அன்று
கிராமத்தில் இருந்தோம்
பூக்களை ரசித்தோம்
புல்வெளியில் விளையாடினோம்
உறவுகளை நேசித்தோம்
ஊரை கொண்டாடினோம்
பயிர்கள் செய்தோம்
உயிர்கள் காத்தோம்
இயற்கையை வளர்த்தோம்..!
இன்று
அடுக்குமாடி குடியிருப்பு வந்தது
அக்கம்பக்கம் பேசும் பழக்கம் போனது
தொலைக்காட்சி வந்தது
செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் போனது
கணினி வந்தது
புத்தகம் படிக்கும் பழக்கம் போனது
கைப்பேசி வந்தது
கடிதம் எழுதும் பழக்கம் போனது
செயலிகள் வந்தது
செயல்கள் செய்யும் பழக்கம் போனது
வாகனம் வந்தது
நடைபயிற்சி போகும் பழக்கம் போனது
குளிர்சாதனம் வந்தது
இயற்கை காற்றை ரசிக்கும் பழக்கம் போனது
வாசனை திரவியம் வந்தது
பூக்களின் வாசம் உணரும் பழக்கம் போனது
துரிதஉணவு வந்தது
பாரம்பரிய உணவு பழக்கம் போனது
பணம் பதவி வந்தது
பாசம் நேசம் அனாதையாக போனது
நகர வாழ்க்கையில் அனைத்தும் வந்தது
நகரும் வாழ்க்கை நரகம் போல ஆனது...!
அன்று அறிவியல் செய்தோம்..
இன்று அரசியல் செய்கின்றோம்...
நாளை...?
கிராமத்தில் இருந்தோம்
பூக்களை ரசித்தோம்
புல்வெளியில் விளையாடினோம்
உறவுகளை நேசித்தோம்
ஊரை கொண்டாடினோம்
பயிர்கள் செய்தோம்
உயிர்கள் காத்தோம்
இயற்கையை வளர்த்தோம்..!
இன்று
அடுக்குமாடி குடியிருப்பு வந்தது
அக்கம்பக்கம் பேசும் பழக்கம் போனது
தொலைக்காட்சி வந்தது
செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் போனது
கணினி வந்தது
புத்தகம் படிக்கும் பழக்கம் போனது
கைப்பேசி வந்தது
கடிதம் எழுதும் பழக்கம் போனது
செயலிகள் வந்தது
செயல்கள் செய்யும் பழக்கம் போனது
வாகனம் வந்தது
நடைபயிற்சி போகும் பழக்கம் போனது
குளிர்சாதனம் வந்தது
இயற்கை காற்றை ரசிக்கும் பழக்கம் போனது
வாசனை திரவியம் வந்தது
பூக்களின் வாசம் உணரும் பழக்கம் போனது
துரிதஉணவு வந்தது
பாரம்பரிய உணவு பழக்கம் போனது
பணம் பதவி வந்தது
பாசம் நேசம் அனாதையாக போனது
நகர வாழ்க்கையில் அனைத்தும் வந்தது
நகரும் வாழ்க்கை நரகம் போல ஆனது...!
அன்று அறிவியல் செய்தோம்..
இன்று அரசியல் செய்கின்றோம்...
நாளை...?
No comments:
Post a Comment