Wednesday, July 17, 2019

காதல் பாடல்#48

கவிதையே கவிதையே
கவிதைகெல்லாம் தலைவியே
பாரதியின் தமிழ் மொத்தம்
நீ பேச ஒற்றை வார்த்தையில் கொட்டும்

தலைவனே தலைவனே
உள்ளம்கொண்ட அரசனே
தமிழின் புகழ் மொத்தம்
நீ கட்டி ஆள அகிலமெங்கும் முட்டும்
சரணம்
********
முச்சங்கம் வளர்த்த தமிழெலாம்
உன் மொழியில் தினமும் பொழியுதே..
உன் அங்கம் கொண்ட அழகெலாம்
எனை மூர்ச்சையாக்கி கொல்லுதே..
என் கவிதை கொண்ட பொருளையெல்லாம்
உன் ஒற்றை சொற்கள் வெல்லுதே..
சரணம்
********
எத்திக்கும் நொடி பொழுதெல்லாம் உன் நினைவில் தினமும் வாழுதே
உன் பெயர் கொண்ட இடமெல்லாம் எனை நிற்கச் சொல்லுதே..
என் உலகம் யாவும் நீயென்பதை உன் ஒற்றை முகம் காட்டுதே..

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...