உரைத்ததும் உரைப்பதும் V 0.1
இலை உதிர்ந்த மரம் கூட
நிமிர்ந்து நிற்கின்றது
வசந்தகாலம் வருமென்று..!
தோழா..
தோல்வி என்ன
சோகம் என்ன
புறந்தள்ளு..
காலம் நம்மோடு
சோம்பலை முடித்திடு
வெற்றி உன்னோடு.. 👍🏼
உரைத்ததும் உரைப்பதும் V 0.2
எரிமலை எரிந்தாலும்
காலம் கரைந்தாலும்
சபரிமலை சரிந்தாலும்
இமயம் இடிந்தாலும் வங்கக்கடல் வற்றினாலும்
மதி மறந்தாலும்
வேண்டியவர் வெறுத்தாலும்
நடக்காதது நடந்தாலும்
எது எப்படி ஆனாலும்
அன்பு மாறாத ஒரு ஜீவன்
"அம்மா"
உரைத்ததும் உரைப்பதும் V 0.3
விழுந்தவன் எழுந்ததில்லை
எழுந்தவன் முயன்றதில்லை
விழுந்தபின் எழுந்தபின் முயன்றவன் தோற்றதில்லை
ஓடு முன்னேற நீயும் ஓடு..
தேடு சந்தோசம் உன்னில் தேடு..!!
உரைத்ததும் உரைப்பதும் V 0.4
தன்னை வருத்தாமல்
பிறரிடம் வருந்துபவன்
வருத்ததோடுதான் ....
வாழ்வான் ....!!!
தன்னை வருத்தி
உண்மையாய் உழைப்பவன்
நிச்சயம் வெற்றி பெறுவான்....!!!
உரைத்ததும் உரைப்பதும் V 0.5
கணக்கில்லா பணம்
தன்னிடத்தில் இருந்தும்
தலைகணம் ஏறல..
தன்மை மாறல..!
அதுதாங்க மெஷின்(ஏடிஎம்).
கால்காச கண்டதும்
பணம் வந்ததும்
தலகால் புரியல..
மனம் ஒருநிலை இல்ல..!
அதுதாங்க மனுஷன்.
மனுஷன கண்ட
மெஷின் குணம் மாறல..
மனுஷனுக்கு மனுஷன்
நிறம் மாறுறான்
உரைத்ததும் உரைப்பதும் V 0.6
அன்பே ஆருயிரே
உன்னை நினைத்து
கவிதை எழுத நான்
தெளிவாக பேனாவை
காகிதத்தில் வைத்தால்
வெட்கத்தால் பேனா கிறுக்குகிறது..
நீ என்னை விட்டு
நீங்கியதும் பேனா
தெளிவாக உன்னை
பற்றி கவிகள் எழுதுகிறது
நான் கிறுக்கனாய் அலைந்து
கொண்டிருக்கின்றேன்..!
உரைத்ததும் உரைப்பதும் V 0.7
தோழா..
வெற்றி பெற வேண்டும்
என ஆசைப்படால் ....
அதிகாலை ஐந்து மணிக்கே துயில் கொள்...!!!
சாதனை செய்ய வேண்டும் ....
என ஏக்கப்பட்டால்...
அதிகாலை நான்கு மணிக்கே துயில் கொள்...!!!
உலகமே திரும்பி பார்க்க வேண்டும்
என பேராசைப்பட்டால்...
அதிகாலை மூன்று மணிக்கு துயில் கொள்...!!!
இவை வாழ்க்கையாக மாறவேண்டும் .....
பலநாட்கள் சிலமாதங்கள்
ஆகலாம் வெற்றி எனும்
நிலை அடைய ......!!!
உரைத்ததும் உரைப்பதும் V 0.8
நண்பன் சொன்னான்.
"இலவசங்கள் வாங்க மக்கள்
அலைமோதும் வரை நாடு
முன்னேறாது" என்றான்.
நானும் வருத்தப்பட்டேன்.
தீடீரென்று வேகமாக ஓடினான்.
எங்கேயடா என்றேன்.
"அமேசானில் ஒரு ரூபாய்க்கு
சலுகை போட்டிருக்காங்க
அதற்கு நேரம் ஆச்சு" என்றான்.
இப்படியாக...
உறைத்ததும் உரைப்பதும் V 0.9.1
பூவால் செடிக்கு பெருமை
மழையால் மண்ணுக்குப் பெருமை
நிலவால் வானுக்கு பெருமை
நீரால் கடலுக்கு பெருமை
முளைவிடுவதால் விதைக்குப் பெருமை
வளைந்து நெளிந்து ஓடுவதால் அருவிக்குப் பெருமை
முத்தால் சிப்பிக்கு பெருமை
நல் எழுத்துக்களால் நூலுக்குப் பெருமை
பேதமில்லா எரிவதால் தீக்கு பெருமை
வீசுவதால் காற்றுக்கு பெருமை
மரங்களால் காட்டிற்கு பெருமை
மனிதம் கொண்ட மனிதனால்
உலகிற்கே பெருமை..!!!
உறைத்ததும் உரைப்பதும் V 0.9.2
கூவி அழைப்பதால் குயிலுக்கு பெருமை
ஆடி மகிழ்வதால் மயிலுக்கு பெருமை
எதையும் பகிர்வதால் காக்கைக்கு பெருமை
நன் நடத்தையால் எறும்பிற்கு பெருமை
நன்றியால் நடப்பதால் நாய்க்கு பெருமை
சீறி பாய்வதால் சிறுத்தைக்கு பெருமை
கர்ஜனை குரலால் சிங்கத்திற்கு பெருமை
........
நல்லெண்ணம் கொண்டால்தான்
மனிதனுக்கு பெருமை..!!!
உரைத்ததும் உரைப்பதும் V 1
வாழ்க்கை என்பது
கரடு முரடு பாதை
அதில் பயணம் செய்யும்போது..
வெறுப்பு வந்தவனுக்கு
வாழ்க்கை சுமையாகும்,
பாதையும் தூரமாகும்..
போராட தெரிந்தவனுக்கு
வாழ்க்கை இன்பமாகும்,
பாதையும் இலகுவாகும்..
பயணிப்போமா?
உரைத்ததும் உரைப்பதும் V 1.1
வாழ்க்கை வெல்வதற்குத்தான் விளையாட்டல்ல
காதல் புரிதலுக்குத்தான் பொழுதுபோக்கல்ல
சிகரம் ஏறுவதற்குத்தான் எட்டிப் பார்ப்பதற்கல்ல
அழகு ரசிப்பதற்குத்தான் ருசிப்பதற்கல்ல
இளமை அனுபவிக்கத்தான் வீணடிப்பதற்கல்ல
முதுமை கற்றுகொடுக்கத்தான் சபிப்பதற்கல்ல
இயற்கை வாழ்வதற்குத்தான் பாழ்படுத்துவற்கல்ல
செயற்கை பயன்படுத்தத்தான் அழிப்பதற்கல்ல
பகல் உழைப்பதற்குத்தான் இழப்பதற்கல்ல
இரவு உறங்குவதற்குத்தான் விழித்திருப்பதற்கல்ல
வெற்றி அடைவதற்குத்தான் அலட்சியப்படுத்தல்ல
அறிவு பகிருவதற்குத்தான் பருகுவதற்கல்ல
மடமை நீக்கத்தான் நாணுவதற்கல்ல
நட்பு காப்பாற்றத்தான் காயப்படுத்தல்ல
எதிரி குறைப்பதற்குத்தான் கூட்டிச்செல்ல அல்ல
வெளிச்சம் நம்பிக்கைக்குத்தான் நாசம்செய்ய அல்ல
இருள் போக்குவதற்குத்தான் உருவாக்குவதற்கல்ல
பிறப்பு வாழ்வதற்குத்தான் வீழ்வதற்கல்ல
இறப்பு முற்றுபெறத்தான் தொடர்வதற்கல்ல
உரைத்ததும் உரைப்பதும் V 1.2
காதலுக்கு தாஜ்மஹால்
கற்புக்கு கண்ணகி
வில்லுக்கு விஜயன்
சொல்லுக்கு அவ்வை
தமிழுக்கு பாரதி
கவிதைக்கு கண்ணதாசன்
தானத்துக்கு கர்ணன்
சேவைக்கு தெரேசா
உரைத்ததும் உரைப்பதும் V 1.3
விழத்திருக்கும் நேரத்தில்
கனவிலும்
விழி உறங்கும் நேரத்தில்
நினைவிலும்
உன்னோடு நான்...
சிலருக்கு கனவே வாழ்க்கையாகிறது
சிலருக்கு வாழ்க்கையே கனவாகிறது
எனினும் காதல் வாழ்கிறது
உரைத்ததும் உரைப்பதும் V 1.4
நட்பினை பரப்பச்செய்வோம்
அறிவை அறியச்செய்வோம்
இருளை விளக்கச்செய்வோம்
கவலை மறக்கச்செய்வோம்
தீமையை அழிக்கச்செய்வோம்
அன்பினை காட்டச்செய்வோம்
பண்பினை போற்றச்செய்வோம்
சான்றோரை மதிக்கச்செய்வோம்
நன்மையை வளர்க்கச்செய்வோம்
தீண்டாமையை ஒழிக்கச்செய்வோம்
ஒற்றுமை ஓங்கச்செய்வோம்
தடையை தகர்க்கச்செய்வோம்
உலகம் வியக்கச்செய்வோம் வா
உரைத்ததும் உரைப்பதும் V 1.5
கற்களை கடந்துதான் அருவிநீர் கடலை சேருமே.!
பாதையில் முற்களைக் கடக்கவே
வெற்றியுன் கைளை சேருமே..!
தடையில்லா வாழ்கை
விடையில்லா கேள்வியாகும்..
தடை தாண்டி முன்னே செல்
சுகம் நம்மை சேரும் ..
உரைத்ததும் உரைப்பதும் V 1.6
கதைகள்சொல்ல பாட்டி
கலகலப்புக்கு தங்கை
துணையாக மனைவி
உபதேசதுக்கு மாமியார்
உறுதுணையாக தமக்கை
உறவுக்காக அத்தை
மரியாதைக்காக அண்ணி
மல்லுக்கட்ட அக்கா
கிண்டலுக்காக கொழுந்தியாள்
கிறுக்குபிடிக்க காதலி
தெளியவைக்க தோழி
கடவுளாக அன்னை
வேறு என்ன சொல்ல
பெண் ஆணின் இரு கண்கள்தான்..!!!
உரைத்ததும் உரைப்பதும் V 1.7
கவலை சுமக்க தேவையில்லை..
கனவு உண்டு,
உன்னிடம்.
காதல் புரிய தேவையில்லை..
கடமை உண்டு,
உன்னிடம்.
போதை ஏற்க தேவையில்லை..
பொறுமை உண்டு,
உன்னிடம்.
பாதை மாற தேவையில்லை..
பற்று உண்டு,
உன்னிடம்.
வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!
உரைத்ததும் உரைப்பதும் V 1.8
என்ன நடந்தாலும்
வருத்தம் கொள்ளாதே,
செய்யும் செயலில்
திருத்தம் கொள்..!!
வெற்றி நமதே!!!!
உரைத்ததும் உரைப்பதும் V 1.9
அன்புள்ள மகளாய்
சிறந்த மாணவியாய்
குணமுள்ள மருமகளாய்
நேசமுள்ள மனைவியாய்
முன் மாதிரியான தாயாய்
திறமையான உழைப்பாளியாய்
பண்புள்ள குடிமகளாய்
வீட்டிற்கும் நாட்டிற்கும்
பெருமையை உண்டாக்குபவள்
!.... பெண் ....!
மகளிர் தின வாழ்த்துகள்
உரைத்ததும் உரைப்பதும் V 2.0
இம்மண்ணில் நம்பிக்கை பெண்மை
மனித குலம் தழைக்கவும் பெண்மை.
அன்பின் உறைவிடம் பெண்
அழகின் உறைவிடம் பெண்
பொறுமையின் மறுபெயர் பெண்
போற்றுதலுக்குரியவள் பெண்.
கல்வியிலும் சிறந்து விளங்குவாள்
கற்பதிலும் பெண்
கற்பித்தலிலும் பெண்
கற்பிலும் பெண்
காவலிலும் பெண் விண்கலத்திலும் பெண்
கணிப்பொறியிலும் பெண் களப்பணியிலும் பெண்
கடவுளின் உன்னத படைப்பின்
உச்சக் கட்டம் பெண்மை.
எங்கும் பெண் எதிலும் பெண் - இவள்
பாரதி கண்ட புதுமைப் பெண்.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்
கொண்ட நம் தாய் நாட்டின் தன்னிகரில்லா தங்க பெண்.
மகளிர் தின வாழ்த்துகள்.
உரைத்ததும் உரைப்பதும் V 2.1
உன்னை அடக்க நினைத்தால்
நீ எதிர்த்து நில்...!
உன்னை அடிமையாக்க
எண்ணினால்
நீ அடிமையாக்கு.....!
உன்னை தென்றலென நினைத்தால்
நீ புயலென காட்டு....!
உன்னை அன்புடன்
நேசித்தால்
நீ உயிராய் நேசி....!
உன்னை சுற்றும் துயரங்களை
நீ சுவடே தெரியாமல் ஆக்கு....!
உன்னை எதிர்க்கும் அனைத்தையும்
நீ எதிர்த்து சாதித்து காட்டு.....!
உரைத்ததும் உரைப்பதும் V 2.2
அன்னையும் ஆச்சரியம் கொள்ளலாம்,
தோழியின் அன்பினில்..
தந்தையும் ஆனந்தம் அடையலாம்,
நண்பனின் அதட்டலில்..
ஆசானும் அசந்து பார்க்கலாம்,
தோழனின் அறிவுரையில்..
கடவுளும் மரித்து போயிருக்கலாம்,
நட்பை படைத்ததனால்..
உரைத்ததும் உரைப்பதும் V 2.3
இருப்பதை "கொடு",
இல்லாததை "தேடு"..
"தவறுகளை" உனக்குள் அடக்கு,
செய்வதை "திருந்த" செய்..
"உழைப்பதை" உறுதியாக்கு,
"உயர்வை" உனதாக்கு..
"விடியலை" நோக்கி பயணி,
விடிந்ததும் "உன்னை"
நீ நிச்சயம் அறிவாய்.....!
Hapiiee Sunday
உரைத்ததும் உரைப்பதும் V 2.4
அன்பு ஓர்
அதிசய ஆயுதம்,
ஏந்தியவர்க்கு மட்டுமே,
ஏகப்பட்ட காயங்கள்...
உரைத்ததும் உரைப்பதும் V 2.5 (முற்றும்)
எனக்கென நீ உனக்கென நான்
நமக்கென ஒரு வாழ்க்கை வாழ்வோமா
கலையாக நீ கவியாக நான்
கண்ணில் காதல் பகிர்வோமா
விழியாக நீ இமையாக நான்
என்றும் உன்னைக் காப்பேன் கண்ணே
சேயாக நீ தாயாக நான்
உயிரின் உறவாய் உயர்வோமா
மலராக நீ இதழாக நான்
தினமும் புதிதாய் மலர்வோமா
உணர்வாக நீ உடலாக நான்
நீ இல்லாமல் நான் வெறும் சவம் தான் கண்ணே!!!
No comments:
Post a Comment