Wednesday, October 11, 2017

PADIKKATHINGA PLEASE DELETE PANNIDUNGA KAVITHAI VERSIONS

 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.0

தாத்தா பாட்டி மாமா அத்தைனு
ஒன்று சேர்ந்து பண்டிகை கொண்டாடியது
அக்காலம்
வீட்டிலேயே எல்லோரும் டிவியை
பார்த்துக் கொண்டே பண்டிகையை  கொண்டாடுவது
இக்காலம்

எல்லோறையும் பார்த்து பேசி திண்ணையில் அமர்ந்து சிரித்து மகிழ்ந்தது
அக்காலம்
அடுக்குமாடி குடியிருப்பு எனும்
நான்கு பக்க கல்லறையில் வாழ்வது
இக்காலம்

எந்த பிரச்சனை ஆனாலும்
உறவுகள் எல்லாம் வண்டி கட்டினு வந்து தீர்த்தது அக்காலம்
தன் பிரச்சனைகளையும்
உணர்வுகளையும்
முகங்களையும்
பிரியத்தையும்
கணினியிலும்
கைபேசியிலும்
அடக்கி வைப்பது
இக்காலம்

ஆடையில்லாத நாகரிகத்தின் போது கூட பெண்ணின் மானம் காத்தது
அக்காலம்
மூடிமூடி மறச்சாலும் சரி
அரைகுறையா அணிஞ்சாலும் சரி
பெண்ணை காமமாய் (பெண் கொடுமை) பார்பது
இக்காலம்

இருக்கும் இடங்களை தேடி விவசாயம் செய்தது அக்காலம்
தேடி தேடி விளை நிலங்களையும்
விலைக்கு வாங்கி குடியிருப்புகளை கட்டுறது
இக்காலம்

நம் முன்னோர்கள்
தேசத்திற்காக போராடியவர்கள் படங்களை வைத்து
வழிபாடு செய்தது
அக்காலம்
பயனற்ற சினிமா நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின்
படங்களை வழிபடுவது
இக்காலம்

கஷ்டபட்டு உழச்சு முன்னேறியது
அக்காலம்
கஷ்டபடாம உழைக்காம முன்னேறனும்னு
நினைக்குறது
இக்காலம்

நம் முகவரியை தொலைத்து
தேடியது அக்காலம்
நம் முகத்தை தொலைத்தாலும் கூட தேட மறக்குறது இக்காலம்

இது மனிதனின்
ஆறறிவா இல்லை இயந்திர அறிவாய்??
வளர்ச்சியா இல்லை வீழ்ச்சியா??
சிந்திப்பீர்!!!
சிந்திப்பீர்!!!
சிந்திப்பீர்!!!

 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.1

கரைந்தால் தான்
கற்பூரம்
மலர்ந்தால் தான்
மலர்
படர்ந்தால் தான்
கொடி
அடர்ந்தால் தான்
காடு
முகர்ந்தால் தான்
வாசம்
ஒளிர்ந்தால் தான்
நிலவு
நிறைந்தால் தான்
காற்று
திறந்தால் தான்
பாடல்
கரைந்தால் தான்
உப்பு
எரிந்தால் தான்
நெருப்பு
தெரிந்தால் தான்
உண்மை
புரிந்தால் தான்
நட்பு
உணர்ந்தால் தான்
அன்பு
கற்றால் தான்
பாடம்
பெற்றால் தான்
வெற்றி
அறிந்தால் தான்
வாழ்க்கை


படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.2

செழுமையை இழக்க
செம்மையை அழிக்கின்றனர்

கழிவை கொண்டு
கடலை அழிக்கின்றனர்

சுத்தம் இல்லாமல்
சுற்றுச்சூழலை அழிக்கின்றனர்

நீரைத் தேடி
நிலத்தை அழிக்கின்றனர்

மரணத்தை தேடி
மரத்தை அழிக்கின்றனர்

விதைக்காமல் சாப்பிடுறவன்
விதைப்பவனை அழிக்கின்றனர்

மதத்தை கொண்டு
மனிதத்தை அழிக்கின்றனர்

ம்ம்ம்

மனிதன் வாழ
மனிதர்களையே அழிக்கின்றனர்😪


 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.3

சோகம் விடு
சொர்க்கம் தொடு

சிரித்து விடு
சிக்கல் எடு

மகிழ்ந்து விடு
மரணம் தடு

ராகம் தொடு
ரசித்து விடு

கவலை விடு
காரியம் தொடு

மதித் திடு
மனிதம் தொடு

மறந்து விடு
மன்னிப்பு கொடு

மலர்ந்து விடு
மணம் கொடு

புத்தி தொடு
புதுமை எடு

சிரத்தை எடு
சிகரம் தொடு

 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.4

Heart'a பெரிய
Bigness பண்ணு
Unwanted வார்த்தையை
Less பண்ணு
Interesting'a எதையும்
Guess பண்ணு
Anything தைரியமா
Cross பண்ணு
கவலைகளை Life
Miss பண்ணு
Always உன்னை
Assess பண்ணு
அன்பால் எதையும்
Access பண்ணு
தேவையில்லாத Rumors'a
Bypass பண்ணு
Whoever மனசால
Bless பண்ணு
Brain'a வைஸ்சால
Dress பண்ணு
ஊரே பிரமிக்க
Address பண்ணு
எந்த Work'layum
Mass பண்ணு


 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.5

உன்னை பார்க்காது
கண்களும் குருடு  தான்!!!
உன்னை அறியாது
மூளையும் கோமா தான்!!!
உன்னை கேட்காது
செவியும் செவிடு தான்!!!
உன்னை பேசாது
வாய்யும் ஊமை தான்!!!
உன்னை சுவாசிக்காது
மூச்சும் Co2 தான்!!!
உன்னை வைக்காது
இதயம் பேய்பங்களா தான்!!!
உன்னை சேராது
உடம்பும் பிண்டம் தான்!!!

உன்னை நினைக்காது
நான் நடைபிணம் தான்!!!


 படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.6

சிரிப்பில்லா முகமும்
சிந்தனை இல்லா மூளையும்
இருந்தென்ன பயன்???

கண்டிப்பில்லா Wife'm
நட்பில்லா லைப்பும்
இருந்தென்ன பயன்???

காதல் இல்லா இளமையும்
ஏமாற்றம் இல்லா காதலும்
இருந்தென்ன பயன்???

Fail இல்லா தேர்வும்
Failure இல்லா தேர்ச்சியும்
இருந்தென்ன பயன்???

சண்டை இல்லா வீடும்
கொண்டை இல்லா பூவும்
இருந்தென்ன பயன்???

அசைவில்லா கடவுளும்
அன்பில்லா மனிதனும்
இருந்தென்ன பயன்???

Cream இல்லா கேக்கும்
Dream இல்லா இரவும்
இருந்தென்ன பயன்???

பெண் இல்லா ஆணும்
ஆணில்லா பெண்ணும்
இருந்தென்ன பயன்???

புதுமை இல்லா உலகமும்
அழிவில்லா மனிதனும்
இருந்தென்ன பயன்???




படிக்காதிங்க Please
delete பண்ணிடுங்க v 1.7

மரணம் நேருமென
மலர்கள் அஞ்சுவதில்லை,
மலர்ந்து அழகாய்
மணம் வீசும்!!!
தோழர்களே வரும்
தோல்வியை கண்டு துவளாதே
தேடி போய்
தோற்க்கடி தேர்ச்சி பெறு!!!


No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...