Wednesday, October 18, 2017

அடடே Kavithai Versions Part 1

அடடே V 0.1

முடியாது என்று முடங்கினால்
விடியாது வாழ்க்கை..!!!

 அடடே V 0.2

கப்பல் கவிழாது
நீர் உள்புகும் வரை,
வாழ்க்கை சலிக்காது
பேராசை உள்புகும் வரை..!!!


அடடே V 0.3

நாளை நாளை என்று
நாளை கடத்தாதே,
நாளை என்பதே இந்த
நொடியின் பிரதிபலிப்புதான்!!!


 அடடே V 0.4

அன்பை
மதிப்போம்!
புன்னகையை
நிலைநிறுத்துவோம்!
அகந்தையை
அழிப்போம்!
அறிவை
வளர்ப்போம்!
வம்புகளை
உதாசீனபடுத்துவோம்!
பொறாமைகளை
தள்ளிவைப்போம்!
வெற்றிகளை அடைய
உழைப்போம்!!


அடடே V 0.5

என்னிடம் தஞ்சம் புகுந்து
எங்கும் பறந்து
எதையும் கற்று
எதிலும் வென்று
எதிர்வந்த அரசுப்பணியை
ஏற்று, இன்று
என்னையே புறக்கணிக்கும்
எல்லோரும் அன்றைய
என் மாணவர்கள் தான்
என்று நினைத்து நினைத்து
ஏங்குகிறது அரசுப்பள்ளி.!


அடடே V 0.6

நேற்று என்னை அழித்தார்கள்!

இன்று அழித்தவர்கள் அழிகிறார்கள்!

நாளை உலகமே அழியலாம்!

உலகை காக்க என்னை
வளருங்கள் வாழவிடுங்கள்!

எச்சரிக்கிறது மரங்கள்!!


அடடே V 0.7

பொறாமை
இயலாமை
தாளாமையை தள்ளு.!

அறியாமை
ஆற்றாமை
முயலாமையை முறியடி.!

தீமை
தீண்டாமை
மடமையை ஒதுக்கு.!

புதுமை புகுத்து.!
நன்மையை செய்.!
நெஞ்சில் உறுதியும்
பணியில் நேர்த்தியும்
விடா முயற்சியும் கொள்ள
வெற்றி நிச்சயம்!


அடடே V 0.8

நீர் இன்றி இன்று
நாங்கள் அழிகின்றோம்!
நாளை நாங்கள் இன்றி
நாடே அழியப்போகின்றது!
நலம் பெற இன்றே
நடவடிக்கை எடு அரசே!

இப்படிக்கு

நமக்கு சோறு போடும் விவசாயி!!!



அடடே V 0.9

ஆயிரம் நடக்கட்டும்
ஆனது ஆகட்டும்
ஆவென ஓவென சிரி
ஆடிடும் ஓடிடும் துக்கம்!
ஆகாயம் ஓடிவரும் பக்கம்!!



அடடே V 1.0

பலரை பதம் பார்க்கும்
பாவமென பார்க்காது
பழி தீர்த்து
பாதுகாப்பான இடத்தில்
பதுக்கிக் கொள்ளும்

- கூர்மை நாக்கு.!😝



அடடே V 1.1

தொலைக் காட்சிகளிலும் 
தொடு திரைகளிலும்
தொலைத்தொடர்புகளிலும்
தொலைந்து போய் கொண்டிருக்கும்

இன்றைய சமுதாயம் 😳

மறந்து போனா பரவாயில்லை
மரத்து போய் ச்ச்ச்சே

விழிப்போமா?!



அடடே V 1.2

இவ்வுலகையே ஆளும் சூரியன்
இரவில் நிலவிடம் தோற்கும்
அதுபோலதான் நிலவும்.!
மனிதா நம் வாழ்க்கையில்
வெற்றி தோல்வி என்பது வரும் போகும்.

வெற்றி வந்தால் ஏற்றுக்கொள்!
தோல்வி வந்தால் கற்றுக்கொள்!


அடடே V 1.3

மனம் எவ்வளவோ அவ்வளவே
மானம் காக்கப்படும்
வானமும் வசப்படும்!



அடடே V 1.4

மதுவும் தோற்றுப்போனது
மாது அவள் பார்த்ததினால்!


அடடே V 1.5

மனதில் நம்பிக்கை
இருந்தாலும் சரி
மன தில் நம்பி
இருந்தாலும் சரி
வெற்றி நிச்சயம்!


அடடே V 1.6
           
மீண்டும் உள்நுழைய
முடியாத இடம் கருவறை
மீண்டு வெளிவர
முடியாத இடம் கல்லறை
இடைப்பட்ட தூரம் வரும்
இன்னல்களில் இருந்து
மீண்டும் மீண்டும் எழுந்து
போராடுவதே வாழ்க்கை!


அடடே V 1.7

தெரிந்து கொள் பலத்தை!
அறிந்து கொள் பலவீனத்தை!
மறந்துவிடு குறைகளை!
துறந்துவிடு ஆசைகளை!
சிறிதாக்கு பிறர்குறையை!
பெரிதாக்கு மனநிறைவை!
வளர்த்துக்கொள் நம்பிக்கையை!
கற்றுக்கொள் பாராட்ட!
பெற்றுக்கொள் அறிவை!
நல்லவற்றை அதிகம்செய்!
நன்றியை அதிகம்சொல்!
நேசி இயற்கையை!
வாசி வாழ்க்கையை!



அடடே V 1.8

சுத்தம் செய்ய குப்பைகளை
கிளறி எறிந்தேன்
மனிதன் தெரிந்தான்.
சரி மனித குப்பைகளை
அகற்றலாம் என முற்பட்டேன்
உலகத்தையே காணவில்லை!

(அவ்ளோ குப்பை
மனிதன் மனசு😝)



அடடே V 1.8

என்...
முதல் கடவுள்
முதல் பாசம்
முதல் பயம்
முதல் புத்தகம்
முதல் ஆசான்
முதல் அறிவு
முதல் நாயகன்
முதல் வசந்தம்
முதல் சண்டை
முதல் கனவு
முதல் நடத்தை
முதல் உலகம்

என்றும் என் தந்தைக்கு..
முதல் வணக்கம்🙏🏿🙏🏿🙏🏿



அடடே V 1.8.1

அவர் பிறப்பில் ஏழைதான்

அவர் குறைவா படிச்சவர்தான்

அவர் ருசியா சாப்பிடலதான்

அவர் எப்பவும் திட்டுபவர்தான்

அவர் கொஞ்சம் கடுமையானவர்தான்

அவர் பெரிய மீசைகாரர்தான்

அவர் குடும்பத்துக்காகவே உழைத்தவர்தான்

அவர் தன்னையே தந்தவர்தான்

அவர் எப்படியோ
இருந்தாலும் வாழ்ந்தாலும்
நம்மை இளவரசியாவும்
இளவரசனாவும் வளர்த்து
வாழவைத்தவர்
நம் "அப்பா"!



அடடே V 1.8.2

கருவறை முதல்
பிரசவ அறை வாசல் வரை
தாயின் வலி.!
பிரசவ அறை முதல்
கரை சேரும் வரை
தந்தையின் வலி.!

தாயின் வலி
போற்றப்படுகின்றது!
தந்தையின் வலி
மறைக்கப்படுகிறது!?



அடடே V 1.8.3

அப்பா..

உன் எச்சை
எனக்கு தந்தது உருவம்!
உன் பிச்சை
எனக்கு தந்தது வாழ்க்கை!



அடடே V 1.8.4

இரத்தத்தை பாலாக்கி
ஊட்டுபவள் அம்மா.!

இரத்தத்தை உழைப்பாக்கி
உழைப்பை வியர்வையாக்கி
வியர்வையை காசாக்கி 
காசை உணவாக்கி 
உணவை தந்து
பசியை போக்கும் இறைவன்தான் நம் தந்தை!



அடடே V 1.8.5

நாம் வேண்டாமலே 
நமக்கு வேண்டியதை 
நம் எண்ணம் புரிந்து
நமக்கு வாங்கிதந்து
நமக்காய் வாழும்
நம் கடவுள் "அப்பா "



அடடே V 1.8.6

'ள்ளித்தர ஒன்றும்  இல்ல
'னா அன்பை கிள்ளித் தரால. 
'ல்லனு சொன்னதில்ல
'டுஇணை உனக்கில்ல
'லகம் அறிய வச்ச
'ர் மெச்ச செய்ய வச்ச
'ன் எதிர்காலம் பற்றி 
யோசிப்பதிலும்
'ன் இப்படி என அதட்டுவதிலும்
'யங்கள் தீர்ப்பதிலும் 
'ழுக்காய் இரு என்பதிலும்
'ங்கி வளர நினைப்பதிலும்
'டதம் கொடுப்பதிலும்
அஃ'து அப்பா அப்பப்பா அவர் மிகப்பெரிய ஆச்சரியமப்பா!



அடடே V 1.9

விடு விடு 
கஷ்டத்தை விடு !
தடு தடு
அநியாயங்களை தடு!
நடு நடு
மரங்களை நடு!
எடு எடு 
விரும்பியதை எடு !
நாடு நாடு
அறிவை நாடு!
தொடு தொடு 
உயரத்தை தொடு !
கொடு கொடு 
மதிப்புக் கொடு !
ஓடு ஓடு 
கடிகார முள்ளாய் ஓடு !
தேடு தேடு
வாழ்வை உன்னில் தேடு!


 அடடே V 2.0

தேடி தேடி அலையுறான்
பாடி பாடி திரியுறான்
நாடி நாடி போகுறான்
கூடி கூடி பேசுறான்
ஆடி ஆடி தள்ளாடுறான்
வேண்டி வேண்டி நிக்குறான்

ஓடி ஓடி உழைக்குறான்

எல்லாம் இந்த

ஒரு ஜான் வயித்துக்காக!



 அடடே V 2.1

காலம் எல்லோருக்கும் பொதுவானது 
அது பாராபட்சம் பார்ப்பதில்லை 

விடாமுயற்சியுடன் 
தொடருபவன்
அனுபவசாலி !

தன் கையில் வைத்திருப்பவன்
புத்திசாலி  !

செய்வதறியா வீனடிப்பவன்
பித்தன் !

பயன்படுத்த தெரியாதவன்
மூடன்  !

சரியாக உபயோகித்தவன் 
வெற்றியாளன் !

Ram'jhon vazhththugal
Islam சகோதரர்களே



அடடே v 2.2

உங்களிடம் அன்பாய் இருந்து
தொலைந்தவர்களை நினைவில்
வைத்து தேடுங்கள் தவறல்ல
ஆனால்
அன்பாய் நடித்து பழகி
ஒளிந்து கொள்பவர்களை
எதற்காகவும் நாடாதீர்கள்.!



அடடே v 2.3

உன் குறைகளை 
ஏற்று கொள்
அல்லது
ஒப்புக்கொள்.

அதுவே
நீ திருந்தவும்
நீ முன்னேறவும் 
நீ எடுக்கும் 
முதல் முயற்சி!



அடடே v 2.4

ஆசை வேண்டாம்
அன்பு போதும்! 
பணிவு வேண்டாம்
பாசம் போதும்! 
கருணை வேண்டாம்
கனிவு போதும்!
கலவி வேண்டாம்
காதல் போதும்!
பூக்கள் வேண்டாம்
புன்னகை போதும்!
உரிமை வேண்டாம்
உண்மை போதும்! 
உணர்வு வேண்டாம்
உறவே போதும்! 
சொத்து வேண்டாம்
செல்லம் நீ போதும்!

அடியே புள்ள

எதுவும் வேண்டாம்
நீ நீயே போதும்!!



அடடே V 2.5

உழைத்துப் பார்! 
உடல் களைப்பாரும்!
உழைத்துப் பார்! 
மனம் இளைப்பாறும்!!
உழைத்துப் பார்! 
வியர்வை முத்தாகும்!!
உழைத்துப் பார்! 
எண்ணம் வித்தாகும்!!
உழைத்துப் பார்! 
உண்மை துணைநிற்கும்!!
உழைத்துப் பார்! 
உன்னை பிடிக்கும்!!
உழைத்துப் பார்! 
பொழுதுகள் பொய்யாகும்!!
உழைத்துப் பார்! 
கனவுகள் மெய்யாகும்!!
உழைத்துப் பார்! 
உயர்வே ஊதியமாகும்!!
உழைத்துப் பார்! 
உலகமே உனைபார்கும்!!
உழைத்துப் பார்! 
வாழ்க்கை வசமாகும்!!



அடடே v 2.6

வெற்றுக்காகிதம் தான் நம் வாழ்க்கை,
வெறும் கையில் முழம் போடாதே,
வென்று காட்ட அதில் வண்ணம் தீட்டு,
வெற்றியோடு வாழ்க்கையை ஓவியமாக்கு!!



 அடடே V 2.7

நகமும் சதையும் போலதான்
இன்பமும் துன்பமும் 
நம் வாழ்க்கையோடு!

என்ன ஆனாலும்
புன்னகைக்க மறவாதே.

துன்பத்திலும் புன்னகைப்பதே
ஆறாம் அறிவு.! 
புன்னகைக்க மறந்தால் 
நாம் மனிதர்கள் அல்ல.!!😬



அடடே v 2.8

அன்பே..

நீ மலரா?
நின் வாசம் நீங்கவில்லை!
நீ நிலவா
நின் ஒளியில் கலங்கமில்லை!
நீ தீயா
நின் கோபம் சுடவில்லை!
நீ நீரா
நின் தாகம் தீரவில்லை!
நீ காற்றா?
நின் தென்றல் ஓயவில்லை!
நீ நிழலா?
நின் தொடர்ச்சி நிற்கவில்லை!
நீ உயிரா
நின் உயிரில்லா நானில்லை!
நீ நானா?
நீ நீயென ஆனேன் நான்!




அடடே V 2.9

நீ விரும்பும் வாழ்க்கை
உன்னுடன் தான் உள்ளது

அதை யாருக்காகவும்

கொடுத்து கண்ணீர்
சிந்தி நிற்காதே! 

பிறரிடம் தான் உள்ளதென்று
புலம்பி கிடக்காதே!

வாழ்வில் வரும் தோல்விகளை 
கண்டு வாழ்வை தொலைத்துவிடாதே! 

தோல்விகள் என்பது
வாழ்வின் ஒரு பக்கம்
அதை நினைத்து
கண்ணீர் விட்டு 
உன் தனித்தன்மையை
இழந்து நிற்காதே! 

தோல்வியை தாங்கி கொள்!
வாழ்க்கையை அறிந்து கொள்!!👍




அடடே V 3.0

நாளுக்கு நாள் நமக்கு
நாடி தளர்ந்தாலும்
நமக்குள்
இன்றும்
இளமையாகதான்
இருக்கின்றது காதல்!

(பின்ன நமக்குதானே வயசாகுது
காதல் என்றும் புதுமையாகுது)



அடடே V 3.1

நேற்று போயேபோச்சு😐
நாளை யாருக்கு தெரியும்😜
இன்று
இனிதாய்
இருந்திட செய்வோம் 😃



அடடே V 3.2

நியூட்டனின் தலையில்
ஆப்பிள் விழுந்ததால்
பிறந்தது புதிய விதி..

புத்தனின் தலையில்
ஞானம் வந்ததால்
பிறந்தது பல தத்துவம்..

விழந்த போது அவர்களுக்கு
எப்படி இருந்திருக்குமோ

தெரியாது 

ஆனால் இரண்டும்
சேர்ந்து விழுந்தது போல 
புரிந்தும் புரியாதது போல
ஒரு குழப்பமும் ஒரு தெளிவுமாய்

இன்றைய மனிதர்கள்
சதி என்றும்
விதி என்றும்
அலைகின்றார்கள் பலர்😳



அடடே V 3.4

உனது அன்பை
உண்மையென புரியாது
உதறி சென்றவருக்காக 
உன் வாழக்கையை வெறுத்து
உள்ளம் உடைந்த போய்
நிற்காதே.! 

உனக்காகவே வாழும்
பெற்றோர்க்காகவும்

உண்மையாய் வாழும்
நண்பர்களுக்காகவும்

(உயிராய் நினைக்கும்
மனைவி மக்களுக்காகவும்)

வாழு!! நலம் பேணு!!



அடடே V 3.5

யாரை நம்புவது

யாரிடம் அன்பு காட்டுவது

யாரை யாசிப்பது

என்பதை

யாவும் இழந்த பிறகுதான் 

யாதென வாழ்க்கை என

யாவரும் தெரிந்து கொள்கின்றோம்.!😀



அடடே V 3.6

நேற்று..
உன்னை பார்த்ததும்
வார்த்தைகள் மறந்து
தடுமாறியது இதழ்💋

இன்று..
உன்னை மீண்டும்
பார்க்க ஏங்குது
இமைமூடா கண்கள்😳

நாளை..
உன்னை நிலைநிறுத்த
இடஒதுக்கீடு செய்து
தீர்மானிக்கிறது இதயம்💚




அடடே V 3.7

அன்பே..

உன்னை விட அழகில்லை
உன்னை விட உயர்வில்லை
உன்னை விட மனமில்லை
உன்னை விட எண்ணவில்லை
உன்னை விட ஏதுமில்லை
உன்னை விட போவதில்லை
உன்னை விட போக்கில்லை
உன்னை விட வழியில்லை
உன்னை விட
வாழ்க்கையில்லை!
உன்னை விட்டால்
வாழ்க்கையே இல்லை!!



அடடே V 3.8

AtmQueue
BarQueue
CheckpostQueue
Doctorகிட்ட Queue
EmploymentQueue
Freeனா Queue
God'ukku Queue
HOtelQueue
Imageக்காக Queue
JailQueue
KFCQueue
Live பார்க்க Queue
MallQueue
NaturalsQueue
Offerனா Queue
PoliticsQueue
RationQueue
School admissionQueue
TheatreQueue
Ungal வங்கில Queue 
VotingQueue
Waddi கடைல Queue
Xerox கடைல Queue
Yellathuலயும் Queue
Zoottu vidurathuQueue

இப்படி எல்லாத்துலேயும்
உலக தர'வரிசையில
இன்னும் நாம
பின்தங்கி Queueல தான்
நிற்கின்றோம்😒😉




அடடே v 3.9

இல்லாத ஒன்றை
இருப்பதாக எண்ணி
இருக்கும் நேரங்களை
இல்லாது செலவழித்து
இரந்து நிற்பர் முட்டாள்.

இருப்பது உன்னிடமே
இதோ நீ தேடும்
இன்பம் நிம்மதி மகிழ்ச்சி!



அடடே V 4.0

எல்லாம் வல்லவனே 

எங்கும் இருப்பவனே

எந்தன் பரம்பொருளே

எங்கே சென்றாய் நீ ?

பகையில் மக்கள்

பதட்டத்தில் மக்கள்

பயத்தில் மக்கள்

பரிதாபத்தில் மக்கள்

பஞ்சத்தில் மக்கள்

பகடையில் மக்கள்

பன்(ண)முக மக்கள்

பாரத்தில் மக்கள்

பசியோடு மக்கள்

காத்திருக்க 

சிவனே இயேசுவே அல்லாவே
உன் பாதுகாத்துக் கொள்ள 

வஞ்சகம் புகுந்தாயோ
கோவில் சர்ச் மசூதி
கருவறையினுள்!???



அடடே V 4.1

வெற்றி'ங்கிறது
பிறர் விட்டு கொடுத்து
வருவது அல்ல,

உழைப்பால்
நேர்மையால்
பிறருக்கு தீங்கில்லா
விட்டு கொடுக்காமல்
அடைவது.!



அடடே V 4.2

கோபம் வரும் போது
பொறுமையும் 
பொறுமையில்
தனிமையும் 
தனிமையில்
சிந்திப்பதும்
சிந்தனையில்
நற்சிந்தனையும் 
கடவுளின் பிராத்தனையை
விட மேல்...




அடடே V 4.3

வெற்றி உன் 
அறிவுக் கதவை 
தட்டும் போது 
மறந்தும் திறந்து விடாதே
தலைகனம் உன்னை 
தரைமட்ட மாக்கிவிடலாம்! 

தோல்வி உன் 
இதய கதவை 
தட்டும் போது 
மறந்தும் திறந்து விடாதே,
சஞ்சலம் உருவெடுக்க 
கண்ஜலம் வடிக்க நேரிடலாம்!!

வெற்றி தோல்வி
வாழ்க்கையின் பக்கங்களே.
தோல்வினா அதை படி!
வெற்றினா அதுவே முதல் படி!


அடடே V 4.4

அனைவரது மனசுலேயும்
ஆயிரம் எண்ணம்
தோன்றி மறையலாம்.
அதில் பலர் அதை
வார்த்தைகளாக மாற்றி
வெளிப்படுத்துகிறார்கள். 
அதிலும் சிலர்தான்
அதனை செயல் வடிவமாக்கி
உருவம் காண்கிறார்கள்.

இறுதி வரை
உறுதியாக இருப்பவனே
வெற்றி அடைகின்றான்.!



 அடடே V 4.5

வானிற்கு நிலா
பூமிக்கு பூமாதேவி
காற்றுக்கு தென்றல்
நெருப்புக்கு அக்னி
கல்விக்கு சரஸ்வதி 
செல்வத்துக்கு லட்சுமி 
வீரத்துக்கு துர்க்கை
கோபத்திற்கு காளி
நதிக்கு கங்கை
சமவெளிக்கு சிந்து
ராகத்திற்கு பைரவி
கலைக்கு வாணி
பூவிற்கு மல்லிகை
சிவனிற்கு சக்தி  
இயேசுவிற்கு மேரி
.......

இப்படி கிடைத்ததற்கெல்லாம்
பெண்களின் பெயர்களை
சூட்டிவிட்டு இன்றும்
பெண்களை பெண்களாக
பார்க்காத ஆண்கள்
நிறைந்த சமூகமிது.!🤔



அடடே V 4.6

சிறுமை கண்டு பொங்கு
---------------------------------------------

பணத்திலோ உயர்ந்து நிற்பான்
குணத்திலோ ஆவான் ஏழை!
வெளியில் உடுத்துவான் வெள்ளை
உள்ளே பதுக்குவான் கருப்பு!
அனைத்து மக்களுக்கான ஆட்சினு நடத்துவான்
அனைவரும் அதிரும் உத்தரவால் படுத்துவான்!
வீதியில் பெண்ணியம் பேசுவான்
வீட்டினில் பெண்ணாதிக்கம் செலுத்துவான்!
பிறர் வெற்றியில் கை குலுக்குவான்
பின் வெதும்பி புலம்பி சாவான்!
கட்டுகட்ட பணத்தை பெட்டியில் பூட்டுவான்
உதவினு கேட்டா கஞ்சத்தனத்தை காட்டுவான்!
இன்சொல் மொழி பேச மறந்தான்
வன்சொல் தன் வாய் அதிகம் மொழிந்தான்!
ஊருக்கே உபதேசம் செய்வான்
அவன் அவனையே உணரமாட்டான்!
படிச்சவனுக்கே வேலைனு சொல்வான்
பதவினு வந்தா என்ன ஜாதினு கேட்பான்!
மானம் தன்மானம்னு மார்தட்டுவான்
மதியிழந்து காசுக்கே விலை போவான்!
அப்பா அம்மா தெய்வம்னு படிப்பான்
அனால் தினம் தினம் கடிந்து கொள்வான்!
தெரியாத உறவிடம் உறவாடி மகிழ்வான்
தெரிந்தவங்க உறவே வேண்டாம்னு நினைப்பான்!
தோள் தட்டி கை கொட்டி சிரிப்பான்
தோத நேரம் பார்த்து போட்டும் கொடுப்பான்!
வயிறு முட்ட கண்டத சாப்பிடுவான்
விவசாயின் கண்ணீரை கண்டுக்க மாட்டான்!
தரம் நிரந்தரம் தாரகமந்திரம்னு சொல்லுவான்
கிடைத்தால்
தாய்பாலிலும் தண்ணீர் கலப்பான்!

மேற்கூறியவற்றில் என்ன பெருமையடா
காணும் எங்குமே சிறுமையடா
பொங்கி எழு மானிடா
சிறுமைக்கு சங்கு ஊதடா!!



அடடே V 4.7

வேண்டி வேண்டி நான்!
வேண்டியும் வேண்டாமென நீ!
வேண்டாம் என்கிறது உன் உதடு!
வேண்டும் என்றது என் மனசு!
வேண்டி வேர்கிறது நம் உடல்!
வேண்டா வேதனையில் வாடுகிறது நம் இதயம்!
வேண்டுமா வேண்டாமா தினறுகிறது நம் மூளை!



அடடே V 4.8

தலையில் ஆசான்
கண்களில் தாய்
முதுகில் தந்தை
தோள்களில் தோழன் 
மனதில் காதலி 
மடியில் மனைவி 
மார்பில் குழந்தை 
இடையில் உடன்பிறப்பு
கால்களில் பாதை
(நம்பிக்)கைகளில் வாழ்க்கை!?!



அடடே V 4.9

ஆண் பெண்ணில் பேதம்
----------------------------------
பெண் பிறப்பில் இல்லை
ஆண் பிறப்பிலும் இல்லை
விந்துவினால் வந்தவர்கள்தானே
பிறகென்ன நமக்குள் பேதம்?

பெண்ணை வளர்ப்பதில் இல்லை
ஆண் வளர்வதிலும் இல்லை
ஊட்டத்தில் வளர்பவர்கள்தானே
பிறகென்ன நமக்குள் பேதம்?

பெண் கல்வியில் உண்டு
ஆண் கல்வியில் உண்டு
என்னதான் படிக்க வைத்தாலும்
ஆறறிவு அற்ற சமூகம்
வராதோ நமக்குள் பேதம்?

பெண்ணை பார்ப்பதிலும் உண்டு
ஆண் பார்வையிலும் உண்டு
சமுதாயக் கோளாறு
வராதோ நமக்குள் பேதம்?

பெண் நடத்தை தொடர்வான்
ஆண் நடத்தை கண்டுகாண விடுவான்
அவனே பெண்ணை ஏசுவான்
வராதோ நமக்குள் பேதம்?

பெண் உடை நோக்குவான்
பெண்ணியம் பேசுவான்
ஆண் நடை தவறுவான்
அவன் அரைகுறை ஆனாலும்
வராதோ நமக்குள் பேதம்?

பெண் மனம் எதிர்பார்ப்பாள்
ஆண் சன்மானம் எதிர்பார்ப்பான்
வெட்கமில்லா அதற்கு பெயரிடுவான்
அன்பளிப்பு கௌரவம் என்று
வராதோ நமக்குள் பேதம்?

பெண்ணுக்கு ஒரு நியாயம்
ஆணுக்கு இன்னொரு நியாயம்
சந்தர்ப்பம் பார்பவன் ஆண்
கர்ப்பம் காப்பாள் பெண்
வராதோ நமக்குள் பேதம்?

பெண்ணின் இறப்பில் இல்லை
ஆணின் இறப்பில் இல்லை
உடல் மண்ணுக்குதானே
பிறகென்ன நமக்குள் பேதம்?

உனக்கும் கட'வுள்தான்
எனக்கும் கட'வுள்தான்
பார்த்து பேதம் பார்த்து
படைப்பில் செய்தானோ?
படைத்தவன் ஆண் கடவுளோ?
இல்லை
பெண்ணை அறிந்தவனோ?
ஆணுக்கு கற்பை வெளியே
பெண்ணுக்கு உள்ளே என்று!

பெண்ணே நீ மாறாத வரை
ஒன்றும் மாறபோவதில்லை!
ஆண்கள் எதையும்
மாற்றப்போவதில்லை!



அடடே V 5.0

அன்பே...

கை தவறி எழுதினாலும்
உன் பெயர்!

வாய் தவறி உளறினாலும்
உன் பெயர்!

தூக்கம் தவறி கனவிலும்
உன் பெயர்!

பாதை தவறி தடுமாறினாலும்
உன் பெயர்!

சிரிக்க தவறி அழுதாலும்
உன் பெயர்!

மறக்க தவறி நினைத்தாலும்
உன் பெயர்!

இப்படி

தவறித் தவறி
தவறாமல் வருகிறது
உன் பெயர்!!




அடடே V 5.1

பிடுங்கும் மத்தியம்
பதுங்கும் தமிழகம்
ஒடுங்கும் விவசாயம்
நடுங்கும் ஏழை

எந்திரமான வேலை
தந்திரமான ஆட்கள்
மந்திரமான நாட்கள்
சுதந்திரமான வாழ்க்கை?



அடடே V 5.2

பேனா'மை நிரப்பி
என்னவளின்
பெண்'மையை எழுத
ஆரம்பித்தேன்.
பேனா'மை தீர்ந்தும்
எழுதி கொண்டே போகிறேன் 
ஆண்'மை கொண்டு
அவள் அழகை பற்றி..!😍



அடடே V 5.3

ஏழ்மையில் வந்தவன்
எளிமையாய் வாழ்ந்தவன்
கலத்தில் சிறந்தவன்
அக்னி சிறகுகளை தந்தவன்
ஏவுகணை தூதுவன்
விருதுகளுக்கு உரியவன்
பெருமை சேர்த்தவன்
ஆசிரிய பெருமகன்
கனவு நாயகன்
முதல் குடிமகன்
அழகிய தமிழ்மகன் 

"அப்துல் கலாம்"



அடடே V 5.4

அவள் கண்களுக்கு தெரியும் 
கண் இமை நான் என்று😍 

அவள் இதயத்திற்கும்​ தெரியும் 
இதயதுடிப்பு நான் என்று😍 

அவள் காதுகளுக்கு தெரியும் 
கிசுகிசு நான் என்று😍 

அவள் மூக்கிற்கு தெரியும் 
மூச்சுக்காற்று நான் என்று😍 

அவள் கன்னங்களுக்கு தெரியும் 
கன்னங்குழி நான் என்று😍

அவள் வாய்க்கு​ தெரியும் 
வாய்'மை நான் என்று😍 

அவள் கனவுகளுக்கு தெரியும் 
கனவுநாயகன் நான் என்று😍

அவள் விரலுக்கு தெரியும் 
விரல்நகம் நான் என்று😍

அவள் கொடியிடைக்கு தெரியும் 
கொடுப்பனை நான் என்று😍

அவள் பொடிநடைக்கு தெரியும் 
பொடியன் நான் என்று😍

அவள் பாதத்திற்கு தெரியும் 
பாதை நான் என்று😍 

ஆனால் கல்யாணம் என்றால்

அவள் மூளைக்கு மட்டும் 
ஏனோ தெரியவில்லை😳
அவள் மணாளன் நான் என்று



அடடே V 5.5

சொல்லத் தெரியல
சொல்லில் அடங்கல
சொல்லி மாளல
சொன்னா தீரல
சொல்லே கிடைக்கல
சொற்களே வரல
சொன்னா முடியல
"என்னவளின் ஸ்பரிசம்😍"



அடடே V 5.6

பாச நேசத்துடன் வாழ
நல்ல குடும்பம்! 

நிம்மதியுடன் வாழ
நல்ல உறவு!

நம்பிக்கையுடன் வாழ
நல்ல நட்பு!

தைரியமாய் வாழ
நல்ல தலைவன்!

நாகரிகமாய் வாழ
நல்ல சமூகம்! 

பாதுகாப்பாய் வாழ
நல்ல சட்டதிட்டங்கள்!

உரிமையுடன் வாழ
நல்ல அரசாங்கம்!

ஆரோக்கியமாய் வாழ
நல்ல உடல்!

மேன்மையுடன் வாழ
நல்ல எண்ணம்!

அனைத்தும் நல்லதாகவே ????
அமைந்தால் அதுவே  சொர்க்கம்!!



No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...