Wednesday, July 10, 2019

காதல் பாடல்#44

மலரே மலரே
உன் வாசம் என் சுவாசம்
மழையே மழையே
மண் நேசம் என் பாசம்
மௌனமாய் புன்னகை பூக்கின்றாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
மண்ணில் உதிர்ந்த மேலும் மணம் கமழ்கின்றாய்
சரணம்
********
தென்றல் தொட தலை அசைத்து பார்க்கிறாய்
வண்டுகள் பாட உடல் புல்லரித்து நிற்கிறாய்
இதழ்கள் சுழிக்க மண்துகள்களாக சுழல்கிறேன்
மண்ணாசை மறைந்து பெண்ணாசையாக உருபெறுகிறதே..
தலைகவிழ்ந்து என்னை கவிழ்த்து காதல் வலுபெறுகிறதே..

இது நியாயமா சொல் சொல்
மலரே மலரே
உன் வாசம் என் சுவாசம்
மழையே மழையே
மண் நேசம் என் பாசம்
மௌனமாய் புன்னகை பூக்கின்றாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
மண்ணில் உதிர்ந்த மேலும் மணம் கமழ்கின்றாய்
(மண் மலரிடம் காதல் கொண்டால்.....)

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...