Friday, July 26, 2019

ஆடும் மனிதா...

ஆடும் மனிதா ஆடும் மனிதா அடங்கிவிடு
உனது ஆட்டமும் ஓர்நாள் அடங்கிவிடும் என்பதை உணர்ந்துவிடு
கருவில் உதித்த யாவர்க்கும் ஓர்நாள் மரணம் உண்டு
இதை கருத்தில் நிறைத்து அடக்கம் கொண்டால் உயர்வு உண்டு
சரணம்
********
பணம் என்பது வெற்றுக்காகிதம்
இதுதானே இன்றைய உலகின் ஆயுதம்
இதனால் ஆங்காங்கே விவாதம் வீண்வாதம் நடக்குது பல வதம்.
கைகளுக்கு கை மாறும் பணம்
நிரந்தரம் தானே உனது மனம்
இதை ஏற்க மறுக்கிறதா பிடிவாத குணம்.

ஒரே ஒரு நாளில் ஏழை பணக்காரனாவான்
அதே நாளில் பணம் இருந்தவன் ஏழை ஆவான்

இயற்கை பல வகையில் நமக்கு சொல்லியதை மறக்காதே

ஒருபோதும் மறந்து ஆட்டம் ஆடாதே..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...