Saturday, October 14, 2017

படிங்க😊 புடிக்கும்😜 kavithai Versions

படிங்க 😡 புடிக்கும் 😊 V 0.1

இருளைக் கிழித்தெழு
அறியாமையைத் தகர்த்தெழு
கண்ணீரை துடைத்தெழு..
கவலைகளை தொலைத்தெழு.......
அடிமைத்தனத்தை உடைத்தெழு
அறிவியலை இழுத்தெழு
அன்பிற்கு பணிந்தெழு..
எதர்க்கும் தலை நிமிர்ந்தெழு...
தோழா புதிதாய் விழித்தெழு....!

 படிங்க😡 புடிக்கும்😊 V 0.2

'அ'ப்பாவை பாேற்று 
'ஆ'த்தாளை தாெழு 
'இ'யற்கையைை காத்திடு 
'ஈ'ரம் செய்திடு மண்னை 
'உ'றவை பெருக்கு 
'ஊ'ன் பகிர்ந்திடு
'எ'ழுந்ததும் நட ஓடு 
'ஏ'ழ்மைக்கு உதவு 
'ஐ'ம்புலன் பாதுகாத்திடு 
'ஒ'ற்றுமையாக இரு 
'ஓ'ரம் பாேகாதே 
'ஔ'வியம் போக்கிடு 
எ'ஃ'தும் நன்றே செய்....!!


படிங்க😡 புடிக்கும்😊 V 0.3

'அ'றிவை தேட ஆசைப்படு ...
'ஆ'ன்மாவை(உன்னை) அறிய  ஆசைப்படு ...
'இ'ம்சை போக்க ஆசைப்படு ...
'ஈ'கை செய்ய ஆசைப்படு ...
'உ'ண்மையை பேச ஆசைப்படு ...
'ஊ'ர் மேம்பட ஆசைப்படு ...
'எ'ண்னத்தை தூய்மையாக்கா ஆசைப்படு ...
'ஏ'ழைகளுக்கு உதவ ஆசைப்படு ...
'ஐ'யத்தை நீக்க ஆசைப்படு ...
'ஒ'ற்றுமையாக வாழ ஆசைப்படு ...
'ஓ'யாமல் உழைக்க ஆசைப்படு ...
'ஔ'டதம்(மருந்து) உண்ணாதிருக்க ஆசைப்படு ..
எ'ஃ'தும் நன்மை செய்ய ஆசைப்படு..!!


படிங்க😡 புடிக்கும்😊 V. 0.4

எவன் அனைவரையும் நட்பாய் பார்கின்றானோ....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாமல் போகின்றானோ...
எடுப்பார் கைபிள்ளையாய் வாழாது இருகின்றானோ...
எடுத்த பொருளில் தானம் தர்மம் செய்கின்றானோ....
எண்ணத்தில் அவனே இறைவன் ஆகின்றான்...!

எவன் பிறர் துன்பம் துடைகிறானோ....
எவன் பிறருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றானோ...
எவன் பிறருக்காக வாழ்கிறானோ ....
எல்லோர் இதயத்திலும் இருப்பவன் ஆகிறான்...
எண்ணத்தில் அவனே இறைவன் ஆகின்றான்...!

எவன் அதிகாலை தினமும்  எழுகின்றானோ....
எழுச்சி கொண்டு பணிகள் செய்கின்றானோ....
என்றும் இனிமையாய் பிறரிடம் பேசுகின்றானோ...
எட்டு திசையும் பணியை பரப்புகின்றானோ...
எண்ணத்தில் அவனே இறைவன் ஆகின்றான்...!

எங்கே செல்கிறோம் என்று தீர்மானிக்கின்றானோ ....
எப்போது செல்கிறோம் என்றும் முடிவெகின்றானோ ...
எதற்கு செல்கிறோம் என்று நிதானமாக இருகின்றானோ ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைக்கின்றானோ....
எண்ணத்தில் அவனே இறைவன் ஆகின்றான்...!


எல்லையற்றவன் அவனே ஆகின்றான்..!!!


படிங்க😡 புடிக்கும்😊 V 0.5

எவ்வளவோ இருக்க..

'அ'டங்காது எதையும் செய்யாதே ...
'ஆ'த்திரமாய் என்றும் பேசாதே...
'இ'ம்சை பிறரிடம் புரியாதே..
'ஈ'ட்டி வார்த்தையால்  குத்தாதே ...
'உ'ள்ளம் நோக நடக்காதே ...
'ஊ'தாரிதனம் நித்தம் பண்ணாதே ...
'எ'திரியாய் யாரையும் பார்க்காதே ...
'ஏ'ளனமாய் ஒருவரையும் நினைக்காதே ...
'ஐ'யம் நீக்க மறக்காதே...
'ஒ'ய்யார ஆட்டம் போடாதே...
'ஓ'சியில் வாங்க எண்ணாதே...
'ஔ'டதம் சாப்பிடும்படி வைக்காதே...
அ'ஃ'றினை போல் நடவாதே ..!!

நல்லதே செய்வோம்
நலம் பெறுவோம்..


படிங்க😡 புடிக்கும்😊 V 0.6

'க'ண்களால் கொய்தாய்
'கா'ணா செய்தாய்
'கி'றுக்கனாய் மாற்றினாய் 
'கீ'தமாய் ஒலித்தாய்
'கு'டலில் நிறைந்தாய்
'கூ'ண்டில் அடைத்தாய்
'கெ'டுபிடி அதிகமாக்கினாய்
'கே'ளாமல் உதித்தாய்
'கை'காரியம் புரிந்தாய்
'கொ'ல்லா கொல்கின்றாய்

இப்படி..

'கோ'டானகோடி அவஸ்தை தருவதற்க்கு

என்னவளே..

'கௌ'ரவமாய் காதல்
எனும் ஆயுதம் எடுத்து
என்னை'க்' கொன்றுவிடு..!
என்னவளே கொன்றுவிடு..!


படிங்க😡 புடிக்கும்😊 V 0.7

இன்பம் துன்பம்
இரண்டும் நம்மிடம்
இரப்பதோ
இல்லாத
இடங்களில்...!!!

புரிந்தால் வாழ்க்கை
இனிக்கும்
இல்லாவிடில்
கசந்து கொண்டிருக்கும்..


படிங்க😡 புடிக்கும்😊 V 0.8

பெண்கள் சிரித்தால் அழகு!
அவர்களை அழ விடாமல்
சிரிக்க வைத்து கொண்டிருக்கும்..
ஆண் அதை விட அழகானவன்...

பெண்கள் சிணுங்கினால் அழகு!
அவர்களை சிணுங்கவைத்து பாராட்டி சீராட்டி கொண்டிருக்கும்..
ஆண் அதை விட அழகானவன்

பெண்கள் நடந்தால் அழகு!
அவர்களை நடக்க வைத்து சந்தேகபடாமல் இருக்கும்..
ஆண் அதை விட அழகானவன்...

பெண்கள் பார்த்தால் அழகு!
அவர்களை நிழல் போல் பாதுகாப்பாய் பார்த்து கொண்டிருக்கும்..
ஆண் அதை விட அழகானவன்...

பெண்கள் இயற்கையில் அழகு,
பெண்களால் ஆண்களும் அழகு...!


படிங்க😊 புடிக்கும்😜 V 0.9

கடவுளின் கரங்களிலும் சிரிக்கிறாய்
கல்யாண மாலையிலும் சிரிக்கிறாய்
கட்சிவிழா அலங்கரிப்புகளில் சிரிக்கிறாய்
கருணையின்றி இதழ்பறித்தாலும் சிரிக்கிறாய்
காதலர்கள் உரசல்களில் சிரிக்கிறாய்
கல்லறையில் வைத்தாலும் சிரிக்கிறாய்
கண்ணே!.. முள் சூழ்ந்த போதிலும், முகம் சுளிப்பதில்லை!
கண்ணீர் விடுவதில்லை, மலர்ந்து சிரிக்கிறாய் நீ.!

உன் போன்ற மலர்கள்
உலகில் இல்லை !
! ரோஜாவே !



படிங்க😊 புடிக்கும்😜 v 1.0

முடியாது என்ற வார்த்தை உன்னை சாபமாக்கும்!

முயன்றால் தான் உன் பாதை பூக்கள் பூக்கும்!

நம்பிக்கை மட்டுமே உன்னை உனக்கு வார்க்கும்!

நீ உழைக்க நினைத்தாலே நொடிகள் இனிமையாகும்!



படிங்க😊 புடிக்கும்😜 v 1.1

அன்பால் அரவணைப்பு
அளவில்லா குதூகலிப்பு
ஆர்பாட்டமான ஆர்ப்பரிப்பு
அரணாகும் பாதுகாப்பு
ஆயுளும் நீட்டிப்பு

இருந்தால் கலகலப்பு
இருக்காது கைகலப்பு
இதயத்தின் துடிதுடிப்பு
இருக்கும் மூக்குடைப்பு

தராது கடுப்பு
தாங்கும் துடுப்பு
தங்கி உடனிருப்பு
தன்னலம் வெளிநடப்பு

உடையும் சிடுசிடுப்பு
உறங்காது தவிப்பு
உடம்பில் சிலிர்ப்பு
உணர்வில் புல்லரிப்பு
உறவுகளின் முத்தாய்ப்பு
உள்ளத்தின் பூரிப்பு
உச்சகட்ட சிரிப்பு

சந்தோச வெடிப்பு
சரவெடி மத்தாப்பு
சம்பளமில்லா உழைப்பு
சம்பந்தமில்லா சந்திப்பு
சரியான கணிப்பு
சகோதர திணிப்பு

நாளும் பரபரப்பு
நீங்காத நினைப்பு
நீளும் திகைப்பு
நட்பே இதற்கெல்லாம் சிறப்பு


 படிங்க😊 புடிக்கும்😜 V 1.2

'க'ன்னத்துக் குழியழகி
'கா'ர்குழல் கூந்தலழகி
'கி'ளி பேச்சழகி
'கீ'ரை உடம்பழகி
'கு'யிலின் குரலழகி
'கூ'ழாங்கல்  குணத்தழகி
'கெ'ண்டைமீன் கண்ணழகி
'கே'ள்வியின்  விடையழகி
'கை'ப்பேசி  மொழியழகி
'கொ'ண்டைப் பூவழகி
'கோ'டிகளில் நீயே அழகி
'கௌ'ரவமா சொல்வேன்
நீதான் என் எண்ணத்தழகி..!


படிங்க😊 புடிக்கும்😜 V 1.3
தேடு Google'பிச்சை போல்!
யோசி நியூ'டன் போல்!
காதலி சாஜகான் போல்!
நடமாடு கண்ணகி போல்!
சிரி சாப்ளின் போல்!
போராடு விஜயன் போல்!
சொல் அவ்வை போல்!
பேசு பாரதி போல்!
எழுது கண்ணதாசன் போல்!
கொடு கர்ணன் போல்!
செய் தெரேசா போல்!
வாழு காந்தி போல்!
எண்ணு நேருவைப் போல!
வளர் கலாமைப் போல!
பழகு இயேசுநாதர் போல்!

ஈஸ்டர் வாழ்த்துகள்💥✨
சண்டே ரிலாக்ஸ் வணக்கம்

படிங்க😊 புடிக்கும்😜 V 1.4

இருப்பவர் இரப்பர்
அன்பிற்கும் நிம்மதிற்கும்..
இல்லாதவர் கொடுப்பர்
அன்பையும் பாசத்தையும்..
செய்பவர் சொல்லார்
தர்மத்தையும் செய்கையும்..
சொல்பவர் செய்யார்
செயலையும் வேலையும்..


படிங்க😊 புடிக்கும்😜 V 1.5

மாண்டவர் மீண்டு வரலாம்!
வாழ்பவர் துவண்டு வீழ்ந்திடலாம்!
சேர்ந்த காதல் பிரியலாம்!
பிரிந்த காதலி முத்தமிடலாம்!
கற்காலமனிதனோடு
செல்ஃபி எடுக்கலாம் !
கரிகாலனோடு
தேநீர் பருகலாம் !
சந்திரனில் மரம் நடலாம் !
சூரியனில் குடிசை போடலாம்!
கிழவன் குழந்தை ஆகலாம்!
மழலையாய் துள்ளி விளையாடலாம்!
கிழவி குமரியாய் தெரியலாம் !
குமரிகள் அழகாய் இருக்கலாம்!
பிச்சைக்காரன் பில்கேட்ஸ் ஆவான் !
இந்திய குடியரசு வல்லரசாகும் !
பட்டதாரிகள் வேலை பெறலாம்!
விவசாயிகள் முதல்வர் ஆகலாம்!
மது நாட்டிலிருந்து விலகலாம்!
மாதுவை போற்றி புகழலாம்!
ஜாதி ஆண் பெண்ணாகலாம்!
நகரம் சொர்க்கமாய் மாறலாம்!
சொர்க்கம் நரகமாய் தோன்றலாம்!
மறைந்த அன்னையை பார்க்கலாம்!


இங்கு நீயே கதாநாயகன்
சமயங்களில் நீயே வில்லனாவாய்...

ஆம் இது "கனவு" இல்லம்!!!


 படிங்க😊 புடிக்கும்😜 V 1.6

நட்பினை பரப்பச்செய்வோம்!
அறிவை அறியச்செய்வோம்!
இருளை விளக்கச்செய்வோம் !
கவலை மறக்கச்செய்வோம் !
தீமையை அழிக்கச்செய்வோம்!
அன்பினை காட்டச்செய்வோம்!
பண்பினை போற்றச்செய்வோம்!
சான்றோரை மதிக்கச்செய்வோம்!
கவிகள் புணையச்செய்வோம்!
நன்மையை வளர்க்கச்செய்வோம்!
தீண்டாமை ஒழிக்கச்செய்வோம் !
ஒற்றுமை ஓங்கச்செய்வோம்!
உதவிகள் புரியச்செய்வோம்!
தடையை தகர்க்கச்செய்வோம்!
புதுமையை நுழைக்கச்செய்வோம்!
உலகம் வியக்கச்செய்வோம் வா !!!


படிங்க😊 புடிக்கும்😜 V 1.7

தோல்வி வருமென தெரிந்தாலும்
தோழா தொடர்ந்து போராடு..

உனது கடைசி முயற்சி
வெற்றியின் முதல் விதையாய்
கூட இருக்கலாம் ..!!

நம்பிக்கையில் வாழ்க்கை ....!!!

படிங்க😊 புடிக்கும்😜 V 1.8
 நிமிர்ந்து நில்
நேர்வழியில் செல்

தைரியம் கொள்
தயக்கம் கொல்

வினையின் விளைவை அறி
சுதந்திரத்தின் சிறகை விரி

ஒழுக்கத்தின் மேன்மை நாடு
இயற்கையின் இரகசியம் தேடு

உன்னில் உண்மையை நேசி
உலகத்தின் நன்மையை யோசி

தீயவை தெளிந்து தவிர்
தோல்விகள் கடந்து நிமிர்

தேகம் கடந்து யோசித்து
தெய்வீக வாழ்க்கை வாழ்வோம் வா
படிங்க😊 புடிக்கும்😜 V 1.9

சித்தரித்த சமூகம் -அரசியலாய்
வரையறை சட்டம் -வழக்குகளாய்.!
பெரியார் கொள்கை -ஏட்டுகளாய்
கற்றுணர் கல்வி -கடன்மழையாய்.!
பாமரனின் பசி -பஞ்சபிழையாய்
பெண்மை காவல் -படுகுழியாய்.!
அரசியல் மாற்றம் -மானுடமாய்
பாரத ஜனநாயகம் -கல்லறையாய்.!
விதி செய்வோம் -ஓர்உணர்வாய்
மதி விழித்திட மனிதா -விழித்திடுவாய்.!
படிங்க😊 புடிக்கும்😜 V 2.0

அகிலத்திற்கே ஒளி கொடுப்பது
இறைவனென்று நினைத்திருந்தால்,
எடிசன் உருவாகி இருக்க மாட்டான்..

அவன் முயற்ச்சியால் ஒளிர்கிறது
இந்த மானுட உலகம் !....

மூடநம்பிக்கை விடுத்து
நம்பிக்கையில் பயணி..!!!


படிங்க😊 புடிக்கும்😜 V 2.1


கொடுக்க கொடுக்கத்தான் அன்பு
பழக பழகத்தான் நட்பு
படிக்க படிக்கத்தான் அறிவு
சேர்க்க சேர்க்கத்தான் உறவு
பார்க்க பார்க்கத்தான் காதல்
விழிக்க விழிக்கத்தான் விடியல்
திறக்க திறக்கத்தான் முல்லை
கடக்க கடக்கத்தான் எல்லை
குடிக்க குடிக்கத்தான் போதை
நடக்க நடக்கத்தான் பாதை
துடிக்க துடிக்கத்தான் உணர்வு
முடிக்க முடிக்கத்தான் கனவு
முளைக்க முளைக்கத்தான் புலமை
நிலைக்க நிலைக்கத்தான் தலைமை
விதைக்க விதைக்கத்தான் முளைப்பு
வேர்க்க வேர்க்கத்தான் உழைப்பு
உழைக்க உழைக்கத்தான் வாழ்க்கை


படிங்க😊 புடிக்கும்😜 V 2.2

நீ நடந்தால் உன்னை
சமூகம் இழிக்கும்
நீ பார்த்தால் உன்னை
சமூகம் பழிக்கும்
நீ கேட்டால் உன்னை
சமூகம் மடக்கும்
நீ பேசினால் உன்னை
சமூகம் அடக்கும்
நீ விழுந்தால் உன்னை
சமூகம் மிதிக்கும்
நீ நின்றால் உன்னை
சமூகம் தள்ளும்

இவைகளை காணாது..

நீ ஒடிக் கொண்டே இரு,
வாழ்க்கையில் உயரும் வரை

வேலை இல்லாதவன்
உன் மீது வசை பாடி கல் எறிவான்
அதை தாங்கி நீ ஓடிக்கொண்டு இரு
வாழ்க்கையில் நம்பிக்கை
இழைக்க செய்யும்
எறிகணைகள் இவை

போராட்டம் தான் வாழ்கை
இது இறைவனின் படைப்பு
ஓடிக்கொண்டு இருப்பவன் சாதிக்கிறான்
விதியை நொந்து இருப்பவன்
ஏமாற்றம் அடைகிறான்


படிங்க😊 புடிக்கும்😜 V 2.2

பிறக்கும் போது..
என்ன பையனா? பெண்ணா?
வளரும் போது..
என்ன CBSEயா? ICSEயா?
பள்ளியின் போது..
என்ன படிக்கிறாயா? இல்லையா?
தேர்வின் போது..
என்ன PASSஆ? FAILஆ?
ரிசல்டின் போது..
என்ன ENGGஆ? MEDICALஆ?
கல்லூரியின் போது..
என்ன நட்பா? காதலா?
SEMESTERS போது..
என்ன ARREARSஆ? ALLCLEARஆ?
நேர்முகத்தேர்வின் போது..
என்ன SELECTEDஆ? REJECTEDஆ?
GRADUATION போது..
என்ன கம்பெனி சேர்ந்தாச்சா? சும்மா சுத்துறயா?
வேலையின் போது..
என்ன ARRANGEDஆ? LOVEஆ?
கல்யாணத்தின் போது..
என்ன தட்சணை? வரதட்சணை?
சில நாள் கழித்து..
என்ன குழந்தை set ஆச்சா? இல்லையா?
சில நாள் கழித்து..
என்ன டாக்டர் பார்த்தையா? இல்லையா?
குழந்தை செட்டான பின்..
மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்.

என்ன வாழ்க்கைடா?😴


படிங்க😊 புடிக்கும்😜 V 2.3

சிரிப்பிற்கு நேரம் ஒதுக்கு,
இசை பிறப்பிடம்..
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்கு,
அறிவின் பிறப்பிடம்..
பழக்கத்திற்கு நேரம் ஒதுக்கு,
உறவின் பிறப்பிடம்..
முயற்சிற்கு நேரம் ஒதுக்கு,
சக்தியின் பிறப்பிடம்..
விளையாட்டிற்கு நேரம் ஒதுக்கு,
இளமையின் பிறப்பிடம்..
நட்பிப்பிற்கு நேரம் ஒதுக்கு,
மகிழ்ச்சியின் பிறப்பிடம்..
உழைப்பிற்கு நேரம் ஒதுக்கு,
வெற்றியின் பிறப்பிடம்..


படிங்க😊 புடிக்கும்😜 V 2.4

காதலில்
காத்திருத்தல் சுகமென்று கதைத்தாள்..
காத்திருந்தேன்
கனவாக இருந்தாள்..
காத்திருந்தே நான்
காலாவதியாகின்றேன்,
கனவிலும் இன்று
காணவில்லை!..
கவிதைகளில்
கண்டு
கண்களில்
கண்ணீரால்
கரைத்து கொண்டிருகின்றேன்.!

காலத்தின்
கட்டாயத்தில் நான்?


படிங்க😊 புடிக்கும்😜 V 2.5

நட்பே..

உனது கோபம் ,
என்மீது வைத்த அன்பை உணர்த்தும் !
உனது கேலி ,
என்மீது நீ கொண்ட உரிமையை உணர்த்தும் !
உனது அறிவுரை ,
என் மீது கொண்ட நம்பிக்கையை உணர்த்தும் !
உனது அறிவாற்றல் ,
என் மீது உள்ள ஆளுமையை உணர்த்தும் !
உனது உதவி ,
என் மீது கொண்ட அக்கறையை உணர்த்தும் !
உனது கனவு ,
என் மீது கொண்ட வளர்ச்சியை உணர்த்தும் !
உனது உயிர்,
என் மீது வைக்கும் மூச்சுக்காற்றை உணர்த்தும் !

நட்பே நட்புதாங்க!!!


படிங்க😊 புடிக்கும்😜 V 2.6


நீ நடந்தால் உன்னை
சமூகம் இழிக்கும்
நீ பார்த்தால் உன்னை
சமூகம் பழிக்கும்
நீ கேட்டால் உன்னை
சமூகம் மடக்கும்
நீ பேசினால் உன்னை
சமூகம் அடக்கும்
நீ விழுந்தால் உன்னை
சமூகம் மிதிக்கும்
நீ நின்றால் உன்னை
சமூகம் தள்ளும்

இவைகளை காணாது..

நீ ஒடிக் கொண்டே இரு,
வாழ்க்கையில் உயரும் வரை..!


படிங்க😊 புடிக்கும்😜 V 2.7


வாழ்க்கை ஒரு பரமபதம்...

ஏணி உன்னை உச்சிக்கு
ஏற்றிக்கொண்டு செல்லும்...

பாம்பு உன்னை கொத்தி
பாதாளத்தில் தள்ளும்...

பாம்புகளை கண்டு
நீ பயந்துவிடாதே...
தடைகளை கடந்து
நீ நிமிர்ந்துநில்...
சாதனைகளை எளிதாக
நீ படைப்பாய்...


படிங்க😊 புடிக்கும்😜 V 2.8

கண்ணீர் துடைக்கும் கை
கடமை ஆற்றும் கை
கரை படியாத கை
களை எடுக்கும் கை
கல்வி பயிற்றும் கை

அரசியல் கலக்கா கை
அடிக்க மனமில்லா கை
அக்கறையுடன் அணைக்கும் கை
அணைத்து அரவணைக்கும் கை
அன்னம் தரும் கை

தவறை சுட்டிகாட்டும் கை
தட்டி கொடுக்கும் கை
தாங்கி பிடிக்கும் கை

உதவ நினைக்கும் கை
உழைக்க முற்படும் கை
உருவாக்கம் செய்யும் கை

கை சேர்க்கும் கை
கை பிடிக்கும் கை
கை கொடுக்கும் கை

இவற்றுடன்...

உன்னால் அகற்றப்படும் மூடநம்பிக்'கை
உன்னுள் வைக்கப்படும் தன்னம்பிக்'கை
உயரும் நிச்சயம் வாழ்க்'கை


படிங்க😊 புடிக்கும்😜 V 2.9


நட சரியாக
பேசு பணிவாக
உண் அளவாக
சுவாசி ஆழமாக
தூங்கு அமைதியாக
உடுத்து அழகாக
செய் துணிவாக
உழை உண்மையாக
சிந்தி சுயமாக
நம்பு முடிவாக
பழகு நாகரிகமாக
திட்டமிடு முன்னதாக
ஈட்டு நேர்மையாக
சேமி சிறிதுசிறிதாக
போராடு நியாயமாக
உதவு பிறருக்காக
செலவிடு தேவைக்காக
நேசி முழுமையாக
படி உயர்வுக்காக
இரு திடமாக
மரணி வீரனாக

படிங்க😊 புடிக்கும்😜 V 3.0
அன்பினால் என்றும் அணைத்திட வேண்டும்
ஆத்திரம் தன்னை விட்டிடு
கண்ணில் கருணைப் பொங்கிட வேண்டும்
கயமை தனையே ஓட்டிடு
மண்ணில் உந்தன் மகிமை பேச
மாண்புடன் என்றும் நடந்திடு
எண்ணித் துணிக கருமம் என்றே
இதயம் கொண்டு வாழ்ந்திடு
படிங்க😊 புடிக்கும்😜 V 3.1

முடியும் என்று
முயலாமல் இருந்தால்
கடுகும் மலையென
காரித்துப்பும் உன்னை...

உழைப்போம் என்று
உள்ளத்தால் உறுதிகொண்டால்
மலையும் கடுகென
மண்டியிடும் உன்னிடத்தில்...


படிங்க😊 புடிக்கும்😜 V 3.2

ஒருதுளி விஷம் கூட அதன்
வீரியம் குறையாது காட்டும்,
மனிதா உனக்குள் ஆயிரம்
திறமைகள் உண்டு
பல வியர்வை துளிகளால்
சில வெற்றித்துளிகளை நீ காட்டு..


படிங்க😊 புடிக்கும்😜 V 3.3


வாழ்க்கை
விசித்திரமானது தான்!

அழ வைக்கின்ற
கோபத்தையும்,
சிரிப்பைத் தரும்
அன்பையும்,
உன்னிடமே தந்திருக்கிறது!

தேர்ந்தெடு
உன் வாழ்க்கை!
உன் கையில்!


படிங்க😊 புடிக்கும்😜 V 3.4

விழி அழகு
அதில் பார்ப்பதெல்லாம் அழகு

இருள் அழகு
அதில் ஒளி அழகு

மலை அழகு
அதில் மழை அழகு

சிலை அழகு
அதில் கலை அழகு

ஆண் அழகு
அதில் ஆண்மை அழகு

பெண் அழகு
அதில் தாய்மை அழகு

மொழி அழகு
அதில் செந்தமிழ் அழகு

உண்மை அழகு
அதில் பொய்யும் அழகு

பிறப்பு அழகு
அதில் இறப்பும் அழகு

திருமணம் அழகு
அதில் இல்லறம் அழகு

துறவறம் அழகு
அதில் காக்கும்மறம் அழகு

சிரம் அழகு
அதில் உதவும்கரம் அழகு

மனம் அழகு
அதில் பார்க்கும் யாவும் பேரழகு..!


படிங்க😊 புடிக்கும்😜 V 3.5


தோல்விகளுக்கு பயந்து செயல்களை
தொலைவில் நீ வைத்தால்,
வெற்றி எனும் ஏணிப்படி
வெகு தொலைவில் நிற்க்கும்..!

புரிந்து கொள் மனிதா..
வெற்றி என்பது கற்றுக் கொள்வது!
தோல்வி என்பது கற்றுக் கொடுப்பது.!


 படிங்க😊 புடிக்கும்😜 V 3.6


தோழர்களே வரும்
தோல்விகளை முயற்சித்
தோகை விரித்து
தேடித்தேடி
தோற்கடி..!
தேடாத வெற்றிகள் கூட
தேடி தேடி உன்னிடம்
தோதாக வரும்..!


படிங்க😊 புடிக்கும்😜 V 3.7

அசந்து போனேன்,
அவள் அழகை பார்த்து..
காணாது போனேன்,
அவள் கண்விழி பாய்ந்து..
உறைந்து போனேன்
அவள் உதடுகள் அசைவில்..
தொலைந்து போனேன்
அவள் தொலைநோக்கு பேச்சில்..

தொடர்ந்ததால்..

இல்லாமல் போவேன்,
அவள் இதயத்தில் நுழைந்து..

படிங்க😊 புடிக்கும்😜 V 3.8

ஆண் பெண் இருபாலர்கும் இன்று விடுமுறை நாள்..!

ஆடும் கோழியும் மீனும்
இன்று அதிகம் உயிர்விடும் நாள்..!

படிங்க😊 புடிக்கும்😜 V 3.9

சிரிப்பவர் சிரிக்கட்டும்
தூற்றுபவர் தூற்றட்டும்
பழிப்பவர் பழிக்கட்டும்
இருப்பவர் இருக்கட்டும்

தோழர்களே..

உன்னில் குறைவது ஏதுமில்லை !
கடினமாய் உழைத்தால் தோல்வியில்லை !!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.0
கண்களில் காட்சியானவள்!
சுவாசத்தின் கீதமானவள்!
வண்ணத்தின் நிறமானவள்!
வாசலில் கோலமானவள்!
வார்த்தைகளின் சொல்லானவள்!
கண்ணாடி பிம்பமானவள்!
நிலவின் ஒளியானவள்!
இன்னிசையின் சுரமானவள்!
சோலைகளின் பசுமையானவள்!
மலரின் மனமானவள் !
மாலைகளில் மலரானவள்!
விடியலில் வெளிச்சமானவள்
சுகமான நினைவானவள்
நினைவில் நின்றவள்
உயிரிலே உறைந்தவன் உணர்விலே கலந்தவன் உள்ளத்திலே சுமப்பவன்
உடலிலே உதிரமானவன்
வாழ்கையின் வரமானவள் !!!


படிங்க😊 புடிக்கும்😜 V 4.1

இன்று துன்பமென்று
நீ ஓடினால்,
நாளை வரும் இன்பம்
யாருக்கு சொந்தமாகும்?

வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும்
கலந்த ஒன்றாகும்..!!!

வாழ்க்கையில் போராட்டம் இருக்கும் வரை ,
விடாது போராடினால் வெற்றி நம் அருகில்.!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.2

நண்பன் சொன்னான்..,

அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுக்கும் வரை,
அதை வாங்க மக்கள் அலைமோதும் வரை,
நாடு முன்னேறாது என்றான்.

நானும் வருத்தப்பட்டேன்...

தீடீரென்று மச்சி உன்னிடம் அமேசான் ஆப் இருக்கா என்றான்.

ம்ம் இருக்கு ஏன் என்றேன்?

"அமேசானில் ஒரு கை கடிகாரம் வாங்கினால் இன்னொரு கடிகாரம் இலவசம்னு சலுகை போட்டிருக்காங்க
அதற்குதான் கேட்டேன்"
ம்ம் சீக்கிரம் டைம் ஆகுது  என்றான்.

திருந்தாத உலகம்😅
சிந்திக்காத உறவுகள்😳

படிங்க😊 புடிக்கும்😜 V 4.3


துன்பங்கள் தரும் துணைகளை 
தூக்கி எறிந்திடு!
நரிகளாய் நயவஞ்சகம் செய்யும்
நண்பர்களை விரட்டிடு!
பாவம் புரியும் பாவிகள்
என்றால் துரத்திடு!
சூழ்ச்சிகள் செய்து தடுக்கும்
உறவுகளை ஒழித்திங்கே வென்றிடு
உன்னை நம்பியே உலகினில் வாழ்ந்திடும்
உறுதியை நெஞ்சினில் கொண்டிடு

படிங்க 😊 புடிக்கும் 😋 V 4.4


என்னவளே...

காற்றும் கர்வம் கொள்ளும்,
உன்னை பற்றி உச்சரிக்கும் போது..
எழுதுகோல் பெருமை  கொள்ளும்,
உன்னை பற்றி எழுதும் போது..
உறவும் வாட்டம் கொள்ளும்,
உன்னை பற்றி பிரியயெண்ணும் போது..
கவிதையின் தலைப்பாய் மாறும்,
உன்னை பெயரை பற்றி நினைக்கும் போது..
அழகும் பொறாமை படும்,
உன்னை பற்றி வர்ணிக்கும் போது..
உயிரும் உயிர் கொல்லும்,
நிகரில்லா உன்னை ஒப்பிடும் போது..!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.5


தோல்வி என்பது உளி போன்றது !
வெற்றி என்பது சிற்பம் போன்றது !

தோழர்களே..

முதலில் உளியை பிடித்து பழகு !
அப்பொழுது தான் அழகான சிற்பதை
உன்னால் செதுக்க முடியும்!
படிங்க😊 புடிக்கும்😜 V 4.6

தலைமுடி திருத்தும் தலைவன்!
சவரம் செய்யும் சிகையழகன்!
நேரம் தெரிவிக்கும் முன்னோடி!
மானம் காக்கும் நெசவாளன்!
பசியை போக்கும் கடவுள்(விவசாயி)!
சாக்கடை சுத்திகரிக்கும் சகோதரன்!
வீட்டை காக்கும் காவலன்!
வேலை முடிக்கும் வெற்றியாளன்!
உடம்பை சரிசெய்யும் மருத்துவன்!
தொழில் முனையும் முதல்வன்!
நுட்பம் புரியும் மூளைக்காரன்!
நெறிமுறை சொல்லும் நெறியாளன்!
சட்டம் தவறாத சாணக்யன்!
காலணி சரி செய்யும் காப்பாளன்!
நாட்டை காக்கும் நண்பர்கள்!(காவலர்)

இப்படி,

நாம் வாழ
உழைக்கும் உழைப்பாளிகளை

வணங்குகின்றேன்!!!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.7

அன்பே...

விளகொளி வேண்டாம்,
உன் கண்ணொளி போதும்!
ஆயக்கலைகள் வேண்டாம்,
உன் ஆராதனை போதும்!
குடியிருப்பு வேண்டாம்,
உன் நெஞ்சாங்குழி போதும்!
சீண்டிபார்க்க வேண்டாம்,
உன் தீண்டுதலே போதும்!
தலையணை வேண்டாம்,
உன் மடி போதும்!
பஞ்சுமெத்தை வேண்டாம்,
உன் உடலே போதும்!
பேச்சுவார்த்தை வேண்டாம்,
உன் முத்தங்களே போதும்!
பரிசுபொருள் வேண்டாம்,
உன் ஸ்பரிசம் போதும்!
தகனமேடை வேண்டாம்,
உன் மூச்சுகாற்றே போதும்!
காலங்கள் வேண்டாம்,
உன் காலடியே போதும்!!!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.8

ஓடாத கடிகாரம் கூட
ஒரு நாளைக்கு இருமுறை
சரியான நேரம் காட்டும்..!

ஓடி உழைக்க வேண்டிய நீயோ
ஓய்வெடுத்து சரியான நேரங்களை
வீணடிக்கிறாய் மூடனே..!

தோழர்களே..

மூச்சு காற்றுவரை உழைப்போம்!!!
முதுமையில் ஓய்வெடுப்போம்!!!

படிங்க😊 புடிக்கும்😜 V 4.9
நீ பாடியதால் குயில் தோற்றது
நீ ஆடியதால் மயில் தோற்றது
நீ பேசியதால் கைபேசி தோற்றது
நீ பார்த்ததால் விழி தோற்றது
நீ வாதாடியதால் மொழி தோற்றது
நீ நடித்ததால் கலை தோற்றது
நீ கோபப்பட்டால் பாற்கடல் தோற்றது
நீ அமைடியானால் தியானம் தோற்றது
நீ நட்பானால் பலவீனம் தோற்றது
நீ நெருங்கினால் தைரியம் தோற்றது
நீ காதலியானதால் இதயம் தோற்றது
படிங்க😊 புடிக்கும்😜 V 5.0

 தீக்குச்சி போல்
தலைக்கனம் கொள்ளாதே,
எரிப்பதுடன் நம்மையும்
எரித்துவிடும்..!

 பத்திக்குச்சிக்கு போல்
தாயாள குணம் கொள்,
நாம் அழிய நேர்ந்தாலும்
தரணிக்கு மணம் கொடுப்பாய்..!

படிங்க😊 புடிக்கும்😜 V 5.1

நீ!  தோல்வியடைகையில்...
கண்ணீர் துளிகூட கண்களை
விட்டுச் செல்லும்
நீ! நிச்சயம் அடுத்த முறை
உன் வாழ்க்கையில்...
வெல்வாய் என்ற
நம்பிக்கையில்.....

படிங்க😊 புடிக்கும்😜 V 5.2

அ'ழிந்து கொண்டிருக்கும் பச்சை மரங்கள்!
ஆ'டி காலத்துலேயும் அடிக்காத காற்று!
இ'ல்லாமலே போன குயில்களும் சிட்டுக் குருவிகளும்!
ஈ'க்கள் காக்கா எறும்புகள் இல்லாத சுற்றுச்சூழல்!
உ'ண்ண உணவின்றி இறக்கும் ஏழை மனிதம்!
ஊ'க்க மருந்தாக தூக்க மருந்து வாங்கும் அவலம்!
எ'ட்டப்பனாக நாட்டின் பலத்தை விற்க்கும் அரசியல்வாதிகள்!
ஏ'ர் கலப்பையிருந்த கைகளில்
செங்கல் சிமெண்ட் வேலை!
ஐ'ம்பொன்னனைத்துக்கும் ஆசைப்பட்டு அடிமையாகிப் போனவர்கள்!
ஒ'ய்யார வாழ்க்கைகாக ஒழுக்கம் கெட்ட பல மாக்கள்!
ஓ'டமான வாழ்க்கையின் ஓட்டத்தில்
பாடம் மறந்த மகான்கள்!
ஔ'வையாகிப் போன வறுமைக்குப்
பிறந்த வாலிப பெண்கள்!
எ'ஃ'கு மனம் படைத்தவர்கள்
எள்ளலுக்கஞ்சி எட்டி நிற்பவர்கள்!

எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்

சிந்திப்போம் சமுதாயமே

புதியதோர் உலகம் செய்திடுவோம்!

படிங்க😊 புடிக்கும்😜 V 5.3

முட்டு
உன்னால் முடியும் முட்டு..

தட்டு
கதவு திறக்கும்வரை தட்டு..

தாங்கு
வரும் சவால்களை தாங்கு..

பேசு
இடம் அறிந்து பேசு..

வீசு
பிறர் மனம் வாடா மணம் வீசு..

ஓடு
இலக்கை அடையும்வரை ஓடு..

தேடு
தேவையை ஆழமாய்த் தேடு..

எழு
எதுவும் முடியும் எழுச்சியுடன் எழு..

தாண்டு
தடைகளை தகர்த்து தாண்டு..

முயல்
தொடர்ந்து அல்லது தொலையும்வரை முயல்...!!!

படிங்க😊 புடிக்கும்😜 V 5.4

மரம் சொல்கின்றது..

விதையாவேன்
செடியானேன்
மரமானேன்
நிழலானேன்
அதில்
பூவானேன்
அழகானேன்
காயானேன்
கனியானேன்
உணவானேன்
உயிரானேன்
மீண்டும் விதையாவேன்..
மனிதா..
என்னை வளர்த்து விடு,
இல்லையேல், வளரும் என்னை வெட்டாமல் இருந்து விடு

படிங்க😊 புடிக்கும்😜 V 5.5.1

உயிர் தந்து
உடல் தந்து
உள்ளம் தந்து
உணவு தந்து
உணர்வு தந்து
உலகம் காட்டிய
உன்னத தெய்வம்
        "அம்மா "

படிங்க😊 புடிக்கும்😜 V 5.5.2

உலகின் அதிசயங்களின்
முதன்மை "அம்மா"
உலகின் சிறந்த
தமிழ்ச் சொல் "அம்மா"
உலகின் மொத்த அன்பின்
உருவம் "அம்மா"
உலகின் தண்டனையில்லா
நீதிமன்றம் "அம்மா"
உலகின் முதலும்
முடிவும் "அம்மா"
உலகின் ஒரே ஒரு
தெய்வம் "அம்மா"

அன்னையர் தின வாழ்த்துகள்

படிங்க😊 புடிக்கும்😜 V 5.5.3

உலகில்...

சிறந்த இடம்
- தாயின் பாதம்
சிறந்த மருத்துவமனை
- அன்னையின் மடி
சிறந்த மருத்துவம்
- அன்னையின் அன்பு
சிறந்த மந்திரம்
- அம்மா என்ற சொல்
சிறந்த பரிசு 
- தாயின் முத்தம்
சிறந்த மாளிகை
- அன்னையின் கருவறை
சிறந்த உணவு
- தாயின் சமையல்
சிறந்த ஆசி
- தாயின் வாழ்த்து
சிறந்த பாடல்
- தாயின் தாலாட்டு
சிறந்த சிம்மாசனம்
- தாயின் இடையில் அமர்தல்
சிறந்த பயணம்
- அன்னை கைபிடித்து நடப்பது
சிறந்த ஆசான்
- தாயின் அரவணைப்பு
சிறந்த கவிதை
- அம்மா எனும் மூன்றெழுத்து
சிறந்த பொக்கிஷம்
- தாயின் படம்

கொண்டாடுவோம்
போற்றுவோம்
எல்லா நாளும்
அன்னையரை

படிங்க😊 புடிக்கும்😜 V 5.6

முடிந்தவரை மோதிவிடு
மலையும்கூட இடிந்துவிடு
விழுந்தவுடன் எழுந்துவிடு
உடனே தொடர்ந்துவிடு
உள்ளமட்டும் பார்த்துவிடு
காலம்வரும் பொறுத்திடு
பகைத்தொரைப் புதைத்திடு

அகிலமே அறியட்டும்,
வருகிறவன் நீயென்று..!

படிங்க😊 புடிக்கும்😜 V 5.7

எதற்காகவும் நின்று
சுழலாத பூமி..
தேய்வோம் என்றாலும்
வளரும் நிலவு..
தடைகள் வந்தாலும்
கடல்சேரும் நதி..
கல் பாறை இருந்தாலும்
முட்டி முளைக்கும் விதை..

இப்படி இயற்கையும் கூறுதே
தடைகள் ஏதுவாயினும்
நம் பணி சரியாய் செய்து
பயணிப்போமென்று!!!!


 படிங்க😊 புடிக்கும்😜 V 5.8
கண்களில் காட்சியானவள்!
சுவாசத்தின் கீதமானவள்!
வண்ணத்தின் நிறமானவள்!
வாசலில் கோலமானவள்!
வார்த்தைகளின் சொல்லானவள்!
கண்ணாடி பிம்பமானவள்!
நிலவின் ஒளியானவள்!
இன்னிசையின் சுரமானவள்!
சோலைகளின் பசுமையானவள்!
மலரின் மனமானவள் !
மாலைகளில் மலரானவள்!
விடியலில் வெளிச்சமானவள்
சுகமான நினைவானவள்
நினைவில் நின்றவள்
உயிரிலே உறைந்தவன் உணர்விலே கலந்தவன் உள்ளத்திலே சுமப்பவன்
உடலிலே உதிரமானவன்
வாழ்கையின் வரமானவள் !!!

படிங்க😊 புடிக்கும்😜 V 5.9
நிஜமின்றி நிழலேது
ஒலியின்றி எதிரொலி ஏது
தூக்கமின்றி கனவேது
நீயின்றி நானேது
படிங்க😊 புடிக்கும்😜 V 6
 அன்பு
அதன் வசீகரம்
உலகை ஆளும்.
அதன் வழி
அகிம்சையின் பாதை.
அதன் ரூபம்
சுயநலம்மற்ற ஆனந்த முழுமை.
அதன் பிறப்பு
பூக்களில் தேன் தோன்றிடும் நிறை சுகம்.
அதன் இழப்பு
நரகத்தின் முன் வினை.
அதன் இருப்பிடம்

உண்மையும் காதலும் இயற்கைபினைப்பின் இலக்கணம்.

எங்கும் நிறைந்தது
இயற்கை முரண்படும் மனங்கள் மட்டுமே அன்பு அற்றது

படிங்க😊 புடிக்கும்😜 V 6.1

உரிமையுக்கும், உடமைக்கும்
போராடியது போதும் ...

விழித்திடுவோம் ..
சிந்திதுடுவோம்..
உணர்ந்திடுவோம் ..
உணர்த்திடுவோம்..

இன்று ஓர்நாள்
உயர்த்திடுவோம் நம் விரலை
உரிமைக்கும் ,நம் உடமைக்கும்
துணையாக இருக்க
தேர்ந்தெடுப்போம் நல்ல ஒருவரை ...

இலவசத்துக்கு இணங்காமல் ,
பணத்திற்கு மயங்காமல்
ஓர் நல்ல அரசாங்கம் என்பது
தனி நபர் அல்ல -அது
மக்களாகிய நாம்தான் என்பதை
மறவாமல்
வருடம் ஐந்து
போராடுவதை விட்டு விட்டு
நாள் ஒன்று நன்கு
சிந்தித்து -இன்று
நல் மனிதருக்கு வாக்களித்து
நம் நாட்டை காத்து ...
நம் நிலை உயர்த்த
வாக்களிப்போம் உண்மையாக ....
படிங்க😊 புடிக்கும்😜 V 6.1.1

வாக்கு உன் உரிமை
வாக்களிப்பது நம் கடமை
வாங்கு விரலில் மை
வாழ்வில் தீரும் வறுமை
வரும் நாட்டுக்கு இனிமை
படிங்க😊 புடிக்கும்😜 V 6.2

உழவை உளமார மதிப்போம் !
உறவை உலகறிய வளர்ப்போம் !

கனவைக் கண்டறிந்து நடப்போம் !
கற்பைக் களமறிந்து காப்போம் !

நன்செய் நலமருந்து கொடுப்போம் !
நஞ்சை நலமறிந்து தடுப்போம் !

இயற்கையை அழியாமல் காப்போம் !
இறைவனை அன்பில் காண்போம்  !

அறிவை அலகில்லாமல் வளர்ப்போம் !
அன்பை அளவில்லாமல் விதைப்போம் !
படிங்க😊 புடிக்கும்😜 V 6.3

நாம் இறந்தால்..
கண்கள் முப்பது நிமிடம்,
மூளை பத்து நிமிடம்,
இதயம் ஐந்து நிமிடம்,
மட்டுமே உயிருடன் இருக்கும்..!

ஆனால் உடலுறுப்பு தானம் செய்வதினால்..
ஏழேழு ஜென்மத்திலும்
உன் பெயர் சொல்லி நீ
இறந்த பின்னும் வாழும்...!!
படிங்க😊 புடிக்கும்😜 V 6.4

அன்று..
ஆங்கிலேயர் ஆட்சியில்
மக்களுக்கு
சுதந்திரம் பெற்று தர
நாட்டிலிருந்து மகாத்மாகாந்தி
தண்டியாத்திரை செய்து
வெற்றியை தீர்மானித்தார்..!

இன்று..
மக்களாட்சியில்
வேட்பாளர் வெற்றி பெற
மக்களுக்கு
நோட்டிலிருந்து மகாத்மாகாந்தி
பணப்பட்டுவாடா செய்து
வெற்றியை தீர்மானிக்கிறார்..!
 படிங்க😊 புடிக்கும்😜 V 6.5

ஒரு ஆண்மகன்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தால்,
அவனை "உழைப்பாளி " என்று
உலகம் சொல்கிறது..
அதுவே
ஒரு பெண்மகள்
வாழ்க்கையில் முன்னேற்றம்
அடைந்தால்,
அவளைக் குறை கூறுவதற்கு
உலகம் காரணம் தேடுகிறது.

பெண்களை மதிக்காத
நாடும் வீடும் பேரும்
முன்னேற வாய்ப்பில்லை..!
 படிங்க😊 புடிக்கும்😜 V 6.6

சுட்டபோதும் சுவை தரும்
சோளக்கதிர் !

புறம் முள் அகம் இனிக்கும்
பலா !

சுற்றி முள் ஆனாலும் அழகு
ரோசா !

அடி வாங்கியும் அழகாகும்
சிலை !

இடி இறங்கினாலும் தாங்கும்
பூமி  !

மின்னல் வெட்டியும் கிழியாத
வானம்  !

உருவமில்லை அசைத்தன கிளைகளை
காற்று !

கலைந்தாலும் சூரியனையே மறைக்கும்
மேகம் !

உதிர்ந்தும் துளிர்க்கும் பட்ட
மரம்  !

இப்படி இயற்கையின்
இன்முகம் சொல்லுதே..

யாரையும் ஏமாற்றாதே!
யாருக்கும் அஞ்சாதே!
எதற்க்கும் பணியாதே!
எவரையும் நம்பாதே!

தோல்வியே நண்பன்!!
கண்ணாடியே எதிரி!!
நேரமே துணை என்று!!
 படிங்க😊 புடிக்கும்😜 V 6.7

பணம் எடுப்பவன்
தொழிலாளி ஆகிறான்!
பணம் தேடுபவன்
பிச்சை எடுக்கிறான்!
பணம் பகிர்பவன்
தர்மன் ஆகிறான்!
பணம் சேர்ப்பவன்
சுயநலம் பார்கிறான்!
பணம் மறைப்பவன்
கஞ்சன் ஆகிறான்!
பணம் நிறைப்பவன்
முதலாளி ஆகிறான்!
பணம் பிடுங்குபவன்
திருடன் ஆகிறான்!
பணம் கொடுப்பவன்
எளிதில் ஜெயிக்கிறான்!
பணம் போற்றுபவன்
பைத்தியம் ஆகிறான்!
மொத்தத்தில்..
பணம் இருப்பவன்
தீமையை செய்கிறான்!
பணம் இல்லாதவன்
தெருவில் நிற்கிறான்!


 படிங்க😊 புடிக்கும்😜 V 6.8

மண்ணில் பிறந்தது
மகத்துவமாய் வாழ...!
கல்வி பயின்றது
கலங்கிடாமல் வாழ...!
நட்பாய் பழகுவது
நலமுடன் வாழ...!
வேலைக்கு செல்வது
வேதனையின்றி வாழ...!
திருமணம் செய்வது
திருப்தியாக வாழ...!
பணம் சம்பாதிப்பது
பட்டினியின்றி வாழ...!
தோழர்களே
வாழ்க்கை வாழ்வதற்கே.....
வாழ்ந்து பாருங்கள்.


 படிங்க😊 புடிக்கும்😜 V 6.9

கள்ளமில்லா சிரிப்பு
கடைசிவரை இருந்தால்
உள்ளம் மிக மகிழும்
உள்ளவரை சுகம் தவழும்

கஷ்டம்கூட ஏண்டா வந்தோம்னு
கண்டும் காணா ஓடும்

முகத்தில் சிரிப்பைவை
முகவரியை சிறக்கவை

சிரி... சிரி
வாழ்வோம் சரி.


 படிங்க😊 புடிக்கும்😜 V 7

நீ சிரித்தாள்
சிரிக்க வைக்கிறாய்

நீ அழுதாள்
ஏங்க வைக்கிறாய்

நீ விக்கினால்
ஏக்கமாய் பார்க்க வைக்கிறாய்

நீ தும்மினால்
பதற வைக்கிறாய்

நீ பேசினாள்
ரசிக்க வைக்கிறாய்

நீ உரசினால்
தீயாக எரிகிறாய்

நீ பார்த்தால்
நிலவாக குளிர்கிறாய்


படிங்க😊 புடிக்கும்😜 V7.1

காதலும் காமமும்
உன் பார்வையைப் பொறுத்தது !
கூடலும் ஊடலும்
உன் தேவையைப் பொறுத்தது !
வசதியும் வாய்ப்பும்
உன் தேடலைப் பொறுத்தது
ஈவும் மீதியும்
உன் திட்டகள் பொறுத்தது !
இன்பமும் துன்பமும்
உன் மனதை பொறுத்தது !
ஏற்றமும் இறக்கமும்
உன் மதியைப் பொறுத்தது !
நேரமும் காலமும்
உன் எண்ணத்தைப் பொறுத்தது !
வெற்றியும் தோல்வியும்
உன் செயலைப் பொறுத்தது !

நிரந்திரம் இல்லா உலகில்
முடிவு உனக்கு சொந்தம் !

எல்லாம் ஏற்கும் மதியும்
தாங்கும் மனதை பொறுத்தது!!

 படிங்க😊 புடிக்கும்😜 V 7.2

தயக்கம் களை , தைரியம் விளை!
தடைகளை உடை , புதுமைகள் படை!
அச்சம் விடு , உச்சங்கள் தொடு!
துணிவே துணை , அதற்கில்லை இணை!
சிறகை விரி , சாதனை புரி !
லட்சியம் அடை , அதற்கில்லை தடை !
கனவுகள் விதை , இழப்பது எதை?!
மனதைத் திற , வானில் பற !
பேதங்கள் மற , இதயத்தைத் திற!
சீற்றம் குறை , சாந்தம் நிறை !
இன்சொல் இடு , சுடுசொல் விடு !
பொய்களை ஒழி , மெய்யதை மொழி !
வேதனைஎரி, புன்னகை புரி!
நன்றே நினை , தெய்வம் துணை!

படிங்க😊 புடிக்கும்😜 V 7.3
சொல்ல சொல்ல தீராத வார்த்தைகளாய்
ஊற்றாக கவிதை தான் கொட்டுதடி

அள்ள அள்ள குறையாத தீர்த்தந்களாய்
உந்தன் சிந்தனைதான் சிந்துதடி

சிந்த சிந்த சிதறாத முத்துக்களாய்
உந்தன் புன்னகைதான் பூக்குதடி

சிரிக்க சிரிக்க அடங்காத ஆனந்தமாய்
இன்பம்தான் கடலென பொங்குதடி

அலை அலையாய் சீறுகின்ற சமுத்திரமாய்
எல்லை மீற ஆசைதான் தூண்டுதடி

ஆசை ஆசையாய் எரிகின்ற நெருப்பாய்
உந்தன் பார்வை தான் கொல்லுதடி
படிங்க😊 புடிக்கும்😜 V 7.4
 துன்பங்களை சந்திக்கலாம்
இன்பத்தின் சாரல் இருந்தால்

காயங்களை ஆற்றலாம்
கனிவான வாய்மொழியினால்

சோகங்களை விரட்டலாம்
சுமை குறைக்கும் நட்பிருந்தால்

கண்ணீரும் இனிக்கலாம்
தடை போடும் கரங்களால்

பாலையான மனதிலும் பசுமை தோன்றலாம்
மழையென வாழ்க்கைத்துணை இருந்தால்.
படிங்க😊 புடிக்கும்😜 V 7.5

விதைக்காத விதை தோல்வி காணும்!

விடையில்லா கேள்வி வேளிவியாகும்!

மடையில்லா ஆறு ஊரை நாசமாக்கும்!

தடையில்ல பயணம் சோர்வை உனக்கு ஊட்டும்!



நண்பா உன்னை  மீட்டு எடு!

உன் உண்மையை கண்ணில் பூட்டி விடு!

நினைவை உன்னில் நீந்த விடு!

உன் கனவை நெஞ்சில் ஊற விடு!



களைப்பாறும் போதும்

நீ கவனமாக இரு!

கரை சேரும் வரை

நீ கடுமையாக இரு!



முடிவு சாதகாம இல்லையெனில்,

முயற்சியை சாதகமாக்கபழகிக்கொள்!

பயிற்சி பற்றாது எனில்,

போட்டியை சோதனையா மாற்றிக்கொள்!



நீ உன்னை உணர, உணர,

உண்மை உன்னுடன் உறவுக்கொள்ளும்!

உன் உண்மை உனக்கு புரிய, புரிய,

கருமை உன்னை விட்டு செல்லும்!



அப்பொழுதுத்தான் உன் மனதில் துரிதம் பாயும்

உன் குணத்தில் ஒளிகள் வீசும்!

மனம் தெளிந்த பின் நீ  துரிதமாவாய்!

குணம் ஒளிந்த பின் நீ வெளிச்சமாவாய் இவ்வுலகிற்கு!
படிங்க😊 புடிக்கும்😜 V 7.6
கவலை சுமக்க தேவையில்லை..
கனவு உண்டு,
உன்னிடம்.

காதல் புரிய தேவையில்லை..
கடமை உண்டு,
உன்னிடம்.

போதை ஏற்க தேவையில்லை..
பொறுமை உண்டு,
உன்னிடம்.

பாதை மாற தேவையில்லை..
பற்று உண்டு,
உன்னிடம்.

வீறுகொள் இளைஞனே..!!
விருப்பம்போல் வாழ்ந்திட..!!
படிங்க😊 புடிக்கும்😜 V 7.7
 எழு மனமே விழித்தெழு..!!

இது உனக்கான நேரம்
உனக்கான காலம் எழு
மனமே..!! எழு
உனக்குள் இருக்கும்
கவலை கொழுத்தி
மகிழ்ச்சித் தீபம்
ஏற்றிவிடு

பிரபஞ்சம்
உன்னுடையது
உன் கால்களுக்கு
சக்கரம் எதற்கு
முயற்சி இருந்தால்
பாதணிகூட இல்லாமல்
ஞாலம் கடக்கலாம்

இன்றைய பொழுது
உனக்கானது
இந்த நிமிடமும்
உனக்கானது
இயன்றவரை
அன்பை சேமி
இயன்ற வரை
அன்பை பரிசளி

சூரியனின்
ஒளியை சிறைப்பிடிக்க
முடியாது
காற்றை நிறுத்தி
காவலிட முடியாது
உன்னை நீயே
சூரியனாக்கு
நன்மைகள் செய்து
காற்றாய் ஆகு

விழிகளில் வழிவது
உஸ்ணத்தின் கழிவு
அதை உள்ளத்தின்
கழிவிற்கு
ஒருபோதும் விற்காதே

புன்னகைகளை
முகத்தில் தொங்கவிடு
வரவேற்பையும்
அன்பையும்
கழுத்தில் மாட்டு
துக்கத்தை கோபத்தை
தூக்கில் ஏற்று
மறந்துவிடாமல்
ஒரு மரமேனும் நாட்டு

காமம் குரோதம்
உணவு செயற்கை
அன்பு போதை என்பன
உன்னை
தின்னாத வரையிலும்
சந்தேகம் பொறாமை
சூது பகை
களவு பேராசை வஞ்சனை
வசைச்சொல்
உன்னில் குடிகொள்ளாதவரையிலும்
வைத்திய சாலைகளும்
காவல் நிலையங்களும்
போதனைக் கூடங்களும்
அவசியமற்றதொன்று

விழித்தெழு
உறக்கம் உன்னையே
விழுங்கிவிடும்
ஆம் நீ இப்போதும்
மாயை எனும்
உறக்கத்தில்த்தான்
இருக்கிறாய்
மனமே..!!
படிங்க😊 புடிக்கும்😜 V 7.8

பிறர் குறை மட்டும் சுட்டிகாட்டி
வந்த அந்த விரல்👆
பிறர் முதுகு பின் சொரிஞ்சி
விட்ட அந்த விரல்👆
பிறர் கண்ண குத்தி
விட்ட அந்த விரல்👆
பிறர் பார்க்கையிலும் மூக்கை
நொண்டிய அந்த விரல்👆
பிறர் காதில் விரலை விட்டு
விளையாடிய அந்த விரல்👆
பிறரிடம் பேச போனில்
நெம்பர் டயல் செய்த விரல்👆
பிறர் ஊறுகாயை கூச்சமில்லா
தொட்டு சுவை பார்த்த விரல்👆
பிறரின் சாவியை சங்குசக்கரம்
போல் சுற்றும் அந்த விரல்👆

...

இவைகளை விடுத்து
அந்த விரலை வைத்து
"ஓட்டு" போடு
நாளை அனைத்தும்
மாறும் என்ற நம்பிக்கையில்..

நீ மாறு
எல்லாம் மாறும்👆
 படிங்க😊 புடிக்கும்😜 V 7.9

விடியலோடு
எழுந்திடு தோழா!

குளியலோடு
சோம்பலையும்
கழுவு!

அலங்காரத்தோடு
மாற்றத்தை தழுவு!

மாறுதலுக்காக
விடியலை பார்த்து
தாமதம் என்னவென்று
விசாரி !

துணிந்து விடு !
ஓயாது உழைக்க !

வெற்றிபெறுவாய்
வாழ்க்கை ஜெயிக்க!
 படிங்க😊 புடிக்கும்😜 V 8 (முற்றும்)

அ'ன்பை கொடுத்து
ஆ'ளாக்கி வளர்த்து
இ'ன்முகம் காட்டி 
ஈ' பூச்சி அண்டாது
உ'யிராய் பார்த்து
ஊ'ன் ஊட்டி 
எ'ன்நாளும் காத்து
ஏ'ணிப்படியாய் நின்று
ஐ'யங்கள் தீர்த்து
ஒ'ழுக்கம் சொல்லி
ஓ'யாமல் உழைத்து
ஔ'டதம் கொடுக்காது காத்து
அ'ஃ'து நம்மை உருவாக்கும்
தன்னலமற்ற உருவம்
         "அன்னை"யை
வணங்கி இன்று தொடங்குவோம்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...