Wednesday, October 11, 2017

MANASULA PATTATHU KAVITHAI VERSIONS

மனசுல பட்டது V 0.1

கனவு வாங்கலையோ கனவு..

ஆடம்பர கனவு
ஆயிரம் ரூபாய்..
ஆவிகள் கனவு
ஐநூறு ரூபாய்..
வாலிப கனவு
இரண்டு நூறு ரூபாய்..
வயோதிக கனவு
ஒன்று ஐம்பது ரூபாய்..
சோதனை கனவு
ஐந்து பத்து ரூபாய்..
சோக கனவு
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்..
கலவி கனவு
வயதிற்கேற்ப இலவசம்..
காதல் கனவு
வரிசையில் நிற்கவும்..
படிப்பு கனவு
நாட் அட்டால்..
வேலை கனவு
ஸ்டாக் இல்லை..
சாவு கனவு
நோ கேரண்டீ..

கனவு வாங்கலையோ கனவு..!!!


மனசுல பட்டது V 0.2

தேங்காய் உடைவதால்
சுவையான இளநீர் கிடைக்கும்..
தீக்குச்சி உரசுவதால்
நல்ல ஒளி பிறக்கும்..
விதைகள் புதைவதால்
பல மரங்கள் துளிர்க்கும்..
எச்சங்கள் விழுவதால்
மணற் குணமாறா நிற்க்கும்..
பாறைகள் இடுக்கிலும்
வேரூன்றி செடிகள் முளைக்கும்..
அது போல
சிறு அவமானங்கள்,
பெரு தோல்விகள்,
நம்மை வெற்றி பெறச் செய்யவே!!!


மனசுல பட்டது V 0.3

காலூன்றி நடக்கும் வேளைதனில்
நன்றாக உழைத்துக் கொள்..
இல்லாமல் போனால்,
கோலூன்றி நடக்கும் வேளைதனில்,
நாறிவிடும் உனது பிழைப்பு..!!!


மனசுல பட்டது V 0.4

எவ்வகை துன்பங்களையும் போக்க..

1) உலகம் உனக்கு தரும் மருந்து  "காலம்"..
2) உன்னால் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து "மௌனம்"..


மனசுல பட்டது V 0.5

உங்களுக்கு யார் மாதிரி குட் நைட் சொல்லலாம் ம்ம்ம்ம்...

ரஜினி - கண்ணா பண்ணிங்கதான் இப்டி தூங்கும் குட்நைட்.

கமல் - இமைகளின் அபிமானம் தூக்கம்
இதழ்களின் அபிமானம் நான். குட்நைட்.

சத்தியராஜ் - என்னமா கண்ணு தூங்கலையா? போ குட்நைட்.

பிரபு - என் இரவு என் தூக்கம் தூங்கு தூங்கு  குட்நைட்.

டி அர் - எதுக்குடா தேவயில்லா ஏக்கம்,
எல்லாம் போயிடும் போடுடா தூக்கம்.
டண்டணக்கா குட்நைட்.

விஜய் - பாசத்துக்கு முன்னாடி அரட்டை, பகைக்கு முன்னாடி குறட்டை.. அண்ணா குட்நைட்டுங்கண்ணா.

அஜீத் - தூங்க போறேன் இது முடிவல்ல ஆரம்பம்
என்ன நான் சொல்றது. குட்நைட்.

தனுஷ் - செஞ்சுறுவேன்
குட்நைட்.

சிம்பு - தூங்க போலாமா இல்ல வேணாமா?
குட்நைட்.

சந்தானம் - புஜ்ஜீகுட்டி ஜங்கிரி
பூந்தி அட குட்நைட்.

பிரகாஷ்ராஜ் - ஹாய் செல்லம் அதெல்லாம் நீ சொல்ல கூடாது,
நான்தான் சொல்வேன் குட்நைட்.

சசிகுமார் - டேய் எல்லாரும் மூடிகிட்டு படுங்கடா நொன்னங்களா.
(போதுமா😜😜😜)


மனசுல பட்டது V 0.6

என் மேல..

0% வெறுப்பு கொண்ட
10% கோபம் கொண்ட
20% விளையாட்டு கொண்ட
30% அதிகாரம் கொண்ட
40% பிரியம் கொண்ட
50% உரிமை கொண்ட
60% ஆசை கொண்ட
70% பாசம் கொண்ட
80% காதல் கொண்ட
90% அன்பு கொண்ட
100% நட்பு கொண்ட

தோழர்களே


மனசுல பட்டது V 0.7

மௌனம் மௌனிக்கவில்லை..
வார்த்தை வற்றவில்லை..
பொழுது போதவில்லை..
சிந்தனை சிதறவில்லை..
விடிந்தும் விடியவில்லை..

காரணம்

அன்பே கருத்தில் எப்பொழும் நீ....!!!!!


மனசுல பட்டது V 0.8

தோழியா? காதலியா?

தோழி துன்பத்தில் உதவுவாள்,
காதலி இன்பத்தில் உதவுவாள்..

தோழி சிக்கனம் கற்றுக்கொடுப்பாள்,
காதலி செலவு வைப்பாள்..

முக்கியமாக

தோழி உன்னை புரிந்து கொள்வாள்,
காதலி புரிந்து கொள்ளாமல் சண்டையிடுவாள்..

தோழியா? காதலியா?


மனசுல பட்டது V 0.9

தோல்விகளை விதைப்பதாய் நினைத்தால்,
தன்னம்பிக்கையை உரமாய் உட்கொண்டால்..

கொடியாய் படரலாம்..
செடியாய் வளரலாம்..
மரமாய் உயரலாம்..
மாபெரும் புகழ் அடையலாம்..


மனசுல பட்டது V 1.0

காற்றின் வேகம்
அலையின் சீற்றம்
இயற்கையின் எழில்
இசையின் இனிமை
வரிகளின் வலிமை
மலரின் மென்மை
விழிகளின் இமைகள்
எளிமையின் எடுத்துக்காட்டு
ஆன்மாவின் தூய்மை
அன்பின் அடக்கம்
காதலின் தொடக்கம்
அழகின் அம்சம்
கவிதையின் கற்பனை
உலகின் உருவம்

வேற யாருங்க
"பெண்கள்"தான்

பெண்ணியம் போற்றுவோம்!!!
பெண்மை மதிப்போம்!!!


 மனசுல பட்டது V 1.1
வாடியது போதும் தோழா
வருவது வரட்டும் இனிமேலா

தன்னம்பிக்கை இருக்குது கூர்வாளா
தாழ்வுணர்ச்சியை கூர்போடு தூள் தூளா

உன் பின்னே பேசுவோர் நூல் நூலா
உன்னால் வரட்டும் புது ரூலா

நில் அனைவரில் முதல் ஆளா
நித்தமும் வாழு வாழ்க்கையை கூலா


மனசுல பட்டது V 1.2

வரும் வம்புசண்டை அழியும்
சாதி மதபேதம் ஒழியும்
கடவுள்கள் யாவும் மறையும்
காதல் தற்கொலைகள் குறையும்
தனிக்குடித்தனம் கூட்டுக்குடித்தனமாய் மாறும்
நட்பு எங்கும் செழிக்கும்

என்று தெரியுமா???

குரங்கிலிருந்து வந்த மனிதர்கள்
மீண்டும் குரங்கானால்..

குரங்காவோமா 😁😜😜😜


மனசுல பட்டது V 1.3

மேகம், மழை,
இடி, மின்னல்,
சூரியன், சந்திரன்,
நிலா, நட்சத்திரம்,
வானவில், வண்ணம்
எதுவும் நிரந்தரமல்ல..
வானம் மட்டும் தான் நிரந்தரம்!!!

விதை, விருட்சம்,
செடி, செடிகொடி,
இலை, தலை,
கிளை, பூ,
காய், கனி
எதுவும் நிரந்தரமல்ல..
பூமி மட்டும் தான் நிரந்தரம்!!!

இதுபோல்..

நீ, நான்,
பாசம், பந்தம்,
பேர், புகழ்,
வரவு, செலவு,
ஆட்டம், கொண்டாட்டம்
எதுவும் நிரந்தரமல்ல..
நீ காட்டும் "அன்பு" மட்டுமே
நிரந்தரம்!!! நிரந்தரம்!!!


மனசுல பட்டது V 1.4

துன்பம் வரும் போது துவளாதே!!
இன்பம் சூழும் போது துள்ளாதே!!
தோல்வி பயத்தில் திளையாதே!!
வெற்றி மமதை கொள்ளாதே!!

இவைகளை உன் புத்தியில் வை!!!
வாழ்க்கையில் நீ ஜெயிப்பாய்!!!



மனசுல பட்டது V 1.5

இருளை போக்கி
வெளிச்சம் தர
ஒரு தீக்குச்சி இறந்துதான் ஆக வேண்டும்! !!!

அதுபோல்

உன் வாழ்க்கையில்
சில வெற்றிகளை பெற
பல தோல்விகளை சந்தித்தே ஆக வேண்டும்! !!!

வீறு கொள் தோழா!!
வீழ்ச்சி விழட்டும்!!


மனசுல பட்டது V 1.6

அமைதி கொள்!!

கூர்ந்து கேள்!!

பணிந்து பயணி!!

தினமும் தேடு!!

கருணை செய்!!

பகுத்தறிவு பழகு!!

பொறிகள் அறி!!

உலகத்தில் நீ
நிச்சயம் திகழ்வாய்!!!


மனசுல பட்டது V 1.7

சங்கடம் என்பது பின்னோக்குவது..
சரித்திரம் என்பது முன்னேறுவது..!!

சவால்களை சந்தோஷமாய் எதிர்நோக்கு,
கவலைகளை வாழ்க்கையில் இருந்துபோக்கு..!!!



மனசுல பட்டது V 1.8

உன்னில் மட்டுமே உன்னை தொலைத்திடு..
உண்மை அன்பிற்க்கு என்றும் கரைந்திடு..

ஆழ்மனதை கற்பனை களைந்து நிர்வாணமாக்கிடு..
அறமே அழகு அதில் சேர்த்திடு..

செயற்கை சிறகுகளை இன்றே உடைத்திடு..
செயலே தேவை நன்றாய் செய்திடு..

ஒருமுறைதான் மரணம் அச்சத்தை கொன்றிடு..
ஒவ்வெருநொடியும் வாழ்க்கையை அழகாய் வாழ்ந்திடு..!!!


மனசுல பட்டது 1.9

துயரம்நேரின்
துவளாமல்
துணிவே
துணையென
துக்கம்
துடைத்தெறிந்தால்,
துன்பமும்
தூரம் ஓடும்
துள்ளலின்பம்
தூது வரும்
துடிக்கும் கரங்கள்
தூங்கா உழைத்தால்,
தூவானமும் மலர்
தூவும் தோழா
துரை நீயென..!!!


மனசுல பட்டது V 2.0 (முற்றும்)

சத்தங்கள் இல்லா அமைதி வேண்டும்

சண்டை இல்லா சமுதாயம் வேண்டும்

எதிர்பார்ப்புகள் இல்லா சந்திப்புகள் வேண்டும்

எதிரிகள் இல்லா எதிர்ப்புகள் வேண்டும்

தேடல்கள் இல்லா தேர்வுகள் வேண்டும்

தோல்விகள் இல்லா வெற்றிகள் வேண்டும்

சுயநலவாதிகள் இல்லா இந்தியா வேண்டும்

சுமைகள் இல்லா சுதந்திரம் வேண்டும்

இவை நிறைவேறும் கனவுகள் வேண்டும்..!!!

வாங்க கனவு காண போகலாம்..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...