Wednesday, October 11, 2017

SUMMA PADINGA BOSS KAVITHAI VERSIONS

சும்மா படிங்க Boss v 1.1

முடியுமென்று முயன்றிடு
முதல் படியில் இருக்கலாம் அவமானம்!!!
முடிந்த வரையில் போராடு
முடிவுப் படியில் தெரியலாம் தொடு வானம்!!!


சும்மா படிங்க Boss v 1.0

தொடுக்க தொடுக்க மலரும் அரும்பு
கொடுக்க கொடுக்க நிறையும் செல்வம்
தடுக்க தடுக்க தீரும் வம்பு
எடுக்க எடுக்க வளரும் அன்பு
பிடிக்க பிடிக்க கிடைக்கும் தன்னம்பிக்கை
படிக்க படிக்க விளங்கும் உன்னை
தெரிக்க தெரிக்க தோற்க்கும் தோல்வி
சிரிக்க சிரிக்க தொடரும் வாழ்க்கை


சும்மா படிங்க Boss v 1.3

தாயின் வரம்
உலகத்தை காண முடியும்

தந்தையின் வரம்
உலகத்தை அறிய முடியும்

ஆசானின் வரம்
நல்ஒழுக்கத்தை பெற முடியும்

அன்பின் வரம்
கடவுளை காண முடியும்

காதலின் வரம்
மரணவலியை பெற முடியும்

கனவின் வரம்
காரியம் மெய்பட முடியும்

உடன்பிறப்பின் வரம்
பாசத்தை பகிர முடியும்

உறவுகளின் வரம்
உரிமைகளை காட்ட முடியும்

ஆனா

நட்பின் வரம் மட்டும் தான்
சமத்துவத்தை உணர முடியும்


சும்மா படிங்க Boss v 1.6

ஆதியும் அந்தமும் நீயே
அனைத்து மொழிகளுக்கும் தாயே!!!

பழமையும் புதுமையும் நீயே
பார் வியக்கும் தாயே!!!

உயிரும் உணர்வும் நீயே
உரக்க கூவிடுவேன் தாயே!!!

இயலும் இசையும் நீயே
இயல்பாய் இருந்திடுவாய் தாயே!!!

பூரிப்பும் புன்னகையும் நீயே
புரிய வைத்த தாயே!!!

மானமும் மரபும் நீயே
மாணிக்கமாய் ஜொலிக்கும் தாயே!!!

எல்லா தலைமுறைக்கும் நீயே
என்றும் அழியாமை தாயே!!!

மொழியும் மௌனமும் நீயே
மொத்தமும் நீதான் தாயே!!!

தொல்காப்பியம் கண்டவள் நீயே
தொன்மைக்கு சொந்தகாரி தாயே!!!

எண்ணில் அடங்கா  இலக்கியம் கொண்டவள் நீயே
எல்லா மொழிக்கும் எல்லை தாயே!!!

என்னுயிர் வரை துதிப்பது நீயே
அன்னை தமிழ் தாயே!!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💥🎉


 சும்மா படிங்க Boss v 1.7

இன்று முதலாவது..

தமிழை தாய்மொழி உணர்வோம்
தமிழை தமிழாக உச்சரிப்போம்
தமிழனிடம் தமிழால் பேசுவோம்
தமிழனாய் பெருமை கொள்வோம்
தமிழை உலகம் பரப்புவோம்
தமிழே என்றும் அடையாளம்
தமிழால் தான் தமிழனே உனது உயர்வாகும்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


சும்மா படிங்க Boss v 1.8

பெருமை சேர்ப்பதை விடுத்து
பெயருக்காக வாழ்வது ஏனடா??
அர்த்தமுள்ள உலகில்
அர்த்தமில்லா வாழ்க்கை ஏனடா??
படைப்புகள் பலதில் உன்
பயன் அறியாமை ஏனடா??
உனது உள்ளத்திற்க்கும்
உன் எண்ணத்திற்க்கும் இடைவெளி ஏனடா??

உள்ளம் சிகரம்
எண்ணம் அதில் அகரம்
மாசற்ற மனதில்
தூசற்ற எண்ணங்களால்
வெற்றி பெறலாம் மானுடா!!!



No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...