Thursday, July 11, 2019

வாழ்க தமிழ் வளர்க தமிழ்

எனக்கு உயிர் கொடுத்தவர் அப்பா
என்னை அழகுஓவியமாய் தீட்டியவள் அம்மா
உலகம் அறியச்செய்தவர் எனது ஆசான்கள்

வாழ உயிர் மூச்சாக இருப்பது அன்னைத்தமிழ்
நீ இல்லது போனால் மூச்சு இல்லாது போகும்

தமிழை படிக்கவோ எழுதவோ பேசவோ கூட தேவை இல்லை
தமிழை நினைத்தாலே போதும்
தமிழன் தலைமுடிகூட திமிறாய் தலைநிமிர்ந்து நிற்கும்

பிறந்தது முதல்

அ'என்பதில் தொடங்கி
ஆவென்று கூச்சலிட்டு
இதழ்களால் பேசி
ஈர்ப்பால் கவர்ந்து
உச்சரிப்பில் சுழன்று
ஊனுயிரில் கலந்து
எட்டுத்திக்கும் பரவி
ஏறி உச்சசியில் நின்று
ஐயமில்லாமல்
ஒன்றாய்
ஓவென ஓலமிட்டு
அவ்வை தமிழ் வணங்கி
அஃதே நம்மை உச்சம் கொண்டு செல்லும் தமிழ்...

வாழ்க தமிழ் வளர்க தமிழ்  

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...