Monday, October 16, 2017

எனது சிந்தனை Kavithai Versions

சிந்தனைத்துளி V 1.0

மனிதனுள் இருப்பதை
மனதின் உள்ளேயே
மறைத்து வைத்தால்
மடிந்து போகும்
மனித உறவுகள்!!!

மனம் திறப்போம்
உறவு வளர்ப்போம்

Sinthanai thuli V 1.1

Makkalai pazhikolla
Mathamthanai kandukondu
Manithan uruvathil thiribavargal
Manithargal alla "MAAKKAL" 👹

 சிந்தனைத்துளி V 1.3

தன் உணர்வை முழுவதுமாய் கொடுப்பது தான் அன்னையின் அன்பு!!!

தன் உழைப்பை முழுவதுமாய் கொடுப்பது தான் தந்தையின் அன்பு!!!

தன் உயிரை முழுவதுமாய் கொடுப்பது தான் நண்பர்களின் அன்பு!!!

தன் உள்ளத்தை முழுவதுமாய் கொடுப்பது தான் காதலின் அன்பு!!!

தன் உறவை முழுவதுமாய் கொடுப்பது தான் மனைவியின் அன்பு!!!

தன் உரிமையை முழுவதுமாய் கொடுப்பது தான் பிள்ளையின் அன்பு!!!

அன்பு அன்பு அன்பு!!!
அனைத்த பருவத்திலும் அன்பு!!!
அழியாமல் இருப்பதும் அன்பு!!!
அன்புடன் இருப்போம் காப்போம்!!!

Enathu Sinthanai V 1.3

Mudiyathu endra vaarthaiyai mudakkidu,
Mudiyum endra vaarthaiyodu nadaipodu!!!

Ulagam un pin nadaipodum👍...

எனது சிந்தனை V 1.4

பணம் இருக்குறவன்
சொத்துக்காக அலையுறான்,
பணம் இல்லாதவன்
சோத்துக்காக திரியுறான்...

பணம் இருக்குறவன்
வயித்தகுறைக்க நடக்குறான்,
பணம் இல்லாதவன்
வயித்து பொழப்புக்காக நடிக்குறான்...

பணம் இருக்குறவன்
சாப்பாடு இருந்தும் ஓட்டல்ல சாப்பிடுறான்,
பணம் இல்லாதவன்
சாப்பாட்டுக்காக ஓட்டல்ல வேலை செய்யுறான்...

பணம் இருக்குறவன்
ஏழையா நடந்துக்கிறான்,
பணம் இல்லாதவன்
பணக்காரனா நடிக்குறான்...

பணம் இருக்குறவன்
நிம்மதியை தேடுறான்,
பணம் இல்லாதவன்
நிம்மதியா தூங்குறான்...

பணம் இருக்குறவன் கிட்ட
மனம் இல்ல,
மனம் இருக்குறவன் கிட்ட
பணம் இல்ல...

என்ன உலகம்டா 😡 ???

எனது சிந்தனை V 1.5

நாளைய சரித்திரம் நீ..
நாளைய உலகம் நீ...

அவமானம்
படுதோல்வி
வியர்வை
வேதனை

இவைகளை உளியாய் கொண்டு உன்னை செதுக்கிக்கொள்..

உலகை ஆண்டு
சரித்திரம் படைப்பாய்!!!

எனது சிந்தனை V 1.6

பயணத்தில் பழகி பணத்தில் புழங்கி
பாழும் கிணற்றில் தள்ளுவது???

பாசம் எனும் வேஷம் எனும்
பள்ளத்தில் தள்ளுவது???

சண்டை போட்டு சடங்கு இட்டு
சங்கடத்தில் தள்ளுவது???

சாதி எனும் பேதம் எனும்
சாக்கடையில் தள்ளுவது???

என்ன யோசனை😉

எல்லாம் அந்த வீணாபோன காதல்தாங்க😉😜

நட்பே மேலுங்க😁

எனது சிந்தனை V 1.7

மறந்திடு கவலைகளில் இருந்து..
மாறிடு ஏக்கத்தில் இருந்து..
விழித்திடு தூக்கத்தில் இருந்து..
முயன்றிடு தோல்வியில் இருந்து..

எனது சிந்தனை V 1.8

நீ பிறக்கும் போது உன்னுடன் எதை கொண்டு வருகிறாயோ இல்லையோ,
நீ இறக்கும் போது உன்னை சுமக்க நாலு பேர் நட்பும் சவப்பெட்டியும் கண்டிப்பாக சம்பாதித்துக்கொள்!!!

எனது சிந்தனை 1.9
நிறைவேறா ஆசைகளும்
நிறைவேற்றும் சொர்க்கம் பூமி

" கனவு "😲

Sweet DrEaMs

எனது சிந்தனை 2.0

கரை மீற முடியாதுனு தெரிந்தும்
நுரை பொங்க முட்டுது கடல் அலை...

அதன் முயற்சி ஒருநாள் சுனாமியாய் வெற்றி பெறும்.

அது போல தான் உன் விடாமுயற்சியும் ஒருநாள் வெற்றியை அடையும்!!!!

எனது சிந்தனை v 2.1

ஆண்களின் மறுபக்கம்..
அரக்கர்களின் ஆதிக்கம்!!!

பெண்ணை கண்ணேனு கொஞ்சுவான்,
கண் முழி பிதுங்க வாய்க்கு வந்த படி திட்டுவான்..

பெண்ணை நிலவேனு வர்ணிப்பான்,
ஓடாய் தேய வேலை செய்ய விடுவான்..

பெண்ணை மணியேனு பேசுவான்,
மணிக்கு மணி ஏதாவது  ஏசுவான்..

பெண்ணை நீ தான்  முகவரினு சொல்லுவான்,
குடும்ப சண்டைல டவ்ரி என்ன செஞ்சாங்கனு கேப்பான்..

பெண்ணை தேவதைனு காண்பான்,
கிடைக்கும் நேரத்தில் வாட்டி வதைப்பான்..

பெண்ணை எஜமானினு சொல்லி  வைப்பான்,
அந்த வேலை இந்த வேலைனு நீ பார்த்துக்கோனு சொல்லுவான்..

ஆண்களின் மறுபக்கம்..
அரக்கர்களின் ஆதிக்கம்!!!
😉😉😉
 எனது சிந்தனை v 2.2

ஆலயம் சென்று கற்களுக்கு
அபிஷேகம் செய்வதை விட

ஏழைகளுக்கு முடிந்தவரை
ஏன்னென்று கேட்காமல் உணவளி!!!

உனக்குள் கடவுள் தெரிவார்!!!


எனது சிந்தனை v 2.3

நீ செல்லும் வெற்றி பயணத்தில்

பயம்
தயக்கம்

இவ்விரண்டும் தடைகளாக வரலாம்..

தகற்தெறி

வெற்றி உன்னை தேடி வரும்..👍✌

எனது சிந்தனை v 2.4

ரூபாயின் மதிப்ப
டாலராய் உயர்த்த
அமெரிக்க மாப்பிள்ளையை கட்டுறது
பெண்ணின் யுக்தி...😉😜

ஆயிரத்தை லட்சங்களாக்க
ஆண்மையை அடகு
வைத்து டவுரி கேட்கிறது ஆணின் புத்தி...😉😜

எனது சிந்தனை v 2.5
தோல்வி வந்தால் விழுவது நீ, வெற்றி அல்ல!!!
தோழா எழுந்து ஓடு வெற்றியை நோக்கி!!!

 எனது சிந்தனை v 2.6

அன்று..
இலட்சியங்களை அடைய
பல குருக்களும்
சில குறிக்கோள்களும்
போதுமானாத இருந்தது!!!!

இன்று..
லட்சியங்களை அடைய
பல இலட்சங்களும்
சில லக்குகளும்
தேவையா இருக்கு!!!!

ம்ம்ம்ம்😉

எனது சிந்தனை v 2.7

பறவையை கண்டு பாராசூட் கண்டான்..
மின்மினியை கண்டு மின்விளக்கை கண்டான்..
எதிரொலி கண்டு எல் சி டி கண்டான்..

....

இப்படி பரிணாம வளர்ச்சி ஒருபுறம் இருக்க

பேப்பரை கண்டு ஏன் பணத்தை கண்டான்???
கற்களை கண்டு ஏன் கடவுளை கண்டான்???

😕😇😴

எனது சிந்தனை v 2.8

ஒருவர் வீட்டின் சுத்தம்
அவர்கள் கழிப்பறை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தது

அதுபோல்..

ஒரு மனிதனின் குணம் அவன் மனத் தூய்மையை பொறுத்தே அமையும்..

(வீட்டு டாய்லெட்டில் யார் யாரோ போனா என்னாகும்,
அதுபோல..
மனதில் எதை எதையோ அடைத்து வைத்தால் அதுவும் பப்ளிக் டாய்லெட்டா மாறிடும்..)

எனது சிந்தனை V 2.9

வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது,
விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்!!!

எனது சிந்தனை V 3.0
இன்பம் துன்பம்
சிரிப்பு அழுகல்
சினம் பாசம்
கருணை வெறுப்பு
அமைதி சங்கடம்
காதல் காமம்
ஏமாற்றம் அதிர்ஷ்டம்

அனைத்திலும்

உடன் இருந்து
உணர்வுகளுக்கு
உயிர் இல்லையெனினும்
உயிர் கொடுக்கும்
உண்மை நண்பன்

தலையணை😘

டீயர் தூங்கலாமா

எனது சிந்தனை v 3.1

உன் மனதை என்றும்  பூந்தொட்டியாய் வைத்துக்கொள்,

உன் மனதில் விழும் நல்லவை கெட்டவை யாவும் உரமாகும்...

எனது சிந்தனை v 3.2

பெறுவது ஒரு சுகம்,
காத்திருந்து பெறுவது அதை விட சுகம்! !!

அடைவது ஒரு சுகம்,
விட்டுக்கொடுத்து அன்பை அடைவது  அதை விட சுகம்! !!

கனவு ஒரு சுகம்,
தூக்கத்தில் கனவு அதை விட சுகம்! !!

ஸ்வீட் ட்ரிம்ஸ்😍

எனது சிந்தனை v 3.3
வாய்ப்புகளை தவறவிட்டால்
முன்னேற்றம் தடைபடும்!!!
வார்த்தைகளை சிதறவிட்டால்
பின்னேற்றம் ஏற்ப்படும்..

வரும் வாய்ப்புகளும் வார்த்தைகளும் ரெம்ப முக்கியம்.

எனது சிந்தனை v 3.4

இதயத்திற்கு நன்றி சொல்லும் நேரம்,
இமைகளை  சேரவிடாமல் துடித்ததற்காக..

விழிகளுக்கு நன்றி செலுத்தும் நேரம்,
விழி மூடி உறங்க செய்ய போவதற்காக..

 எனது சிந்தனை v 3.5

புன்னகை இருந்தா போதும்
காதல் மலர..

ஆனா என்ன ஆனாலும்  ..

பொன்நகை இருந்தே ஆகனும்
வாழ்க்கை உயர..

(இன்றைய நிலைமை பொன்நகை இருந்தால்தான் புன்னகையே வருது😉)

எனது சிந்தனை V 3.6

தோல்வி வருமெனில்
தோள் மீது தன்னம்பிக்கை வைத்து
தோகை விரித்து தாண்டவம் ஆடு
தோல்வி பயந்து ஓடும்..
தேடி வெற்றி உன்னிடம் வரும்👍

 எனது சிந்தனை V 3.7

வாயில் வளைந்த புன்னகை 😃 வந்தால்,
வாழ்க்கையில் உள்ள வளைவுகள் போகும்👍

எனது சிந்தனை v 3.8

என்னதான் தண்ணீர் தண்ணீர்னு தவிச்சாலும்
கடல்நீர் உன்னை வேடிக்கை தான் பார்க்கும்,
நீ அதை பருக முடியாது..

அதுபோல

என்னதான் பிரச்சனை பிரச்சனைனு தவிச்சாலும்
சமுதாயம் உன்னை வேடிக்கை தான் பார்க்கும்,
நீ மனசு வைக்கலனா முடியாது..

சிந்தி செய்

எனது சிந்தனை v 3.9

தனது இறப்பை கூட கவலைப்படாமல்
நமது பிறப்பை தருபவள்..

தனது உடல் மெலிவை கூட கவனிக்காமல்
நமது உடல் வளர்ச்சியை கவனிப்பவள்..

தனது வருத்தத்தை கூட பொருட்படுத்தாமல்
நமது விருப்பத்தை நிறைவேற்றுபவள்..

தனது ஆசைகளை கூட நிறுத்தி
நமது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்பவள்..

தனது உறவுகளை கூட மறந்து
நமது உணர்வுகளை மதிப்பவள்..

அது வேற யாரும் இல்லங்க
நம்மை ஈன்ற "அம்மா"ங்க!!!!
கடவுள் இல்லனு சொல்றவனும் கும்பிடும் ஒரே கடவுளுங்க!!!!


எனது சிந்தனை v 4.0

நிலவின் தூக்கம் அமாவாசை

பிரிவின் தூக்கம் நினைவு

பகலின் தூக்கம் இரவு 

இரவின் தூக்கம் கனவு


எனது சிந்தனை v 4.1

இதயத்தை இரும்பாக்கு
இன்சொல்லை மருந்தாக்கு

அறிவை பெரிதாக்கு
அன்பை விருந்தாக்கு

செயலை எரும்பாக்கு
செய்கையை நன்மையாக்கு

முயற்சியை உரமாக்கு
மூடத்தை முடமாக்கு

தேகத்தை உறுதியாக்கு
தோல்வியை இறுதியாக்கு

தீமையை தீயாக்கு
திறமையை துணையாக்கு

மனதை தூய்மையாக்கு
மானம் உயிராக்கு

வெட்டி நேரத்தையும் பயனாக்கு
வெற்றியை உனதாக்கு


எனது சிந்தனை v 4.2

உணவில்லைனா உயிரில்லை
உழவரில்லைனா உலகில்லை

என்பதையும்

மம்மி டாடி டாடா பை பைனு சொல்லும் தமிழன் வரை

உணர்த்தும் உன்னத நாள்
தமிழர் திருநாள்

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்😃

எனது சிந்தனை v 4.3
வரும் காலம்
கரும்பாய் இனிக்கட்டும்..

இருள் விலக
சூரியன் ஒளிரட்டும்..

என்றும் நம்மில்
ஒற்றுமை ஓங்கட்டும்..

உறவாய் சேர்ந்து
பானை பொங்கட்டும்..

உழவர் செல்வாக்கு
நாளும் உயரட்டும்..

தமிழா தை பிறந்தது
நல்லதே நடக்கட்டும்..


பொங்கல் நல்வாழ்த்துக்கள்😃

 எனது சிந்தனை v 4.4

தன் உதிரத்தை பாலாக்கி
குழந்தை பருவம் வரை
புகட்டும் ஓர் உயிர் மாதா..


தன் உதிரத்தை பாலாக்கி
இறுதிப் பருவம் வரை
புகட்டும் பல உயிர்கள் கோமாதா..

அன்னையின் மறுஉருவம்
அம்மா என்று அழைக்கும் கோமாதா

பசு வதை தடுப்போம்
மாட்டிறைச்சி தவிர்ப்போம்


🐮🐄🐃🐂🐂🐃🐄🐮
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்😃

எனது சிந்தனை V 4.5

ஊரே ஊர் திரும்பும்
உறவுகள் ஒன்று சேரும்
உதடுகள் மௌனம் காக்கும்
உள்ளங்கள் மொழி பேசும்
உரையாடல் யாவும் இனிக்கும்
உணவு மதி மயக்கும்
உதிரம் உயிர் பாய்யும்

குடும்பத்தோட கொண்டாடு

காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்😃

எனது சிந்தனை V 4.6

ஆண் வாரிசு
ஆண் வாரிசுனு
அலையும் பலருக்கு

எச்சரிக்கை! !!!!!

வந்து விட போகிறது மீண்டும் மகாபாரதம்???

திறிவார்கள்
பாண்டவர்களும்
பாஞ்சாலிகளும்
😉😉😉😝😜😜


எனது சிந்தனை V 4.7

வாழ்க்கை ஒரு நிலவு

தோல்வி என்பது தேய்பிறை
வெற்றி என்பது வளர்பிறை
இரண்டையும் சமனாய் ஏற்பவன் மனிதன்


எனது சிந்தனை V 4.8
அழகான முகம் பழகாதே,
அங்கு இதயம் முள்ளாய் இருக்கும்..

ஆழமான அகம் பார்த்து பழகு,
அங்கு இதயம் பூவாய் மணக்கும்..

அகத்திற்க்கும்
முகத்திற்க்கும்
அகன்ற இடைவெளி இருக்கத்தான் செய்கிறது😂


எனது சிந்தனை V 4.9

உண்ணாது உயிரில்லை, அதுபோல
உழைக்காது உயர்வில்லை..

மன்னிக்காதது இதயமில்லை, அதுபோல
மன்னிக்க தெரியாதவன் மனிதனே இல்லை..


 எனது சிந்தனை V 5.0

படித்தவுடன் தேடி வரும் வேலை

டிராபிக் இருந்தாலும் அதிவேகத்தில் பைக்

லேட்டா ஆபிஸ் போனாலும் சிரிக்கும் முதலாளி

கூட்டம் இல்லாத ரேசன் கடை

லஞ்சம் வாங்க மறுக்கும் அரசு அதிகாரி

சில்லரையை சிரிச்சிகிட்டே கொடுக்கும் கன்டக்டர்

காதலை சொன்னா உடனே காதலை சொல்லும் பெண்

சீரியல் இல்லா அழகிய மாலை பொழுது

வீட்டுக்குழாயில் தட்டுபாடில்லா தண்ணீர்

டொனேஷன் இல்லா கல்வி அட்மிஷன்

கோவில்கள் இல்லா அன்புநிறைந்த தேசம்

ம்ம்ம் நினைத்தால் நல்லாயிருக்கு
நடக்குமானு தெரியாது

சரி வாங்க

கனவிலாவது காண்போம்


எனது சிந்தனை V 5.1

தோல்வி என்பது
உன் வெற்றி பயணத்தில் வரும் வேகத்தடைகள்..

தோழா தடுமாறினாலும்
உன் பயணத்தை மட்டும் நிறுத்திவிடாதே..


எனது சிந்தனை v 5.2

தோல்வி என்பது உனது முடிவல்ல,
தோற்றுவிடுவோம் எனும் நினைவுதான்
 முடிவு ...


எனது சிந்தனை V 5.3

கரு உருவாகும் போதே
காதல் கொள்பவள்!!!

கருவறையை
கண் இமை போல் காப்பவள்!!!

நம் பிறப்பதற்கு முன்பே
நம்மை நேசிப்பவள்!!!

அவள்தான் நாம் தொழும் "அம்மா"


எனது சிந்தனை V 5.4

சிலை
சிற்பியின் பொறுமை..

சுதந்திரம்
காந்தியின் பொறுமை..

மின்விளக்கு
எடிசனின் பொறுமை..

சுனாமி
கடலின் பொறுமை..

குறிஞ்சி
மலரின் பொறுமை..

முத்து
சிப்பியின் பொறுமை..

குழந்தை
தாயின் பொறுமை..

வெற்றி
மனிதனின் பொறுமை..


 எனது சிந்தனை V 5.5

வறுமையும் வெறுமையும் இல்லை

லஞ்சமும் வஞ்சமுமம் இல்லை

சாதியும் மதமும் இல்லை

காதலும் சாதலும் இல்லை

ஆத்திகமும் நாத்திகமும் இல்லை

இச்சைவெறியும் இச்சைபலியும் இல்லை

ஏமாற்றுதலும் ஏமாறுவதும் இல்லை

கோவில்களும் கோடிகளும் இல்லை

பசியும் பட்டினியும் இல்லை

பதவியும் பாசாங்கும் இல்லை

நயவஞ்சகம் நடிப்பும் இல்லை

நெரிசலும் நெருக்கடியும் இல்லை

அடக்குமுறையும் அய்யோகியதனமும் இல்லை

என்ன???😴😴

என் கனவு உலகத்தில் இருக்கேன்😁😜

நீங்களும் போங்க

சுவீட் ட்ரீம்ஸ்

 எனது சிந்தனை V 5.6

செய் அன்றாட உடற்பயிற்சி
வராது உள்ளத்தில் தளர்ச்சி

செய் இடைவிடா முயற்சி
வரும் நிச்சயம் வளர்ச்சி


எனது சிந்தனை v 5.7

மிதமான குளிர்
இதமான காற்று
ஓய்ந்த உடல்
ஆழ்ந்த தூக்கம்
சொல்லிடும் இசை
துள்ளிடும் கனவு


எனது சிந்தனை V 5.8

லட்சியம் என்ற ஒன்றை
வைத்து பார்ப்போம்

பயிற்சி என்ற ஒன்றை
செய்து பார்ப்போம்

முயற்சி என்ற ஒன்றை
முயன்று பார்ப்போம்

வெற்றி என்ற ஒன்றை
ருசித்து பார்ப்போம்


 எனது சிந்தனை V 5.9

அணையும் வாழ்வில்
அணையா விளக்கு
அன்னையின் அன்பு! !!
வளரும் பருவத்தில்
வாழ்க்கைய உணர்த்தும்
தந்தையின் வளர்ப்பு!!!
தோல்வி வந்தாலும்
தோள் கொடுக்கும்
தோழனின் நட்பு! !!
தன்னலம் போல்
உன்னலம் காக்கும்
உன் உடன்பிறப்பு!!!
கைகூடா போனாலும்
கைகோர்த்து நடக்கும்
காதலின் உணர்வு! !!
இயலா நேரத்திலும்
இயன்ற உதவிகளை
செய்யும் உறவு! !!
துன்பம் வந்தபோதும்
துவளாது நடக்கும்
நேர்மை சிரிப்பு! !!
அனைவரின் நலனுக்கும்
ஆண்டவனை வேண்டிக்
கொள்ளும் பரிவு!!!

இதைவிட வேறு என்ன அழகு
இருக்க முடியும் இவ்வுலகில்!!!


 எனது சிந்தனை 6.0

விரித்து பறக்காத வரை
சிறகுகளும் பாரம் தான்,
அதே பறந்தால் வானமும் தொடும் தூரம் தான்..


எனது சிந்தனை V 6.1

சோகங்களை கூட  சுகமாக்கினால்,
சோர்வுகள் கூட உன்னை  நெருங்குவதில்லை..

சுகங்களையும் நீ  சுமையாக்கினால்,
திருப்தி நீ என்றும்  அடைவதில்லை..


எனது சிந்தனை V 6.2

உன்

உயர்வைக் கண்டு
உள்ளன்புடன்
உவகை கொள்ளும்
உண்மை மனம் தான்

உன் நட்பு


எனது சிந்தனை V 6.3

கண்ணீரை துடைத்து விடு!!
கவலைகளை துரத்தி விடு!!
காரியத்தில் வீரியம் வை!!
கனவுகளை கண்டு வை!!!
கருமை நினைவுகளில் மூழ்காதே!!
காலம் நிற்காது மறவாதே!!!
கருணை குணம் மாறாதே!!
கடமை மீறி போகாதே!!!
காலையில் எழுவாய்!!
கதிரவனை வெல்வாய்!!!


 எனது சிந்தனை V 6.4

உம்முனு இருக்காதே
உலகம் உதாசீனம் செய்யும்!!!

எரிந்து விழாதே
உலகம் எதிரியாய் பாவிக்கும்!!!

சினம் கொள்ளாதே
உலகம் சிறியதாய் தோன்றும்!!!

இதயம் வறண்டு போனால் என்ன???
இதழ்களை ஈரமாக்கு
இருக்கும் வரை
இதழ் விரிய சிரி
இறந்த பின்னும் பல
இதயங்களில் வாழ!!!!


எனது சிந்தனை V 6.5

கடவுள் எங்கு இருக்கார்???

விழும் போது
கை தட்டி சிரிப்பவர்களை விட
கை கோர்த்து தூக்கி விடுபவர்கள் தான் கடவுள் !!!!

எழும்  போது
தலையில் கொட்டுபவர்களை விட
தோளில் தட்டுபவர்களே கடவுள் !!!!

வீட்டில் எவ்வளவு
பணம் கொட்டிக்கிடந்தாலும்
குணம் கொண்டு பேசுறவங்களை கடவுள் !!!!

அலுவலகத்தில் வேலையை
செய்னு சொல்லிக் காட்டுபவனை விட
செய்னு பாராட்டுபவர்களை கடவுள்! !!!

இப்படி
உன்னிலும் உண்டு
என்னிலும் உண்டு
வெளியே தேடாதே
கடவுள் எங்கு இருக்கிறார்னு???


எனது சிந்தனை V 6.6

வாழ்க்கை என்பது
வழுக்குப் பாறை போன்றது...
சில நேரங்களில் வழுக்கும் தவறில்லை!!!
பல நேரங்கள் தவறினால் அது வாழ்க்கையே இல்லை.. விழித்துக்கொள்!!!!


எனது சிந்தனை V 6.7
பலவீனமான நட்புடன்
பார்த்து பழகு
பல கால வாழ்க்கை போய்விடும்!!!!

சிரித்துப் பேசும் நட்புடன்
சிந்தித்து பழகு
சில கால வாழ்க்கை போய்விடும்!!!!

மாறாக

உன் கண்ணீரை
அவன் விரல் துடைக்க
அவன் கண்ணீரை
உன் விரல் துடைக்க
இருவரின் உதிரமும் சிரிப்பதே
நட்பு நட்பு நட்பு!!!!!!


எனது சிந்தனை V 6.8

ஏன் விழுந்தோம்
எப்படி எழுந்தோம்
என்பதை உணர்ந்து
ஏனென்று அறிந்தால்
ஏற்றமும் இறக்கமும்
எதிலும் மகிழ்ச்சி
என்றும் தங்கும் வாழ்விலே!!!!!


 எனது சிந்தனை V 6.9


பெண்ணால் அறிமுகமாகி சாகும் வரை
பெண்ணை அறியாது சாகும் ஒரே இனம் ஆண் மட்டுமே!!!!!

படைக்கும் திறன் பெண்ணுக்கு இருப்பதால் கடவுளாக கருதப்படுகிறார்கள்,
அவர்களை வேட்டையாட நினைக்கும் ஆண்களோ மாறாக  சாத்தான் ஆகின்றனர்!!!

பெண்களை வெறும் சதை பிண்டமாய் நினைக்கும் ஆண்களே,
உணர்ச்சியும் உயிரும் கொண்ட ஓவியம் தான் பெண்!!!

மதிக்க தெரியலனா பரவாயில்லை
உணர்வுகளை மிதிக்காதீர்கள்!!!


 எனது சிந்தனை V 7.0

வெற்றிகள் மட்டுமல்ல
தோல்விகளும் தான் இடம் பெற்றிருக்கும்
வரலாற்றில்!!!!

வெற்றியோ??
தோல்வியோ??
இடம் பெறப்போவது..

முயன்று தான் பார்ப்போமா😉👍


 எனது சிந்தனை V 7.1

நித்தமுமாய் நானிருப்பேன்
நிழலாய் நீயிருந்தால்..

உள்ளமாய் நானிருப்பேன்
உறவாய் நீயிருந்தால்..

உயிராய் நானிருப்பேன்
ஊடலாய் நீயிருந்தால்..

விவசாயமாய் நானிருப்பேன்
விளைநிலமாய் நீயிருந்தால்..

தோளாய் நானிருப்பேன்
தோழனாய்/தோழியாய் நீயிருந்தால்..

உனைப்பிரியா நானிருப்பேன்
உலகாய் நீயிருந்தால்..


எனது சிந்தனை V 7.2
அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடம் அம்மா!!!

பாசமும் பயபக்தியும் நிறைந்த இடம் அப்பா!!!

சண்டையும் சதையும் நடக்கும் இடம் உடன்பிறப்பு!!!

இனிமையும் இன்னலும் கொடுக்கும் இடம் காதல்!!!

உரிமையும் ஊடலும் ஏற்படும் இடம் மனைவி!!!

பந்தமும் பகையும் தரும் இடம் உறவினர்!!!

நல்லெண்ணமும் நன்னடத்தையும்
வழங்கும் இடம் குருகுலம்!!!

வளமையும் வாழ்க்கையும்  கற்பிக்கும் இடம் கல்வி!!!

அகிலமும் அனைத்தும் தந்து மகிழும் இடம் நட்பதாங்க!!!


 எனது சிந்தனை V 7.3

உயர்ந்த வானம் போல்
உயர் எண்ணம் வை!!!
பரந்த வானம் போல்
பகிர்ந்து தோழமை செய்!!!
இருண்ட வானம் போல்
இருக்கும் துன்பம் ஏற்றுக் கொள்!!!
கருமை வானம் போல்
கடின முயற்சி(மின்னல்) செய்!!!
தெளிந்த வானம் போல்
தெளிவான இலக்கு வை!!!

வானம் போல் உன்
வாழ்க்கை மாறும் பார்!!!


எனது சிந்தனை V 7.4
தேவைக்கு ஏற்ப தண்ணீர்,
தாகம் தீர்ப்பதை போல
தேவைக்கு ஏற்ப பணம், வாழ்க்கையில் நிம்மதி கொடுக்கும்!!!

மாறாக பணமே வாழ்க்கையானால் கடல்நீரைப் போல் உன் உயிரையே மாய்க்கும்!!!


எனது சிந்தனை V 7.5
என்ன கவிதை எழுத


யோசித்தேன்


எதை பற்றி எழுத


சிந்தித்தேன்


இயற்கை, காதல், நட்பு இவைகளை பற்றி எழுதவா???


கண்களை மூடி ஆழ்ந்தேன்



கண்ணீர் சிந்த எழுதினேன்


ஒரு கவிதை



"அம்மா"



என்று😃



 எனது சிந்தனை V 7.6

மின்னல் வெட்டி வானம் கிழிவதில்லை..
இடி இறங்கி பூமி உடைவதில்லை..
நிற்காமல் சுற்றுவதால் பூமி மயங்குவதில்லை..
தொடர்ந்து இயங்குவதால் இமைகள் ஓய்வதில்லை..
கொய்யாத கனி என்றும் சுவைப்பதில்லை..
நெய்யாத துணி என்றும் உடுத்துவதில்லை..
சருகு ஆகாத மலர் இருப்பதில்லை..
மெருகு ஏறாத வாழ்க்கை பயனில்லை..
தோல்வி கண்டிறாத வெற்றி வருவதில்லை..
துன்பம் தாங்கிறாத மனிதனுக்கு வாழ்க்கையே இல்லை!!!!....


எனது சிந்தனை V 7.7

இருந்திட்டா காரணமில்லா சிரிக்குறான்
இல்லாட்டா காரணம் தேடி தவிக்குறான்

இருந்திட்டா எதற்கெடுத்தாலும் சந்தோஷம்
இல்லாட்டா எது இருந்தாலும்  சங்கடம்

இருந்திட்டா முடியாததும்  சாதிக்கலாம்
இல்லாட்டா சாதிக்க முடியாம  ஏங்கிக்கலாம்

இருந்திட்டா நினைக்காததும்  கிடைக்கும்
இல்லாட்டா நினைத்து பார்த்தாலும் கிடைக்காது

இருந்திட்டா சண்டை போட்டவனும் உறவாவன்
இல்லாட்டா சண்டையிட்டு உறவறுப்பான்

இருந்திட்டா உனக்காக எதையும் செய்வான்
இல்லாட்டா உன் உயிரை கூட எடுப்பான்

இருந்திட்டா உலகம் உன்னை போற்றி புகழும்
இல்லாட்டா உன்னை உதவாக்கரை என்று தூற்றும்

இருந்திட்டா உன் சாவிற்க்கு கூட ஊரே  பின் தொடரும்
இல்லாட்டா இவ்வுலகில் நீ அனாதை பிணம் தான்!!!!

என்ன பன்றது
இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
"பணம்"
பத்தும் செய்யும்
பாதாளமும் பாயும்


 எனது சிந்தனை V 7.8
ஒரு மனிதனின் மிகப்பெரிய

பலம்
பலவீனம்
இவ்விரண்டும்
அவன் "பேச்சு" தான்..!!!

இடமறிந்து
பொருளறிந்து
செயலறிந்து
பேசுவோம்👍


 எனது சிந்தனை V 7.9




மாலை நேரம்



குளக்கரை ஓரம்



நீந்திக் கொண்டு வருகிறாள்




மேனி எங்கும் ஈரம்




சொட்ட சொட்ட



அழகாய் வளைந்து நெளிந்து போகிறாள்
😝



கண்ணிமைக்காமல்
😌




அதிர்ந்து போய்😱




பார்த்து கொண்டு நின்றேன்😝






பேச்சே இல்ல😷






அய்யோ  பாம்ம்ம்ம்ம்பு'னு கத்த முடியல🙉



🐍🐍🐍🐍🐍🐍🐍

எனது சிந்தனை V 8.0

உனது ஆர்வங்கள் அனைத்தும்
வெற்றி பெற உழைப்பு அத்தியாவசியம்..

உழைக்க மறுத்தால் அது ஆர்வங்கள் அல்ல வெறும் ஆசையே!!!!


 எனது சிந்தனை V 8.1
வேதனையின் போது
உற்சாகப்படுத்த,

துன்பத்தின் போது
ஆறுதல்படுத்த,

கலகத்தின் போது
பாதுகாக்க,

தோல்வியின் போது
தோள் கொடுக்க,

வெற்றியின் போது
மனமாற வாழ்த்த,

உயிர்
உண்மை
நண்பனால தான் முடியும்..👍


எனது சிந்தனை V 8.2
உனது அவமானங்கள்
உன்னை பக்குவப்படுத்தும்

உனது தாக்குதல்கள்
உன்னை தயார் செய்யும்

உனது உதாசீனங்கள்
உன்னை உறுதிப்படுத்தும்

உனது வீழ்ச்சிகள்
உன்னை மீண்டும் மீண்டும் எழ வைக்கும்

உனது தோல்விகள்
உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்

எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்தால் வாழலாம்👍


 எனது சிந்தனை V 8.3

உடல் செய்யும் தவறுக்கு பெயர் விபச்சாரம்'னா????

மற்றவரை தப்பாய்
பேசும் நாக்கு

ரகசியத்தை ஒட்டு
கேட்க்கும் காது

காம எண்ணத்துடன்
பார்க்கும் கண்கள்

உதவி செய்ய
மறுக்கும் கரங்கள்

போதையில் தள்ளாடி
நடக்கும் கால்கள்

ஊழலில் சாப்பிட்டு
உப்பும் வயிறு

இரக்கம் இல்லா
சிரிக்கும் இதயம்

கையெழுத்திற்கு காசு
வாங்கும் விரல்கள்

பிறருக்கு கேடு
நினைக்கும் மூளை

இவைகள் எல்லாம் செய்யும் செயலுக்கு பெயர் விபச்சாரம் தானே!!!!😝

 எனது சிந்தனை V 8.4

தொடப்போகும் வானமும்
தூரமே இல்லை..
தொடரும் முயற்சிகள்
தோற்பது இல்லை..
முடியும் என
முயன்று பாரு..
முளைக்கும் நம்பிக்கை எனும்
மூன்றாவது சிறகு..
முன்னெறும் உனது வாழ்வு! !!!

எனது சிந்தனை V 8.5
இளமை காலத்தின்
இம்சையான (இனிமையான) நோய் காதல் 😍
மருந்து(மறந்து) கூட சாப்பிட்டால்
மரணம் கூட நேரிடலாம் 😉


எனது சிந்தனை V 8.6

கைகளில் வளையல்களும்
கால்களில் கொலுசுகளும்
சேர்ந்து இசைக்க
துப்பட்டா தலை மூடி தோகை விரிக்க
நடை நடனம் ஆடி நடப்பதால் தான்
பெண்களை மயில் என்று வர்ணனை செய்கிறார்களோ????


எனது சிந்தனை V 8.7

கண்ணீர் துளிகளை துடைத்திடு
கவலைகளை காகிதத்தில் எழுதிவிடு
காற்றினில் அதை பறக்கவிடு

தவறுகளை கண்டு களைந்திடு
தேவைகளை தேடி அலைந்திடு

நம்பிக்கை எதிலும் வைத்திடு
தன்னம்பிக்கை முளைக்கும் பார்த்திடு

தோல்வியே உண்மை நம்பிடு
வெற்றி நிலையல்ல உணர்ந்திடு

உனக்கென பாதை அமைத்திடு
உலகம் தொடர வைத்திடு
உன்புகழை காவியம் ஆக்கிடு


 எனது சிந்தனை V 8.8

உன் இதயத்துடிப்பு நின்று போனாலும்
உனக்காகவும்
உன் பிள்ளைகளுக்காகவும்
உன் குடும்பத்திற்காகவும்
இறுதிவரை துடிக்கும் ஒரே இதயம் அம்மாவின் இதயம் தான்!!!


எனது சிந்தனை V 8.9

நேற்று நடந்ததை வீணாக
இன்று யோசிப்பதை விட
நாளை வரப்போவதை சிந்தித்தால்...

நீ முன்னேற
நாடும் முன்னேறும்!!!!


 எனது சிந்தனை V 9.0

என்..
பாதைகள் மறைந்தாலும்
சுவடுகள் அழிந்தாலும்
உன்
நினைவுகள் மாறாது நண்பனே!!!

என்..
இதயம் திருடு போனாலும்
கண்கள் திறக்கப் பட்டாலும்
நீயின்றி
காரணம் ஆகாது நண்பனே!!!

என்..
கழுத்தில் கத்தி பட்டாலும்
உடம்பில் விஷம் பரவினாலும்
உன்
உறவு மாறாது நண்பனே!!!


 எனது சிந்தனை V 9.1

பனித்துளி கரைவதற்கு முன்
குயில்கூவுதல் நிற்பதற்கு முன்
காற்று திசை மாறுவதற்கு முன்
கனவு கலைவதற்கு முன்
இரவு முடிவதற்கு முன்
சூரியன் உதிப்பதற்கு முன்
உலகம் விழிப்தற்கு முன்

எழுந்துக்கொள்

எல்லாம் உன் பின்..


 எனது சிந்தனை V 9.2

பலர் வாழ்க்கையில்
தேடுகிறோம் என்று எதையோ தேடிக் கொண்டு இருக்கிறார்கள்???
தொலைத்தது வாழ்க்கைதான்னு தெரியாமல்...!!!


எனது சிந்தனை V 9.3

நன்மை செய்தல் நலமாகும்
ஆதரவு அளித்தல் பண்பாகும்
அன்பு காட்டுதல் அறிவாகும்
உதவி புரிதல் உன்னதமாகும்
உண்மை பேசுதல் உயர்வாகும்
உயர்ந்த எண்ணம் தோழா தோழிகளே உலகளா வைக்கும்!!!


எனது சிந்தனை V 9.4

சோம்பலை முடிக்கலாம்
கவலையை மறக்கலாம்
தீங்கை நிறுத்தலாம்
சோகம் தவிர்கலாம்
பழமை நினைக்கலாம்
புதுமை படைக்கலாம்
சிறகை விரிக்கலாம்
வானம் பறக்கலாம்
பணிந்து நடக்கலாம்
துணிந்து நிற்கலாம்
அறிவை வளர்க்கலாம்
சிரிப்பை கற்காலம்
இதயம் திறக்கலாம்
அன்பை படிக்கலாம்
நட்புடன்(பை) பழகலாம்


 எனது சிந்தனை V 9.5

சேவலாய் இருந்து பார்,
விடியல் கிடைத்துவிடும்..
தேனீயாய் இருந்து பார்,
இனிமை கிடைத்துவிடும்..
கழுகாய் இருந்து பார்,
இலக்கு கிடைத்துவிடும்..
கவிஞனாய் இருந்து பார்,
உண்மை கிடைத்துவிடும்..
ஞானியாய் இருந்து பார்,
போதனை கிடைத்துவிடும்..
மனிதனாய் இருந்து பார்,
வாழ்க்கை கிடைத்துவிடும்..


 எனது சிந்தனை v 9.6

மலர்கள் வாடாமல் இருக்க
தினமும் பனித்துளிகளை
அதன்மேல் தெளித்துப் போகும் மேகம்! !!

அதுபோல் நண்பா (தோழியே) உனது பிரிவால் வாடும் நான்..

உன் நினைவுகள் போகாமல் இருக்க
நித்தமும் கண்ணீர் துளிகளால்
நனைத்து கொண்டிருக்கிறது என் தேகம்😪! !!
எனது சிந்தனை V 9.7

உலகில் நிச்சயம் உனக்கோர் இடம் உண்டு!!!

அதை நீ அடையும் வேளையில்
உன் புகழ் விண்ணை எட்டும்!!!

அப்போது
உன் இடம் ஆறடி மண்ணாகவும் இருக்கலாம்..
இல்லை
உன்னிடம் ஆயிரக்கணக்கானேர் தொண்டனாய் இருக்கலாம்..

எனது சிந்தனை V 9.8

கருணையில் நேசிப்பவராக
பொறுமையில் ஆளுபவராக
கற்பில் ஒழுக்கமாக
வீரத்தில் போராடுபவராக
பண்பில் நடப்பவராக
பொறுப்பில் இருப்பவராக
அன்பில் அரவணைப்பவராக
கடமையில் கண்ணியமாக
பணிவில் உயர்ந்தவராக
அறிவில் சிந்திப்பவராக
பாசத்தில் தவிப்பவராக
சமூகத்தில் கேட்பவராக

இருக்கும் பெண்கள்
யாவரும் பெண்களே அல்ல
தேவதைகளே!!!!!


 எனது சிந்தனை V 10.0

அழகான பாத்திரம்
நடிக்கவும் தெரியும்..
கண்ணீர் சிந்தி
வடிக்கவும் தெரியும்..
கற்பிற்காக சிலம்பை
உடைக்கவும் தெரியும்..
கோபத்தில் எரிமலையாய்
வெடிக்கவும் தெரியும்..
பேச்சாலே பிறறை
மடக்கவும் தெரியும்..
மனசு வச்சா
படைக்கவும் தெரியும்..
அநியாயத்தை கண்டா
ஒடுக்கவும் தெரியும்..

பெண் நினைச்சா
ஆக்கவும் தெரியும்
அழிக்கவும் தெரியும்



 எனது சிந்தனை V 10.2

கூழ் குடிச்சவன் நோயில்லா
கூலா வாழுறான்..
KFCல சாப்பிடுறவன் தொப்பையோடு
கடற்கரையில் ஓடுறான்..

ஓடி ஆடி உழைக்குறவன் நிம்மதியா உறங்குறான்..
ஓய்விலே இருக்குறவன்
Obesityல தவிக்குறான்..

பசிச்சா மட்டும் கஞ்சி குடிப்பவனுக்கு சீக்கே அண்டா வரம்..
பரோட்டா பீட்சா சாப்பிடுறவனுக்கு
பரலோகம் சீக்கிரம்..

நொறுங்க சாப்பிடுறவன்
வாழ்நாள் அதிகமாக்குறான்..
நொறுக்கு தீனி திங்குறவன்
வாழ்வையே நொறுக்குறான்..

நாக்கு பதம் பார்க்கும் உணவுகள் போய்,
உயிரை பதம் பார்க்கும் உணவுகள் எங்கும்😉
நல்லதை சாப்பிடு
நலமுடன் வாழ்ந்திடு


எனது சிந்தனை V 10.3

கோடிகளில் புரல்பவனுக்கு
வறுமை தெரியாது..
தெரு கோடியில் கிடப்பவனுக்கு
வசதி தெரியாது..
இடையில் இருப்பவனுக்கு
வாழ்க்கை தெரியாது..
இடைத் தரகர்களுக்கு அடுத்தவன் வாழ்க்கை தெரியாது..


எனது சிந்தனை V 10.4
பிரிவு எல்லையில் வை,
பாசத்தில் வேண்டாம்..

துணை வாழ்க்கையில் வை,
துன்பத்தில் வேண்டாம்..

காதலில் களவு வை,
கடமையில் வேண்டாம்..

என்றும் ஒழுக்கம் வை,
ஏனோதானோ வேண்டாம்..

அகத்தில் அழகு வை,
அலங்கரத்தில் வேண்டாம்..

மிருகம் காட்டில் வை,
மனிதனில் வேண்டாம்..

நட்பில் கேளிக்கை வை,
நயவஞ்சகத்தில் வேண்டாம்..

மதியில் இவைகளை வை,
மனதில் வேண்டாம்..


எனது சிந்தனை V 10.6

படும் கல்லை குறி பார்த்து எறி
பட்டுவிடும்..
கிடைக்கும் தொலைத்த இடத்தில் தேடு
கிடைத்துவிடும்..
சிரித்து கொண்டேயிரு நோய் பஞ்சுபஞ்சாய்
பறந்துவிடும்..
முடியும் என்று முயன்று பார் கண்டிப்பாக
வென்றுவிடும்..


 எனது சிந்தனை V 10.7

உன் இதயத்தில் இருக்க தயார்
நட்பே
உன் இதயம் எனக்கு குடியிருக்கும் கோவிலானால்..

மாறாக

உன் மடியில் இறக்கவும் தயார்
நட்பே
உன் மடியே எனக்கு மரண குழியானால்..

இரண்டுமே என் சொர்க்கம் தான்!!!!!


எனது சிந்தனை V 10.8

இருளில் தான்
வானத்தை
நிலவும் நட்சத்திரங்களும்
அழகாய் அலங்கரிக்கும்!!!

அதுபோல்

தோல்வி தான்
வாழ்க்கையின்
நெளிவு சுளிவுகளை
என்னவென்று கற்பிக்கும்!!!


எனது சிந்தனை V 10.9

பிறந்தபின்..
அப்பாவை கண்ணிலும்
அம்மாவை நெஞ்சிலும்
சுமக்கிறாள்!!!

வளரும்போது..
புத்தகத்தை முதுகிலும்
மானத்தை உடலிலும்
சுமக்கிறாள்!!!

வளர்ந்தபின்..
கணவனை மேனியிலும்
பிள்ளையை வயிற்றிலும்
சுமக்கிறாள்!!!

தேய்ந்தபின்..
பேரனை முதுகிலும்
பேத்தியை மார்பிலும்
சுமக்கிறாள்!!!

இறந்தபின்..
மண் அவளை சுமக்கிறது

முதலும் பெண்!!!
சுமப்பவலும் பெண்!!!
முடிவும் பெண்!!!


எனது சிந்தனை V 10.10


அலை கடலின் முயற்சி
சிலை உளியின் முயற்சி
நிறம் வானவில்லின் முயற்சி
மரம் விதையின் முயற்சி
கவிதை சொற்களின் முயற்சி
மலை கற்களின் முயற்சி
காதல் மனங்களின் முயற்சி
காலை விடியலின் முயற்சி
வெற்றி தோல்வின் முயற்சி

முயற்சி என்றும் தோற்பதில்லை!!!!
புதிய முயற்சி புதுமை படைக்கும்!!!


எனது சிந்தனை V 10.11


ஒரு உடல்
ஒரு உயிர்
ஒரு வாழ்க்கை தான்
ஆணுக்கும் பெண்ணுக்கும்??
ஒரு குறியின் மாற்றத்தால்
பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகுமா என்ன???

துணிகளை துவைக்க
ருசியாய் சமைக்க
வீட்டை காக்க
வாஎன்றால் படுக்க
பெண்கள் என்ன அடிமைகளா????
பெண் நினைத்தால்
மண்ணில் பாதை அமைக்கவும்
விண்ணில் கால் பதிக்கவும் செய்வாள்!!!

உன்னில் பாதி அவள்
உனது துணை அவள்
உன் ஊன்றுகோல் அவள்
ஊண் அவள்
உயிர் அவள்
என்று அவர்கள் எண்ண நாமும் எண்ணுவோம்!!!


எனது சிந்தனை V 10.12


கருவில் சுமந்து
கண்மணி போல் காத்து
உயிர்வலி ஏற்று
உயிரை தெற்று
தாய்ப்பால் ஊட்டி
தாய்மை புகட்டி
பசிதூக்கம் மறந்து
பாசத்தை தந்து
அழுதிடும் போது
ஆறுதல் கொடுத்து
ஆடைகள் அணிவித்து
ஆனந்தம் அடைந்து
பார்த்து பார்த்து
பரவசம் அடைந்து
சீருடை சூட்டி
சீராட்டி பாராட்டி
பள்ளிக்கு அனுப்பிவிடல்
பரிவுடன் காத்துக்கிடல்
விடலை பருவத்திலும்
விடாமல் தோழியாய்
கல்லூரி காலத்தில்
கண்ணியம் காக்க சொல்லி
வேலைக்கு செல்லும்போது
வேண்டியதை செய்துதந்து
மணத்தின் போது
மனமாறஆசி தந்து
உன் பிள்ளைகளையும்
உடலால் உள்ளத்தாலும் சுமந்து
நீ இறந்தால்
அவள் இறக்கும் வரை
அழுதுபுலம்பும்

"பெண்மைக்கும்
தாய்மைக்கும்"
தலை வணங்குகிறோம்🙏🙏🙏



எனது சிந்தனை V 10.13

ஒரு பக்கம் மனவளர்ச்சி தேடி
ஆலயங்களில்
அலை மோதுது கூட்டம்
மறுபக்கம்
மதிவளர்ச்சி தேடி
நூலகங்களில்
ஆளே இல்லை வெட்கம்

நூலகங்கள் குறைய
கோவில்கள் அதிகரிக்க
நாட்டில் நல்ல முன்னேற்றம்? ??😜

மனிதன்
மன வளர்ச்சியின்றி
மதி வளர்ச்சிகுன்றி
அலைகிறானோ????


எனது சிந்தனை V 10.14

பார்த்த உலகத்தை
பார்க்க செய்தவள் அம்மா...

பார்க்காத உலகத்தை
பார்க்க செய்பவர் அப்பா ...

அறிமுகம் இல்லாதவரையும்
அறிமுகம் செய்வது உறவு ...

கற்பனை உலகத்தை
கனவில் காட்டுவது காதல் ...

அறியா உலகத்தில்
உன்னை அறிய செய்யும் பாதை நட்பு ...

நல்ல நட்பின் பாதை
தொடரும் வாழ்க்கையின் பயணம் 👍


எனது சிந்தனை V 10.15


கழுவி கழுவி ஊத்தினாலூம்
துர்நாற்றம் அடிச்சாலூம்
கல்லறையில் அடச்சாலும்
கதவு மூடினாலும்

எந்த இடமானாலும்
வாழ்க்கையை தேடி
முடியும் என்று
முட்டி முளைக்கும் விதை சொல்லும்
பிறப்பில் தவறில்லை
வளர்ப்பில் குறையில்லை
உழைப்பில் தப்பில்லை
உன்னைவெல்ல யாருமில்லை

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...