ந்த நாடாக,
மாசு இல்லாத நாடாக,
மனிதம் போற்றும் நாடாக,
ஏழைகளே இல்லாத நாடாக,
ஏற்றம் கொழிக்கும் நாடாக,
அமைதி புயல் வீசும் நாடாக,
அன்பு போற்றும் நாடாக,
கனவு பலிக்கும் நாடாக,
கனா காணுங்கள்!!!
நல்லா யோசிங்க V 1.8
பல முறை தன் வலை அறுபட்டாலும்,
மீண்டும் மீண்டும் வலை பிண்ணி கொண்டே இருக்கும் சிலந்தி ..!!
அதுதான் விடாமுயற்சி.
மனிதா நீ மட்டும் ஏன்,
ஒரு முறை தோற்பதற்கு கூட,
வாழ்க்கையே முடிந்ததாக எண்ணுகிறாய்???
Spidermanனாய் விடாமல் முயல் மனிதா,
வெற்றி நிச்சயம்! !!
நல்லா யோசிங்க V 1.9
தோல்வியை வெறுத்து
வெற்றியை நேசித்தால்
உன் நிழலும்
உன்னை நெருங்காது..!!!
தோல்வியை ருசித்து
வெற்றியை புசித்தால்
உன் புகழ்
உலகம் பாடாமல் இருக்காது..!!!
நல்லா யோசிங்க V 2.0
விழுந்தாலும்
புரண்டாலும்
ஓடினாலும்
மீண்டும்
மீண்டும்
முயல்வேன்
என்கிறது கடல் அலை..
மனிதா. .....நீ???
நல்லா யோசிங்க V 2.1
(ஆத்திகர்களுக்கு மட்டும்)
சிவபெருமானின் புதல்வனே..
உமையாளின் மைந்தனே..
ஆறுமுகனின் தமையனே..
ஆணை முகத்தானே..
முக்திக்கு மூத்தவனே..
பக்திக்கு வித்திட்டவனே..
எழுத்துக்களின் முதல்வனே..
எலியின் நண்பனே..
கொழுகட்டை பிரியனே..
முழுமுதற் கடவுளே..
சித்தி வினாயகனே..
அனைவரையும் காத்து அருள்வாயாக..!!!!
( இருக்கிறாயோ இல்லையோ,
Thanks for giving one day holiday Lord Ganesha 😜😜😜😜😜)
நல்லா யோசிங்க V 2.2
கனிவா பார்த்தாலும்,
கரண்ட்டா தாக்குவா..
உயிர எடுத்தாலும்,
உயிராவும் இருப்பா..
கலாட்டா பண்ணீனாலும்
கலகலப்பா நடப்பா..
அதிகம் பேசலனாலும்,
அர்த்தமா பேசுவா..
அறியாதவளா இருந்தாலும்,
என்னை எனக்கே அறியவச்சுட்டா..
நட்பு தோழியே!!!!!
நல்லா யோசிங்க V 2.3
காலம் மாறும்,
களம் மாறும்..
பொறுமை கொள் தோழா!!!
ஆடினவன் அடங்குவான்
உன் ஆட்டம் தொடங்கும்..!
பொறுமை கொள் தோழா!!!
வேடமிட்டு காத்திறாதே,
வேடனாய் காத்திரு..
பொறுமை கொள் தோழா! !!
வேட்டையாடு விளையாடு
பொறுமையே வெற்றியின்
தாரக மந்திரம்! !!!
நல்லா யோசிங்க V 2.4
உலகில் உள்ள
உறவுகளை தோற்க்கடிக்கும்
உன்னத உறவு???
சாதி மதங்களை
சங்கடம் சம்பிரதாயங்களை
சாகடிக்கும் உறவு???
எளிமையாய் இருந்து
எல்லோரையும் அரவணைத்து
எல்லாமுமாகும் உறவு???
நட்பு! நட்பு!! நட்புதாங்க!!!
நல்லா யோசிங்க V 2.5
வலியவரிடத்தில்
தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே!!!
எளியவரிடத்தில்
தாழ்மை கொண்டு நடக்க மறவாதே!!!
நல்லா யோசிங்க V 2.6
தினமும் உன்னை எதிர்பார்கிறேன்,
வருகிறாய் செல்கிறாய்..
தினமும் உன்னை தழுவுகின்றேன்,
இருக்கிறாய் செல்கிறாய்..
தினமும் ரசித்து நாடுகின்றேன்,
வருகின்றாய் செல்கிறாய்..
இருந்தும்
ஏக்கம் குறையவில்லை
காதல் தீரவில்லை
எதிர்பார்ப்புக்கு அளவில்லை
என் ஆசை இரவே
இதோ வருகிறேன் உன் மடி தூங்க😘
நல்லா யோசிங்க V 2.7
அன்பை செலவு செய்து,
அனைத்து இதயங்களை வாங்கிக்கொள்..!!
சிரிப்பை செலவு செய்து,
சில ஆயுட்காலத்தை கூட்டிக்கொள்..!!
சிந்தையை செலவு செய்து,
சில கொள்கைகளை தீட்டிக்கொள்..!!
அறிவை செலவு செய்து,
அகிலத்தை இன்றே வெற்றிக்கொள்..!!
நல்லா யோசிங்க V 2.8
இருக்கும் வரை வீடு,
இல்லாமல் போனால் சுடுகாடு..!!
ருசிக்கும் வரை சாப்பாடு,
பசிச்சும் சாப்பிடாம போன நோக்காடு..!!
மதிக்கும் வரை மரியாதை,
மதியாதோர்க்கு காட்டிடு உன் பாதை..!!
சிந்திக்கும் வரை தான் மனிதர்கள்,
சிந்தனை அற்றுப்போனால் பிண்ங்கள்..!!
சிந்தி மனிதா சிந்தி!!
நல்லா யோசிங்க V 2.9
முக்கல்.. முனங்கல்..
விசும்பல்.. வினாக்கள்..
எதற்கு தோழர்களே???
ஒன்றும் குடிமுழுகி போகாத வாழ்க்கையை..
ஒன்று போனால் மற்றொன்று உள்ள வாழ்க்கையை..
வாழ்ந்து பார்க்க ஆசைப்படு!!
வசப்படும் வாழ்க்கை உன்னோடு!!
நல்லா யோசிங்க V 3.0
இன்பம் வரும் போதும்
துன்பம் வரும் போதும்
உறவை நினைக்கும் போதும்
உறவு நம்மை மறக்கும் போதும்
தோல்வியை தழுவும் போதும்
வெற்றிகள் குவியும் போதும்
சேரும் தருணத்தின் போதும்
பிரியும் தருணத்தின் போதும்
உடன் இருந்து
உடனே பிரியும்
ஒரே உறவு
"கண்ணீர்" மட்டுமே!!!
நல்லா யோசிங்க V 3.1
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை..
வாழ்க்கை இதுதானென்று
எவரும் சொன்னதில்லை..
இதோ நான்
கேட்டத சொல்றேன்..
கோபத்தை தடுத்து நிறுத்து தெரியும்
தவறுகளை எடுத்து திருத்து தெரியும்
துன்பத்தை விடுத்து மற தெரியும்
இன்பத்தை கொடுத்து பகிர் தெரியும்
புரியுதா???
நல்லா யோசிங்க V 3.3
இருக்கின்ற வரை அழுது
இல்லாத ஒருவரை தொழுது
வீணாக்காதே பல பொழுது
உள்ளத்தால் பார் பழுது
உன்னையே நீ உழுது
உணர்வாய் உன்னையே முழுது
விழித்துக் கொள்ளும் விழுது
விருட்சமாய் எழு ஒரு பொழுது
சரித்திரத்தில் உன்னை எழுது
நல்லா யோசிங்க V 3.2
எதற்கோ எரியும் தெருவிளக்கு
யாருக்கோ ஒளிரும் நிலா
பாம்புகள் தவளைகளுக்கு தூதுவிடும்
ஆந்தை விழித்து கொள்ளும்
நாய்கள் நிழலை பார்த்து ஓலமிடும்
எலிகள் இரைகளை தேடும்
கடிகாரமுள் சத்தம் மட்டும் கேட்கும்
ஆவிகள் பல உலாவிடும்
பாவங்கள் சில நடந்திடும்
கள்வனும் காதல் செய்வான்
மிட்நைட் மசாலா அரங்கேறும்
இமையோடு இமை சேரும்
கனவுகள் சிலது நடந்தேறும்
இருளே நீ வா வா
தூக்கத்தை நீ தா தா
நல்லா யோசிங்க V 3.4
மூடநம்பிக்கையில் மூழ்கிவிடாதே!!!
மூலையில் முடங்கிவிடாதே!!!
மூளையை தளர்த்திவிடாதே!!!
முரண்களை ஏற்றுவிடாதே!!!
மூடனை நம்பிவிடாதே!!!
மூர்கனை பேசவிடாதே!!!
முட்டாளை செய்யவிடாதே!!!
முடவனை கையேந்தவிடாதே!!!
முன்னோர்சொல் மீறிவிடாதே!!!
முயற்சியை கைவிடாதே!!!
நல்லா யோசிங்க V 3.5
பாரம்பரிய உணவு
பரிதாபமாய் போச்சு..
பாட்டி செஞ்ச பண்டங்கள்
வீட்டவிட்டு போச்சு..
நல்ல பழக்கங்கள்
நம்மைவிட்டு போச்சு..
நலம் தரும் வழக்கங்கள்
மண்ணவிட்டு போச்சு..
புது நோய்கள் வேண்டுமா
ஜங்க் புட் தேடி போ
அதுவும் சீக்கிரம் வேண்டுமா
பாஸ்ட் புட் தேடி போ
அவசரம்
எதிலும் அவசரம்
அவசரம்
உணவிலும் அவசரம்
அவசியம்
நல்உணவு அவசியம்
அவசியம்
அதை உணர்தல் அவசியம்
நல்லா சாப்பிடுங்க
நல்லதா சாப்பிடுங்க
நல்லபடியா தூங்குங்க
நல்லா யோசிங்க V 3.6
தினமும் நிலைக்கண்ணாடியில்
உன் முகத்தை அலங்கரிக்கும் மனிதா,
உன் உள்ளத்தையும் அலங்கரித்துக் கொள்..
நீயும் அழகாவாய்
வாழ்க்கையும் அழகாகும்!!!
நல்லா யோசிங்க V 3.7
நீ தொட்டுப் பார்
வானம் வசமாகும்..
நீ ரசித்துப் பார்
பூக்கள் சிரிக்கும்..
நீ புன்னகைத்துப் பார்
உறவு பலமாகும்..
நீ சிந்தித்துப் பார்
கனவு நனவாகும்..
நீ தோற்றுப் பார்
அனுபவம் பிறக்கும்..
நீ முயன்றுப் பார்
வெற்றி உனதாகும்..
நீ ஜெயித்துப் பார்
உலகமே திரும்பார்க்கும்..!!!
நல்லா யோசிங்க V 3.8
தன்னலதிற்காக பலர்
காலையும் மாலையும்
நடக்கிறார்கள்..
ஆனால் இரண்டு உயர்ந்த தலைவர்கள்
இந்தியாவின் உயர்ந்த இடத்தில்..
ஒருவர்..
உறுதியாய் நடந்தார்
உப்பிற்காக நடந்தார்
கதர் ஆடை நெய்தவர்
அகிம்சை வேண்டியவர்
நாட்டிற்காக நடந்தார்
நாட்டு சுதந்திரத்திற்காக நடந்தார்
"அண்ணல் காந்தி" !!!
இன்னொருவர்..
எளிமையாய் இருந்தவர்
ஏழைகளுக்காக உழைத்தவர்
வாடியர்களுக்கு உணவளித்தவர்
அணைகள் கட்டியவர்
கல்வி கண் திறந்தவர்
கருப்பு காந்தி
கதர்மட்டுமே உடுத்தியவர்
"கர்ம வீரர் காமராஜ்"
உங்களை நினைப்பதில்
பெருமிதம் கொள்கிறோம்
நல்லா யோசிங்க V 3.9.1
அன்பே..
நீ பார்த்தும் பார்காதது போல் இருந்தால்,
நான் தூண்டிலில் சிக்கிய மீனாவேன்..
நீ ஒருநாளைக்கு ஒரு நொடி பார்த்தாலும்,
நான் துள்ளி குதிக்கும் புள்ளி மானாவேன்..
நீ பார்த்து லேசா சிரித்தாலும்,
நான் பாலில் நழுவி விழும் தேனாவேன்..
நீ சிரிச்சு அழகா தலையசைச்சா,
நான் தூங்கா இரவெல்லாம் வீணானேன்..
நீ தலையாட்டி ஒரு வார்த்தை பேசினா,
நான் நிஜமெல்லாம் கனவென காணானேன்..
மொத்தத்தில்
நீ பார்ப்பதாலும் என்னிடம் பேசுவதாலும்,
நான் முழு
ஆளா(ணா)னேன்..
நல்லா யோசிங்க V 3.9.2
அன்பே
காதலெனும் தேர்வெழுதி
காத்துக் கொண்டிருக்கிறேன் பதிலுக்காக??..
நீ ம்ம்ம்னு சொன்னா
துள்ளி ஓடும் மானாவேன்..
இல்ல
நீ சரினு தலையாட்டினா
உன்னில் கரைந்து காணாவேன்..
இல்ல
நீ ஆம்னு சிரிச்சா
சொட்ட சொட்ட தித்திக்கும் தேனாவேன்..
இல்ல
நீ ஆம்னு கண் இமைத்தாலே
இனிக்கும் பழைய குழம்பில் மீனாவேன்..
இல்ல
நீ முடியாதுனு சொன்னா
வாழ தெரியாது முழுதும் வீணாவேன்
இல்ல
நீ முடியவே முடியாதுனு சொன்னா
என்னில் உன்னை மரித்து சொர்கத்தில்
இடம்பிடிப்போம் 😡💀
நல்லா யோசிங்க V 4.0 (முற்றும்)
யோசிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
யேசித்து வாழ்வதும் வாழ்க்கை தான்..
ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
தோற்று ஜெயிப்பதுவும் வாழ்க்கை தான்..
சரி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை,
சரியாய் நடந்து கொள்வதுவும் வாழ்க்கை தான்..
கொடுப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
விட்டுக் கொடுப்பதும் வாழ்க்கை தான்..
பொருளில்லா வாழ்க்கை இல்லை,
பொருளற்ற வாழ்க்கையும் இல்லை..
மனம் போல வாழு!!
மாசற்று வாழு!!
மானங்காத்து வாழு!!
மரியாதையுடன் வாழு!!
மனிதனாய் வாழு!!
ஒரு துளி விஷம்
உயிரை மாய்க்கும்..
ஒரு சிட்டிகை உப்பு
உணவை ஓரங்கட்டும்..
ஒரு துளி தயிர்
பாலை உறைக்கும்..
ஒரு சிட்டிகை மஞ்சள்
புண்ணை குணமாக்கும்..
ஒரு துளி சுயநலம்
உறவை முறிக்கும்..
ஒரு சிட்டிகை பாராட்டு
உயர வைக்கும்..
அதுபோல்.,
ஒரு துளி அன்பு
மனிதத்தை மேம்படுத்தும்..
நல்லா யோசிங்க V 0.2
கோயில் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை இந்து என்றனர்..
தேவாலையம் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை கிறித்தவர் என்றனர்..
மசூதியின் மேலே புறாக்கள்
வந்து பறந்து சென்றது,
அனைவரும் அதோ புறாக்கள் என்றே அழைத்தனர்!!!
கீழே வந்த மனிதர்களை முஸ்லீம் என்றனர்..
ஆகையால் ..
எங்கும் புறாக்கள் புறாக்களாவே உயர்ந்து மேலே இருக்கின்றது
மனிதனோ மாறுபட்டு வேறுபட்டு கீழே கிடக்கிறான்..
நல்லா யோசிங்க V 0.3
மகிழ்ச்சி பெரிதானா துள்ளி குதிக்கும் மனசு.,
கவலை சிறிதானாலும் ஏனோ தவிக்குது???
வெற்றி அடைந்தா குதுகலிக்கும் மனசு.,
தோல்வினு நினைத்தாலே அலறுது..???
இன்பம் மலையானாலும் ஏற்க்கும் மனசு.,
துன்பம் கடுகானாலும் ஏற்க மறுக்குது..???
இரண்டுமே தாங்க வாழ்க,
ஏத்துக்க சொல்லுங்க மனச..!!!
நல்லா யோசிங்க V 0.4
ஒரே மண்ணில் பல பூக்கள் மலர்கிறது..
தரத்தாலும் மணத்தாலும் பிரிக்கப்படுகிறது..
ஒரே மண்ணில் மீண்டும் வீழ்கிறது..
அதுபோல்
மனிதா பிறப்பும் இறப்பும்
அனைவருக்கும் ஒரே மாதிரி தான்..
இடையில்
உன் தரம் புகழ் ஓங்குவது,
உன் செய்கையில் தான்..
நல்லா யோசிங்க V 0.5
தேன் கிடைத்தால்
வண்டுக்கு விடியல்..
இறை கிடைத்தால்
பறவைக்கு விடியல்..
.....
வானம் பொழிந்தா
விவசாயிக்கு விடியல்..
சம்பளம் அதிகரிச்சா
வேலைக்காரனுக்கு விடியல்..
.........
கணவனும் மனைவியும் விட்டு கொடுத்தா
வீட்டிக்கு விடியல்..
சாதி மத வேதம் ஒழிந்தா
நாட்டிற்கே விடியல்..
ஆணும் பெண்ணும் சமமானா
உலகிற்கே விடியல்..
நல்லா யோசிங்க V 0.6
எழு தோழா!!!
வானம் அளந்து முடிக்கவில்லை,
கடல் நீர் குடித்து தீரவில்லை,
பூமியை இன்னும் கடக்கவில்லை,
வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவில்லை....!!
எழு தோழா!!
புறப்படு தோழா!!
நல்லா யோசிங்க V 0.7
வேங்கை நீருக்குள்
வேட்டையாட எண்ணியதில்லை..
மரத்தில் கூடுகட்ட
மான்கள் எண்ணியதில்லை..
வானத்தில் முயல்கள்
வட்டமிட எண்ணியதில்லை..
அதுபோல் மனிதா,
ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு திறமை
உணர்ந்தால் தோல்வியில்லை..
உன்னை நீ உணர்ந்தால்
உலகில் உன்னை விட எவனுமில்லை..
நல்லா யோசிங்க V 0.8
விடிவோம் என்றே
வீழ்கிறது சூரியன்..
வளர்வோம் என்றே
தேய்கிறது சந்திரன்..
வீழ்ச்சியும் தேய்வதும்
தேகத்திற்கு தானே?
மனதிற்கு அல்லவே!!
உன்னுள் நம்பிக்கையை ஊற்று,
உதிரத்தின் போக்கை மாற்று!!!
நம்பிக்கை தான் வாழ்க்கை! !!!
நல்லா யோசிங்க V 0.9
அறிஞனின் சொல்லை
அறிவில் நிறுத்து..
அனுபவசாலியின் சொல்லை
மனதில் நிறுத்து..
இவ்விரண்டையும் உன்
செயலில் நிறுத்து..!!!
நல்லா யோசிங்க V 1.0
(அ)ன்பையும் பண்பையும் போதித்தவர்,
(ஆ)ற்றலையும்
அறிவையும் கற்பித்தவர்,
(இ)ளமை தவறை திருத்தியவர்,
(ஈ)ன்றவருக்கு இணை ஆனவர்,
(உ)ண்மையும் உன்னையும் உணர்தியவர்,
(ஊ)ரார் புகழ வாழ செய்தவர்,
(எ)ன்றும் நெஞ்சில் வாழ்பவர்,
(ஏ)ணியாய் நம்மை ஏற்றிவிட்டவர்,
(ஐ)யங்களை பலசமயங்களில் தீர்த்தவர்,
(ஒ)ருவனாய் நம்மில் பழகியவர்,
(ஓ)டமாய் நம்மை கரை சேர்த்தவர்,
(ஔ)வை வழி நடக்க செய்தவர்,
அ(ஃ)து உயிராய் மெய்யில் கலந்தவர்!!!
ஆசிரியர் தின வாழ்த்துகள்!!!!
நல்லா யோசிங்க V 1.1
இதயம் எனும் வயலில்,
நட்பு எனும் விதை விதைத்து,
அன்பு எனும் நீருற்றி,
உறவு எனும் செடி வளர்த்து,
பகிர்வு எனும் உரம் போட்டு,
ஈகோ எனும் களை எடுத்து,
ஓகோனு வாழ்வோம் நண்பர்களே!!!!
நல்லா யோசிங்க V 1.2
ஒரு துளி நீர் விதைக்கு போதும்
மண்ணை முட்டி பிளக்க,
ஒரு துளி கண்ணீர் உனக்கு போதும்
உன்னை தட்டி எழுப்ப!!!
நல்லா யோசிங்க V 1.3
உன்னை எப்போதும்
முன் நிறுத்து,
உன் பின்னே
பலர் நிற்பர்..!!!
உலகத்தை நீ தேடாதே,
உலகம் உன்னை தேடட்டும்..!!!
நல்லா யோசிங்க V 1.4
துன்பம் தேடி வந்தாலென்ன,
துணிவு உன்னிடம் இருக்கையில்..
சங்கடம் தேடி வந்தாலென்ன,
சாதிக்கும் மனம் உன்னிடம் இருக்கையில்..
இரை எங்கு இருந்தாலென்ன,
இறக்கை உன்னிடம் இருக்கையில்..
இலக்கு எங்கு இருந்தாலென்ன,
இலட்சிய நோக்கம் உன்னிடம் இருக்கையில்..
முட்டுகட்டைகளை மூட்டைகட்டு,
முயற்சிகளால் தோல்விக்கு முடிவுகட்டு..
நல்லா யோசிங்க V 1.5
காற்றை மோதி
முயல்வதால்
பட்டம் பறக்கிறது..
சுமையை ஏந்தி
முயல்வதால்
சக்கரம் சுழல்கிறது..
மனமே முயற்சி செய்
தினமே பயிற்சி செய்
உலகம் உன்னை போற்றும்,
வரலாறு ஏட்டில் ஏற்றும்!!!!
நல்லா யோசிங்க V 1.6
அறிவை தொடுகின்ற
சுமைகள் இல்லாத
மதிப்பெண் வேண்டாத
தற்கொலைக்கு தூண்டாத
அகந்தை அழிக்கின்ற
வேலை கிடைக்கின்ற
மனிதம் வளர்க்கின்ற
இத்துடன்,
வாழ்க்கையை வாழ்ந்திட
?
?
?
தேடு உன்னுடன் இறுதிமூச்சு வரும் கல்வியை!!!
நல்லா யோசிங்க V 1.7
நல்ல அரசியல் உள்ள நாடாக,
நல்லவர்களை போற்றும் நாடாக,
சாதிகள் இல்லாத நாடாக,
சாதனை படைக்கும் நாடாக,
விவசாயம் செழிக்கும் நாடாக,
விஞ்ஞானம் வளர்ந்த நாடாக,
மாசு இல்லாத நாடாக,
மனிதம் போற்றும் நாடாக,
ஏழைகளே இல்லாத நாடாக,
ஏற்றம் கொழிக்கும் நாடாக,
அமைதி புயல் வீசும் நாடாக,
அன்பு போற்றும் நாடாக,
கனவு பலிக்கும் நாடாக,
கனா காணுங்கள்!!!
நல்லா யோசிங்க V 1.8
பல முறை தன் வலை அறுபட்டாலும்,
மீண்டும் மீண்டும் வலை பிண்ணி கொண்டே இருக்கும் சிலந்தி ..!!
அதுதான் விடாமுயற்சி.
மனிதா நீ மட்டும் ஏன்,
ஒரு முறை தோற்பதற்கு கூட,
வாழ்க்கையே முடிந்ததாக எண்ணுகிறாய்???
Spidermanனாய் விடாமல் முயல் மனிதா,
வெற்றி நிச்சயம்! !!
நல்லா யோசிங்க V 1.9
தோல்வியை வெறுத்து
வெற்றியை நேசித்தால்
உன் நிழலும்
உன்னை நெருங்காது..!!!
தோல்வியை ருசித்து
வெற்றியை புசித்தால்
உன் புகழ்
உலகம் பாடாமல் இருக்காது..!!!
நல்லா யோசிங்க V 2.0
விழுந்தாலும்
புரண்டாலும்
ஓடினாலும்
மீண்டும்
மீண்டும்
முயல்வேன்
என்கிறது கடல் அலை..
மனிதா. .....நீ???
நல்லா யோசிங்க V 2.1
(ஆத்திகர்களுக்கு மட்டும்)
சிவபெருமானின் புதல்வனே..
உமையாளின் மைந்தனே..
ஆறுமுகனின் தமையனே..
ஆணை முகத்தானே..
முக்திக்கு மூத்தவனே..
பக்திக்கு வித்திட்டவனே..
எழுத்துக்களின் முதல்வனே..
எலியின் நண்பனே..
கொழுகட்டை பிரியனே..
முழுமுதற் கடவுளே..
சித்தி வினாயகனே..
அனைவரையும் காத்து அருள்வாயாக..!!!!
( இருக்கிறாயோ இல்லையோ,
Thanks for giving one day holiday Lord Ganesha 😜😜😜😜😜)
நல்லா யோசிங்க V 2.2
கனிவா பார்த்தாலும்,
கரண்ட்டா தாக்குவா..
உயிர எடுத்தாலும்,
உயிராவும் இருப்பா..
கலாட்டா பண்ணீனாலும்
கலகலப்பா நடப்பா..
அதிகம் பேசலனாலும்,
அர்த்தமா பேசுவா..
அறியாதவளா இருந்தாலும்,
என்னை எனக்கே அறியவச்சுட்டா..
நட்பு தோழியே!!!!!
நல்லா யோசிங்க V 2.3
காலம் மாறும்,
களம் மாறும்..
பொறுமை கொள் தோழா!!!
ஆடினவன் அடங்குவான்
உன் ஆட்டம் தொடங்கும்..!
பொறுமை கொள் தோழா!!!
வேடமிட்டு காத்திறாதே,
வேடனாய் காத்திரு..
பொறுமை கொள் தோழா! !!
வேட்டையாடு விளையாடு
பொறுமையே வெற்றியின்
தாரக மந்திரம்! !!!
நல்லா யோசிங்க V 2.4
உலகில் உள்ள
உறவுகளை தோற்க்கடிக்கும்
உன்னத உறவு???
சாதி மதங்களை
சங்கடம் சம்பிரதாயங்களை
சாகடிக்கும் உறவு???
எளிமையாய் இருந்து
எல்லோரையும் அரவணைத்து
எல்லாமுமாகும் உறவு???
நட்பு! நட்பு!! நட்புதாங்க!!!
நல்லா யோசிங்க V 2.5
வலியவரிடத்தில்
தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே!!!
எளியவரிடத்தில்
தாழ்மை கொண்டு நடக்க மறவாதே!!!
நல்லா யோசிங்க V 2.6
தினமும் உன்னை எதிர்பார்கிறேன்,
வருகிறாய் செல்கிறாய்..
தினமும் உன்னை தழுவுகின்றேன்,
இருக்கிறாய் செல்கிறாய்..
தினமும் ரசித்து நாடுகின்றேன்,
வருகின்றாய் செல்கிறாய்..
இருந்தும்
ஏக்கம் குறையவில்லை
காதல் தீரவில்லை
எதிர்பார்ப்புக்கு அளவில்லை
என் ஆசை இரவே
இதோ வருகிறேன் உன் மடி தூங்க😘
நல்லா யோசிங்க V 2.7
அன்பை செலவு செய்து,
அனைத்து இதயங்களை வாங்கிக்கொள்..!!
சிரிப்பை செலவு செய்து,
சில ஆயுட்காலத்தை கூட்டிக்கொள்..!!
சிந்தையை செலவு செய்து,
சில கொள்கைகளை தீட்டிக்கொள்..!!
அறிவை செலவு செய்து,
அகிலத்தை இன்றே வெற்றிக்கொள்..!!
நல்லா யோசிங்க V 2.8
இருக்கும் வரை வீடு,
இல்லாமல் போனால் சுடுகாடு..!!
ருசிக்கும் வரை சாப்பாடு,
பசிச்சும் சாப்பிடாம போன நோக்காடு..!!
மதிக்கும் வரை மரியாதை,
மதியாதோர்க்கு காட்டிடு உன் பாதை..!!
சிந்திக்கும் வரை தான் மனிதர்கள்,
சிந்தனை அற்றுப்போனால் பிண்ங்கள்..!!
சிந்தி மனிதா சிந்தி!!
நல்லா யோசிங்க V 2.9
முக்கல்.. முனங்கல்..
விசும்பல்.. வினாக்கள்..
எதற்கு தோழர்களே???
ஒன்றும் குடிமுழுகி போகாத வாழ்க்கையை..
ஒன்று போனால் மற்றொன்று உள்ள வாழ்க்கையை..
வாழ்ந்து பார்க்க ஆசைப்படு!!
வசப்படும் வாழ்க்கை உன்னோடு!!
நல்லா யோசிங்க V 3.0
இன்பம் வரும் போதும்
துன்பம் வரும் போதும்
உறவை நினைக்கும் போதும்
உறவு நம்மை மறக்கும் போதும்
தோல்வியை தழுவும் போதும்
வெற்றிகள் குவியும் போதும்
சேரும் தருணத்தின் போதும்
பிரியும் தருணத்தின் போதும்
உடன் இருந்து
உடனே பிரியும்
ஒரே உறவு
"கண்ணீர்" மட்டுமே!!!
நல்லா யோசிங்க V 3.1
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை..
வாழ்க்கை இதுதானென்று
எவரும் சொன்னதில்லை..
இதோ நான்
கேட்டத சொல்றேன்..
கோபத்தை தடுத்து நிறுத்து தெரியும்
தவறுகளை எடுத்து திருத்து தெரியும்
துன்பத்தை விடுத்து மற தெரியும்
இன்பத்தை கொடுத்து பகிர் தெரியும்
புரியுதா???
நல்லா யோசிங்க V 3.3
இருக்கின்ற வரை அழுது
இல்லாத ஒருவரை தொழுது
வீணாக்காதே பல பொழுது
உள்ளத்தால் பார் பழுது
உன்னையே நீ உழுது
உணர்வாய் உன்னையே முழுது
விழித்துக் கொள்ளும் விழுது
விருட்சமாய் எழு ஒரு பொழுது
சரித்திரத்தில் உன்னை எழுது
நல்லா யோசிங்க V 3.2
எதற்கோ எரியும் தெருவிளக்கு
யாருக்கோ ஒளிரும் நிலா
பாம்புகள் தவளைகளுக்கு தூதுவிடும்
ஆந்தை விழித்து கொள்ளும்
நாய்கள் நிழலை பார்த்து ஓலமிடும்
எலிகள் இரைகளை தேடும்
கடிகாரமுள் சத்தம் மட்டும் கேட்கும்
ஆவிகள் பல உலாவிடும்
பாவங்கள் சில நடந்திடும்
கள்வனும் காதல் செய்வான்
மிட்நைட் மசாலா அரங்கேறும்
இமையோடு இமை சேரும்
கனவுகள் சிலது நடந்தேறும்
இருளே நீ வா வா
தூக்கத்தை நீ தா தா
நல்லா யோசிங்க V 3.4
மூடநம்பிக்கையில் மூழ்கிவிடாதே!!!
மூலையில் முடங்கிவிடாதே!!!
மூளையை தளர்த்திவிடாதே!!!
முரண்களை ஏற்றுவிடாதே!!!
மூடனை நம்பிவிடாதே!!!
மூர்கனை பேசவிடாதே!!!
முட்டாளை செய்யவிடாதே!!!
முடவனை கையேந்தவிடாதே!!!
முன்னோர்சொல் மீறிவிடாதே!!!
முயற்சியை கைவிடாதே!!!
நல்லா யோசிங்க V 3.5
பாரம்பரிய உணவு
பரிதாபமாய் போச்சு..
பாட்டி செஞ்ச பண்டங்கள்
வீட்டவிட்டு போச்சு..
நல்ல பழக்கங்கள்
நம்மைவிட்டு போச்சு..
நலம் தரும் வழக்கங்கள்
மண்ணவிட்டு போச்சு..
புது நோய்கள் வேண்டுமா
ஜங்க் புட் தேடி போ
அதுவும் சீக்கிரம் வேண்டுமா
பாஸ்ட் புட் தேடி போ
அவசரம்
எதிலும் அவசரம்
அவசரம்
உணவிலும் அவசரம்
அவசியம்
நல்உணவு அவசியம்
அவசியம்
அதை உணர்தல் அவசியம்
நல்லா சாப்பிடுங்க
நல்லதா சாப்பிடுங்க
நல்லபடியா தூங்குங்க
நல்லா யோசிங்க V 3.6
தினமும் நிலைக்கண்ணாடியில்
உன் முகத்தை அலங்கரிக்கும் மனிதா,
உன் உள்ளத்தையும் அலங்கரித்துக் கொள்..
நீயும் அழகாவாய்
வாழ்க்கையும் அழகாகும்!!!
நல்லா யோசிங்க V 3.7
நீ தொட்டுப் பார்
வானம் வசமாகும்..
நீ ரசித்துப் பார்
பூக்கள் சிரிக்கும்..
நீ புன்னகைத்துப் பார்
உறவு பலமாகும்..
நீ சிந்தித்துப் பார்
கனவு நனவாகும்..
நீ தோற்றுப் பார்
அனுபவம் பிறக்கும்..
நீ முயன்றுப் பார்
வெற்றி உனதாகும்..
நீ ஜெயித்துப் பார்
உலகமே திரும்பார்க்கும்..!!!
நல்லா யோசிங்க V 3.8
தன்னலதிற்காக பலர்
காலையும் மாலையும்
நடக்கிறார்கள்..
ஆனால் இரண்டு உயர்ந்த தலைவர்கள்
இந்தியாவின் உயர்ந்த இடத்தில்..
ஒருவர்..
உறுதியாய் நடந்தார்
உப்பிற்காக நடந்தார்
கதர் ஆடை நெய்தவர்
அகிம்சை வேண்டியவர்
நாட்டிற்காக நடந்தார்
நாட்டு சுதந்திரத்திற்காக நடந்தார்
"அண்ணல் காந்தி" !!!
இன்னொருவர்..
எளிமையாய் இருந்தவர்
ஏழைகளுக்காக உழைத்தவர்
வாடியர்களுக்கு உணவளித்தவர்
அணைகள் கட்டியவர்
கல்வி கண் திறந்தவர்
கருப்பு காந்தி
கதர்மட்டுமே உடுத்தியவர்
"கர்ம வீரர் காமராஜ்"
உங்களை நினைப்பதில்
பெருமிதம் கொள்கிறோம்
நல்லா யோசிங்க V 3.9.1
அன்பே..
நீ பார்த்தும் பார்காதது போல் இருந்தால்,
நான் தூண்டிலில் சிக்கிய மீனாவேன்..
நீ ஒருநாளைக்கு ஒரு நொடி பார்த்தாலும்,
நான் துள்ளி குதிக்கும் புள்ளி மானாவேன்..
நீ பார்த்து லேசா சிரித்தாலும்,
நான் பாலில் நழுவி விழும் தேனாவேன்..
நீ சிரிச்சு அழகா தலையசைச்சா,
நான் தூங்கா இரவெல்லாம் வீணானேன்..
நீ தலையாட்டி ஒரு வார்த்தை பேசினா,
நான் நிஜமெல்லாம் கனவென காணானேன்..
மொத்தத்தில்
நீ பார்ப்பதாலும் என்னிடம் பேசுவதாலும்,
நான் முழு
ஆளா(ணா)னேன்..
நல்லா யோசிங்க V 3.9.2
அன்பே
காதலெனும் தேர்வெழுதி
காத்துக் கொண்டிருக்கிறேன் பதிலுக்காக??..
நீ ம்ம்ம்னு சொன்னா
துள்ளி ஓடும் மானாவேன்..
இல்ல
நீ சரினு தலையாட்டினா
உன்னில் கரைந்து காணாவேன்..
இல்ல
நீ ஆம்னு சிரிச்சா
சொட்ட சொட்ட தித்திக்கும் தேனாவேன்..
இல்ல
நீ ஆம்னு கண் இமைத்தாலே
இனிக்கும் பழைய குழம்பில் மீனாவேன்..
இல்ல
நீ முடியாதுனு சொன்னா
வாழ தெரியாது முழுதும் வீணாவேன்
இல்ல
நீ முடியவே முடியாதுனு சொன்னா
என்னில் உன்னை மரித்து சொர்கத்தில்
இடம்பிடிப்போம் 😡💀
நல்லா யோசிங்க V 4.0 (முற்றும்)
யோசிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
யேசித்து வாழ்வதும் வாழ்க்கை தான்..
ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
தோற்று ஜெயிப்பதுவும் வாழ்க்கை தான்..
சரி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை,
சரியாய் நடந்து கொள்வதுவும் வாழ்க்கை தான்..
கொடுப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை,
விட்டுக் கொடுப்பதும் வாழ்க்கை தான்..
பொருளில்லா வாழ்க்கை இல்லை,
பொருளற்ற வாழ்க்கையும் இல்லை..
மனம் போல வாழு!!
மாசற்று வாழு!!
மானங்காத்து வாழு!!
மரியாதையுடன் வாழு!!
மனிதனாய் வாழு!!
No comments:
Post a Comment