Sunday, July 28, 2019

வெற்றி நிச்சயம்

சோகத்தை கூட்டிட
சோதனைகள் பெருகி நிற்க்கும்..

தயக்கத்தை சேர்த்திட
தாமதங்கள் வளர்ந்து நிற்கும்..

பயத்தை பற்றிட
பண்ணும் செயலும் சிதறி போகும்..

தோல்வியை அணைத்திட
வெற்றி உதறி போகும்..

நினைவில் கொள்

சோர்ந்தே இருந்திட
சோறும் இல்லாது போகும் ஒருநாள்...

ஆகையால்

சோகத்தை சுகமாக்கு
தயக்கத்தை தவிடாக்கு
பயத்தை பதராக்கு
தோல்வியை உரமாக்கு
சோர்வை வியர்வையாக்கு

இவைகளுக்கு மேல்

செயலை உனதாக்கு

வெற்றி நிச்சயம்

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...