Wednesday, July 17, 2019

காதல் பாடல்#47

செல்லம் கெஞ்சும் பூவே நீதானே
உன் உள்ளம் கொள்ளை கொண்டது நான்தானே
நெஞ்சம் கொஞ்சும் இதயம் நீதானே
உன் அர்த்தம் கொண்ட வாழ்க்கை நான்தானே
நீயே நீயே என்னில் பாதி
நானே நானே உன்னில் மீதி
சரணம்
*********
ஆளுமை கொண்டெனை காலமும் ஆளாப்பிறந்தாயடா
என்னிடை உன்கரம் பற்ற ஏங்குகிறதே வா அருகில் நீயும் நானும் நாமாகும் நேரம் இது தான் என்பேனே.
இதழ் இதழ்களால் கவிதை எழுதும் ஒத்திகை பார்ப்போமா கேட்கிறதே மனமது சொல்லடா என் கண்ணாளா..
சரணம்
********
உந்தன் கண்ணிமை படபடக்கும் வண்ணத்துப்பூச்சியடி
கண்களே மதுக்கடை அதில் கருமணியோ மது உண்டு உருளும் இங்கும் அங்கும் போல் நான் ஆனேனடி.
அந்த கண்களால் பார்த்து பார்த்து
என்னை மீண்டும் விழுங்குவது நியாயமா சொல்லடி என் செல்லமே....

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...