நச்வரி நாலுவரி V 0.1
கோபம் கொண்டு
வாழ்பவன்,
சாபம் பெற்று
வாழ்பவன்.!
இன்பம் கண்டு
வாழ்பவன்,
துன்பம் இல்லா
வாழ்வான்.!!!
நச்வரி நாலுவரி V 0.2
இல்லாதவனுக்கு Ration rice
இருப்பவனுக்கு Basmathi rice
இடைபட்டவனுக்கு boil rice
இறந்ததும் பேதமில்லா Vaayil rice
(இதுதான் வாழ்க்கை)
நச்வரி நாலுவரி V 0.3
உனது கேள்விகுறிகளை???
உன்னுடைய உழைப்பால்..
உடனே கூன் நிமிர்த்தி,
உனகே
ஆச்சிரியகுறிகளாக்கு!!!
நச்வரி நாலுவரி V 0.4
நேற்றை தாரை
வார்த்தாய்!
நாளை
எதிர்நோக்குகின்றாய்!
இன்றே உனக்கு சொந்தம்!
இனிமையாய் செலவழி
தோழா!
நச்வரி நாலுவரி V 0.5
முயல்பவனுக்கு
தட்டிக்கொடு!
இயலாதவனுக்கு
விட்டுக்கொடு!
கேட்பவனுக்கு
சொல்லிக்கொடு!
வீழ்ந்தவனுக்கு
கைகொடு!
நச்வரி நாலுவரி V 0.6
குடிமக்களே
குடிமக்களே!
நேற்று கிள்ளிப்
பருகினாய்!
இன்று அள்ளிப்
பருகுகிறாய்!
நாளை கொல்லியில்
எரிந்திடுவாய்.. ஜாக்கிரதை!!!
நச்வரி நாலுவரி V 0.7
உழைப்பிற்கு ஒற்றடம்
ஓய்விற்கு சிறப்பிடம்
இயற்கையின் கொடை
வாழ்க்கையின் வரம்
" தூக்கம் "
நச்வரி நாலுவரி V 0.8
உள்ளத்தில்
துணிவிருந்தால்
முடிவில்
தெளிவிருந்தால்
செயலில்
உண்மையிருந்தால்
வாழ்க்கையில் என்றும் ஜெயமே..!!
நச்வரி நாலுவரி V 0.9
மலர் தூவி
பூசித்தேன்..
மெழுகேற்றி
பிராத்தித்தேன்..
மண்டியிட்டும்
பார்த்துவிட்டேன்!
யார் இறைவன்?
"நம் நம்பிக்கைதான்"
நச்வரி நாலுவரி V 1.0
நிலா வருகை உலகின்
மௌனம்..
ரணம் விலக மரண
ஒத்திகை..
உடல் உறங்கும் மனம்
உறங்காது..
கனவின் பிடியில்
இரவின் மடியில்..
நச்வரி நாலுவரி V 1.1
ஆறு இன்ச் நாக்கு
அடங்காம போச்சுனா
ஆறடி உடம்பு சீக்கிரம்
அடங்கிடும்
மண்ணுக்குள்ள..
நச்வரி நாலுவரி V 1.2
இமை விழிக்காதே
இதழ் சுழிக்காதே
இடை குலுக்காதே
இல்லாமல் போகிறேன்
அன்பே!!!
நச்வரி நாலுவரி V 1.3
தூங்கா விட்டால்
நாம் இரவை சுமப்போம்.!
தூங்கி விட்டால்
இரவு நம்மை
சுமக்கும்.!
நச்வரி நாலுவரி V 1.4
கதிரவனின் பார்வையில்
உனக்கென ஒரு நாள்
புன்னகையுடன் தொடங்கு
பூக்களாக மலரட்டும்
நச்வரி நாலுவரி V 1.5
வாழும் வாழ்க்கை...
சிலருக்கு வரையபட்ட
சித்திரம்.!
பலருக்கோ அது
விசித்திரம்.!!
எனினும்
நம்(பிக்)கையில் சரித்திரம்.!!!
நச்வரி நாலுவரி V 1.6
ஆடையின்றி
இருந்தபோதும்
அச்சமின்றி இருந்தோம்
கருவறையில்,
ஆடை அணிந்து இருந்தும்
அச்சத்துடன்
நடக்கின்றோம் தெருவில்..
இப்படிக்கு பெண்கள்.🙎
நச்வரி நாலுவரி V 1.7
நம் கையில் இருக்கலாம்
காலம் காட்டும்
கடிகாரம்
நம் கையில்
இருப்பதில்லை
காலம்! நம் காலம்!!
நச்வரி நாலுவரி V 1.8
உன் வாழ்க்கை உன்
பையில்
அது தொலையாமல்
பார்த்துகொள்
உயர்வும் தாழ்வும் உன்
கையில்
அது அழியாமல் நினைவில்
கொள்
நச்வரி நாலுவரி V 1.9
இரக்கமில்லை அவளிடம்
இருக்கவில்லை
அன்பின்'தடம்
இயலவில்லை மன'திடம்
இயக்கமில்லை என்னிடம்
நச்வரி நாலுவரி V 2.0
முயலாதவர்களை
வாழ்க்கையில் வாழ்த்திவிடு!
முடியாதவர்களை
வாழ்க்கையில் வாழவிடு!
முன்னேருபவனுக்கு
வாழ்க்கையில் வழிவிடு!
முன்னோடிகளை
வாழ்க்கையில் வழிபடு!
நச்வரி நாலுவரி V 2.1
கோயில்களில் இந்து
என்றார்கள்.
தேவாலயத்தில்
கிறிஸ்தவன் என்றார்கள்.
பள்ளிவாசலில்
இசுலாமியன் என்றார்கள்.
மதம் மனிதனாய்
பார்க்கவில்லை...
நச்வரி நாலுவரி V 2.2
திருட முடியாது
தொட கூடாது
கருப்பு வெள்ளை படம்
கனவு கூடாரம்
நச்வரி நாலுவரி V 2.3
விழுந்த இடத்தில்
எழுந்திடு
எழுந்த இடத்தில்
விதைத்திடு
விதை வளர்ந்து
விருட்சமாகிடு
விருட்சம் வானை
முட்டட்டும்!!!
நச்வரி நாலுவரி V 2.4
நிம்மதி தேடி
நிம்மதி தேடி
நிம்மதி தேடி
நிம்மதி இழந்தோம்😏
நச்வரி நாலுவரி V 2.5
இலக்கை நோக்கி
நகர்ந்திடு
இன்றே முயற்ச்சிக்க துணிந்திடு
தடை வந்தால்
தகர்த்திடு
தடுமாறினாலும் முயற்சி
செய்திடு
நச்வரி நாலுவரி V 2.6
நீ சைக்கிளாய்
நிற்காமல் ஓடுவதால்
அன்பே,
நான் நட்டுபோல்
கழறுகிறேன் அடிக்கடி!
நச்வரி நாலுவரி V 2.7
சாப்டியா என்று
கேட்கும்
உறவுகளை விட,
சாப்பிடுடா என்று உணவை
ஊட்டும் நண்பனே சிறந்தவன்..!
நச்வரி நாலுவரி V 2.8
கண்களை இன்னும்
மூடுகிறேன்
மூச்சை உள்ளே
இழுக்கிறேன்
தொல்லைகள் தவிர்த்து
மயங்குகிறேன்
ஞாயிறு விடுமுறை
என்பதால்..!
நச்வரி நாலுவரி V 2.9
வினை விதைத்தவன்
வினை அறுப்பான் அன்று.
விதை விதைத்த விவசாயி
கழுத்தறுத்து
கொள்கிறான் வாழ வழியின்றி இன்று..
நச்வரி நாலுவரி V 3.0
எதுவும் முயற்சிக்காத
போதே
தோல்வி கிடைக்குதே,
ஏதேனும் முயற்சி
செய்தால்
என்னவெல்லாம்
கிடைக்குமோ.?
நச்வரி நாலுவரி V 3.1
நாளையை நினைத்து
நேற்றை மறந்து
இன்றே உனது
என்பதை மறந்திடாதே
தோழா!
நச்வரி நாலுவரி V 3.2
இறக்க போகிறேன்,
என் இறுதி ஆசை
இதயமில்லாத அவளுக்கு
என் இதயம்
பொறுத்துங்கள்😅
நச்வரி நாலுவரி V 3.3
தாய் தந்தை -
கருவாக்கும் கடவுள்
ஆசான் - உருவாக்கும்
கடவுள்
நண்பர்கள் - காக்கும்
கடவுள்
காதலி - அழிக்கும்
கடவுள்😜
நச்வரி நாலுவரி V 3.4
தோல்வியின் அடையாளம்
"தயக்கம்"
வெற்றியின் அடையாளம்
"துணிச்சல்"
துணிந்தவர்
தோற்றதில்லை,
தயங்கியவர்
வென்றதில்லை..
நச்வரி நாலுவரி V 3.5
தனுஷ்கோடி தமிழனே
தமிழ்நாட்டின் திருமகனே
இந்தியாவின்
முடிசூடியவனே
இளைஞனின் கனவு
நாயகனே!!!
**அப்துல் கலாமிற்கு
அஞ்சலி**
நச்வரி நாலுவரி V 3.6
ராமேஸ்வரம் எம்ஐடி
ஆசிரியர்
அணுவிஞ்ஞானி ஏவுகணை
அக்னி சிறகுகள்
கனாகணுங்கள்
குடியரசு தலைவர் பாரத
ரத்னா
அவரே *அப்துல்
கலாம்*..
நச்வரி நாலுவரி V 3.7
அறிவினில் தலை
சிறந்தவன்
அணு அணுவாய்
சோதித்தவன்
அழியா பெருமையை
சேர்த்தவன்
அழகிய தமிழ் மகன்
கலாமவரே..
நச்வரி நாலுவரி V 3.8
கங்கை நதியின் நீரை
விட
புனிதமானது
உழைக்கும் உந்தன்
வியர்வை
துளி .. உழைப்போமா?
நச்வரி நாலுவரி V 3.9
மடியில் சாய்ந்து
சோகத்தை
சொல்ல
அன்னையிருந்தாலும்,
தோளில் சாய்ந்து
சோகத்தை
சொல்ல நண்பன்
இருந்தால் சோகம் கூட சுகமாகும்...
நச்வரி நாலுவரி V 4.0
மழை பேசினால்,
மண் வாசனை
பூ பேசினால்,
உன் யோசனை அன்பே!..
நச்வரி நாலுவரி V 4.1
நடுக் கடலிலும் சரி
நீரற்ற பாறையிலும் சரி
நம்பிக்கையுடன் மரம்
வளரும்!!!
நாடிதளர்கிறாய் மனிதா
நீ நம்பிக்கையிழந்து ஏன்?!
நச்வரி நாலுவரி V 4.2
மரணம் ஏற்படுவது
சுவாசிக்க
மறக்கும்போது அல்ல
மனதில் நின்றவர்
நேசிக்க மறுக்கும்போது
வருவது!
நச்வரி நாலுவரி V 4.3
வெறுப்புகளின்றி
விருப்பில்லை..
துன்பங்களின்றி
இன்பங்களில்லை..
கஷ்டங்களின்றி
சுகமில்லை..
இதனைப் புரிந்தாலன்றி
வாழ்க்கையில்லை..!
நச்வரி நாலுவரி V 4.4
வசந்தமாளிகை
கட்டினார்கள்,
தாஜ்மகால்
கட்டினார்கள்,
எல்லாம் தோல்வியின்
அடையாளம்..
இதயக்கோயில் கட்டு
நிச்சயம் வெற்றி..
நச்வரி நாலுவரி v 4.5
அவள் வருவாள் என்ற
அந்த ஒற்றை நிமிட
அழகான கனவுக்காக
அமைதியாய் உறங்க
போகிறேன்!
நச்வரி நாலுவரி V 4.6
திங்கள் திகைத்து
செவ்'வாய் பிளந்து
புதன் புரண்டு வியாழன்
விக்கி பின்
வெள்ளி முளைத்து சனி
நீங்கியதால்
ஞாயிறு விடுமுறை..
மகிழ்ச்சி!!!
நச்வரி நாலுவரி V 4.7
உனது மகிழ்ச்சி..
நீ நினைக்கும்
இடத்தில் இல்லை
நீ இருக்கும் இடத்தில்
உண்டு
புரிந்தால்
மகிழ்ச்சி..
நச்வரி நாலுவரி V 4.8
அன்பே...
என் முதலும் நீ... என்
முடிவும் நீ...
என் முழுதும் நீ...
என் மூச்சும் நீ....
என் காதல் நீ.. என்
கவிதை நீ..
என் வார்த்தை நீ.. என்
வாழ்க்கை நீ..
நச்வரி நாலுவரி v 4.9
உடல் எடைக்கு, இதய
ஓட்டத்திற்கு,
மகிழ்ச்சி கொள்ள,
அழுத்தம் குறைய,
நரம்புகள் சீராக, ஞபாக
சக்திக்கு,
உயிர் வாழ.. தூக்கம்
அவசியம்
நச்வரி நாலுவரி V 5.0
அகந்தை, பொறாமை,
வம்புகளை - தள்ளி வைப்போம்
புன்னகையை - நிலை
நிறுத்துவோம்
அன்பை, அறிவை -
வளர்ப்போம்
வெற்றிகளை - அடைய
உழைப்போம் ..
நச்வரி நாலுவரி V 5.1
நாளை நாளை என்று
இருக்கும் நாட்களைக்
கழிக்காதே!
காலம் கடந்து போனால்
வாழ்க்கை இனிக்காதே!
இன்றே நிஜம்
நம்பிக்கை'வை
நச்வரி நாலுவரி V 5.2
சொல்லாத வார்த்தைகள்
என்று
நண்பனிடம் ஒன்றும்
இல்லை,
சொல்லுகிற வார்த்தைகள்
எல்லாம்
கேட்கின்ற நண்பர்கள்
போல் யாரும் இல்லை.!😏
நச்வரி நாலுவரி V 5.3
நம் சிந்தனைக்கும்
நம் செயலுக்கும் உள்ள
தூரமே
நமக்கும்
நம் வெற்றிக்கும் உள்ள
தூரம் ..!
நச்வரி நாலுவரி V 5.4
நரக வாழ்க்கையில்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
நட்பும் காதலும்தான்..
நட்பை சுவாசி! காதலை
நேசி!
நச்வரி நாலுவரி V 5.4
நரகமான வாழ்க்கையிலும்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
உண்மையான நட்பும்
காதலும்தான்..
நட்பை சுவாசி! காதலை
நேசி!
நச்வரி நாலுவரி V 5.5
வானை அழகாக்க வரும்
நிலவை
காண இரவு
காத்திருப்பது போல்,
என் கனவை அழகாக்க
வரும் அவள்
நினைவுகளுக்காக
காத்துயிருக்கிறான்.
நச்வரி நாலுவரி V 5.6
உலகை மாற்ற
உன்னை மாற்றி விடு !!
உன்னை மாற்றி
உலகை மாற்றி விடு !!!
நச்வரி நாலுவரி V 5.7
உன் அறிவு.....
அடுத்தவர்களுக்கு
உதவினால் அறிவியலாகிறது..
உனக்கு மட்டுமே
உதவினால் ஆணவமாகிறது..
உன்னை அறிய உதவினால்
உலகம் உனதாகிறது..
நச்வரி நாலுவரி V 5.8
இருக்கட்டும் கோடி
நட்சந்திரங்கள் விண்ணில்,
இரவுக்கு அழகு
வெண்ணிலவுதான்...!
இம்மண்ணில் பல உறவுகள்
உலா வரட்டும்,
இருக்கும் வரை
வாழ்க்கைக்கு அழகு நல்ல நண்பர்கள்தான்...!
நச்வரி நாலுவரி V 5.9
குறும்புதனமான குழந்தை
நட்பு!!!
மீண்டும் வாழ துண்டும்
மாணவ நட்பு!!!
கடைசிவரை மறக்காத
கல்லூரி நட்பு!!!
வாழ்க்கை வாழ
வாய்பொக்கை நட்பு!!!
நச்வரி நாலுவரி V 6.0
கற்பனையால் கவிதை
பிறக்கும்...
கவிதையால் காதல்
பிறக்கும்...
நல்ல நட்பால்
மகிழ்ச்சி பிறக்கும்...
வாழ்க்கையில் எதையும்
இழக்கலாம் நட்பை தவிர.!!!
நச்வரி நாலுவரி V 6.1
பிறப்பில் கருவறை
இறுதில் மனவறை
சொல்வது அன்பு செய்வது
அக்கறை
ஆரம்பம் மடியில்
முடிவு தோளில்
முதல் பாதி தாய்!!
மீதி நண்பன்!!
நச்வரி நாலுவரி V 6.2
அள்ளிக்கொடுக்கும்
உறவு
சொல்லிக்கொடுக்கும்
சொந்தம்
தன்னையே கொடுக்கும்
காதல்
உயிரையும் கொடுக்கும்
நட்பு..
நச்வரி நாலுவரி V 6.3
விடியும் என்று நம்பு,
வெளிச்சம் நிச்சியம்
!!!
முடியும் என்று நம்பு,
வெற்றி நிச்சியம் !!!
நச்வரி நாலுவரி V 6.4
மெய் சாய்ந்தால்
கருவோடு
பொய் சாய்ந்தால்
தெருவோடு
கூன் சாய்ந்தால்
நோக்காடு
ஊன் சாய்ந்தால்
சுடுகாடு
நச்வரி நாலுவரி V 6.5
தோல்வி உன்னை
தொடர்ந்து வரலாம்,
தொட்டு விட நினைத்தும்
விடலாம்..
திரும்பி எட்டு வைத்து
அதன் மீதேறு!!
தோல்வி ஓட, மாறும்
வெற்றித் தேறு!!!
நச்வரி நாலுவரி V 6.6
உன்னை யாரும்
ஏற்றிவிடுவார்கள்,
என எண்ணாதே!
நீயே ! எழக் கற்று
கொள்!
அது தான் உன்
வெற்றியின் முதற்படி..
நச்வரி நாலுவரி V 6.7
சிலை மேனி நீ
உளி கண்கள் நான்
செதுக்குகிறேன்..
அழகு பெண்ணாக நீ 👰
நச்வரி நாலுவரி V 6.8
பணமென்பது தீ போல,
மனமென்ற பஞ்சில்
ஏற்றிவிட்டால்
குணமில்லா நம் தேகம்
கண பொழுதில் சாம்பல்
ஆகிவிடும் ....
நச்வரி நாலுவரி V 6.9
ஆறில் எதிலும்
விளையாட்டாய்!
இருபதில் எங்கும்
தெனாவெட்டாய்!
நாற்பது முதல்
அனுபவமொட்டாய்!
அறுபதில் யார்க்கும்
எடுத்துக்காட்டாய்!
நச்வரி நாலுவரி V 7.0
மூச்சு விடாமல் இருக்க
முடியுமா?
முயற்சி செய்து
தோற்கிறேன்!!!
அன்பே.. உன்னை மறக்க
முடியுமா?
நினைத்து நினைத்து
பார்க்கிறேன்..!
நச்வரி நாலுவரி V 7.1
இன்றைய விடிவெள்ளி நீ!
நாளைய உலகம் நீ!
வருங்கால சரித்திரம்
நீ !
எழு.. உன்னை செதுக்க!!
நச்வரி நாலுவரி V 7.2
ஒரு சொல் கவிதை அம்மா.
ஒரு சொல் சரித்திரம்
அப்பா.
ஒரு சொல் அனுபவம்
ஆசான்.
ஒரு சொல் அக்கறை
நண்பன்.
நச்வரி நாலுவரி V 7.3
நத்தைக்கு கூடு
சுமையா?
பறவைக்கு சிறகு
சுமையா?
உனக்கு வாழ்க்கை
சுமையா?
உணரு சுமையும்
சுவையாகும் !
நச்வரி நாலுவரி V 7.5 (முற்றும்)
முடியாது என்ற
வார்த்தையை
முடக்கி விட்டு,
முடியும் என்ற
வார்த்தையோடு
முனைந்திடு.. உலகம்
உன்னோடு!!!
No comments:
Post a Comment