Sunday, July 14, 2019

இன்னும் என்ன தோழா

இன்னும் என்ன தோழா

புதியதொர் சுதந்திரம் பெற
இனியொரு பிறந்து காந்தி வரமாட்டார்
சத்தியாகிரகம் செய் சுதந்திரம் பெறுதற்கு...

புதியதொரு புரட்சி செய்ய
இனியொரு  பாரதி பிறந்து வரமாட்டார்
முண்டாசு கட்டு
எழுச்சி புரட்சி பாடுதற்கு...

புதியதொர் சட்டங்கள் சொல்ல இனியொரு  அம்பேத்கார் பிறந்து வரமாட்டார்
சட்டம் படி
குற்றங்கள் குறைக்க..

புதியதொர் சமத்துவம் பிறக்க இனியொரு பெரியார் வரமாட்டார்
யாவரும் சமமென நினை
ஒற்றுமை நிலைக்க..

புதியதொர் திட்டங்கள் போட இனியொரு காமராஜர் பிறந்து வரமாட்டார்
திட்டங்கள் தீட்டு
மக்கள் நலம் பெற..

புதியதொர் வளர்ச்சியை காண இனியொரு நம்மாழ்வார் பிறந்து வரமாட்டார்
விவசாயம் செய்
 உயிர்கள் உயிர் வாழ..

எதற்கும் எவரையும்
எதிர்பார்க்காதே
நீயே தொழிலாளி
நீயே முதலாளி
தோழா
இறங்கு செய் உயர் உயர்த்து...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...