Wednesday, October 11, 2017

நச்வரி நாலுவரி KAVITHAI VERSIONS

நச்வரி நாலுவரி V 0.1

கோபம் கொண்டு வாழ்பவன்,
சாபம் பெற்று வாழ்பவன்.!
இன்பம் கண்டு வாழ்பவன்,
துன்பம் இல்லா வாழ்வான்.!!!

நச்வரி நாலுவரி V 0.2

இல்லாதவனுக்கு Ration rice
இருப்பவனுக்கு Basmathi rice
இடைபட்டவனுக்கு boil rice
இறந்ததும் பேதமில்லா Vaayil rice

        (இதுதான் வாழ்க்கை)

நச்வரி நாலுவரி V 0.3

உனது கேள்விகுறிகளை???
உன்னுடைய உழைப்பால்..
உடனே கூன் நிமிர்த்தி,
உனகே ஆச்சிரியகுறிகளாக்கு!!!


நச்வரி நாலுவரி V 0.4

நேற்றை தாரை வார்த்தாய்!
நாளை எதிர்நோக்குகின்றாய்!
இன்றே உனக்கு சொந்தம்!
இனிமையாய் செலவழி தோழா!

 நச்வரி நாலுவரி V 0.5

முயல்பவனுக்கு தட்டிக்கொடு!
இயலாதவனுக்கு விட்டுக்கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக்கொடு!
வீழ்ந்தவனுக்கு கைகொடு!


நச்வரி நாலுவரி V 0.6

குடிமக்களே குடிமக்களே!
நேற்று கிள்ளிப் பருகினாய்!
இன்று அள்ளிப் பருகுகிறாய்!
நாளை கொல்லியில் எரிந்திடுவாய்.. ஜாக்கிரதை!!!

நச்வரி நாலுவரி V 0.7

உழைப்பிற்கு ஒற்றடம்
ஓய்விற்கு சிறப்பிடம்
இயற்கையின் கொடை
வாழ்க்கையின் வரம் " தூக்கம் "

நச்வரி நாலுவரி V 0.8

உள்ளத்தில் துணிவிருந்தால்
முடிவில் தெளிவிருந்தால்
செயலில் உண்மையிருந்தால்
வாழ்க்கையில் என்றும் ஜெயமே..!!


நச்வரி நாலுவரி V 0.9

மலர் தூவி பூசித்தேன்..
மெழுகேற்றி பிராத்தித்தேன்..
மண்டியிட்டும் பார்த்துவிட்டேன்!
யார் இறைவன்? "நம் நம்பிக்கைதான்"

நச்வரி நாலுவரி V 1.0

நிலா வருகை உலகின் மௌனம்..
ரணம் விலக மரண ஒத்திகை..
உடல் உறங்கும் மனம் உறங்காது..
கனவின் பிடியில் இரவின் மடியில்..

நச்வரி நாலுவரி V 1.1

ஆறு இன்ச் நாக்கு
அடங்காம போச்சுனா
ஆறடி உடம்பு சீக்கிரம்
அடங்கிடும் மண்ணுக்குள்ள..

நச்வரி நாலுவரி V 1.2

இமை விழிக்காதே
இதழ் சுழிக்காதே
இடை குலுக்காதே
இல்லாமல் போகிறேன் அன்பே!!!

நச்வரி நாலுவரி V 1.3

தூங்கா விட்டால்
நாம் இரவை சுமப்போம்.!
தூங்கி விட்டால்
இரவு நம்மை சுமக்கும்.!

நச்வரி நாலுவரி V 1.4

கதிரவனின் பார்வையில்
உனக்கென ஒரு நாள்
புன்னகையுடன் தொடங்கு
பூக்களாக மலரட்டும்

நச்வரி நாலுவரி V 1.5

வாழும் வாழ்க்கை...
சிலருக்கு வரையபட்ட சித்திரம்.!
பலருக்கோ அது விசித்திரம்.!!
எனினும் நம்(பிக்)கையில் சரித்திரம்.!!!

 நச்வரி நாலுவரி V 1.6

ஆடையின்றி இருந்தபோதும்
அச்சமின்றி இருந்தோம் கருவறையில்,
ஆடை அணிந்து இருந்தும்
அச்சத்துடன் நடக்கின்றோம் தெருவில்..

இப்படிக்கு பெண்கள்.🙎

நச்வரி நாலுவரி V 1.7

நம் கையில் இருக்கலாம்
காலம் காட்டும் கடிகாரம்
நம் கையில் இருப்பதில்லை
காலம்! நம் காலம்!!

நச்வரி நாலுவரி V 1.8

உன் வாழ்க்கை உன் பையில்
அது தொலையாமல் பார்த்துகொள்
உயர்வும் தாழ்வும் உன் கையில்
அது அழியாமல் நினைவில் கொள்


நச்வரி நாலுவரி V 1.9

இரக்கமில்லை அவளிடம்
இருக்கவில்லை அன்பின்'தடம்
இயலவில்லை மன'திடம்
இயக்கமில்லை என்னிடம்

நச்வரி நாலுவரி V 2.0

முயலாதவர்களை வாழ்க்கையில் வாழ்த்திவிடு!
முடியாதவர்களை வாழ்க்கையில் வாழவிடு!
முன்னேருபவனுக்கு வாழ்க்கையில் வழிவிடு!
முன்னோடிகளை வாழ்க்கையில் வழிபடு!


நச்வரி நாலுவரி V 2.1

கோயில்களில் இந்து என்றார்கள்.
தேவாலயத்தில் கிறிஸ்தவன் என்றார்கள்.
பள்ளிவாசலில் இசுலாமியன் என்றார்கள்.
மதம் மனிதனாய் பார்க்கவில்லை...



நச்வரி நாலுவரி V 2.2

திருட முடியாது
தொட கூடாது
கருப்பு வெள்ளை படம்
கனவு கூடாரம்


 நச்வரி நாலுவரி V 2.3

விழுந்த இடத்தில் எழுந்திடு
எழுந்த இடத்தில் விதைத்திடு
விதை வளர்ந்து விருட்சமாகிடு
விருட்சம் வானை முட்டட்டும்!!!



நச்வரி நாலுவரி V 2.4

நிம்மதி தேடி
நிம்மதி தேடி
நிம்மதி தேடி
நிம்மதி இழந்தோம்😏

நச்வரி நாலுவரி V 2.5

இலக்கை நோக்கி நகர்ந்திடு
இன்றே முயற்ச்சிக்க துணிந்திடு
தடை வந்தால் தகர்த்திடு
தடுமாறினாலும் முயற்சி செய்திடு

நச்வரி நாலுவரி V 2.6

நீ சைக்கிளாய்
நிற்காமல் ஓடுவதால் அன்பே,
நான் நட்டுபோல்
கழறுகிறேன் அடிக்கடி!


நச்வரி நாலுவரி V 2.7

சாப்டியா என்று கேட்கும்
உறவுகளை விட,
சாப்பிடுடா என்று உணவை ஊட்டும் நண்பனே சிறந்தவன்..!

நச்வரி நாலுவரி V 2.8

கண்களை இன்னும் மூடுகிறேன்
மூச்சை உள்ளே இழுக்கிறேன்
தொல்லைகள் தவிர்த்து மயங்குகிறேன்
ஞாயிறு விடுமுறை என்பதால்..!

நச்வரி நாலுவரி V 2.9

வினை விதைத்தவன்
வினை அறுப்பான் அன்று.
விதை விதைத்த விவசாயி
கழுத்தறுத்து கொள்கிறான் வாழ வழியின்றி இன்று..


நச்வரி நாலுவரி V 3.0

எதுவும் முயற்சிக்காத போதே
தோல்வி கிடைக்குதே,
ஏதேனும் முயற்சி செய்தால்
என்னவெல்லாம் கிடைக்குமோ.?


 நச்வரி நாலுவரி V 3.1

நாளையை நினைத்து
நேற்றை மறந்து
இன்றே உனது
என்பதை மறந்திடாதே தோழா!

நச்வரி நாலுவரி V 3.2

இறக்க போகிறேன்,
என் இறுதி ஆசை
இதயமில்லாத அவளுக்கு
என் இதயம் பொறுத்துங்கள்😅

நச்வரி நாலுவரி V 3.3

தாய் தந்தை - கருவாக்கும் கடவுள்

ஆசான் - உருவாக்கும் கடவுள்

நண்பர்கள் - காக்கும் கடவுள்

காதலி - அழிக்கும் கடவுள்😜

நச்வரி நாலுவரி V 3.4

தோல்வியின் அடையாளம் "தயக்கம்"
வெற்றியின் அடையாளம் "துணிச்சல்"
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை..

நச்வரி நாலுவரி V 3.5

தனுஷ்கோடி தமிழனே
தமிழ்நாட்டின் திருமகனே
இந்தியாவின் முடிசூடியவனே
இளைஞனின் கனவு நாயகனே!!!

**அப்துல் கலாமிற்கு அஞ்சலி**

நச்வரி நாலுவரி V 3.6

ராமேஸ்வரம் எம்ஐடி ஆசிரியர்
அணுவிஞ்ஞானி ஏவுகணை
அக்னி சிறகுகள் கனாகணுங்கள்
குடியரசு தலைவர் பாரத ரத்னா

அவரே *அப்துல் கலாம்*..

நச்வரி நாலுவரி V 3.7

அறிவினில் தலை சிறந்தவன்
அணு அணுவாய் சோதித்தவன்
அழியா பெருமையை சேர்த்தவன்
அழகிய தமிழ் மகன் கலாமவரே..

நச்வரி நாலுவரி V 3.8

கங்கை நதியின் நீரை விட
புனிதமானது
உழைக்கும் உந்தன் வியர்வை
துளி .. உழைப்போமா?

நச்வரி நாலுவரி V 3.9

மடியில் சாய்ந்து சோகத்தை
சொல்ல அன்னையிருந்தாலும்,
தோளில் சாய்ந்து சோகத்தை
சொல்ல நண்பன் இருந்தால் சோகம் கூட சுகமாகும்...

நச்வரி நாலுவரி V 4.0

மழை பேசினால்,
மண் வாசனை
பூ பேசினால்,
உன் யோசனை அன்பே!..


நச்வரி நாலுவரி V 4.1

நடுக் கடலிலும் சரி
நீரற்ற பாறையிலும் சரி
நம்பிக்கையுடன் மரம் வளரும்!!!
நாடிதளர்கிறாய் மனிதா நீ நம்பிக்கையிழந்து ஏன்?!

நச்வரி நாலுவரி V 4.2

மரணம் ஏற்படுவது
சுவாசிக்க மறக்கும்போது அல்ல
மனதில் நின்றவர்
நேசிக்க மறுக்கும்போது வருவது!

நச்வரி நாலுவரி V 4.3

வெறுப்புகளின்றி விருப்பில்லை..
துன்பங்களின்றி இன்பங்களில்லை..
கஷ்டங்களின்றி சுகமில்லை..
இதனைப் புரிந்தாலன்றி வாழ்க்கையில்லை..!

நச்வரி நாலுவரி V 4.4

வசந்தமாளிகை கட்டினார்கள்,
தாஜ்மகால் கட்டினார்கள்,
எல்லாம் தோல்வியின் அடையாளம்..
இதயக்கோயில் கட்டு நிச்சயம் வெற்றி..


நச்வரி நாலுவரி v 4.5

அவள் வருவாள் என்ற
அந்த ஒற்றை நிமிட
அழகான கனவுக்காக
அமைதியாய் உறங்க போகிறேன்!

நச்வரி நாலுவரி V 4.6

திங்கள் திகைத்து செவ்'வாய் பிளந்து
புதன் புரண்டு வியாழன் விக்கி பின்
வெள்ளி முளைத்து சனி நீங்கியதால்
ஞாயிறு விடுமுறை.. மகிழ்ச்சி!!!


நச்வரி நாலுவரி V 4.7

உனது மகிழ்ச்சி..
நீ நினைக்கும் இடத்தில் இல்லை
நீ இருக்கும் இடத்தில் உண்டு
புரிந்தால் மகிழ்ச்சி..

நச்வரி நாலுவரி V 4.8

அன்பே...

என் முதலும் நீ... என் முடிவும் நீ...
என் முழுதும் நீ... என் மூச்சும் நீ....
என் காதல் நீ.. என் கவிதை நீ..
என் வார்த்தை நீ.. என் வாழ்க்கை நீ..

நச்வரி நாலுவரி v 4.9

உடல் எடைக்கு, இதய ஓட்டத்திற்கு,
மகிழ்ச்சி கொள்ள, அழுத்தம் குறைய,
நரம்புகள் சீராக, ஞபாக சக்திக்கு,
உயிர் வாழ.. தூக்கம் அவசியம்

நச்வரி நாலுவரி V 5.0

அகந்தை, பொறாமை, வம்புகளை - தள்ளி வைப்போம்

புன்னகையை - நிலை நிறுத்துவோம்

அன்பை, அறிவை - வளர்ப்போம்

வெற்றிகளை - அடைய உழைப்போம் ..

நச்வரி நாலுவரி V 5.1

நாளை நாளை என்று
இருக்கும் நாட்களைக் கழிக்காதே!

காலம் கடந்து போனால்
வாழ்க்கை இனிக்காதே!

இன்றே நிஜம் நம்பிக்கை'வை
நச்வரி நாலுவரி V 5.2

சொல்லாத வார்த்தைகள் என்று
நண்பனிடம் ஒன்றும் இல்லை,
சொல்லுகிற வார்த்தைகள் எல்லாம்
கேட்கின்ற நண்பர்கள் போல் யாரும் இல்லை.!😏

நச்வரி நாலுவரி V 5.3

நம் சிந்தனைக்கும்
நம் செயலுக்கும் உள்ள தூரமே
நமக்கும்
நம் வெற்றிக்கும் உள்ள தூரம் ..!

நச்வரி நாலுவரி V 5.4

நரக வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
நட்பும் காதலும்தான்..
நட்பை சுவாசி! காதலை நேசி!

நச்வரி நாலுவரி V 5.4

நரகமான வாழ்க்கையிலும்
நம்மை வாழ சொல்லி வற்புறுத்துவது
உண்மையான நட்பும் காதலும்தான்..
நட்பை சுவாசி! காதலை நேசி!

நச்வரி நாலுவரி V 5.5

வானை அழகாக்க வரும் நிலவை
காண இரவு காத்திருப்பது போல்,
என் கனவை அழகாக்க வரும் அவள்
நினைவுகளுக்காக காத்துயிருக்கிறான்.

நச்வரி நாலுவரி V 5.6

உலகை மாற்ற
உன்னை மாற்றி விடு !!
உன்னை மாற்றி
உலகை மாற்றி விடு !!!

நச்வரி நாலுவரி V 5.7

உன் அறிவு.....
அடுத்தவர்களுக்கு உதவினால் அறிவியலாகிறது..
உனக்கு மட்டுமே உதவினால் ஆணவமாகிறது..
உன்னை அறிய உதவினால் உலகம் உனதாகிறது..


நச்வரி நாலுவரி V 5.8

இருக்கட்டும் கோடி நட்சந்திரங்கள் விண்ணில்,
இரவுக்கு அழகு வெண்ணிலவுதான்...!
இம்மண்ணில் பல உறவுகள் உலா வரட்டும்,
இருக்கும் வரை வாழ்க்கைக்கு அழகு நல்ல நண்பர்கள்தான்...!

நச்வரி நாலுவரி V 5.9

குறும்புதனமான குழந்தை நட்பு!!!
மீண்டும் வாழ துண்டும் மாணவ நட்பு!!!
கடைசிவரை மறக்காத கல்லூரி நட்பு!!!
வாழ்க்கை வாழ வாய்பொக்கை நட்பு!!!

நச்வரி நாலுவரி V 6.0

கற்பனையால் கவிதை பிறக்கும்...
கவிதையால் காதல் பிறக்கும்...
நல்ல நட்பால் மகிழ்ச்சி பிறக்கும்...
வாழ்க்கையில் எதையும் இழக்கலாம் நட்பை தவிர.!!!


 நச்வரி நாலுவரி V 6.1

பிறப்பில் கருவறை இறுதில் மனவறை
சொல்வது அன்பு செய்வது அக்கறை
ஆரம்பம் மடியில் முடிவு தோளில்
முதல் பாதி தாய்!! மீதி  நண்பன்!!

நச்வரி நாலுவரி V 6.2

அள்ளிக்கொடுக்கும் உறவு
சொல்லிக்கொடுக்கும் சொந்தம்
தன்னையே கொடுக்கும் காதல்
உயிரையும் கொடுக்கும் நட்பு..

நச்வரி நாலுவரி V 6.3

விடியும் என்று நம்பு,
வெளிச்சம் நிச்சியம் !!!
முடியும் என்று நம்பு,
வெற்றி நிச்சியம் !!!

நச்வரி நாலுவரி V 6.4

மெய் சாய்ந்தால் கருவோடு
பொய் சாய்ந்தால் தெருவோடு
கூன் சாய்ந்தால் நோக்காடு
ஊன் சாய்ந்தால் சுடுகாடு

நச்வரி நாலுவரி V 6.5

தோல்வி உன்னை தொடர்ந்து வரலாம்,
தொட்டு விட நினைத்தும் விடலாம்..
திரும்பி எட்டு வைத்து அதன் மீதேறு!!
தோல்வி ஓட, மாறும் வெற்றித் தேறு!!!


நச்வரி நாலுவரி V 6.6

உன்னை யாரும் ஏற்றிவிடுவார்கள்,
என எண்ணாதே!
நீயே ! எழக் கற்று கொள்!
அது தான் உன் வெற்றியின் முதற்படி..

நச்வரி நாலுவரி V 6.7

சிலை மேனி நீ
உளி கண்கள் நான்
செதுக்குகிறேன்..
அழகு பெண்ணாக நீ 👰

நச்வரி நாலுவரி V 6.8

பணமென்பது தீ போல,
மனமென்ற பஞ்சில் ஏற்றிவிட்டால்
குணமில்லா நம் தேகம்
கண பொழுதில் சாம்பல் ஆகிவிடும் ....

நச்வரி நாலுவரி V 6.9

ஆறில் எதிலும் விளையாட்டாய்!
இருபதில் எங்கும் தெனாவெட்டாய்!
நாற்பது முதல் அனுபவமொட்டாய்!
அறுபதில் யார்க்கும் எடுத்துக்காட்டாய்!

நச்வரி நாலுவரி V 7.0

மூச்சு விடாமல் இருக்க முடியுமா?
முயற்சி செய்து தோற்கிறேன்!!!
அன்பே.. உன்னை மறக்க முடியுமா?
நினைத்து நினைத்து பார்க்கிறேன்..!

நச்வரி நாலுவரி V 7.1

இன்றைய விடிவெள்ளி நீ!
நாளைய உலகம் நீ!
வருங்கால சரித்திரம் நீ !
எழு.. உன்னை செதுக்க!!

நச்வரி நாலுவரி V 7.2

ஒரு சொல் கவிதை அம்மா.
ஒரு சொல் சரித்திரம் அப்பா.
ஒரு சொல் அனுபவம் ஆசான்.
ஒரு சொல் அக்கறை நண்பன்.

நச்வரி நாலுவரி V 7.3

நத்தைக்கு கூடு சுமையா?
பறவைக்கு சிறகு சுமையா?
உனக்கு வாழ்க்கை சுமையா?
உணரு சுமையும் சுவையாகும் !


நச்வரி நாலுவரி V 7.5 (முற்றும்)

முடியாது என்ற வார்த்தையை
முடக்கி விட்டு,
முடியும் என்ற வார்த்தையோடு

முனைந்திடு.. உலகம் உன்னோடு!!!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...