Saturday, October 21, 2017

நவீன திருக்குறள் PART 1

நவீன திருக்குறள் V 0.1
அதிகாரம் - வாழ்க்கை 
____________________________
1. தேடி கிடைத்த வாழ்க்கையில் நிம்மதி
தேடி தொலையுது வாழ்க்கை!

2. அழகாய் தோன்றி நொடியில் மறைய
வானவில் அல்ல வாழ்க்கை!

3. நேற்று கனவு இன்று நிஜம்
நாளை நம்பிக்கை வாழ்க்கை!

4. இடக்கை வலக்கை உடன் நம்பிக்கை
வாழ கிடைக்கும் வாழ்க்கை!

5. கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைத்தது
இன்றோ நாளையோ நிலைக்காது!

6. இயந்திரமயமான உலகில் இன்று மனிதர்களும் 
மனிதநேயம் இன்றி இயந்திரமாய்! 

7. வாழ்க்கையில் தேவை நிம்மதி இல்லையேல்
அனைத்தும் இருந்து அதோகதி!

8. நானென்பது நீங்க நாமென்று சொல்ல
நன்மை பயக்கும் வாழ்க்கை!

9. விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தானென்பதே பெருமை!

10. கருவறையில் தொடங்கி கல்லறை வரை
ஆடி அடங்கும் வாழ்க்கை!


நவீன திருக்குறள் V 0.2
அதிகாரம் - அப்பா
__________________________
1. அனைத்திலும் உட னிருக்கும் முழு
முதற் கடவுள் அப்பா!

2. நாம் அப்பாடானு இருக்க ஓய்வு
எடுக்க காரணம் அப்பாடா!

3. அப்பாவின் வார்த்தைகளில் தான் நம்
வாழ்க்கை அழகாய் விரிகின்றது!

4. இரத்தத்தை உழைப்பாக்கி வியர்வையாக்கி பணமாக்கி
குடும்பம் காக்கும் கடவுள்!

5. உயிரின் சொல் ஊக்கத்தின் சொல்
உந்துதலின் சொல் அப்பா!

6. வீம்பாய் வெளியே கோபம் உள்ளே
ஆயிரமடங்கு அன்புடையவர் அப்பா!

7. சுமையில் பெரிய சுமை குடும்பச்சுமை
சுமப்பார் சுகம் காப்பார்!

8. தோள் தாங்கி தோள் கொடுத்து
புதிய உலகம் காட்டியவர்!

9. தொடுகை அரவணைப்பு விழிமொழி புன்சிரிப்பு
புரியாத புதிர் அப்பா!

10. அன்னை தெய்வமென்றால் தந்தை இவன் 
தெய்வம் வாழும் கருவறை!



நவீன திருக்குறள் V 0.3
அதிகாரம் - அம்மா எனும் சொல்
___________________________________
1. பேசும் ஜீவன்களும் பேசா உயிர்களும்
உச்சரிக்கும் ஒரே சொல்!

2. இனிமையின் சொல் இடர்போக்கும் சொல்
நம்மை இயக்கும் சொல்!

3. ஓர் சொல்லில் உலகம் நாம்
உணர்வோம் ஒவ்வொரு செல்லில்!

4. சொல்லுக அம்மானு சொல்லுக தொடங்குக
செயல் தொடங்கி வெல்லுக!

5. அம்மாவின் சொல் தனித்துவம் கேட்டால்
தத்துவம் செய்தால் மகத்துவம்!

6. சொல்லில் இன்சொல் சொற்களுக்கு எல்லாம்
முதற்சொல் அம்மா என்பதே!

7. எழுத்துக்களில் போட்டி வென்றது மூன்றெழுத்து
அம்மா என்ற சொல்லால்!

8. அன்பெனும் சொல்லை அன்னை ஆள்வதால்
அச்சொல் அகிலம் ஆளும்!

9. உயிர் மெய் கலந்து உயிர்மெய்
அம்மா அதில் உண்மை!

10. அச்சொல் இச்சொல் எச்சொல் அடங்கும்
அன்னை என்ற சொல்லில்!


நவீன திருக்குறள் V 0.4
அதிகாரம் - அம்மா
________________________________
1. கல்லாய் தெரியும் கடவுளைவிட கருவில்
சுமந்தவளே சிறந்த கடவுள்!

2. உனக்கு நிகர் உண்டோ இருப்பின்
நிகரில்லா நிகர் நீயே!

3.  தன்னை உருக்கி பிள்ளையை உருவாக்கும்
அன்னை உன்னதத்தின் உச்சம்!

4. உலகமே உன்னை வெறுத்தாலும் உன்னை
வெறுக்காத ஓர் உறவு!

5. வேசம் தெரியாதம்மா தெரிந்தது பாசம்
அம்மம்மா ஆமாம் அம்மா!

6. தவறுகள் மன்னிப்பாள் தவறாமல் உடனிருப்பாள்
தவறியும் விட மறுப்பாள்!

7. அன்பால் பிள்ளையை அரவணைப்பாள் நேசிப்பாள்
சுவாசிப்பாள் திளைப்பாள் மகிழ்வாள்!

8. காணிக்கைக் கேட்காத கருவறை உள்ள
கண் கண்ட கடவுள்!

9. மறக்க மறுக்க மீண்டும் எழுத
முடியாத ஒரே கவிதை!

10. அம்மா மகாராணி கலைவாணி கரைசேர்க்கும்
தோணி உயர்த்திடும் ஏணி!



நவீன திருக்குறள் V 0.5
அதிகாரம் - அம்மா அம்மாதான்
________________________________
1. உலகின் ஒளி ஆரம்ப ஒளி
உயிரின் ஒளி அம்மா!

2. தன்னை மறந்தாலும் தன்னலம் மறந்தாலும்
பிள்ளைகள் நலம் பேணுவாள்!

3. உலகே உன்னை வெறுத்தாலும் வெறுக்காது
உன்னை அரவணைப்பா ளவள்!

4. முதல் அன்பு பாசம் மொழி
முளைபாலுடன் நமக்கு ஊட்டியவள்!

5. ஆயிரம் உணவுகள் இருக்கலாம் கிடைக்கலாம்
ஈடாகுமோ அன்னையின் கைமணம்!

6. சுவாசித்தேன் அவளாள் கைமாறாக வாசித்தேன்
அம்மா என்ற கவியை!

7. பசித்தாலும் புசிக்க மாட்டாள் ரசித்தே
பள்ளையின் பசி போக்குவாள்!

8. எதிர்பார்க்காமல் கொடுக்கும் கேட்காமலேயே கிடைக்கும் 
இவ்வுலக அதிசயம் தாயன்பு!

9. மா சிரித்தாள் ம்மா மகிழ்ந்தாள் 
அம்மா ஆனந்தத்தில் திளைத்தாள்! 

10. பெண்மையில் தாய்மை தாய்மையில் தூய்மை
இஃது இறைவனின் அருமை!



நவீன திருக்குறள் V 0.6
அதிகாரம் : ஏக்கம்
______________________________________
உடன் இருந்தோர் உள்ளம் உடைத்தால்
மனவலியும் மரணம் போலாகும்..

கொடிது பொய் கொடிது அதனின் 
கொடிது துரோகம் கொடிது..

பிரிவு வருவதால் பிரிவில்லை பிரிந்தால்
நினைவே என்றும் துணை..

உனை என்றும் மறவேன் மறந்தால்
அன்றே நான் இறவேன்..

நேசிக்கும் முன் யோசி நேசித்தால்
யோசிக்காமல் என்றும் நேசி..

வாசமில்லா மலர் நீயில்லா நான்
இருந் தென்ன பயன்..

பிரிவு யாதெனில் உடலுக்கே உள்ளம்
உறுதியாக இருக்கு மாயின்..

இருப்பிடம் உலகில் ஆயிரம் நான்
இருக்குமிடம் உன் இதயம்..

ஒற்றை பார்வை என்னுயிர் சிறக்கும்
மீற என்னுயிர் எடுக்கும்..

நன்றன்று துரோகம் நன்றன்று மாறாக
சத்தமிடு சாபமிடு சாகவிடு..


நவீன திருக்குறள் V 0.7
அதிகாரம் - உழைப்பு
####################
விதி வழி வாழ்க்கை என்றால்
மதி எதற்கு மனிதனே!

துன்பத்தை இன்ப மென பழகு
இன்பம் யாதென தெரியும்!

அதிகாலை தினமும் துயில் கொள்
அதிவேகம் வெற்றி கொள்வாய்!

பெரும் வெற்றியெல்லாம் வெற்றியல்ல தோல்வியால்
வரும் வெற்றிதான் வெற்றி!

வியர்வை வை உன் உடம்பில்
உயர்வை தரும் வாழ்க்கை!

சோம்பலை எரித்து சாம்பலாக்கு பின்
சோதனையும் சாதனை யாகும்!

தூக்கம் தொலைத்து ஊக்கம் நிலைக்குமாயின்
ஏக்கமில்லா வாரும் வெற்றி! 

வறுமை ஒழிக்க உடலால் உழை
வாழ்க்கையில் வாராது பிழை!

முடியாது முயலாமை மூடத்தனம் முடித்து
முயல் முடி முன்னிறுத்து!

உழைப்பால் உயர்ந்தோர் எஃதாயினும் அழியாது
உலகில் நிலைப் பார்!


நவீன திருக்குறள் V 0.8

அதிகாரம் - தமிழ்
________________________________
1. இன்மொழி தென்மொழி தொன்மொழி செம்மொழி
மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி!

2. இமயமே எதிர்த்தாலும் எந்தமிழ் அதன் 
சிகரத்தில் நின்று ஆளும்!

3 . அமிழ்தும் அளவிலா துன்பேன் - எனினும் 
தமிழே இனியதென் பேன் 

4. தாய் என்றால் உயிர் தாய்த்தமிழ்
என்றால் உயிருக்கு மேல்!

5. முதல்குடி மூத்தக்குடி பண்பாட்டை உலகிற்கே
உரைத்த பண்பட்ட தமிழ்குடி!

6. மண் தோன்றும் முன்தோன்றிய மூத்தவளே
கண் போன்றவளே தமிழே!

7. தாய் மொழியே தரணியில் எங்கும்நாம்
வாழ வாழ்க்கைக்கு அடையாளம்! 

8. மொழிகள் பலது முன்மொழிந்தாலும் தாய்மொழி
முன்நிற்கும் இக்கட்டான சூழலில்!

9. இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ் 
சொற்களின் சுரங்கம் தமிழ்! 

10. எழுத்தில் எண்ணத்தில் எங்கும் எதிலும்
தமிழ் சுவாசி தமிழா!



நவீன திருக்குறள் V 0.9
அதிகாரம் - நட்பு
####################
1. நகரத்தை ராத்திரியில் ஊர்சுற்றுவது நட்பல்ல
நரகமேனாலும் உடனிருப்பது நட்பு!

2. நாலுபேர் சேர்ந்து தண்ணியடிப்பது நட்பல்ல
நாலுவிதமா பேசவிடாமகாப்பது நட்பு!

3. பாப்பா முதல் பல்லுவிழும் கிழம்
வரை தொடர்வது நட்பு!

4. இருப்பது முதல் இறப்பது வரை
இதயமாய் வாழ்வது நட்பு! 

5. சட்டை நூலாயிருப்பது மட்டுமல்ல தையல்நூலாய்
சட்டையை சரிசெய்வது நட்பு!

6. வருவது தெரியாது வந்தால் போகாது
வாழ்க்கையில் தொடரும் நட்பு!

7. விரல் நகமாய் யுகம் யுகமாய்
விடாது உடன் வளர்வது!

8. நட்பென்ற ஒளி உன்னிலெற்று பிரகாசிக்க
ஏற்றாவிடின் இருளும் வாழ்க்கை!

9. அலைகளும் ஓய்யும் ஓயாது நிலைக்கும்
நட்பு உண்மை யெனின்!

10. நிரந்தரம் இல்லா உலகில் நிரந்தரம்
தரம்உயர்த்தும் நட்பே நிரந்தரம்!



நவீன திருக்குறள் V 1.0
அதிகாரம் - மனம்
##################

1. பலமனம் வாழ்த்தினாலும் பலன் ஆகாது
இருமனம் சேரா விடின்!

2. காதல் முடியும் திருமணம் ஆனால்
தொடரும் இருமனம் இணைந்தால்!

3. மனம் தினம் ஆகும் ரணம்
குணம் இல்லா விடில்!

 4. உலகில் அன்பில்லா மனமுள்ளவர் வாழ்ந்தும்
அவர் நடமாடும் பிணம்!

5. தாவும் மனம் ஒரு குரங்கு
மனிதனாய் அதை அடக்கு!


6. மனம் திறந்து வை உனது
கணம் பறந்து போகும்!


7. இயங்குற மனசு எந்திரம் ஆனா
இருக்கிற வாழ்க்கை இறுகும்!


8. கையளவு மனசு கடலளவு ஆசை
பார்த்துக்கொள் ஹார்ட் அட்டாக்!

9. பணத்தால மனம் மாறும் மாறாது
குணம் கண்ட நட்பு!

10. குழந்தையும் மனமும் ஒன்று பார்த்துக்கொள்
வாழ்வு ஆகும் நன்று!

நவீன திருக்குறள் V 1.1
அதிகாரம் - வெற்றி
----------------------------------

1. தன்னம்பிக்கை கொண்டு முயற்சிபவன் அருகில்
வர தயங்காது வெற்றி!

2. உடலில் தளர்ச்சி இருப்பினும் இருப்பின்
மனதில் முயற்சியே வெற்றி!

3. கனி கனிந்திட சுவை கிட்டும்
பணி செய்தால் வெற்றியும்!

4. முன்னேறும் பாதைதனில் முற்கள் வரும் 
முடங்காமல் நடந்தாலே வெற்றிதரும்! 

5. எல்லார்கும் கிடைப்பதில்லை வெற்றி தகுதியிருந்தால்
எல்லார்கும் கிடைக்கும் வெற்றி!

6. வெற்றிப் பூ பறித்திட தோல்வியெனும் 
முட்களை அறுத் திடு! 

7. வெற்றி என்பது யாதென தெரிந்துகொள்
99 சதவிகிதம் தோல்வியாகும்!

8. போதும் என்பதில் சோர்வு கொள்
வெற்றிக்கு வெறி கொள்! 

9. தோல்வி என்னும் அக்கினிக்குள் வெந்து
வெற்றியென்னும் அன்னத்தை உண்!

 10. தோல்வியை காதலி யாக்கு வெற்றியே
உன் மனைவி யாவாள்!


நவீன திருக்குறள் V 1.2
அதிகாரம் - சல்லிக்கட்டு
----------------------+---------------- 

1.மாதா பிதா குரு நம்
தெய்வம் கோ மாதா.

2. ஏடு எடுத்தாலும் ஏறு உழுவதே
வீறு தமிழன் அடையாளம்.

3.சல்லிப் பயல்களுக்கென்ன தெரியும் சல்லிக்கட்டு
நம் பாரம்பரிய மென்று.

4.ஓடு ஓடிடு நாட்டைவிட்டு பீட்டா
கேடு விளையும் முன்.

5.கல் தோன்றா மண் தோன்றா
முன் தோன்றியது தமிழ்.

6.அண்ணன் தம்பி அக்காள் தங்கை
உடன் ஆடும் மாடும்.

7.சாயம் வெளுக்கும் வாழ்க்கை வாழா
விவசாயம் வாழ்க்கை வாழ்.

8.வளம் மிகுந்த நாடு பேணி
நாடு நமது தமிழ்நாடு.

9.தமிழுக்கு நிகர் ஏது தமிழே
உனை உயர்த்து போது.

10. உலகம் வியக்க சேர்த்தது பலக்கலை
தமிழகமே ஒரு பல்கலை.


கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...