Tuesday, July 16, 2019

இசைஞானியார்

ராகங்கள் பதினாறு
ராகதேவனின் இசையில் ஆகும் பலநூறு..

இசையில் ஏழு ஸ்வரங்கள்
இசைஞானிக்கு பாட போதும் ஒரு ஸ்வரம்..

மெல்லிசை இன்னிசை உண்டு
மெஸ்ட்ரோவின் இசையில் இவ்விரண்டுடன் இடையிசையும் உண்டு..

தூக்கத்தில் தாலாட்டாய்
மகிழ்ச்சியில் காதலாய்
தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
வலியில் ஆறுதலாய்
ஆட்டத்தில் துள்ளளாய்
மனஅழுத்தத்தில் மருந்தாய்
பயணத்தில் வழித்துணையாய்

அவர் இசை இல்லாத இடங்களே இல்லை

அன்று அன்னக்கிளி தொடங்கி
இன்றும் ராகநடை போட்டு இளையராஜாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார்..

மருத்துவன் கண்டிடாத அருமருந்து
இசைஞானியார் அவர்களின் இசை விருந்து

ஆம் உலகம் பார்த்து
வியந்த மனிதருள் முதன்மையானவர்
இசைஞானி இளையராஜா.

அவர் வாழ்கிற கட்டத்தில் வாழ்கிறோம்
என்பதே நமக்கு பெருமை!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...