Tuesday, July 2, 2019

காதல் பாடல்#41

என்ன செய்தாய் என்னை என்ன செய்தாய்
காதல் செய்தாய் என்னை காதல் செய்தாய்
மாயை மாயை பார்ப்பதெல்லாம் மாயை
பார்க்கும் உன்னை தவிர எல்லாம் மாயை மாயை
சரணம்
********
மேனியில் தொட்டு செல்லும் ஈக்களும் அணுகுண்டாய் வலிக்க செய்யுதே..
ஊறும் எறும்பும் யானை பிளிறி  நடந்துசெல்வதாய் அறிய தோனுதே..
உண்ணும் உணவும் கீழே இறங்கி தொண்டைகுழியில் நகர மறுக்கிறதே..
காரணம் நீ பார்த்த பார்வையோ
காதலால் நான் கொண்ட மாயையோ
சரணம்
********
கடல்நீரில் நீந்தும் மீன்கள் எல்லாம் விண்மீன்களாய் வானில் நீந்துதே..
வானில் வந்திடும் மின்னல் எல்லாம் மண்புழுக்களாய் மண்ணில் ஓடுதே..
வீசும் தென்றலும் மேனி எங்கும் புயல்காற்றாய் வீசிச் செல்லுதே..
காரணம் நீ பார்த்த பார்வையோ
காதலால் நான் கொண்ட மாயையோ

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...