கணவனும் மனைவியும் அழகான காலை பொழுதில்
படகு சவாரி செய்தபடி இருந்தனர்.
கணவன் தன் மனைவியை பார்த்து இயற்கையோடு
ரசித்தபடி படகை ஓட்டிக்கொண்டிருந்தான்
அப்பொழுது மனைவியிடம் கணவன் கேட்டான்
கண்ணே நாம் நடுக்கடலில் சவாரி செய்கின்றோம்
உனக்கு பயம் ஏதும் இல்லையா என வினவினான்?
அதற்கு அவள் கண்ணால இங்கு
அலை வந்து என்னை இழுத்தாலும்
மீன் வந்து என்னை கடித்தாலும்
சுறா வந்து என்னை விழுங்கினாலும்
சுனாமி வந்து என்னை சுற்றி அடித்தாலும்
நீங்கள் இருக்கிறீர்கள் என்று பயம் இல்லாமல் இருக்கிறேன் என்றாள்.
அதே கேள்வியை அவனிடமும் கேட்டாள்
அவனும் சற்று புன்முறுவலுடன் சொன்னான்
வானம் மேலிருக்க பூமி கீழிருக்க
நெஞ்சில் துணிவிருக்க கண்ணில் நீயிருக்க
அனைத்திற்கும் மேல் கட'வுள் நம்பிக்கை இருக்க
என்ன நேர்ந்தாலும் உன்னையும் என்னையும்
மீட்டெடுப்பேன் என கூறினான்.
கண்கலங்கியபடி மெல்லிய சிரிப்புடன் காதல் கொடுத்தாள்.
அவனும் சிரித்தே காதலை பருகினான்.
No comments:
Post a Comment