படிங்ங்க Plssss.. v 0.1
என்னவள் அழகில் சிறந்தவள் இல்லை,
என் அவளிடம் சிறந்தது அழகு மட்டும் தான்...!
படிங்ங்க Plssss.. v 0.2
பாகிஸ்தானிலும் வாழ்ந்து விடலாம் போல,
பக்கத்து சகோதர மாநிலத்தில்..
மின்சாரம் விளைபொருள் இங்கிருந்து போகும்,
மிச்ச காவிரி தண்ணீர் கேட்டால்..
பிறந்தது குடகு கன்னடம் என்றாலும்,
பாய்ந்து வளர்வது தமிழகம் என்னிடம் தானே..
அறுபதில் ஆண்டவன் அணைகட்டி தோழமை பார்த்தான்
அன்மையில் ஆள்பவனோ அரசியல் ஆக்குறான்..
தமிழன் மனம் இளகியவன் தான்.. மானங்கெட்டவன் அல்ல..
இத்தனை நடந்தப் பின்னும் - தமிழா
இன்னுமா சும்மா உள்ளாய்!
எத்தனைக் காலந்தான் இன்னும் - நீ
அண்டிப் பிழைப் பாயோ!
படிங்ங்க Plssss.. v 0.3
கட்சத்தீவு நமதென்பார்
ஆனா அங்கு போகதான் இயலாது..
காவிரி நமதென்பார்
ஆனா கேட்டாலும் தண்ணீர் வராது..
பாலாறு நமதென்பார்
ஆனா காட்டும் பாசாங்கு தீராது..
முல்லை பெரியாறு நமதென்பார்
ஆனா முட்டிமோதினாலும் கிடைக்காது..
தமிழ்நாடும் நமதென்பார்
எங்கும் எதிலும் ஆள முடியாது..
படிங்ங்க Plssss.. v 0.4
கலங்கி நின்றால்
கண்ணில் விழும்
தூசி கூட துயரம் உனக்கு..
துணிந்து நின்றால்
உன்மேல் விழும்
தூண் கூட தூசி உனக்கு..!
படிங்ங்க Plssss.. v 0.5
அழகான இரவு
அவள் கூந்தல்...
அழகான நிலவு
அவள் முகம்...
அழகான வானவில்
அவள் புருவம்...
அழகான பீரங்கி
அவள் மூக்கு...
அழகான ஓவியம்
அவள் விழிகள்...
அழகான பூக்கள்
அவள் இதழ்கள்...
அழகான கவிதை
அவள் பெயர்...
அழகான இசை
அவள் சிரிப்பு...
அழகான அதிசயம்
அவள் மட்டுமே...
படிங்ங்க Plssss.. v 0.6
காலங்கள் பின்னோக்கி நகர்வதில்லை
காலத்தின் வேகமும் குறைவதில்லை
காலங்கள் உனக்காய் காத்திருப்பதில்லை
காலம் கடந்தால் மீண்டும் கிடைப்பதில்லை
காலம் யாருக்காகவும் மாறுவதில்லை
காலம் யாரையும் ஏமாற்றுவதில்லை
காலத்தின் உழைப்பு வீண்போவதில்லை
ஆதலால்
காற்றுள்ள போதே நீயும் தூற்றிக்கொள்....
படிங்ங்க Plssss.. v 0.7
இன்று பௌர்ணமியாம்,
ஆம் பௌர்ணமி தான்..!
கீழ் தரையில் நின்று
மேல் வானத்தை பார்த்தேன்
இரண்டு நிலா!
வானத்தில் நிலாமகள்!
மொட்டை மாடியில் என்னவள்!😍
படிங்ங்க Plssss.. v 0.8
நெற்றி
சிதறிய நிலா துண்டு..
கண்கள்
நீந்தும் கெளுத்தி மீன்..
கன்னங்கள்
வகுந்த மாங் கனி..
மூக்கு
இரட்டை குழல் துப்பாக்கி..
உதடுகள்
அரும்பிய பூவின் இதழ்..
காது
நறுக்கிய குடை மிளகாய்..
கழுத்து
வானிற்கும் பூமிக்குமான பாலம்..
சிகை
கருத்த நீர் வீழ்ச்சி..
இடை
வளைந்தோடும் நைல் நதி..
கால்கள்
வாழைத்தண்டின் மறு உருவம்..
மடி
சொர்க்கத்தின் உண்மை வழி..
தேகம்
சோழதேச சிற்பியின் சிலை..
எதுஎதுவாயினும்
அவளழகு போல ஏதும்
இவ்வுலகில் இல்லை..
படிங்ங்க Plssss.. v 0.9
இன்னமும்
மைசூர் சாண்டல் சோப்பு
போட்டு குளிக்குறோம்..
சாம்பாருக்கு பெங்களுர் தக்காளி
போட்டு கடையறோம்..
மைசூர் போண்டா வாங்கி
ஈவ்னிங்ல சாப்பிடுறோம்..
விலை அதிகம்னு மைசூர்பருப்பு
வாங்கி சமைக்கின்றோம்..
வீட்டு விஷேசங்கள்ல கிண்டி
மைசூர்பாக்க வைக்கிறோம்..
வீட்டு பொண்ணுகளுக்கு காவிரினு
பெயர் சூட்டுகின்றோம்..
பச்ச புள்ளங்கடா நாங்க
எங்கல ஏன்டா அடிக்குறிங்க..😫
படிங்ங்க Plssss.. v 1.1
மூளையென்று ஒன்று இல்லாத
எறும்பு கூடதன் தேவையை தானே
பூர்த்திச் செய்துக் கொள்கிறது..
ஆறு அறிவும் கைக் கால்களும் கொண்ட
மனிதனோ தன் தேவையை வேண்டி
நிற்கிறான் மனிதனிடமும் தெய்வத்திடமும்...
மூளைய வச்சி யோசிங்க😋
படிங்க Plssss.. v 1.1
ஒரு நொடி துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....
ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் !!!
படிங்க Plssss.. v 1.2
கவலைகளும் கஷ்டங்களும்
காணா போக புரட்சி செய்வோமா?
உள்ளம் மகிழும் வரை
உதடுகள் கிழியும் வரை
சிரித்து கொண்டேயிரு!!!!!
படிங்க Plssss.. v 1.3
என்னவளே....
Sunlightட்டும் கூசுதேனு தன் கண்களை மூட வைக்கும் உன் விழி!
HoneyBeeயே தேனை ருசித்து கொள்ள வைக்கும் உன் பேச்சு!
அணிலும் கடிக்க நினைக்க வைக்கும் உன் உதடு!
Kohinoor வைரமும் பொறாமைப்பட வைக்கும் உன் பற்கள்!
GRTயே நகையால் ஜொலித்து கொள்ள வைக்கும் உன் புன்னகை!
மூணும் வெட்கத்தால் தன் முகத்தை மூட வைக்கும் உன் முகம்!
Butterfly தொட்டு தொட்டு விளையாட வைக்கும் உன் மேணி!
டாஸ்மாக்கே போதையில் தள்ளாட வைக்கும் உன் நடை!
எங்கும் எதிலும் அழகாய் காண வைக்கும் உன் பெண்மை!!!
படிங்க Plssss.. v 1.4
கேள்விக்குரியவன் ஆனாலும்,
நீ கேலிக்குரியவனாகாதே….
தோல்வியே ஆனாலும்,
உன் வேள்வியை நிறுத்தாதே...
வீரன் நீ இல்லையெனினும்,
விவேகி என நிரூபித்துவிடு ….
படிங்க Plssss.. v 1.5
குடி குடியை கெடுக்கும்னு சொல்றான்
கடையை வீதிக்கு வீதி திறந்தும் வைக்குறான் ?
புகை உடல் நலத்திற்கு கேடுனு போடுறான்
லைசென்ஸ் கொடுத்து அதை விக்க வைக்கிறான்?
பெண்மை பெண்ணியம் கண்ணியம்னு பேசுவான்
கேப்பு கிடைச்சா நைஸ்சா மீட்டர்ர ஓட்டுவான் ?
விலை நிலம் விவசாயம் இயற்க்கைனு சொல்வான்
பணத்துக்காக நிலத்தை கூறு போட்டு வீடு காட்டுவான் ?
காதல் காதல் காதல்னு பயங்கரமா உளறுவான்
கிடைச்சா உரசுவான் இல்லனா ஆளையே வெட்டுவான் ?
மனசாட்சியே இல்லாம தொலைக்காட்சியை இலவசமா கொடுப்பான்
அவன் வீட்டு சேனல்கலை பார்க்க வச்சி ரேட்டிங்கை அதிகரிப்பான் ?
என்னதான் தல போற பிரச்னைனாலும் அசராமா இருப்பான்
சும்மா சும்மா கடிதங்கள் மட்டும் எழுதி கொண்டே இருப்பான் ?
மேரா தேஷ் மேரா இந்தியானு மேடைக்கு மேடை சொல்லுவான்
பிலைட்ல ஏறி உலகம் பூரா சுத்திக்கிட்டே இருப்பான் ?
சாதி இல்ல பேதம் இல்ல சமத்துவம்னு கூறுவான்
தன் பொண்ணுக்கு மட்டும் அதே ஜாதில தேடி தேடி கல்யாணம் பண்ணுவான் ?
மருமக இல்ல மகனு சொல்லி பெண்ணை நிச்சியம் செய்யுவான்
ஆனா கவுரவம்னு பேர்ல வரதட்சணை வாங்காம விடமாட்டான் ?
தாலி தங்கம் டிவி பேன் அது இதுனு இலவசமா தருவான்
ஆனா கல்வி மருத்துவம் இவை காசு கட்டாயம்னு சொல்லுவான் ?
சினிமா டிக்கெட் வாங்க அடிதடி கூவுல கூட நிற்பான்
ரேஷன் கடையில நிற்க சோம்பேறியா யோசிப்பான் ?
புதுசா ஏதாவது சொல்லணும்னு நினைச்சா தடைகள் போடுவான்
சொன்னதையே திரும்ப சொல்றவங்கள ஆகானு பாராட்டுவான் ?
மதிக்கத்தவங்க பின்னாடி மாடு மாதிரி ஓடுவான்
உயிரா நினைக்குறவங்களை மயிரா கூட மதிக்க மாட்டான் ?
உழைக்காம ஊற சுத்தி உடல் வளர்ப்பான்
தாலியையும் உயிரையும் கண் இமை நேரத்துல பறிப்பான் ?
நம்ம நாடு வளர பல திட்டங்கள் போடுவான்
ஆனா அந்நிய பொருட்ட்களை சந்தையில் இறங்குவான் ?
குவலிட்டினு என்னத்தையும் பேக் பன்நீ கொடுப்பதை வாங்குவான்
நம் நாட்டு வணிகத்தை வேறு கன்னூட்டத்துடன் பார்ப்பான் ?
குடியரசு இந்திய அரசியல் சட்டம்னு மார் தட்டுவான்
ஆனா உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அவ மதிப்பான ?
காமராஜர் ஆட்சி அமைப்போம்னு புது கட்சி தொடங்குவான்
தேர்தல் வந்து ஆட்சிக்கு வந்தா காமராஜர் காண போவார் ?
.........
காலங்கள் மாறினாலும்
இந்தியாவில்
அவலங்கள் மாறல ???
படிங்க Plssss.. v 1.6
தடைகளை தட்டி எறியுங்கள் .......
கவலைகளை களைந்து விடுங்கள்
நேரத்தை எட்டி பிடியுங்கள்
முயற்சிக்கு மூச்சு கொடுங்கள்...
வெற்றி உங்கள் வசம்.....
படிங்க Plssss.. v 1.7
முடியும் வரை முயற்சி செய்..
உன்னால்
முடியும் வரை அல்ல,
நீ நினைத்ததை முடிக்கும் வரை ...
படிங்க Plssss.. v 1.8
இன்னும் வகுடெடுத்து தலை சீவி
பெண்கள் கூந்தலில் பூ வைக்க மனம் ரசிக்கிறது...
இன்னும் பல இரவு பயணங்களில்
இளையராஜாவின் இசையில் மனம் கரைகின்றது...
இன்னும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து
கதை பேசி சிரித்து மகிழ மனம் ஏங்குகிறது...
இன்னும் வாசலில் புள்ளி வைத்து
கோலம் போட்டு காண்பிக்க மனம் நாடுகிறது...
இன்னும் அக்காளுடன் உட்கர்ந்து
பல்லாங்குழி விளையாட மனம் தவிக்கிறது...
இன்னும் அழும் போது அம்மா வந்து
ஆராரோ ஆரிரரோனு பாடிட மனம் ஆசைபடுகிறது...
இன்னும் வயல்வெளிகளில் விளையாடி
கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்க மனம் தேடுகிறது...
இன்னும் குடும்பமாய் அனைவரும் கூத்தடிக்க
கிடா வெட்டி விருந்து வைக்க மனம் நினைக்கிறது...
இன்னும் பாட்டிக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து
உட்க்கார்ந்து கதை சொல்ல கேட்டிட மனம் துடிக்கிறது...
இப்படி சொல்லிகிட்டே போகலாம் ஆனா
அடுக்கு மாடியில் நாலு சுவற்றுக்குள்ளே
அடைந்து மனம் உடைந்து நம்மை
தொலைத்து கொண்டிருக்கின்றோம் ....
ம்ம்ம்ம்
படிங்க Plssss... v 1.9
தோழா..
கிடைத்தது வெற்றி எனில்
தோற்றவனுக்கு ஆறுதல் கூறு !
கிடைத்தது தோல்வி எனில்
வென்றவனிடம் அறிவுரை கேளு!!
படிங்க Plssss... v 2.0
அன்று மும்மாரி மழை
இன்று ழூழ்கடிக்கும் மழை ...
அன்று விவசாய நிலங்கள்
இன்று விலைபோகும் நிலங்கள்...
அன்று குருகுல கல்வி
இன்று குரு கொலை கல்வி...
அன்று நதிகள் பாய்ந்தது
இன்று நதிகள் காய்ந்தது...
அன்று உடை அலங்காரம்
இன்று உடை அலங்கோலம்...
அன்று எழுந்தவுடன் விவசாயம்
இன்று எழவிடாத சாராயம்...
அன்று கூட்டுக் குடும்பம்
இன்று கூடா குடும்பம்...
அன்று இயற்கையை
நேசித்தோம்
இன்று செயற்க்கையாய்
நேசிக்கிறோம்...
அன்று மனம் பேசியது
இன்று மொபைல் பேசுகிறது...
அன்று வீட்டில்
சிட்டுக்குருவி கூடு
இன்று காட்டிலும்
இல்லை சிட்டுக்குருவி கூடு...
அன்று மனிதம் வளர்ந்தது
இன்று மனிதம் தேய்கிறது
படிங்க Plssss... v 2.1
தோழா..
ஒவ்வொரு நாளையும்
நாளையாக்கி விடாதே.!
இன்றே உனதாக்கு
நாளை உனதாகும்!
படிங்க Plssss... v 2.2
கடலளவு துயரம் வந்தாலும்
கட்டுமரம் எனும் நம்பிக்கையுடன்
விடாமுயற்சி எனும் துடுப்புமிருந்தால்
வாழ்வில் வெற்றி உனக்கே.
படிங்க Plssss... v 2.3
என்னவளே..
உன் கூந்தல் அழகு,
அதைவிட ஆடும் குஞ்சம் பேரழகு..!
உன் புருவங்கள் அழகு,
அதைவிட நடுவில் வைத்த பொட்டு பேரழகு..!
உன் கண்கள் அழகு,
அதைவிட கண் சிமிட்டல் பேரழகு..!
உன் கன்னங்கள் அழகு,
அதைவிட கன்னக்குழி பேரழகு..!
உன் மூக்கு அழகு,
அதைவிட நீ குத்திய மூக்குத்தி பேரழகு..!
உன் செவ்'வாய் அழகு,
அதைவிட இட்ட வாய்'மை(lipstick) பேரழகு..!
உன் முகமதி அழகு,
அதைவிட வெட்கத்தில் மிளிரும் முகம் பேரழகு..!
உன் மெல்லிடை அழகு,
அதைவிட இடை மறிக்கும் இடை பேரழகு..
உன் பாதங்கள் அழகு ,
அதைவிட நீ அமைக்கும் பாதை பேரழகு..!
உன் உருவம் அழகு,
அதைவிட நீ உறங்கும் பாவனை பேரழகு..!
உன் செயல்கள் அழகு,
அதைவிட உன் சிந்தனைகள் பேரழகு..!
படிங்க Plssss... v 2.4
ஸ்கேட்டிங் போகும் நாரைகள்!
சிக்னல் கொடுக்கும் தவளை!
ஓடி மறையும் எறும்புகள்!
கூடிக் குலாவிடும் மீன்கள்!
பறந்து திரிந்திடும் தும்பிகள்!
மேகத்தை கிழிக்கும் வானவில்!
மண்ணின் மீது மழைக்கு காதலோ!!!?
ஒரு குடையில் இரு நண்பர்கள்!
காகித கப்பல் விடும் குழந்தைகள்!
நனைந்த படியே ஓடும் இளசுகள்!
போர்வைக்குள் நுழையும் மனசுகள்!
மழை மீது மனிதனுக்கு காதலோ!!!?
படிங்க Plssss... v 2.5
மழையே...
நீ வரும்போது
என்னதான் ஓடி ஒளிந்தாலும்
ஒற்றை விரல் நீட்டியாவது
தொடத் தோன்றுகிறது (பயத்தோடு)
மனதிற்கு...
படிங்க Plssss... v 2.6
ஜெயித்து கொண்டே இரு..
நீ வளரும் வரை அல்ல..
உன்னை வெறுப்பவர்கள் வாழ்த்தும் வரை..
படிங்க Plssss... v 2.7
வாழ்க்கை அர்த்தமற்றது.!
ஆம் வாழ்க்கை
அர்த்தமற்றது.!
அர்த்தமற்ற மனிதர்களுடன் வாழும்
அனைவருக்கும் வாழ்க்கை அர்த்தமற்றது.!
படிங்க Plssss... v 2.8
கனவுகள்
ஏக்கங்களாய்,
ஏக்கங்கள்
ஏமாற்றங்களாய்,
ஏமாற்றங்கள்
காயங்களாய்,
காயங்கள்
வலிகளாய்,
வலிகள்
வடுக்களாய் ,
வடுக்கள்
நினைவுகளாய்,
நினைவுகள்
பொறுப்புகளாய்,
பொறுப்புகள்
சுமைகளாய்
பலரின் வாழ்க்கை !!!
படிங்க Plssss... v 2.9
Gmailலில் லாகின் செய்தேன்.
Spamமில் வந்தாள்
Inboxசில் நுழைந்தாள்
Facebookகில் தேடினேன்
Like கொடுத்தேன்
Comment போட்டேன்
Who's this னு கேட்டாள்
Whatsapp என்றேன்
Chat பண்ணினேன்
DP வைத்தேன்
Shareit ஆனது
Twitterல் பதிந்தேன்
Linkedin சேர்ந்தேன்
Flipkartல் பரிசளித்தேன்
Amazonல் வாங்கினேன்
இத்துணை செய்தும்
அவள்
Status மாற்றினாள்
DP மாற்றினாள்
என்னையும்..
நான்
Gmail லாகினில்
அவள் பெயரை
Passwordஆக மாற்றினேன்.
செல்ல பெயரை
வீட்டு நாய்க்கு சூட்டினேன்.
படிங்க Plssss... v 3.0
இருளின் கருமை
தெரியாதோர்,
வெளிச்சதின் வெண்மை
தெரியாதோர்,
வாழ்க்கையின் அர்த்தம்
புரியாதோர்.!
படிங்க Plssss... v 3.1
தொலைகாட்சி வந்தது
ஊமையாய் போனேன்..
இன்டர்நெட் விரிந்தது
நெட்போல்ட் கழன்றது..
இமெயில் வந்தது
உறவுகள் தூரமானது
Facebook ல் சேர்ந்தேன்
பிறர்முகம் மறந்தேன்..
மொபைல் கண்டேன்
உலகம் பறந்தேன்..
Watsapp ல் சென்றேன்
செவிடாய் போனேன்..
Twitter ல் பதிந்தேன்
பிரச்சனைக்கு காரணமானேன்..
Linkedin ல் பதிந்தேன்
தற்பெருமை பீற்றினேன்..
Flipkart ல் சேர்ந்தேன் முடமாய் கிடந்தேன்..
Skype ல் இணைந்தேன்
பேச்சை இழந்தேன்..
மொத்தத்தில்
Technologyல் நம்மை
நிலை நிறுத்த முயற்சித்து
மீண்டும் நம்மை தேடுகின்றோம்..
படிங்க Plssss... v 3.4
வலையில் சிக்கி சாகும்
மீன்களைப் போல
நம்பிக்கை இல்லாதமனிதன்
கவலையில்
சிக்கிசாகிறான் .
படிங்க Plssss... v 3.2
இடிக்கு பின் மழை !
இருளுக்கு பின் பகல் !
வலிக்கு பின் வெற்றி !
வலிகளை தாங்கி கொள்.
வழிகள் பிறக்கும்
வெற்றிகள் வந்து சேரும்.
வாழ்க்கை வசப்படும் !!
படிங்க Plssss... v 3.3
அன்றைய காதல்..
உண்மையின் உறைவிடம்!
உயிர்களும் போனது!!
இன்றைய காதல்..
தீக்குச்சியின் உரசல்கள்!
உரசியே(ஊர்சுற்றியே) தீர்ந்தது!!
படிங்க Plssss... v 3.4
தூக்கத்தை மட்டும்
கடன் வாங்காதே,
தோழா..
திருப்பிக் கொடுப்பதற்கு
உன்னிடம் நேரம் கிடைக்காது ..!
விழித்துக் கொள்!
படிங்க Plssss... v 3.5
ஊத்திக் கொடுக்கும் தமிழகம் !
சாத்திக் கொள்ளும் கன்னடம் !
பிரிந்து கிடக்கும் தெலுங்கானா!
திருப்பதி பிரளயத்தில் ஆந்திரம்!
பெரியாறில் சிறியார் கேரளம்!
புயலாய் தாக்கும் ஒடிசா!
மத்தியம் செய்யும் மத்தியபிரதேசம்!
ட்ராட் ராய்ட்டில் குஜராத்தி !
ராங்கு பண்ணும் ராஜஸ்தான்!
தீவிரவாதம் காட்டும் பஞ்சாபி!
பூமியை அதிரும் இமாச்சலபிரதேசம்!
அசராது அசரும் அஸ்ஸாம்!
அடங்கா நிற்கும் அருணாசல் பிரதேஷ் !
எல்லை இல்லா காஷ்மீர்!
படிங்க Plssss... v 3.6
பெண்ணே
நமக்குள்
ஆடலும்
பாடலும்
தேடலும்
ஊடலும்
கூடலும்
இன்பமே!
ஆனால்
தனிமையில்
என்னுள் வரும்
உன் நினைவுகள்
அதனினும் இன்பமே!!
படிங்க Plssss... v 3.7
கருப்பு பணத்தை காட்டுவோம்னு
காட்டாம விளையாட்டு காட்டுவது இன்றைய
அரசியல்..
பல கோடி ஊழலும் சேனலில் சாதாரணமாய்
செய்திகளாய் பட்டிமன்றங்களாய் இன்றைய
அரசியல்..
பணம் இருப்பவனுக்கோ வெளிநாட்டு சிகிச்சை,
ஏழைக்கோ சிகிச்சை பலனின்றி மரணம் இன்றைய
அரசியல்..
ஓட்டு போடுவதே பெரிய வேலையாக கருதுபவனுக்கு
காசும் குவாட்டர்ரும் பிரியாணியும் இன்றைய
அரசியல்..
கள்ள ஓட்டு, பண பட்டுவாடா,
இலவச பிச்சை, ஊத்தி கொடுப்பதும் கூட்டி கெடுப்பதும் இன்றைய அரசியல்..
பல சமூக விரோதிகள்
இன்று மக்களின் பிரதிநிதிகள்
பரம்பரைக்கே சொத்து சேர்ப்பது இன்றைய
அரசியல்..
கௌரவம் இதுதான் என்று
கௌரவ கொலைகளும்
சாதிக்காக மதத்திற்க்காக
ஆங்காங்கே வெட்டுக்குத்து இன்றைய அரசியல்..
பல்லாயிர வழங்குகள் நிலுவையில்
இருக்க வழக்குக்கு வழக்கு வாய்தாக்கு
வாய்தானு இழுத்தடிப்பது இன்றைய அரசியல்..
ஏழை மிக ஏழையாக மாற பணக்காரன்
கோடீஸ்வரனாக
பசியும் வறுமையும் ஒரு பக்கம்
சொகுசும் செழிப்பும் ஒரு பக்கம் இன்றைய அரசியல்..
அடுத்தவன் கழுத்தறுத்தல் செயின்
பறித்தல் பணம் திருடுதல் பொருள் எடுத்தல்
குலம் கெடுத்தல்
இன்றைய அரசியல்..
பக்கத்து வீட்டிலேயும் சண்ட
பக்கத்து மாநிலத்திலேயும் சண்ட
பக்கத்து நாட்டிலேயும் சண்ட
என்னாத்த சொல்ல
இன்றைய அரசியல்..
கோடி கோடியாய்
அன்பை கொட்டிக்கொடுத்து
வளர்த்த மகளை ..
லட்ச லட்சமாய்
செல்வம் கொட்டிக்கேட்பது
இன்றைய அரசியல்..
காடுகளை அழிக்க காசு கொடுக்கும் கயவன்
வீடுகள் கட்டி பணம் பார்க்கும் கயவன்
எதுவும் பார்க்காது பணம் மட்டுமே பார்க்கும்
தலைவர்கள் இன்றைய அரசியல்..
சாய தொழிற்சாலை மட்டுமல்ல
விவசாய தொழிலும் சாயம் போனது,
அனைத்திலும் இறக்குமதி
நம்மை தொழிலும் இறங்க வைத்தது
இன்றைய அரசியல்..
வயிற்றுக்கு திருடியவனுக்கு
தண்டனையாக புழல்-பிறர்
வயிற்றில் அடிப்பவனுக்கு
மரியாதையுடன் புகழ்
இன்றைய அரசியல்..
நீதியின் கண்களை கட்டி
உண்மையின் வாய் பொத்தி
அநீதிகளை அங்கீகரித்தபடி
பொய்யின் மொழி
தேசிய கீதமாக
இன்றைய அரசியல்..
வாழ்க ஜனநாயகம்!
(கல்லறைக்கு
அடியில்)
படிங்க Plssss... v 3.8
நிலா முகம்
கருவான கூந்தல்
மேகம் தேகம்
நட்சத்திரம் பூக்கள்
மின்னல் பற்கள்
சூரிய கண்கள்
மழை கண்ணீர்
இடி சிரிப்பு
வானவில் வர்ணம்
மொத்தத்தில் என்னவள்
வானின் மகளோ?!
படிங்க Plssss... v 3.9
தோழா..
மரணத்தையும் தூக்கம்
என்று நினைத்துவிடு,
மரணமும் உன்னிடம்
மரணிக்கும்!!
படிங்க Plssss... v 4.0
தோழா..
வழிகள் தேடு,
வாய்ப்புக்கள் சேரும்!
பயிற்சியை பாடமாக்கு,
பட்டங்கள் பரிசளிக்கும்!
தடைகளை தகர்த்தெறி,
தன்னம்பிக்கை தலைதூக்கும்!
முயற்சியை முதிர்ச்சியாக்கு,
முன்னேற்றம் முடிசூடும்!
விவேகத்தை விதையாக்கு,
வெற்றிகள் விழாக்காணும்!
💥🌸🌼🌷🌺🌻🌹💐
படிங்க Plssss... v 4.1
நான் என்ற அகந்தையும் !
எனக்கு தெரியுங்கிற இறுமாப்பும் !
நினைச்சேன் அவ்ளவுதான்கிற
ஆனவமும் !
கண்ணுமுண்ணு தெரியாத துணிச்சலும் !
போங்கடா நீங்களும்கிற அனாவசியமும் !
எடுத்தெரிந்து பேசுற மனசும் !
இருக்கிறவங்க வாழ்க்கைல
முன்னேறுதல் மிக அரிது !!!
படிங்க Plssss... v 4.2
அன்று..
நெற்றியில் சாந்துபொட்டு
இன்று..
நெற்றியில் ஸ்டிக்கர்பொட்டு
அன்று..
இறுக்கிகட்டிய இரட்டைசடை
இன்று..
அவிழ்து பறக்கும்கூந்தல்
அன்று..
மை பூசிய கண்கள்
இன்று..
வெறுமை போன்ற கண்கள்
அன்று..
மூக்குத்திய மூக்கு
இன்று..
மூஞ்சியில் ஏது மூக்கு
அன்று..
சின்ன சின்ன தோடு
இன்று..
வண்ண வண்ண தோடு
அன்று..
இயற்கை ஊதா உதடு
இன்று..
சாயம் போன உதடு
அன்று..
மஞ்சள் பூசிய முகம்
இன்று..
மேக்கப் போட்ட மூஞ்சி
அன்று..
கைகளில் கண்ணாடி வளையல்
இன்று..
விதவித பிளாஸ்டிக் வளையல்
அன்று..
பாரம்பரிய ஆடை
இன்று..
பாரம் இல்லா மேலாடை
அன்று..
கண்ணகி பரம்பரைனு கூறியவர்கள்
இன்று..
கற்புனா என்னானு வினா எழுப்புபவர்கள்
அன்று..
காட்டியவனுக்கு கழுத்தை நீட்டினாள்
இன்று..
கட்டுவதற்குள் ஆயிரம் கேள்வி கேட்கிறாள்
அன்று..
பெண்ணுக்கு எதற்கு படிப்பு
இன்று..
பெண்ணில்லா ஏது படிப்பு
அன்று..
அடுப்படியில் தான் வேலை
இன்று..
அடுக்குமாடி ஐ.டி.யில் வேலை
அன்று..
அடிமைப்பெண்
இன்று..
புதுமைப்பெண்
(காண
பாரதிதான் இல்லை)
படிங்க Plssss... v 4.3
அன்பு..
கொடுத்துக் கொண்டே
இருப்பவர்களுக்கு குறையாதது!
அன்பு..
காட்டா தவறியவர்களுக்கு
எல்லாமிருந்தும் குறை அது!!
படிங்க Plssss... v 4.4
இளமையில் தொலைத்து விடுகின்றோம்!
முதுமையில் தேடிக் கொண்டிருக்கின்றோம்!
வாழுங்கள் வாழ்க்கையை!!
படிங்க Plssss... v 4.5
நவீன திருக்குறள்
----------------------------------
பயிலாதார் முயலாதார் தோல்வி யுடையார்
பயில்வோர் முயல்வோர் வெற்றியாளர்.!
படிங்க Plssss... v 4.6
தேவைப்படாதது
தேவையில்லாத போது
கிடைக்குறதும்,
தேவைப்படுவது
தேவையான போது
கிடைக்காததும்,
தேவையில்லாத தேவைகளை
தோண்ற வைத்து
தேவைகள் அனைத்தும்
தேவையில்லாமல் செய்துவிடுகிறது...
ம்ம்ம் இப்ப
ரொம்ப தேவதான்😜
படிங்க Plssss... v 4.7
ஆண்களுக்கு பிடித்த
பெண்கள்..
1. அம்மா (உயிர் கொடுத்தவள்)
2. தங்கை (உயிர் பகிர்பவள்)
3. பாட்டி (உயிராய் பார்த்தவள்)
4. ஆசிரியை (உயிர் சொல்பவள்)
5. காதலி (உயிரே என்பவள்)
6. மாமியார் (உயிரை காத்தவள்)
7. மனைவி (உயிராய் வருபவள்)
8. மகள் (உயிராய் நிற்பவள்)
பெண்களுக்கு பிடித்த
ஆண்கள்..
1. அப்பா (எல்லை பார்காதவர்)
2. தாத்தா (எல்லை கடந்தவர்)
3. அண்ணன் (எல்லை போட்டவன்)
4. தம்பி (எல்லையை ஏறிட்டவன்)
5. தோழன் (எல்லையில் நின்றவன்)
6. கணவன் (எல்லை மீறியவன்)
7. மகன் (எல்லையே இல்லாதவன்)
படிங்க Plssss... v 4.8
பெற்றோர்
பொறுப்பேர்பதில்லை!
கவர்மெண்ட்
கண்டிப்பதில்லை!
ஆசிரியர்கள்
ஆணையிடுவதில்லை!
அரசியல்வாதிகள்
அணுகுவதில்லை!
தனிச்சட்டங்கள்
தண்டிப்பதில்லை!
நண்பர்கள்
நல்வழிப்படுத்துவதில்லை!
காவலாளர்கள்
கண்டுகொள்வதுதில்லை!
பொதுமக்கள்
பொருட்படுத்துவதில்லை!
சமூகமக்கள்
சாடுவதில்லை!
💥வாழ்க இன்றைய
ஜனநாயகம்💥
படிங்க Plssss... v 4.9
நவீன திருக்குறள்
----------------------------------
வரும் செயல்களில் வெற்றி பெற
நம்பி கை வை!
படிங்க Plssss... v 5.0
எப்போது
எங்கே
எதற்க்காக
நீ
வீற்றிருக்கிராயோ !.....
அப்போது
அங்கே
அதற்காகவே
உன்னை
அர்ப்பணிக்க
கற்றுக்கொள் !!.......
அக்கணமே
தோல்வி
உன்
முகவரியை
தொலைத்து விடும்.......
படிங்க Plssss... v 5.1
பிறர்மானம் வேண்டாம்,
பிறர்மனம் போதும்!
புண் நகை வேண்டாம்,
புன்னகை போதும்!
புத்தகபுழுவாக வேண்டாம்,
புதுமை அறிதல் போதும்!
காமம் வேண்டாம்,
காதலே போதும்!
சுயநலம் வேண்டாம்,
சுயமாக வாழ்தல் போதும்!
நடிப்பவர்கள் வேண்டாம்,
நண்பர்களே போதும்!
நான் என்று வாழ வேண்டாம்,
நாம் என்று வாழ்தல் போதும்!!!
படிங்க Plssss... v 5.2
தன்னம்பிக்கை எனும்
சிறகை விரி...
உயர உயரப் பறந்து பார்...
நீ ஊர்க்குருவியல்ல,
பருந்தென்பதைப்
புரிந்துகொள்வாய்...
படிங்க Plssss... v 5.3
கண்ட துன்பத்தை
நம்முள் உண்டு
கொண்ட இன்பத்தை
பிறருடன் பகிர்ந்துண்டு
அடைந்த தோல்வியை
எனது படியாக்கி
கிடைத்த வெற்றியை
பிறர்க்கு ஏணியாக்கு!
ஒவ்வொரு மனிதனின்
வெற்றியும் தோல்வியும்
அவன் கொண்ட மனதின்
அளவை பொறுத்தது ...
படிங்க Plssss... v 5.4
காதல் பாடல்
--------------------------
(பல்லவி)
எங்க போன நீ
என்னவிட்டு அடியே!
ஏங்க வச்சியே நீ
நெஞ்சதொட்டு கொடியே!
ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாடுற ஆடுற..
மறஞ்சி திரிஞ்சி ஜதிபோடுற பாடுற..
தேடி தேடித்தான் பார்க்குறேன் நானும்..
வாடி வந்துதான் சேரனும் நாமும்..
(சரணம்
1)
காலையில் எழுந்தால் கதிரவன் ஒளி நீ!
இரவில் பார்த்தால் நிலவின் மகள் நீ!
சோலையின் ஓரம் மலரின் முகம் நீ!
சாலையின் நடுவே ஒலியின் ஒலி நீ!
குளிரும் போது விழும் பனி நீ!
குடையின் உள்ளே பெய்யும் மழை நீ!
வாராயோ வந்து சேராயே!
தீர்ப்பாயே ஜென்மம் தீர்ப்பாயோ!
(பல்லவி)
(சரணம்
2)
வார்த்தை படித்தால் உதிக்கும் கவிதை நீ!
பாதையில் நடந்தால் சேரும் துணை நீ!
கவலைகள் கொண்டால் தீர்க்கும் மருந்து நீ!
ஏற்றம் நான் கண்டால் காரணம் ஒன்றே நீ!
நீ குழையும் போது நானே நீ!
உயிர் உருகும் போது உயிரே நீ!
வாராயோ வந்து சேராயே!
தீர்ப்பாயே ஜென்மம் தீர்ப்பாயோ!
(பல்லவி)
படிங்க Plssss... v 5.7
வாழ்க்கை எனும்
புத்தகத்தில்..
முதல் பக்கம் அழுகை தொடங்கி
தொடர்ந்து ஒவ்வொரு
பக்கமாய் திறக்கிறேன்..!
அதில் ஒரு பக்கம்
பிரிவு...
அடுத்த ஒரு பக்கம்
காதல்...
இன்னொரு பக்கம்
கனவு...
மற்றொரு பக்கம் கண்ணீர்...!
திடீரென ஒரு பக்கம்
சோகம்...!
சடாரென ஒரு பக்கம்
ஏக்கம்...!
இப்படி பல பக்கங்களில்
கிழிந்து கிடக்கின்றோம்.
கடைசி பக்கம்
மரணம் என்பதை மறந்து....!
மகிழ்ச்சி!!!
படிங்க Plssss.... v 5.6
கல்வி இங்கு வியாபாரம்...
அரசியல் இங்கு நாடகம்...
மருத்துவம் இங்கு உயிர்கொல்லி...
பணக்காரன் இங்கு கொள்ளையன்...
விளையாட்டு இங்கு சூதாட்டம்...
உரிமைகள் இங்கு போராட்டம்...
சட்டம் இங்கு இருட்டறை...
விளைநிலம் இங்கு விலைநிலம்...
மக்கள் இங்கு குடிமக்கள்...
பட்டதாரிக்கோ இங்கு வாழ்க்கை...
வாழ்க ஜனநாயகம்?
படிங்க Plssss... v 5.5
சூரியனில் முழி
தாமரையில் குளி
சந்தனம் பூசு
ஜவ்வாது வீசு
தன்னம்பிக்கையை எடுத்து
நம்பிக்கையாய் உடுத்து
துணிவின் துணையோடு
கல்வியின் கணைகொண்டு
சக்தி படைகொண்டு
அன்ன நடைபோடு
உலகம் எடைபோடு
நாளும் கையோடு
நாளை உன்னோடு
வெற்றி என்றும் நம்மோடு
ஜெய்ஹிந் !!!
படிங்க Plssss... v 5.8
அன்பே!!!
உன் நினைவுகளே
என் உறக்கம்...
கலைத்து விடுமென
உறங்க மறுக்கிறது
எனது கண்கள்..!
படிங்க Plssss.... v 5.9(முற்றும்)
சிலரிடம் பேச முடிவதில்லை..
சிலரிடம் பேசவே முடியாது..
சிலரிடம் பேச்சே கிடையாது..
சிலரிடம் பேசியும் கிடைக்காது..
சிலரிடம் பேசி தீராது..
சிலரிடம் பேசியே தீர்ப்பாங்க..
சிலரிடம் பேசப் பிடிப்பதில்லை..
சிலரிடம் பேசமட்டுமே பிடிக்கிறது..
சிலரிடம் பேசினால்தான் பிடிக்கிறது..
சிலரிடம் பேசிப் பயனில்லை
சிலரிடம் பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.!
(சுற்றமும்
சூழலும்
கம்முனு எழுதிட்டு போயிடலாம்)🤔
காலை வணக்கம் 😜😎
No comments:
Post a Comment