Monday, July 22, 2019

காதல் பாடல்#50

பூக்களின் காடே புதையலின் வீடே
கவிகளின் நாடே கலைகளின் கூடே
தங்கச் சிலையே தாவனி நிலவே
தரையினில் நடக்கும் சங்கத் தமிழே
புதுக்கவிதை பாடும் புன்னகை இதழே
சரணம்
********
எண்ணில் அடங்கா தமிழ் சொற்களை சேகரிக்கிறேன்
உன்னை பற்றி தேன்தமிழ் பாடிட அதில் சிலசில வார்த்தைகளை மட்டும் கோர்கின்றேன்
நெஞ்சம் கொஞ்சி கொஞ்சி படித்திட நிற்காது சங்கத்தமிழ் வளருதே..
என்னுள் பட்டிமன்றம் தினம் தினம் உன்னை பற்றி நிகழுதே..
சரணம்
********
முகத்தில் தோன்றும் அழகு புன்னகையை சேகரிக்கிறேன்
உன்னை மோதி அழகாய் சிரித்திட அதில் நித்தமும் கரைந்து போய் தோற்கிறேன்.. 
சிரித்து சிரித்து கொன்டே இருக்க எனது ஆயுட்காலம் நீளுதே..
இதற்காக உன்னிடம் தினம் தினம் தோற்று நான் ஜெயித்தே வாழுவேன்..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...